தொழில் சட்ட திருத்தத்திற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஒத்துழைப்பு

தற்போதுள்ள தொழில் சட்டத்தில் மேற்கொள்ளப்படும் திருத்த முயற்சிக்கு தமது அமைப்பு ஒத்துழைப்பு வழங்கும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒருங்கிணைந்த தொழிலாளர் சட்டத்தைத் தயாரிப்பதற்காக அவசிய பூரண சட்ட ஒத்துழைப்பை வழங்குவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, தொழிலாளர் சட்டத்தை மாற்றுதல் தொடர்பாக தொழில் அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் அபிப்பிராயத்தைப் பெறும் அமர்வில் இணைந்து கொண்டு, சட்டத்தரணிகள் சங்கத்தின் தொழிலாளர் சட்டம் தொடர்பான ஆலோசகர் சட்டத்தரணி கனிஷ்க வீரசிங்க தெரிவித்தார். தொழிலாளர் சட்டத்தை விரைவாக … Read more

எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்தினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நான்காம் கட்ட நட்டஈடு

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நான்காம் கட்ட நட்டஈடாக சுமார் 160.5 கோடி ரூபாய்க்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று (11) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வாவின் பங்கேற்புடனும் கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது. கடற்றொழில் அமைச்சின் முயற்சியினால், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடற்றொழில் மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டதன் காரணமாக தமது வாழ்வாதாரத்தை இழந்த 15,000 கடற்றொழிலாளர்கள் மற்றும் … Read more

DREAM11 GAMECHANGER – இலங்கையின் மதீஷ பத்திரன

2023 இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் நேற்று (10) சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில், சிறப்பாக பந்து வீசிய மதீஷ பத்திரன 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னை அணிக்கு இலகுவான வெற்றியைப் பெற்றுத் தந்தார். போட்டியின் 55ஆவது போட்டியில் நாணய சுழற்சியை வென்ற சென்னை அணி தலைவர் மகேந்திர சிங் தோனி முதலில் துடுப்பாட்டத்தை செய்ய தீர்மானித்தார். இதற்கமைய 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி … Read more

புகையிரதத் திணைக்களத்திற்கு புதிய ஊழியர்கள் 3000 பேரை உள்வாங்கவிருப்பதாக வெளிவந்த செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது – அமைச்சர் பந்துல குணவர்தன

ஆரசாங்க நிறுவனங்களை மறுசீரமைத்தலின் கீழ் சுயமாக சேவையிலிருந்து இளைப்பாற்றுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும், அதற்கிணங்க புகையிரதத் திணைக்களத்தின் சில ஊழியர்கள் சுயமாகவே ஓய்வுபெற்றுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அமைச்சர் பேராசிரியர் பந்துலகுணவர்தன இன்று (11) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அரச நிறுவனங்களை மூடி, ஊழியர்களை நீக்குதல் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் கேட்ட வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். புகையிரதத் திணைக்களத்திற்குப் புதிய ஊழியர்கள் 3000 பேரை உள்வாங்குவது தொடர்பாக வெளியிடப்படும் … Read more

முதல் ரி20 போட்டியில் இலங்கை வளர்ந்து வரும் அணி வெற்றி

ஜப்பான் தேசிய கிரிக்கெட் அணிக்கு எதிராக நேற்று (10) இடம்பெற்ற முதலாவது ரி 20 கிரிக்கெட் போட்டியில் வளர்ந்து வரும் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டோக்கியோவில் உள்ள சனோ சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியை வென்ற ஜப்பான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 97 ஓட்டங்களை எடுத்தது. ஜப்பான் அணி சார்பாக கெண்டோல் கடோவகி பிளெமிங் அதிகபட்சமாக 21 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, இறுதி வரை … Read more

காலிமுகத்திடல் போராட்ட இயக்கத்தின் முன்னணி சமூக ஆர்வலருக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்! சஜித் வலியுறுத்து (Video)

காலிமுகத்திடல் போராட்ட இயக்கத்தின் முன்னணியில் இருந்த சமூக ஆர்வலரான பியத் நிகேஷலவிற்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் இன்றைய தினம் (11.05.2023)  கருத்து தெரிவிக்கும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். உடனடியாக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் அத்துடன் கடுவளையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்னவால், பியத் நிகேஷல தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் அவர் இதன்போது கேள்வி எழுப்புள்ளார். மேலும், பியத் நிகேஷலவுக்கு உடனடியாக பாதுகாப்பு வழங்கப்பட … Read more

மன்னார் கடல் பகுதியில் 10 வர்த்தக வெடிபொருள் குச்சிகளுடன் 07 சந்தேகநபர்கள் கைது

இலங்கை கடற்படையினரால் (08) மன்னார் வங்காலே கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடற்பகுதியில் வெடிபொருட்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக இருந்த ஏழு (07) பேர் வாட்டர் ஜெல் எனப்படும் வர்த்தக வெடிமருந்துகளின் பத்து (10) குச்சிகள், பதினெட்டு (18) மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்கள் மற்றும் சுழியோடி உபகரணங்களுடன் ஒரு (01) டிங்கி படகு கைப்பற்றப்பட்டன. வெடிபொருட்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடித்தலால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் … Read more

கடலில் பயணம் செய்வோருக்கும், மீனவ சமூகத்திற்கும் எச்சரிக்கை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.  அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2023 மே 10ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. தென் கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கமானது ஆழமான ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து 2023 மே 10ஆம் திகதி 08.30 மணிக்கு வட அகலாங்கு 8.80 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு … Read more

ஒரே வாரத்தில் என்னால் டெங்குவை கட்டுப்படுத்த முடியும்! மேர்வின் சில்வா

ஒரே வாரத்தில் தம்மால் டெங்கு பரவுகையை கட்டுப்படுத்த முடியும் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். அரசாங்கம் தமக்கு சந்தர்ப்பம் வழங்கினால் டெங்குவை கட்டுப்படுத்திவிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். டெங்கு ஒழிப்பு பிரிவின் உயர் அதிகாரிகள் மற்றும் சுகாதார தரப்பினருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். டெங்கு ஒழிப்பு திட்டம் டெங்கு ஒழிப்பு திட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்பதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய சுகாதார அமைச்சர் தமது நல்ல நண்பர் எனவும், … Read more

சிங்கள இடதுசாரிகளின் மௌனமும் பௌத்தமயமாக்கலும்

Courtesy: கூர்மை உலக அரசியலில் வலதுசாரிக் கட்சிகளின் செல்வாக்குகள் சரிந்தவரும் நிலையில், இடதுசாரிகளின் செல்வாக்குகளும் ஆதரவும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாகத் தென் அமெரிக்க நாடுகளில் கடந்த இரண்டு வருடங்களில் இடதுசாரிகள் அடுத்தடுத்து ஆட்சியை அமைத்து வருகின்றன. ஆனால் இடதுசாரி என்பதன் உண்மையான அடிப்படை மற்றும் இடதுசாரி என்பதற்குரிய சரியான உள் நோக்கங்களைத் தற்கால இடதுசாரிகள் குறிப்பாக தென் அமெரிக்க நாடுகளில் ஆட்சி அமைத்து வரும் இடதுசாரிகள். கொணட்டிருப்பதாகக் கூற முடியாது. இந்த இடதுசாரிகள் தத்தமது நாடுகளின் தேசியச் … Read more