மக்களின் குரலை எதிரொலிக்க 8 முதலமைச்சர்களும் தவறி விட்டதாக பாஜக விமர்சனம்..!

நிதி ஆயோக் நிர்வாகக் குழுவின் முக்கிய கூட்டத்தில் கலந்து கொண்டு, மக்களின் குரலை எதிரொலிக்க 8 மாநிலங்களின் முதலமைச்சர்களும் தவறி விட்டதாக பாஜக விமர்சித்துள்ளது. நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில் டெல்லி, கேரளா, ராஜஸ்தான், பஞ்சாப், தெலுங்கானா, மேற்குவங்கம்,பிகார், ஓடிசா ஆகிய 8 மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத், நாட்டின் வளர்ச்சி மற்றும் திட்டமிடலுக்கு நிதி ஆயோக் முக்கியமானது என்றும், இன்றைய … Read more

அரிசி கொம்பன் யானையின் நடமாட்டம் காரணமாக கம்பம் நகராட்சிப் பகுதியில் 144 தடை உத்தரவு..!

அரிசி கொம்பன் யானையின் நடமாட்டம் காரணமாக கம்பம் நகராட்சிப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கேரளாவை ஒட்டிய தமிழக பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த அந்த யானை தேனி மாவட்டம் கம்பம் நகரப் பகுதிக்குள் நுழைந்தது. இதனை கண்ட பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். யானையும் குறுகலான சாலைகளிலும், தெருக்களிலும் அங்குமிங்கும் ஓடியது. அப்போது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ ஒன்றை யானை நசுக்கித் தள்ளியது. யானை ஊருக்குள் வந்தால் மின்சாரம் தாக்காமல் இருக்க, அது செல்லும் வழியில் … Read more

சியுங் சாவ் தீவில் நடைபெற்ற வண்ணமயமான பன் திருவிழா… 60 அடி உயரத்திற்கு உருவாக்கப்பட்ட பன் கோபுரம்

ஹாங்காங்கின் சியுங் சாவ் தீவில் வண்ணமயமான பன் திருவிழா நடைபெற்றது. 60 அடி உயரத்திற்கு உருவாக்கப்பட்ட பன் கோபுரத்தில் ஏறிய 12 வீரர்கள், தங்களால் இயன்ற அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான பன்களை கோபுரத்திலிருந்து பறித்தனர். கோபுரத்தின் உச்சியில் உள்ள பன்னை வெற்றிகரமாக பறிக்கும் நபர், அவரின் குடும்பத்திற்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வருவார் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த பன் திருவிழா, கொரோனா காரணமாக 4 வருட இடைவெளிக்கு பிறகு … Read more

மத்திய அரசை பாராட்டி நாட்டு மக்கள் பகிரும் பதிவுகள் மேலும் தீவிரமாக பணியாற்றும் சக்தியை அளிக்கிறது – பிரதமர் மோடி

மத்தியில் தனது அரசு பதவியேற்று 9 ஆண்டுகாலம் பூர்த்தியாவதை முன்னிட்டு தெரிவிக்கப்படும் வாழ்த்துகள், மக்களுக்காக மேலும் தீவிரமாக பணியாற்றுவதற்கான சக்தியை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 2014ம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி முதல்முறையாக பிரதமர் மோடி தலைமையில் அரசு பதவியேற்றது. இதையடுத்து 2வது முறையாக 2019ம் ஆண்டு மே 30ம் தேதி அவரது தலைமையில் அரசு பதவியேற்றது. அவரது அரசு பதவியேற்று வரும் 30ம் தேதியுடன் 9 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதை சுட்டிகாட்டி, ட்விட்டரில் … Read more

புதிய கல்விக்கொள்கை பற்றி பேச துணை வேந்தர்களை ஆளுநர் அழைத்தது ஏன்? – அமைச்சர் பொன்முடி

புதிய கல்விக் கொள்கையில் இருக்கின்ற சில நல்ல அம்சங்களை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, தமிழகத்தின் கல்விக் கொள்கையை அமல்படுத்த முதலமைச்சர் அமைத்துள்ள குழுவின் அறிக்கை விரைவில் சமர்பிக்கப்பட உள்ளது என தெரிவித்தார். குழுவின் அறிக்கை வர உள்ள நிலையில், புதிய கல்விக் கொள்கை பற்றி பேச துணை வேந்தர்களை ஆளுநர் ஏன் அழைக்க வேண்டுமென கேள்வியெழுப்பிய அமைச்சர் பொன்முடி, இது அரசின் கொள்கைக்கு … Read more

