மது விருந்துக்கு அனுமதி: இளைஞர்களை போதை பழக்கத்தில் வைப்பதுதான் திராவிட மாடலா? டிடிவி தினகரன் கேள்வி

Tamilnadu oi-Vishnupriya R சென்னை: திருமண மண்டபங்கள், வீடுகளில் நடக்கும் நிகழ்வுகளில் சிறப்பு அனுமதி பெற்று மதுபான விருந்து அளிக்க வகை செய்யும் சட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருப்பது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981, என்ற சட்டத்தில் திருத்தம் செய்து, திருமண மண்டபங்கள், அரங்கங்கள், வீடுகளில் நடக்கும் நிகழ்வுகளில் சிறப்பு அனுமதி … Read more

ஆன்லைன் விளையாட்டுகள்.. புதிய விதிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு.. என்னென்ன ரூல்ஸ்?

Tamilnadu oi-Vishnupriya R சென்னை: ஆன்லைன் விளையாட்டு குறித்த புதிய விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. இந்த விதிகள் கடந்த 21 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுளை தடை செய்யும் அவசர சட்டத்தை கொண்டு வந்தது. அதன் பின்னர் சட்டசபையில் அந்த அவசர சட்டத்திற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்து, அதை நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. ஆனால் அந்த மசோதாவை … Read more

ரேஷனில்.. பொருட்களை வாங்காவிட்டால் குடும்ப அட்டை ரத்தாகுமா?.. தமிழ்நாடு அரசு விளக்கத்தை பாருங்க

Tamilnadu oi-Hemavandhana சென்னை: ரேஷன் பொருட்கள் வாங்காவிட்டால் குடும்ப அட்டை ரத்தாகுமா என்பது குறித்து தமிழக கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் தந்துள்ளார். தமிழ்நாட்டில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. சுமார் 9,900 கடைகள் மட்டுமே பகுதி நேர கடைகளாகவும் மீதமுள்ளவை அனைத்தும் முழுநேர கடைகளாகவும் இயங்கி வருகின்றன. தமிழக கூட்டுறவுத்துறையும், ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.. அந்தவகையில், ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் என்ற செய்திகள் வலம்வந்தபடி … Read more

மண்டபங்கள், மைதானங்களில் மது- திமுக கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு- வாபஸ் பெற ஜவாஹிருல்லா கோரிக்கை

Tamilnadu oi-Mathivanan Maran சென்னை: திருமண மண்டபங்கள், மைதானங்களில் மதுபானங்கள் விநியோகிக்கலாம் என்ற அரசாணைக்கு ஆளும் திமுக அரசின் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த ஆணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார். திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் உரிய கட்டணம் செலுத்தி மதுபானங்கள் விநியோக்க அனுமதி வழங்கும் அரசாணையை ஆளும் திமுக அரசு வெளியிட்டிருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது. … Read more

நியூசிலாந்தில் 7.3 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை ஏதும் இல்லை!

International oi-Vishnupriya R வெல்லிங்டன்: நியூசிலாந்தில் கெர்மாடெக் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியுள்ளது. இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இன்று காலை இந்திய நேரப்படி 6.11 மணிக்கு நியூசிலாந்தில் கெர்மாடெக் தீவுகளில் 10 கி.மீ. ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியுள்ளது. எனினும் சுனாமி ஏற்படும் என்பதற்கான எந்த எச்சரிக்கையும் இதுவரை விடுக்கப்படவில்லை. … Read more

ஜெயலலிதா நடத்திய அதே திருச்சி மைதானத்தில்.. ஓபிஎஸ் தலைமையில் இன்று மாநாடு.. திருப்புமுனையாகுமா?

