கலக்கத்தில் அதிமுக மாஜிக்கள்… திருச்சியில் காலியாகும் அதிமுக கூடாரம் – கழுகார் அப்டேட்ஸ்!

கலக்கத்தில் அ.தி.மு.க மாஜிக்கள்…லஞ்ச ஒழிப்புத்துறை டு அமலாக்கத்துறை! அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் தொடர்பான இடங்களில் ரெய்டு நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவர்கள்மீது வழக்குகளைப் பதிவு செய்துள்ளது தெரிந்ததே. இந்தநிலையில், சமீபத்தில் அந்த வழக்குகளின் மொத்த ஆவணங்களையும் ஆஃப் தி ரெக்கார்டாக கேட்டு வாங்கியிருக்கிறதாம் மத்திய அமலாக்கத்துறை. எஸ்.பி.வேலுமணி இதையடுத்து, அமலாக்கத்துறை ஏதேனும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக தங்கள் தரப்பில் ஏதேனும் நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்று தீவிர முனைப்பில் இருக்கிறது … Read more

ஒன்று பெரியது, மற்றொன்று சிறியது; மார்பக வித்தியாசம் இயல்பானதுதானா? காமத்துக்கு மரியாதை – S2 E18

பெண்கள் தங்கள் உடல் சார்ந்த சந்தேகங்களையும் பிரச்னைகளையும் அவ்வளவு சுலபத்தில் யாரிடமும் பேசி நிவர்த்தி செய்துகொள்ள மாட்டார்கள். அவற்றில் ஒன்றுதான், `ஒரு பக்க மார்பகம் பெரிதாக இருக்கிறது. மறுபக்கமோ அதைவிட சிறிதாக இருக்கிறது. இது பிரச்னையா அல்லது இயல்பானதா’ என்கிற சந்தேகம். இந்த வாரம் இதுபற்றி பேசவிருக்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ். பாலியல் மருத்துவர் காமராஜ் வளைந்த ஆணுறுப்பு; இயல்பானதா அல்லது பிரச்னையா? காமத்துக்கு மரியாதை – S2 E17 “ஒரு சில பெண்களுக்கு மார்பகங்கள் ஒரு … Read more

மழைக்கால நிவாரண நிதிக்கான அரசாணை வெளியிட வேண்டும்; சிவப்பு மையில் கை பதித்த தொழிலாளர்கள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 25,000 ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தித் தொழில் நடந்து வருகிறது. இந்தத் தொழிலில் சுமார் 20,000 பேர் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத இறுதியில் தொடங்கி அக்டோபர் மாதத்தில் பாதியில் வரையிலும் உப்பு உற்பத்தி நடக்கிறது. ஆண்டுக்கு 25 லட்சம் முதல் 30 லட்சம் டன் வரையிலும் உப்பு உற்பத்தி நடக்கிறது. தமிழகத்திலேயே உப்பு உற்பத்தி அதிகம் நடைபெறும் மாவட்டம் இது. 6 மாதங்கள் மட்டுமே நடைபெறும் இந்தத் தொழில், … Read more

`முஸ்லிம்கள் கருவுறாமல் இருக்கும் மருந்தை உணவில் கலக்கிறார்கள்' -சர்ச்சை பேச்சால் கைதான பி.சி.ஜார்ஜ்

இந்து மகா பரிஷத் அமைப்பின் சார்பில் திருவனந்தபுரத்தில் ‘அனந்தபுரி இந்து மகா சம்மேளனம்’ கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பிற மதங்களைச் சேர்ந்த சில நிர்வாகிகளையும் நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் பேச அழைத்திருந்தனர். அதில் கிறிஸ்தவ மதம் சார்பில் கேரள ஜனபக்‌ஷம் கட்சியை நடத்திவரும் முன்னாள் எம்.எல்.ஏ பி.சி.ஜார்ஜ் கலந்துகொண்டு பேசினார். அவர் முஸ்லிம்கள் பற்றி பேசிய கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. முன்னாள் எம்.எல்.ஏ பி.சி.ஜார்ஜ் இந்து மாநாட்டில் பேசுகையில், “கேரளத்தில் 1958-ல் கிறிஸ்தவர்கள் … Read more

செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவி விடுதியில் தற்கொலை… ராகிங்தான் காரணமா? – தீவிரமடையும் விசாரணை!

