“புனர்வாழ்வு பணியகம்” சட்டமூலத்திற்கு எதிராக 6 மனுக்கள்

“புனர்வாழ்வு பணியகம்” என்ற சட்ட மூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 6 மனுக்களின் பிரதிகள் தமக்கு கிடைத்திருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (03) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த மனுக்கள் அரசியல் யாப்பின் 121 (01) அரசியலமைப்புக்கு அமைவாகவே ஆகுமென்று சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

கோப் குழுவுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர் 

    பாராளுமன்ற நிலையியற் கட்டளை 120 இன் ஏற்பாடுகள் மற்றும் 2022 ஆகஸ்ட் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றினால் தடைபெறாமல்  2022 ஆகஸ்ட் 29 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையின் பிரகாரம் அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழுவில்) பணியாற்றுவதற்காக தெரிவுக் குழுவினால் பெயர்குறிப்பிடப்பட்டுள்ள உறுப்பினர்களை சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (ஒக். 03) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.   இதற்கமைய, அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய … Read more

முல்லைத்தீவு மாவட்ட மென்பந்தாட்ட துடுப்பாட்ட அணி முதலாம் இடம்

வட மாகாண ஆண்களுக்கான மென்பந்தாட்ட துடுப்பாட்ட போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட அணி 1ஆம் இடத்தை பெற்றுக் கொண்டது. நேற்றைய தினம் (02) மன்னாரில் நடைபெற்ற போட்டியில்,முல்லைத்தீவு மாவட்ட அணி கால் இறுதி போட்டியில் யாழ் மாவட்ட அணியை வெற்றி கொண்டு, அரையிறுதியில் மன்னார் மாவட்ட அணியை வெற்றி கொண்டு இறுதிப் போட்டிக்கு தெரிவாகி, கிளிநொச்சி மாவட்ட அணியை வெற்றி கொண்டு முதலாம் இடத்திற்கு தெரிவாகியுள்ளது. இதன்போது முல்லைத்தீவு மாவட்ட அணி யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி ஆகிய மூன்று … Read more

இலங்கையர்களுக்கு ஜப்பானில் ஆயிரம் பராமரிப்பு ஊழியர்களுக்கான சந்தர்ப்பம்

ஜப்பானில் பராமரிப்பு சேவை பிரிவில் 1000 க்கும் மேற்பட்ட தொழில் வாய்ப்புகள் அடுத்த வருடத்தில் இலங்கை தொழிலாளர்களுக்கு கிடைக்கவிருப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஜப்பானில் க்ளோபல் ட்ரஸ்ட் நெட்வொர்க் Global Trust Network நிறுவனத்துடன் நடத்திய பேச்சு வார்த்தையில் இந்த வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு அந்த நிறுவனம் உடன்பட்டுள்ளது. இந்த வருடத்தில் விரைவாக 150 ஊழியர்களை இணைத்துக் … Read more

பிரதமர் தலைமையில் அலரிமாளிகையில் உலக குடியிருப்பு தின நிகழ்வு

உலக குடியிருப்பு தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு பிரதான வைபவம் இன்று காலை பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்றது. நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதி அபிவிருத்தி அமைச்சு மற்றும் நகர்ப்புற குடியேற்ற மேம்பாட்டு திணைக்களத்தினால் இது தொடர்பான நிகழ்வுகள் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டன. யாரையும் எங்கும் பாதுகாப்பதே இவ்வருடத்தின் தொனிப்பொருள் என நகர குடியேற்ற அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மூன்று வயதுப் பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் … Read more

ஐக்கிய நாடுகள் பேரவையின் புதிய தீர்மானம்! இலங்கையின் அரசியல் தலைமையை ஆட்டிப்படைக்கும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கடந்தகால தீர்மானங்களை போலன்றி, அக்டோபர் 6ஆம் திகதி சபை வாக்கெடுப்பு நடத்தும் தீர்மானம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அனுசரணை வழங்கியுள்ளன. அரசியல் தலைமை வெளிவரும் விடயங்களின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்கால தீர்மானம் பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழலுக்கு பொறுப்பானவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு குறித்த தீர்மானம் செல்லுபடியாகும் என்பதால், … Read more