Tamilnadu oi-Vishnupriya R திருச்சி: திருச்சியில் இன்று மாலை நடக்கும் மாநாடானது ஓ.பன்னீர் செல்வத்திற்கு திருப்புமுனையாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்கள் பலத்தை நிரூபிக்க போகிறோம் என்ற ஆரவாரத்துடன் இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களோ அவர்களுக்கு எந்த ஆதரவு கிடைத்தால் என்ன கிடைக்காட்டி என்ன? அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்கள் கட்சியை உயிருப்புடனும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருப்பார். இதில் மாற்றுக் கருத்து என்பதே இல்லை என்கிறார்கள். … Read more

காதலிப்பதாக கூறி பணம் பறித்தார்.. சாதியை சொல்லி திட்டினார்.. விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் புகார்!!

Tamilnadu oi-Vignesh Selvaraj சென்னை : தன்னைக் காதலிப்பதாக கூறி ஏமாற்றி பணம் பறித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இணை செய்தி தொடர்பாளரும், பிக்பாஸ் பிரபலமுமான விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார். விக்ரமன் மீது புகார் சுமத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கும் கடிதம் எழுதியுள்ளார். ஊடகவியலாளராக இருந்து பின்னர் அரசியலில் குதித்த விக்ரமன், விடுதலை சிறுத்தை கட்சியில் இணை செய்தி தொடர்பாளராக உள்ளார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சீசனில் கலந்து கொண்டு … Read more

மண் வாசனை மாறா வீடு! பழங்குடியினருக்கு மத்தியில் ஒரு வாழ்க்கை.. கனவை நனவாக்கிய டெல்லி தம்பதியினர்

India oi-Halley Karthik புவனேஸ்வர்: பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்துக்கொண்டிருந்த தம்பதியினர் வேலையை துறந்து இயற்கையுடன் சேர்ந்து வாழ முயன்றுள்ளனர். தாங்கள் மட்டுமல்லாது இதனை அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் ecostay எனும் இயற்கை தங்கும் இடத்தை உருவாக்கியுள்ளனர். ஏறத்தாழ 57.51 மில்லியன் சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இந்த பூமியில் நமக்கு தெரிந்ததெல்லாம் ஆபிசும் வீடும்தான். அதிலும் பெரும்பாலான நேரம் ஆபிஸில் கழிக்கப்படுகிறது. மீதமிருக்கும் நேரத்தில் வீட்டில் உள்ள பிரச்னைகளையும் நெருக்கடிகளையும் சமாளிக்கவே நேரம் … Read more

ஹெலிகாப்டர் முன் ‛செல்பி’.. நொடியில் உடலை கிழித்த இறக்கைகள்.. அரசு அதிகாரி துடிதுடித்து பலி.. ஷாக்

India oi-Nantha Kumar R டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசு அதிகாரியாக பணியாற்றி வரும் ஒருவர் ஹெலிகாப்டர் அருகே நின்று ‛செல்பி’ எடுக்க முயன்றார். அப்போது ஹெலிகாப்டரின் பின்பக்கத்தில் சுழன்ற காற்றாடியின் கூரிய இறக்கைகள் அவரை வெட்டி வீசியது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் துடிதுடித்து பலியானார். இமயமலையையொட்டி உத்தரகாண்ட் மாநிலம் உள்ளது. இங்கு ஏராளமான புகழ்பெற்ற கோவில்கள் உள்ளன. ஆண்டுதோறும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து யாத்திரீகர்கள் சென்று வருகின்றனர். அட்சய திருதியை முன்னிட்டு நேற்று … Read more

அமித்ஷா நேற்று அப்படி சொன்னாரே..அடுத்த நாளே சரண்டர் ஆன அம்ரித் பால்..பாய்ந்த தேசிய பாதுகாப்பு சட்டம்

India oi-Mani Singh S அமிர்தசரஸ்: கடந்த மார்ச் 18-ம் தேதியில் இருந்து தேடப்பட்டு வந்த அம்ரித் பால் சிங் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது அம்ரித் பால் சிங் பற்றிய கேள்விக்கு அளித்த பதில் கவனம் பெற்றுள்ளது. மறைந்த நடிகர் தீப் சித்துவால் உருவாக்கப்பட்ட அமைப்பு ‘வாரிஸ் பஞ்சாப் டி’. இந்த அமைப்பை தற்போது … Read more