மத்திய மாநில அரசில் வேலை வாங்கித் தருவதாக ரூ.1 கோடி வரை மோசடி – இளைஞர் கைது

மத்திய மாநில அரசில் வேலை வாங்கித் தருவதாக ரூ.1 கோடி மோசடி செய்த இளைஞரை ஆவடி மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்த பண்னைவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகு (41). இவரது மனைவி ஆசிரியர் படிப்பு படித்துள்ளதால் வேலைக்காக முயற்சித்து வந்துள்ளார். இந்நிலையில், ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் அலுவலகம் நடத்தி வரும் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த புங்கம்பேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (31) என்பவர் ரெயில்வே, வங்கி, மின்வாரியம் உட்பட … Read more

"இதற்கெல்லாம் முதல்வரின் திறமையே காரணம்" – புகழ்ந்து பேசிய அமைச்சர் நாசர்

அண்ணா கலைஞர் காலத்தில் கிடைக்காத ஓட்டுகள் தற்போது கிடைக்கிறது என்றால் அதற்கு மு.க.ஸ்டாலினின் நிர்வாக திறமையே காரணம் என் அமைச்சர் நாசர் பேசினார். திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூர் திமுக சார்பில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான முக.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நகர செயலாளர் முனுசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும் தமிழக பால்வளத் துறை அமைச்சருமான ஆவடி நாசர், பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு; … Read more

இனி யாருக்கெல்லாம் RT PCR பரிசோதனை?-நெறிமுறைகளை வெளியிட்ட பொது சுகாதாரத்துறை

இன்புளுயன்சா காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் இன்புளுயன்சா சிகிச்சைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி ப்ளு காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகள் மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றனர். A வகை : லேசான காய்ச்சல், இருமல் B வகை : 1. தீவிர காய்ச்சல், அதிக இருமல் 2. தீவிர காய்ச்சலுடன் உள்ள குழந்தைகள், கர்ப்பிணிகள், 65 வயதுக்கு மேற்பட்டோர், இணை நோய்கள் இருப்போர் மேற்கூறிய யு, B பிரிவினர் யாருக்குமே இன்புளுயன்சாவிற்கான பரிசோதனையோ, மருத்துவமனையில் அனுமதியோ தேவையில்லை என பொது … Read more

தெய்வமகன் to இரவின் நிழல்.. ஆஸ்கர் கதவை தட்டிப் பார்த்த தமிழ் சினிமாக்கள் – ஓர் பார்வை

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடைபெற்ற 95-வது ஆஸ்கர் விருது விழாவில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தில் பிரபலமான ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக, அந்தப் படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி விருதுபெற்றார். இந்நிலையில், ஆஸ்கர் விருதுக்கு சென்ற தமிழ் படங்களைப் பற்றி காணலாம். 1. தெய்வமகன் (1969) நடிகர் திலகம் என்று அழைக்கப்படும் சிவாஜி, 3 வேடங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருந்த திரைப்படம் ‘தெய்வமகன்’. இந்தப் படம் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ் படம். கடந்த 42-வது ஆஸ்கர் … Read more

சென்னையில் திட்டமிடப்பட்ட 6 மெட்ரோ ரயில் நிலையங்களை கைவிட முடிவு – காரணம் இதுதான்!

சென்னை 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 750 மீட்டருக்கும் குறைவான தொலைவில் திட்டமிடப்பட்ட 6 மெட்ரோ ரயில் நிலையங்களை கைவிட மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் திட்டமிடப்பட்டிருந்த டவுட்டன் ஜங்ஷன், பட்டினப்பாக்கம், நடேசன் பூங்கா, மீனாட்சி கல்லூரி, தபால் பெட்டி மற்றும் செயிண்ட் ஜோசப் கல்லூரி ஆகிய 6 ரயில் நிலையங்கள் அமைக்கும் திட்டம் கைவிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு மெட்ரோ ரயில் நிலையம் … Read more

’எங்களை கைவிட்டுவிட்டார்’ ‘என் சொந்த வாழ்க்கை துயரமானது’ – ஸ்ரீதர் வேம்பு Vs அவரது மனைவி!