இலங்கை மத்திய வங்கி-ஆசிய அபிவிருத்தி வங்கி நிலையம்-ஆசிய பசிபிக் பிரயோக பொருளியல் அமைப்பு என்பவற்றிற்கிடையிலான மூன்றாவது இணையவழிப் பேரண்டப்பொருளாதார மாநாடு

இலங்கை மத்திய வங்கி-ஆசிய அபிவிருத்தி வங்கி நிலையம்-ஆசிய பசிபிக் பிரயோக பொருளியல் அமைப்பு என்பனவற்றிற்கிடையிலான இணையவழிப் பேரண்டப்பொருளாதார மாநாட்டிற்கு தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக 2022 செத்தெம்பர் 23ஆம் திகதியன்று ஆசிய அபிவிருத்தி வங்கி நிலையம் மற்றும் ஆசிய பசுபிக் பிரயோக பொருளியல் அமைப்புடன் கூட்டிணைந்து இலங்கை மத்திய வங்கி அனுசரணை வழங்கியது. இவ்வாண்டிற்கான கருப்பொருளானது கடந்த ஆண்டினைப் போன்று ‘பேரண்டப்பொருளாதார உறுதிப்பாட்டின் தோற்றம் பெற்றுவரும் பிரச்சனைகள்’ தொடர்பில் அமைந்திருந்தது. மாநாட்டினை ஆரம்பித்துவைத்த மத்திய வங்கி ஆளுநர் முனைவர். … Read more

மத்திய மலையக பிரதேசத்தில் கடும் மழை :நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

காசல்ட்ரீ மற்றும் மௌசாகல நீர்த்தேக்க பிரதேசங்களில் நேற்று முதல் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக லக்சபான நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று (03) அதிகாலை திறக்கப்பட்டுள்ளன. நோட்டன் பிரிட்ஜ், விமல சுரேந்திர நீர்தேக்கத்தில் நேற்று முதல் வான் கதவுகள் திறக்கப்பட்டதாக நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அழகக்கோன் தெரிவித்துள்ளார். தற்பொழுது பெய்து வரும் கடும் மழையினால் காசல்ட்ரீ மற்றும் மௌசாகலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் வழிந்தோடும் நீர்மட்டத்தை எட்டியிருப்பதாகவும் நீர்மட்டம் அதிகரித்ததை … Read more

நெருக்கடியிலிருந்து மீள இலங்கை முன்னெடுத்துவரும் முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஆணைக்குழுத் தலைவர் பாராட்டு!

இலங்கையின் அபிவிருத்தி மற்றும் நீடித்து நிலைக்கும் தேசிய நல்லிணக்கத்தை உருவாக்கத் தேவையான மறுசீரமைப்புகளை ஏற்படுத்தவும், தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கும் இலங்கை எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கத் தயாரென ஐரோப்பிய ஆணைக்குழு உறுதியளித்துள்ளது. அத்துடன், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை தொடர்பில் இலங்கையின் முன்னேற்றம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்டிருக்கும் மதிப்பீட்டு அறிக்கை இவ்வருட இறுதியில் அல்லது 2023 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் வெளியிடப்படுமென்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க … Read more

மவுண்ட்வேர்ணன் தோட்டத்தில் மண்சரிவு : 3 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு

மத்திய மலையக பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழையினால் ,திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, மவுண்ட்வேர்ணன் மேற்பிரிவு தோட்டத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில்   பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (03) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சமையலறையில் இருந்த 3 பிள்ளைகளின் தாய் உயிரிழந்திருப்பதாக திம்புள்ள பொலிசார் தெரிவித்துள்ளனர். மலையக பிரதேசத்தில் சீரற்ற காலநிலை நிலவுவதனால் மண்சரிவு அபாயங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.