இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கும், இலங்கை ஏ கிரிக்கெட் அணிக்கும் இடையிலான போட்டி

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கும், இலங்கை ஏ கிரிக்கெட் அணிக்கும் இடையிலான முதலாவது உத்தியோகபற்றற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (31) நடைபெறவுள்ளன. நான்கு நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டி இன்று காலை 10 மணிக்கு காலி மைதானத்தில் ஆரம்பமாகும். இரு அணிகளுக்கும் இடையில் இரண்டு உத்தியோகபற்றற்ற டெஸ்ட் போட்டிகளும் 3 உத்தியோகபற்றற்ற ஒருநாள் போட்டிகளும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Note to the Cabinet என்ற பெயரில் ஜனாதிபதி அமைச்சரவைக்கு விசேட விளக்கம்

அரசாங்க செலவீனங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில், note to the cabinet என்ற பெயரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று அமைச்சரவைக்கு விசேட விளக்கமொன்றை வழங்கியதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (31) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்…. அரசாங்கத்தின் செலவுகளுக்கு ஏற்றவாறு போதியளவு வருமானத்தை ஈட்ட முடியாத நெருக்கடி நிலை … Read more

இலங்கை மின்சார சபைக்கு ஒன்லைன் மூலம் கொடுப்பனவு……

இணைய வழி Online முறை மூலம் இலங்கை மின்சார சபைக்கு பணம் செலுத்துவது நடைமுறை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோலாறு காரணமாக கடந்த நவம்பர் மாதம் முதல் ஒன்லைன் முறையில் பணம் செலுத்தும் முறை இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிங்கள கலாசார நிறுவனத்தின் எதிர்கால செயற்பாடுகள் பற்றிய கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது

சிங்கள கலாசார நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்வது மற்றும் அதன் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் மிகப் பொருத்தமான அமைச்சரவை பத்திரம் ஒன்றை தயாரித்து சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவுக்கு பணிப்புரை விடுத்தார். நாட்டின் கலாசார அடையாளத்தைப் பாதுகாக்கும் சிங்கள கலாசார நிறுவனத்தின் செயற்பாடுகளைப் பேணுவதற்காக, கலாசார அமைச்சுக்கும் சிங்கள கலாசார நிறுவனத்திற்கும் இடையிலான ஒன்றிணைந்த குழுவொன்றை நியமிக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். நேற்று … Read more

2023.01.30 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

2023.01.30 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் (அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரச்சார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம், தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.) 01.          பெல்மடுல்ல மாவட்டஃநீதிவான் நீதிமன்றக் கட்டிடத்தொகுதியை நிர்மாணிப்பதற்கான காணி கைக்கொள்ளல் பெல்மடுல்ல நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றமாகவும் நீதிவான் நீதிமன்றமாகவும் செயற்பட்டு வருவதுடன், தற்போது 8,385 வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு வருகின்றன. இந்நீதிமன்றத்தில்; போதியளவு இடவசதிகளின்மையால் பொது மக்கள், சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்ற பணிக்குழாமினர் மிகவும் சிரமங்களை எதிர்கொண்டு … Read more

மஹிந்தவை கைவிட்ட நெருங்கிய உறவினர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினர் ஒருவர் தேசிய மக்கள் கட்சிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினரான ஹேமல் ரன்வல என்பவரே இவ்வாறு ஆதரவளித்துள்ளார். இந்த நிலையில் கனேமுல்லையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி கூட்டத்தில் ஆதரவு தெரிவிக்கும் முகமாக அவர் இணைந்துள்ளார். கூட்டத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், “முன்னாள் ஜனாதிபதி கம்பஹாவுக்கு வரும்போது ஹேமல் ரன்வலவின் வீட்டிற்கு செல்லாமல் கம்பஹாவுக்கு வருவதில்லை. அத்தகைய நெருங்கிய உறவினரான ஹேமல் ரன்வல … Read more

யாழிலிருந்து ஆரம்பமாகும் ஆர்பாட்ட பேரணி: பெருகும் ஆதரவு(Photos)

எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனபடுத்தி தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து ஆர்பாட்ட பேரணி  மட்டக்களப்பு நோக்கி இடம்பெறவுள்ளது. இந்நிலையில் இன்று(30.01.2023) திங்கட்கிழமை அம்பாறை  மாவட்டத்திலுள்ள மதகுருமார் ,உட்பட்ட சிவில் அமைப்புக்கள் மக்கள் பிரதிநிதிகள் என பலதரப்பட்ட தரப்பினருடன்  கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அனைத்து தரப்பினரும் போராட்டத்திற்கு ஆதரவினை வழங்கியுள்ளனர். அனைத்து தரப்பினரும் ஆதரவு இதற்கமைய போராட்டத்தின் இறுதி நாள் மட்டக்களப்பிற்கு வடக்கிலிருந்து திருகோணமலையினூடாக வரும் எழுச்சி பேரணியுடன் அம்பாறையிலிருந்தும் ஆர்பாட்ட பேரணி வருகைதரவுள்ளது. இதனைதொடர்ந்து நாளைய … Read more

ஊடகவியலாளர் நிபோஜன் கொழும்பில் ஏற்பட்ட விபத்தில் மரணம்

கிளிநொச்சியை சேர்ந்த பிரபல ஊடகவியலாளர் நிபோஜன் விபத்தில் மரணமடைந்துள்ளார். கொழும்பு – தெகிவளை பிரதேசத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்துள்ளார்.  உடல் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  Source link

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தங்களது மனைவியரை நியூசிலாந்து அழைத்து செல்ல அனுமதி

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள், தங்களது மனைவியரை நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் போது அழைத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது மட்டும் வீரர்கள் தங்களது மனைவியரை அழைத்துச் செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி விரைவில் நியூசிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மட்டும் வீரர்கள் தங்களது மனைவியரை அழைத்துச் செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேவையற்ற பயணங்களுக்கு அனுமதி மறுப்பு … Read more

காலநிலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்! விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

காலநிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் காரணமாக கடற்தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடற்பிராந்தியத்திற்கு மேலாக நிலைகொண்டுள்ள தாழமுக்கம் குறித்து  இவ்வாறு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. கிழக்கு திசை நோக்கி நகரும் தாழமுக்கம் இதன்படி, திருகோணமலை, பொத்துவில் மற்றும் காங்கேசன்துறை ஊடாக செல்லும் கடற்பிராந்தியங்களில் இன்று மாலை 6 மணி முதல் கடற்தொழிலில் ஈடுபட வேண்டாம் என  வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி … Read more