கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சொகுசு பேருந்து விபத்து! 22 பேர் வைத்தியசாலையில்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பேருந்தொன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை 4.45 மணியளவில் கிளிநொச்சி, இரணைமடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது. விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் விபத்தில் 22 பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  மேலதிக தகவல் – சுழியன் Source link

ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு புலமைப்பரிசில்

2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் முதல் முறையாக தோற்றி ஒரே தடவையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் ஆரம்பித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரைக்கமைய ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ்வேலைத்திட்டத்திற்கு, தகுதியுடைய மாணவ, மாணவிகளை விண்ணப்பிகக் கோரி ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க கடந்த 30 ஆம் திகதி (30.11.2022) கல்வியமைச்சின் செயலாளருக்கு எழுத்து … Read more

விவேகானந்த மனிதவள மேம்பாட்டு நிலையத்தில் சான்றிதழ் பயிற்சி வகுப்புகள்

மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விவேகானந்த மனிதவள மேம்பாட்டு நிலையத்தில் எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி முதல் பின்வரும் சான்றிதழ் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன. மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம் : 075 092 2595

வங்கக்கடலில் உருவாகிறது புயல்

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை (06) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதியில் நீடிக்கும் … Read more

உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிக்க இந்தியாவின் தொழில்நுட்ப உதவி

இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் தங்கியிருப்பதனை தவிர்க்கும் வகையில் உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு அவசியமான குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டத்தை தயாரிக்கும் நோக்கில் இந்திய தேசிய பால்பண்ணை மேம்பாட்டுச் சபையின் பல்துறை குழுவுடன் இணைந்து செயற்படுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், உள்நாட்டின் அரச மற்றும் தனியார் துறை பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளார். அது தொடர்பில், இந்தியாவின் தேசிய பால்பண்ணை மேம்பாட்டுச் சபையும் (NDDB) இந்தியாவின் அமுல் பால் நிறுவனமும் இணைந்து இந்நாட்டில் … Read more

மட்டக்களப்பில், மாணவர்களுக்கு போதைப்பொருள் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான போதைப்பொருள் பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு  மட்டக்களப்பில் இன்று இடம்பெற்றது. இதன் போது சமகாலத்தில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு சவாலாக அமைந்துவரும் போதைப்பொருள் பாவனை தொடர்பாவும், அதனால் மாணவர்களில் கல்வி வளர்ச்சியில் ஏற்படும் தாக்கம், மற்றும் இதனூடாக குடும்பங்களில் ஏற்படும் பின் விளைவுகள், சிறைச்சாலையில் சிறைக் கைதிகளுக்கு வழங்கப்படும் தண்டனைகள் தொடர்பாகவும்  மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. மட்டக்களப்பு பல்சமய ஒன்றியத்தின் தலைவரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பின் … Read more

பத்திரிகை அறிக்கையிடலில் பொறுப்புடன் மற்றும் உண்மையைக் கண்டறிந்து செய்தி அறிக்கையிடவும்

பத்திரிகை அறிக்கையிடலில் பொறுப்புடன் மற்றும் உண்மையைக் கண்டறிந்து செய்தி அறிக்கையிடவும் – Sunday Times பத்திரிகையின் ஆசிரியருக்கு சபாநாயகரின் கடுமையான எச்சரிக்கை பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் ஓய்வூதிய வயது தொடர்பில் எந்தக் கலந்துரையாடலும் இடம்பெறவில்லை இந்த செய்தி அறிக்கைக்கு பொறுப்புக்கூறவேண்டிய நபர்களை பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவுக்கு அழைக்கவும் பத்திரிகை அறிக்கையிடலில் பொறுப்புடன் மற்றும் உண்மையைக் கண்டறிந்து செய்தி அறிக்கையிடுமாறு Sunday Times பத்திரிகையின் ஆசிரியருக்கு கடுமையாக எச்சரிக்கை விடுப்பதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த … Read more

மக்கள் எவரும் தேர்தலைக் கோரவில்லை! – எதிரணிக்கு அமரவீர பதிலடி

இலங்கையில் மக்கள் எவரும் தேர்தலைக் கோரவில்லை. எனினும், உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும்  என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார். மக்கள் தேர்தலைக் கோரவில்லை அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்கள் தேர்தலைக் கோரவில்லை. எனினும், எதிர்க்கட்சியின் கோரிக்கையை அரசு நிறைவேற்றும். தேர்தலில் மக்கள் அவர்களுக்குச் சிறந்த பதிலை வழங்குவார்கள்” – என்றார். Source link

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவையில் காணப்படும் பிரச்சினைகளை ஆராய்வதற்கு ……..

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவையில் காணப்படும் பிரச்சினைகளை ஆராய்வதற்கு பாராளுமன்ற சிறுவர் ஒன்றியத்திற்கும், நன்நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு மாகாண ஆணையாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் நன்நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் துறையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு பாராளுமன்ற சிறுவர் ஒன்றியத்திற்கும், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு மாகாண ஆணையாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் அண்மையில் (02) இடம்பெற்றது. இந்த ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரோஹினி குமாரி விஜயரத்ன தலைமையில் அண்மையில் (02) பாராளுமன்றத்தில் … Read more

அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி ,பிரதேசத்தில் டெங்கொழிப்பு நடவடிக்கை

அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் டெங்கொழிப்பு நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள ,பொதுச் சுகாதார பரிசோதகர்கள் டெங்குக் கட்டுப்பாட்டு பிரிவினர், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து வீடு வீடாகச் சென்று டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் ஏ.எம். இஸ்மாயில் தெரிவித்தார். இதேவேளை , பிரதேசங்களில் டெங்கு நுளம்பு பரவக் கூடிய இடங்களை வைத்திருந்த 25 வீட்டு உரிமையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். சுமார் 250 … Read more