அமெரிக்காவை சேர்ந்த 12 வயது சிறுவன் 5 பட்டங்கள் பெற்று புதிய சாதனை

அமெரிக்காவில் 12 வயதே ஆன குளோவில் ஹங் என்ற சிறுவன்,  5 பட்டங்கள் பெற்று, மிகச்சிறிய வயதில் அதிக பட்டம் பெற்ற  நபர் என்ற சாதனையை படைத்துள்ளார். கலிபோர்னியாவில் உள்ள புல்லர்டன் கல்லூரியில் பயிலும் அவர், வரலாறு, சமூக அறிவியல், சமூக நடத்தை மற்றும் சுய முன்னேற்றம், கலை மற்றும் மனித உணர்வுகள், அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய 5 பாடங்களில் பட்டங்கள் வாங்கியுள்ளார். அடுத்த ஆண்டு மேலும் ஒரு பட்டப்படிப்பை முடிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து … Read more

கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியின் அங்கீகார ரத்து விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். பேராசிரியர் பணிக்கு போதிய மூத்த மருத்துவர்கள் இல்லாதது மற்றும் சி.சி.டி.வி., கேமரா இல்லாதது உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி, இந்திய மருத்துவ கவுன்சில், 2023-24ம் ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கு அனுமதி மறுத்துள்ளது. இந்த நிலையில் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், செய்தியாளர்களிடம் பேசினார். பல்வேறு உயர் கல்விகளுக்கான … Read more

சீனாவின் சர்வதேச பிக் டேட்டா இண்டஸ்ட்ரி எக்ஸ்போவில் ஓட்டுநர் இல்லாத கார் அறிமுகம்..!

தென்மேற்கு சீனாவின் குய்சோ மாகாணத்தில் உள்ள குய்யாங் நகரில் நடைபெற்றுவரும் சர்வதேச பிக் டேட்டா இண்டஸ்ட்ரி எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஓட்டுநர் இல்லாத கார் பார்வையாளர்களின் கவனத்தை அதிகளவில் ஈர்த்து வருகிறது. விசாலமான கேபின் உள்ள இந்த கார், ஸ்டீயரிங் மற்றும் ஓட்டுநர் இருக்கை இல்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது. காரில் 4 லேசர் ரேடார்கள், 7 கேமராக்கள் மற்றும் 12 மில்லிமீட்டர்-அலை ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன. 3 நாட்கள் நடைபெறும் கண்காட்சியில் சிறிய ரோந்து கார்கள் தவிர, 3டி பிரிண்டர் மற்றும் … Read more

நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கான நிகழ்ச்சி அட்டவணை வெளியீடு..!

நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கான நிகழ்ச்சி அட்டவணை வெளியாகிவுள்ளது. அதன்படி, காலை 7.15 மணிக்கு பிரதமர் மோடி நாடாளுமன்ற புதிய கட்டிடத்திற்கு வருகை தருகிறார். காலை 7.30 மணிக்கு தொடங்கி சுமார் ஒரு மணி நேரத்திற்கு மங்கள சடங்குகளும், பூஜைகளும் நடைபெறுகின்றன. 8.30 மணிக்கு பிரதமர் மோடி மக்களவை அறைக்கு வருகை தருகிறார். 9 மணிக்கு சபாநாயகர் இருக்கைக்கு அருகே தமிழகத்தின் வரலாற்றுச் செங்கோல் நிறுவப்படுகிறது. காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றத்தின் முகப்பறையில் பிரார்த்தனை கூட்டம் … Read more

பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது செங்கோல்..!

பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது செங்கோல் தமிழகத்தில் இருந்து சென்ற ஆதீன கர்த்தாக்கள் பிரதமரிடம் தங்கச் செங்கோலை ஒப்படைத்தனர் திருவாவடுதுறை மற்றும் மதுரை ஆதீனங்கள் ஆளுக்கொரு செங்கோலை வழங்கினர் செங்கோல்களை பெற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி ஆதீனங்களிடம் ஆசி பெற்றார் Source link