வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் ஜப்பானிய பிரதித் தூதுவருடன் சந்திப்பு

இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதில் இருதரப்பு ஈடுபாடுகள், உள்நாட்டு அபிவிருத்திகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் உதவிகள் தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜப்பான் பிரதித் தூதுவர் கட்சுகி கோட்டாரோ வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை 2022 மே 27ஆந் திகதி சந்தித்தார். குறிப்பாக கோவிட்-19 உலகளாவிய தொற்றுநோயின் உச்சக்கட்டத்தின் போது ஜப்பான் அரசாங்கம் வழங்கிய தாராளமான உதவி மற்றும் ஆதரவைப் பாராட்டிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ், இலங்கையின் பொருளாதார சவால்களைத் … Read more

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் உலக புகைப்பொருள் எதிர்ப்பு தின நிகழ்வு

உலக புகைப்பொருள் எதிர்ப்பு தினத்தை நினைவு கூறும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் இன்று (31) இடம்பெற்றது. புகைப்பொருள் பாவனை அற்ற தேசம்” எனும் தொனிப்பொருளில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது சாய்ந்தமருதில் இருந்து மாளிகைக்காடு வரை விழிப்புணர்வு ஊர்வலம் இடம்பெற்றது. சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம் எச் கே சனூஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ எல் எம் … Read more

கட்டுநாயக்கவில் தேங்கிக்கிடக்கும் மருந்துகள்: விடுவிக்க உத்தரவு – செய்திகளின் தொகுப்பு

அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மருந்துகளை உடனடியாக விடுவிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இதுகுறித்த பணிப்புரை விடுத்துள்ளார். அமெரிக்காவில் உள்ள இலங்கையர்களினால் குறித்த மருந்துகள் மற்றும் உபகரணங்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவை நாட்டை வந்தடைந்து 12 நாட்கள் கடந்துள்ள போதும், அவற்றை கட்டுநாயக்கவில் இருந்து விடுவிப்பதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் … Read more

வாரத்தில் இரண்டு நாட்கள் அலுவலகம் மூடப்படும்

மறு அறிவித்தல் வரை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபைக ஊழியர்களை கடமைக்கு அழைக்கும் நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தியுள்ளனர். அதன்படி, 2022 மே மாதம் 30 ஆம் திகதி முதல் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாத்திரமே ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது. அன்றைய தினங்களில் அலுவலக நேரம் காலை 8.30 முதல் மாலை 4.15 வரை செயற்படும் அத்துடன், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய இரு … Read more

இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயன்ற மூவர் தலைமன்னாரில் கைது

இலங்கை கடற்படையின் தலைமன்னார் தம்மென்ன கடற்படை முகாம், கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் தங்க நகைகளுடன் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமத்திய கடற்படை தலைமையகத்திற்கு கிடைத்த தகவலின் படி, தலைமன்னார் இருந்து 1.2 கடல் மைல் தொலைவில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 43 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியுள்ள இந்த தங்க நகைகள் இலங்கை சுங்கத்தின் காங்கேசன்துறை உபதடுப்பு அலுவலகத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1.912 கிலோ எடை கொண்ட இந்த தங்கத்தின் மதிப்பு ரூ. … Read more

ஏதேனும் ஒரு அநாதை முகாமில் போய் இருக்க வேண்டிய நிலைமை! ஆதங்கம் வெளியிட்டுள்ள பெண்

ஏதேனும் ஒரு அநாதை முகாமில் போய் இருக்க வேண்டிய நிலைமை தான் இருப்பதாக பெண்ணொருவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.  நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், நாங்கள் வீட்டுக்கூலி கட்டுவதா? சாப்பிடுவதா? 11ஆம் மாதத்திற்குள் கடும் பஞ்சம் ஏற்படும் என சொல்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது? அதிகாலை நான்கு மணிக்கு சென்றோம் மண்ணெண்ணெய் எடுப்பதற்கு. மழைக்கு மத்தியில் வரிசையில் காத்திருந்த போதும் எனினும் மண்ணெண்ணெய் … Read more

இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்…

இலங்கையின் 24ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (31) முற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து, ஜனாதிபதி அவர்களினால் விக்கும் லியனகே அவர்களிடம் இந்த நியமனக் கடிதம் கையளிக்கப்பட்டது. தற்போது இராணுவத்தில் சிரேஷ்ட அதிகாரியாக இருக்கும் விக்கும் லியனகே அவர்கள், நாளை (ஜூன் 01)  இராணுவத் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்வதன் மூலம், லுதினன் ஜெனரலாக பதவி உயர்வு பெறவுள்ளார். மாத்தளை விஜய கல்லூரியில் கல்வி … Read more

அரச மற்றும் தனியார் ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்தின் தகவல்

தற்போதைய வாழ்க்கை செலவுகளின் அதிகரிப்பிற்கு ஏற்றாற்போல் நாளாந்த வாழ்வை பிரச்சினையின்றி வாழ்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், வெகுசன ஊடக அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன கூறியுள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது. இதன்போது பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை எதிர்கொள்வதற்காக அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவோ அல்லது தனியார்துறை ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கவோ அரசாங்கத்திடம் ஏதேனும் திட்டம் உள்ளதா என ஊடகவியலாளரொருவர் … Read more

கொலை செய்யப்பட்ட ஆயிஷாவுக்கு என்ன நடந்தது…. தாய் வெளியிட்ட தகவல்

பண்டாரகம –  அட்டுலுகம பகுதியில் 9 வயதான சிறுமி ஆயிஷா கொலை செய்யப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திதுள்ளது.  கொலையுடன் தொடர்புடையவரான 29 வயதான குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் தாயார் ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டுள்ளார்.  கடைக்கு சென்ற சிறுமி மாயம் அன்றைய தினம் வெள்ளிக்கிழமை என்பதனால் மகள் கோழி இறைச்சி கறி கேட்டார். அவருக்கு கோழி இறைச்சி சாப்பிடுவதற்கு மிகவும் விருப்பம். நான் வாங்கி … Read more

பொது மக்களுக்கு நிவாரணம்: பிரதமர் ,695 பில்லியன் ரூபா குறை நிரப்புப்பிரேரணையை சபையில் சமர்ப்பிக்க ஏற்பாடு

பொது மக்களுக்கு நிவாரணத்தை வழங்கும் வகையில் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க 695 பில்லியன் பெறுமதியான குறை நிரப்பு பிரேரணையொன்றை பாராளுமன்றத்தில்  சமர்ப்பிக்கவுள்ளார். சமுர்த்திப் பயனாளிகள், பெருந்தோட்ட மக்கள், ஓய்வூதியர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள், தற்போது எதிர் நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு நிவாரண பொதிக்காக இது சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதுதொடர்பாக நேற்று மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 06. பாராளுமன்றத்தில் குறைநிரப்பு மதிப்பீடொன்றை சமர்ப்பித்தல்   நிலவுகின்ற நெருக்கடியான பொருளாதார சூழல் காரணமாக பொதுமக்கள் முகங்கொடுக்க நேரிட்டுள்ள அழுத்தங்களை இயலுமான வரையில் குறைப்பதற்காக … Read more