Zoho இணை நிறுவனர் மற்றும் சிஇஓ ஸ்ரீதர் வேம்பு மீது அவரது மனைவி சில புகார்களை தொடுத்திருந்தார். குறிப்பாக ஸ்ரீதர் வேம்பு தன்னையும் தங்களின் மகனையும் கைவிட்டதாகவும், தனது நியாயமான பங்கைப் பெறுவதைத் ஸ்ரீதர் தடுக்கிறார் என்றும் அவர் குற்றம் சாட்டினார். இதை மறுத்து நீண்ட விளக்கத்தை வெளியிட்டுள்ளார் ஸ்ரீதர் வேம்பு. இந்தியாவில் பிறந்தவரான ஸ்ரீதர் வேம்பு, சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்கு வாழ்ந்து, அங்கிருந்தபடியே ZOHO நிறுவனத்தை நடத்திவந்தார். இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு, … Read more

"வருங்காலத்தில் துணை முதலமைச்சராக வந்து.." – உதயநிதியை புகழ்ந்த அமைச்சர் எஸ்.எஸ்சிவசங்கர்!

அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சேவையை இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அந்த விழாவில் பேசிய அமைச்சர் சிவசங்கர், உதயநிதி துணை முதல்வராக வரவேண்டும் என்று தான் விருப்பப்படுவதாக தெரிவித்தார். ‘மாவட்டத்திற்கு ஒரு மருத்துவமனை’ என்ற அடிப்படையில் அரியலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி நிறுவப்பட்டுள்ளது. ரூ.347 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 26 ஏக்கர் பரப்பளவில் இக்கல்லூரி கட்டப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி கட்டிடப் பணிகள் முடிவடைந்த நிலையில், … Read more

1 லட்சம் லிட்டருக்கும் மேல் ஆவின் பால் தட்டுப்பாடு… அதிர வைக்கும் பின்னணி! முழு விவரம்

கடந்த ஆண்டு ஆவின் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்துமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால், ரூ.3 மட்டுமே அரசு உயர்த்தியது. இந்நிலையில் சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணையில் தென் சென்னை பகுதியில் உள்ள மயிலாப்பூர், பெசன்ட் நகர், அடையாறு, பெருங்குடி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கடந்த சில நாட்களாக பால் விநியோகம் தாமதமாக நடைபெற்று வருகிறது. இந்த தாமதத்திற்கு என்ன காரணம் என்பது குறித்தும் மேற்கூறிய கொள்முதல் விலைக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்பது குறித்தும் … Read more

அஜித் ரசிகர் பகிர்ந்த விவேக், விஜயகாந்த் காமெடி வீடியோ – ரீட்வீட் செய்து ரஹ்மான் பதிவு

அஜித் ரசிகர் ஒருவர் ‘விஸ்வநாதன் ராமமூர்த்தி’ படத்தில் தமிழ் மொழி பற்றி விஜயகாந்த் – விவேக் பேசும் காமெடி வீடியோவை பகிர்ந்துள்ள நிலையில், அதனை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ரீ-ட்வீட் செய்து விவேக்கை மிஸ் செய்வதாக தெரிவித்துள்ளார். ராமநாரயணண் இயக்கத்தில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘விஸ்வநாதன் ராமமூர்த்தி’. இந்தப் படத்தில் மறைந்த நடிகர் விவேக், ராம்கி, ரோஜா, விந்தியா, கோவை சரளா, வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். முழு நகைச்சுவையுடன் … Read more

சென்னை ஐஐடியில் மூன்றாம் ஆண்டு மாணவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு

சென்னை ஐஐடியில் பயின்றுவரும் மூன்றாம் ஆண்டு மாணவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை ஐஐடியில் பி.டெக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்தவர் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த  வைப் புஷ்பக் ஸ்ரீ சாய். இவர் ஐஐடியில் உள்ள அலக்நந்தா தங்கும் விடுதியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அதன்பின் அவரது … Read more