கோவில் திருவிழாவில் வாண வேடிக்கையின்போது ஏற்பட்ட விபத்து… 2 பேர் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த சி.பள்ளி பட்டியில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவில், வாண வேடிக்கையின் போது ஏற்பட்ட பட்டாசு விபத்தில் இருவர் உயிரிழந்தனர். திருவிழாவில் நேற்று இரவு சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலையை டாடா ஏஸ் வாகனத்தில் வைத்து மக்கள் ஊர்வலமாக எடுத்து சென்றனர். அதே வாகனத்தில் வாண வேடிக்கைக்காக அதிகளவில் பட்டாசுகளும் வைக்கப்பட்டிருந்தன. வாகனத்தை அதே பகுதியை சேர்ந்த 26 வயதான ஓட்டுனர் ராகவேந்திரன் ஓட்டி சென்றார். இந்நிலையில் வாண வேடிக்கையின்போது … Read more

“நாடு முழுவதும் அனல் காற்று முடிவுக்கு வந்துவிட்டது” – இந்திய வானிலை ஆய்வு மையம் இனிப்பான தகவல்

நாடு முழுவதும் இன்றுடன் அனல் காற்று முடிவுக்கு வந்துவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய விஞ்ஞானி ஜெனாமணி, இன்று முதல் வெயிலின் தாக்கம் குறையத் தொடங்குமென்றும், வானம் மேக மூட்டத்துடன் காணப்படுமென்றும் கூறினார். ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா, சண்டீகர் மாநிலங்களுக்கு சூறாவளி காற்று மற்றும் மழை அதிகம் பெய்வதற்கான ஆரஞ்ச் அலர்ட் விடுத்திருப்பதாகவும், மலைப்பகுதிகளில் அடுத்த 3 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் அவர் … Read more

கிணற்றில் விழுந்த மகளை காப்பாற்ற முயன்ற தந்தையும் நீரில் மூழ்கி உயிரிழப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கிணற்றில் விழுந்த மகளை காப்பாற்ற முயன்ற தந்தையும் நீரில் மூழ்கி உயிரிழந்தார். பைத்தூரைச் சேர்ந்த கணேசன் என்பவரின் முதல் மனைவி சத்யாவின் மகள் மேகலா மற்றும் 2வது மனைவியின் மகன் பிரியன் ஆகியோர் இடையே நேற்று டிவி பார்ப்பதில் தகராறு எழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த கணேசன் இருவரையும் திட்டி விட்டு கோபத்தில் டிவி ரிமோட்டையும் உடைத்த தாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த மேகலா வீட்டில் இருந்த கிணற்றில் … Read more

பிரதமரிடம் வழங்கப்படும் தமிழகத்தின் செங்கோல்..!! பாரம்பரியத்தை எதிரொலிக்கும் நீண்ட நெடிய வரலாறு

நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை திறந்து வைக்கும் பிரதமரிடம் தமிழகத்தின் வரலாற்று சிறப்பு மிக்க செங்கோல் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார், உள்துறை அமைச்சர் அமித் ஷா. அந்த செங்கோலின் சிறப்பையும் வரலாற்றையும் எடுத்துக் கூறுகிறது இந்த செய்தித் தொகுப்பு…. சொக்கத் தங்கத்தினால் ஆன இந்த செங்கோல் தான் நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை திறந்து வைக்கும் பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கப்பட உள்ளது. பிரதமர் இதை புதிய கட்டிடத்தில் சபாநாயகரின் இருக்கை அருகே வைப்பார் என்று தெரிவித்த உள்துறை அமைச்சர் … Read more

14ஆவது மாடியில் இருந்து குதித்து விடலைச் சிறுவன் தற்கொலை..! அதீத விளையாட்டு ஆர்வம் விபரீதமானது

சென்னையை அடுத்த ஆவடி பருத்திப்பட்டில், 6 வயது தங்கையை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு, கால்பந்து விளையாட சென்றதை பற்றி தாயார் கண்டித்ததை பொறுக்க முடியாமல் 10ஆம் வகுப்பு மாணவர், 14ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட, பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.  திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த பருத்திப்பட்டில், 14 தளங்கள் கொண்ட, அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், செவ்வாய்க்கிழமை மாலை அந்த விபரீதம் அரங்கேறியது. 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவர், 14ஆவது தளத்தில் … Read more