மாணவி தற்கொலை: செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு சட்டக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். இவர் அந்தக் கல்லூரி விடுதியில்தான் தங்கிப் படித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த 28-ம் தேதி விடுதியில் உள்ள இரண்டாவது மாடியில் அந்த மாணவி துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவிகள், அந்த மாணவியை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் … Read more

“முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் இறந்ததில் உங்கள் `மாடலுக்கும்' பங்குண்டு..!" – வானதி சீனிவாசன்

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும், பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவியுமான வானதி சீனிவாசன் கோவை புலியகுளம் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “சட்டப்பேரவையில் ஆளுங்கட்சிக்கு எந்த சங்கடங்களும் வரக்கூடாது என்பதில் சபாநாயகர் உறுதியாக இருக்கிறார். வானதி சீனிவாசன் இலங்கை: ஊழல், குடும்ப ஆட்சி, போர்க்குற்றம் – மக்களின் போராட்டமும் அரங்கேறும் அரசியல் மாற்றங்களும்! அங்கு எங்களால் முழுமையாக கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பில்லாமல் இருக்கிறோம். நாங்கள் பேசுவது நேரலையில் முழுமையாக வருவதில்லை. கேட்டால் தொழில்நுட்பக் கோளாறு என்கிறார்கள். … Read more

நீட்: “அனிதாவின் அண்ணனாகப் பேசுகிறேன்.. அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும்!" – உதயநிதி

தி.மு.க மாணவர் அணி சார்பில் சென்னையில் கல்வி சமூக நீதி கூட்டாட்சித் தத்துவம் குறித்த தேசிய மாநாடு நடைபெற்றது. அதில், தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், “அனிதாவின் அண்ணனாகவே நான் பேசுகிறேன். மற்ற மாநிலங்களும் ஒன்றிணைந்து நீட் தேர்வுக்கு எதிராகப் போராட வேண்டும். ஒன்றிய அரசு கல்வியை முழுவதும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள முயல்கிறது. ஒன்றிய அரசின் கல்விக்கொள்கை, கூட்டாட்சி தத்துவம் மற்றும் சமூக நீதிக்கு எதிரானது. உதயநிதி – … Read more

வெப்ப அலைகள்: 122 ஆண்டுகளில் இல்லாத அளவை எட்டியுள்ளது; என்ன செய்யப் போகிறது இந்தியா?!

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கடந்த சில நாட்களாகவே சராசரி வெப்பநிலை 104 டிகிரி ஃபாரன்ஹீட்டாக உச்சம் தொட்டிருக்கிறது. ஏப்ரலின் சராசரி வெப்பநிலையைவிட இது 10 டிகிரி ஃபாரன்ஹீட் கூடுதல் என்கின்றன தரவுகள். டெல்லியைப் பொறுத்தவரை கடந்த 72 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஏப்ரலில் வெப்பம் அதிகம் என்கிறார்கள் வல்லுநர்கள். வெப்பநிலை மார்ச் மாதம் இந்தியாவின் சராசரி வெப்பநிலை 92 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருந்தது. கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இது மிக அதிகமான வெப்பநிலை … Read more

“மின் தடை குறித்து தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை!" – அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டார். பழைய அரசு மருத்துவக் கல்லூரி வாளகத்தை மீண்டும் அரசு தலைமை மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை, நேரில் ஆய்வு செய்தார். பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி, “தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் செய்தியாளர்களைச் சந்தித்து தமிழகத்தில் மின்வெட்டு குறித்து உண்மைக்கு புறம்பான தவறான தகவல்களை அளித்து வருகிறார். அவர் பரப்பும் பொய் பிரசாரம் குறித்து, செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. … Read more

தஞ்சை தேர் விபத்து: `தமிழக அரசிடம் இரண்டு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும்!' – ஒரு நபர் குழு தகவல்

தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமத்தில் கடந்த 26-ம் தேதி இரவு நடைபெற்ற தேர்த் திருவிழாவில், மின்சாரம் தாக்கி மூன்று சிறுவர்கள் உட்பட 11 பேர் பலியாகினர். காயமடைந்த 17-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. களிமேடு தேர் விபத்து குறித்து ஆய்வு இதைத்தொடர்ந்து, விபத்து குறித்து விசாரிக்க வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில், ஒருநபர் குழுவை … Read more