பெண் போலீஸின் தீராக்காதல்… விலக மறுத்த பாமக நிர்வாகி.. மர்டர் செய்த தம்பி..!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் அருகே பாமக பிரமுகர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து பெண் காவலரின் முறை தவறிய உறவே கொலைக்கு காரணம் என்பது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோயில் அடுத்த அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் பாமக பிரமுகர் மனோகரன். ஜேசிபி இயந்திரங்களை வாடகைக்கு விடும் தொழில் நடத்தி வந்த இவரை இரு சக்கர வாகனத்தில் வந்த … Read more

”டெஸ்லா தொழிற்சாலையை அமைக்க இந்தியா ஆர்வம்” – எலான் மஸ்க்

டெஸ்லா தொழிற்சாலையை அமைக்க இந்தியா ஆர்வத்துடன் உள்ளதாக அந்நிறுவன சி.இ.ஓ. எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டியளித்த அவர், இந்தாண்டின் இறுதியில் புதிய தொழிற்சாலை அமைய உள்ள இடத்தை தேர்வு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். உலகளாவிய உற்பத்தியை விரிவுபடுத்தும் முயற்சியாக மெக்சிகோவில் தனது ஆலையை திறக்கப்போவதாக டெஸ்லா ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்தியாவில் தமது உற்பத்தி தளத்தை நிறுவுவதற்காக டெஸ்லா நிறுவனம் தீவிரமாக திட்டமிட்டு வருவதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் அண்மையில் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்திருந்தது … Read more

எப்போதும் இளமையாக இருக்க 17 வயது மகனின் ரத்த பிளாஸ்மாவை தனது உடலில் செலுத்தி கொள்ளும் தொழிலதிபர்

அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் என்றும் இளமையாக இருக்க பிளாஸ்மா ஸ்வாப்பிங் முறையில் தனது மகனின் ரத்த பிளாஸ்மாவை எடுத்து தனக்கு செலுத்தி கொண்டார். 45 வயதான பிரையன் ஜான்சன், 70 வயதான தனது தந்தை ரிச்சர்ட் மற்றும் 17 வயது மகனான டால்மேஜ் ஆகியோருடன் டெக்சாஸில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். அங்கு டால்மேஜ் உடலில் இருந்து ஒரு லிட்டர் ரத்தம் எடுக்கப்பட்டு அதில் இருந்து பிளாஸ்மா பிரித்து எடுக்கப்பட்டு, தந்தையான பிரைன் ஜான்சனுக்கு செலுத்தப்பட்டது. … Read more

ரூ.1.50 கோடியில் ராதா-கிருஷ்ணர் கோயில்… வாழ்நாள் சேமிப்பை செலவழித்து மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய கணவர்…

மத்தியப்பிரதேசத்தில் ஆசிரியர் ஒருவர் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் செலவழித்து மனைவியின் கடைசி ஆசையான ராதா-கிருஷ்ணர் கோவிலை கட்டியுள்ளார். சத்தர்பூரைச் சேர்ந்த சன்சோரியா என்ற அந்நபரின் மனைவி 2016-ம் ஆண்டு நவம்பரில் உயிரிழந்தார். அவரது கடைசி ஆசையை எப்படியும் நிறைவேற்ற வேண்டும் என சன்சோரியா முடிவு செய்தார். இதற்காக தமது கையில் இருந்த சேமிப்பு பணம் ஒன்றரை கோடி ரூபாயை செலவிட்டு, கோவிலை கட்டி முடித்துள்ளார். இஸ்லாமிய கலைஞர்கள் கோவிலின் சிற்ப வேலைப்பாடுகளை செய்துள்ளனர். 6 ஆண்டுகள் நடைபெற்ற … Read more

புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவை புறக்கணிக்க 19 எதிர்க்கட்சிகள் முடிவு..!

புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவை புறக்கணிக்க போவதாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. டெல்லியில் 970 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி வருகிற 28ம் தேதி திறந்து வைக்கவுள்ளார். அக்கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முதான் திறக்க வேண்டும், பிரதமர் மோடி திறக்கக்கூடாதென வலியுறுத்தி காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் கட்சி, … Read more

முதலீடுகளை ஈர்க்க எந்த மாநிலத்தின் முதலமைச்சர் வெளிநாடு சென்றுள்ளார்? சீமான் கேள்வி

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தின் முதலமைச்சராவது முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனரா என நாம் தமிழர் கட்சி சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழர் தந்தை சி.பா ஆதித்தனாரின் 42-வது நினைவு தினத்தையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த சீமான், இதனை தெரிவித்தார். Source link

அரசு பேருந்துகளில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணம் ரத்து – தமிழ்நாடு அரசு

5 வயது வரையிலான குழந்தைகளுக்கு பேருந்து கட்டணத்தை ரத்து செய்து தமிழ்நாடு அரசு அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசு பேருந்துகளில் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை என்பதை, ஐந்து வயதாக உயர்த்தும் வகையில் சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை செயலபடுத்தும் விதமாக ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள் கட்டணமின்றி பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 5 வயது முதல் 12 வயது வரையிலான சிறார்களும் அரை டிக்கெட் எடுத்து பயணிக்கலாம் … Read more

இந்து கோயில்கள் மீதான தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்படும்… பிரதமர் மோடியிடம் ஆஸி. பிரதமர் உறுதி

ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்தி அதற்கு காரணமானோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடியிடம் அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பனீஸ் உறுதியளித்துள்ளார். 3 நாள் பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு சிட்னி பாதுகாப்பு படையினரின் அதிகாரபூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பின்னர் ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீசும், பிரதமர் மோடியும் பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர். அப்போது ஆஸ்திரேலியாவுக்கு இந்திய மாணவர்கள் கல்வி கற்க செல்வதையும், தொழிலதிபர்களின் … Read more

புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்க பல்வேறு எதிர்கட்சிகள் முடிவு

புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்க பல்வேறு எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை வரும் 28ந் தேதியன்று பிரதமர் மோடி திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குடியரசுத் தலைவருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் விவாதித்தாகத் கூறப்படுகிறது. இந்நிலையில், திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் திறப்பு விழாவைப் புறக்கணிக்கப் … Read more

அடிச்சதெல்லாம் போதாதா ராசா..? ரூ.500 கோடி இருந்தும் பத்தலையா..? முதியவர்களை வீதியில் நிறுத்திய கொடுமை..!

ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்து 500 கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை சுருட்டிய புகாருக்குள்ளான ஏஜெண்டு ஒருவர் , பட்டப்பகலில் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து முதியவரின் வீடு புகுந்து பொருட்களை எடுத்து தெருவில் வைத்து, வீட்டை அபகரித்த சம்பவம் காஞ்சிபுரத்தில் அரங்கேறி உள்ளது ஐயா… உங்க வீட்டை வித்து ஆருத்ராவில் பணம் போட்டால், ஒரே வருஷத்தில 2 வீடாக வாங்கிக்கலாம் .. உங்க கடனையும் அடைச்சிடலாம் .. என்று ஆசைவார்த்தைக் கூறிய ஆருத்ரா நாகராஜை … Read more