உக்ரைனுக்கு 100 வாகனங்களை வழங்கியது ஜப்பான் அரசு

ஜப்பான் தற்காப்புப் படைகள், உக்ரைனுக்கு 100 இராணுவ வாகனங்களை வழங்கியுள்ளன. கடந்த வாரம் ஹிரோஷிமாவில் நடந்த ஜி7 மாநாட்டின் போது உக்ரைனுக்கு கூடுதல் உதவிகளை வழங்குவதாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா உறுதியளித்திருந்தார். அதன் ஒரு பகுதியாக, தற்போது உக்ரைனுக்கு 100 இராணுவ வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. டோக்கியோவில் உள்ள ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜப்பானுக்கான உக்ரைன் தூதர் Sergiy Korsunsky அந்த வாகனங்களை பெற்றுக் கொண்டார். Source link

தாயின் தகாத உறவுகள்..! வீடுகளுக்கு தீ வைத்து அலற விட்ட மகள்..!! தாயை திருத்த மகளின் விபரீத போராட்டம்….!

ஆந்திர மாநிலத்தில் பல ஆண்களோடு தொடர்பில் இருந்த தாயை திருத்துவதற்காக விபரீத முடிவெடுத்த மகள், தாயோடு தொடர்பில் இருந்தவர்களின் வீடுகளுக்கு தீ வைக்க, அலறிப் போன அந்த கிராமமே பில்லி, சூனியம், ஏவல் பயத்தில் மந்திரவாதிகளை அழைத்து வந்து பூஜைகள் செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. திடீர் திடீரென வீடுகளில் உள்ள பொருட்கள் தீப்பற்றி எரிவதும், வைக்கோல் போர்கள் தீயில் எரிவதுமாக கடந்த சில நாட்களாகவே பரபரப்பாகவும் பில்லி சூனிய பீதியிலும் உறைந்திருந்த கிராமம் தான் புதிய … Read more

உதகையில் பெய்த கனமழை… வடிநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பால் வீடுகளுக்குள் தண்ணீர் சூழ்ந்தது

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் சூழ்ந்துள்ளது. உதகை, பட்பயர், சிறுமலை நகர் உள்ளிட்ட இடங்களில் பெய்த கனமழையால், அப்பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் மழை நீரால் சூழப்பட்டது. வடிநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததாக கூறப்படும் நிலையில், அப்பகுதி மக்களே அதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். Source link

லக்கேஜ் எடுக்கச் சென்ற இடத்தில் வாய்த் தகராறு… 10க்கும் மேற்பட்ட பயணிகள் ஒருவர் மீது ஒருவர் சரமாரி தாக்குதல்

அமெரிக்காவின் சிகாகோ விமான நிலையத்தில் லக்கேஜ் எடுக்கச் சென்ற பயணிகளிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். கடந்த திங்கட்கிழமை காலை விமானத்தில் வந்திறங்கிய பயணிகள் மூன்றாவது முனையத்தில் தங்களது லக்கேஜ்களை எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது வாய்த் தகராறு ஏற்பட்டதில், 24 வயது இளம்பெண்ணை 2 இளைஞர்கள் தாக்கியதால், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சண்டையில் ஈடுபட்டவர்களை அதிகாரிகள் விலக்கி விட்டனர். இளம்பெண்ணை தாக்கிய 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். Source link

மகள்களுக்கே மொத்த சொத்துகளையும் கொடுத்ததால் ஆத்திரம்… பெற்றோரை அரிவாளால் வெட்டிய மகன் – தாய் பலி

நாகர்கோவில் அருகே மகள்களுக்கு மொத்த சொத்துக்களையும் கொடுத்ததால் ஏற்பட்ட தகராறில் பெற்றோரை அரிவாளால் வெட்டிய மகன் போலீசில் சரணடைந்தார். திட்டுவிளையைச் சேர்ந்த பவுல் – அமலோத்பவம் தம்பதிக்கு மோகன் தாஸ் என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். மோகன் தாஸ் வேறு மதத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்துக் கொண்டதால், அதனை ஏற்றுக் கொள்ளாத தந்தை, சொத்து முழுவதையும் மகள்களுக்கே கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் தனக்கு சொத்து கிடைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் அடிக்கடி பெற்றோருடன் தகராறு செய்த மோகன் … Read more