அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகத்தின் தலையீட்டில் சுமார் 12 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகள்,உபகரணங்கள் அன்பளிப்பு!

12 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்க அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகம், அமெரிக்காவின் பிரபல மனிதாபிமான உதவி அமைப்புகளுடன் இணைந்து, இலங்கைக்கு மருந்துகளை வழங்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. இதுவரை, 03 தடவைகளில், சுகாதார அமைச்சுக்கு மருந்துப்பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதன் இறுதிக் கட்டமாக இன்னுமொரு தொகை மருந்துப்பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இன்று (02) இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை … Read more

சுகாதார அணையாடைகளை (Sanitary Napkin ) உள்நாட்டில் தயாரிப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் அனைத்து மூலப்பொருள் வரிகளும் நீக்கம்.

பெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகள் மத்தியில் சுகாதாரத்தை உறுதி செய்தல் மற்றும் சுகாதாரப் பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொடுத்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில், உள்நாட்டில் சுகாதார அணையாடைகளை தயாரிப்பதற்காக ( Sanitary Napkin ) இறக்குமதி செய்யப்படும் பிரதான 05 மூலப்பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்து வரிகளையும் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. • இறக்குமதி செய்யப்படும் சுகாதார அணையாடைகளுக்கு (Sanitary Napkin ) வரிச் சலுகைகள் வழங்கப்படும் • வரிச் சலுகை உடனடியாக நுகர்வோருக்கு   இதேவேளை, … Read more

கிழக்கு மாகாண உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்ற மேன்முறை

கிழக்கு மாகாண பொதுச் சேவை உத்தியோகத்தர்களின் 2023ம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றம் தொடர்பான மேன்முறையீடுகளை இம் மாதம் 13ம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிருவாகம்) ஏ. மன்சுர் தெரிவிக்கையில்,2023ம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றம் வழங்குவது தொடர்பாக கோரப்பட்ட விண்ணப்பங்களுக்கு இடமாற்ற சபையினால் சிபாரிசு செய்யப்பட்ட இடமாற்றப் பட்டியல் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 2023ம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றம் வழங்குவது தொடர்பாக கோரப்பட்ட விண்ணப்பங்களுக்கு இடமாற்ற சபையினால் சிபாரிசு … Read more

சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு , தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஒக்டோபர்03ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2022ஒக்டோபர்02ஆம் திகதிநண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவமாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில்100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும்வடமேல் மாகாணங்களில் பலதடவைகள்மழை பெய்யும் … Read more

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் மரியாதை நிமித்தம் சந்திப்பு

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ அலி சப்ரி 2022 செப்டெம்பர் 30ஆந் திகதி அமைச்சில் வைத்து சந்தித்தார். இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டமைக்காக உயர்ஸ்தானிகரை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் வாழ்த்தினார். உள்நாட்டு சவால்களை எதிர்கொள்வதற்காக அண்மையில் வழங்கப்பட்ட உடனடியான மனிதாபிமான உதவிகளை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பாராட்டினார். சக்தி மற்றும் கல்வித் துறையில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கருத்துக்களை வெளியிட்டார். இலங்கையில் அவுஸ்திரேலிய நிறுவனங்களின் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு … Read more

இந்தோனேசியா கால்பந்து மைதானத்தில் ரசிகர்களுக்கு இடையே மோதல்; உயிரிழந்தோர் எண்ணிக்கை 174

இந்தோனேசியாவில் நடந்த கால்பந்jhl;l போட்டியில் ரசிகர்களுக்கு இடையே நடந்த பயங்கர மோதலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 174 ஆக அதிகரித்துள்ளது. 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். லீக் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. அரேமா எஃப்சி அணி விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள கஞ்சுருஹான் ஸ்டேடியத்தில் அரேமா எஃப்சிக்கும், பெர்செபயா சுரபயாவுக்கும் இடையிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. அரேமா எஃப்சி அணியை 3-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து பெர்செபயா சுரபயா … Read more

அத்தாட்சிப்படுத்தல் சேவைகளுக்கான மின்னியல் சந்திப்பு நியமன முறைமை

மின்னியல் சந்திப்பு நியமன முறைமையை எஸ்.எல்.டி. மொபிடெல் உடன் இணைந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு 2022 செப்டெம்பர் 29ஆம் திகதி முதல் அறிமுகப்படுத்தவுள்ளது. இது கொன்சியூலர் அலுவல்கள் பிரிவின் சரிபார்ப்பு மற்றும் அத்தாட்சிப்படுத்தல் பிரிவில் சிறந்த மற்றும் பயனுள்ள சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு பொதுமக்களுக்கு வசதியளிப்பதாக அமையும். மின்னியல் சந்திப்பு நியமன முறைமையானது, கொன்சியூலர் அலுவல்கள் பிரிவு மற்றும் யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி, குருநாகல் மற்றும் மாத்தறையில் உள்ள அதன் பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்களில் ஆவணங்களை அத்தாட்சிப்படுத்துவதற்கான … Read more

சீனாவின் பெட்ரோ சைனா நிறுவன அதிகாரிகள் – அமைச்சர் கஞ்சன விஜயசேகரவுக்கிடையில் கலந்துரையாடல்

    மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சருக்கும் சீனாவின் பெட்ரோ-சைனா நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இதுதொர்பாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் தகவல்களை பதிவிட்டுள்ளார்   இந்த பேச்சுவார்த்தைகளின் போதுஇ நிலுவையில் உள்ள கொடுப்பனவுகள்இ மீள செலுத்தும் முறைமைகள் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு தொடர்ச்சியான விநியோகத்தை மேற்கொள்வது குறித்து ஆராயப்பட்டதாக அமைச்சர் அதில் குறிப்பிட்டுள்ளார்.   அதேவேளைஇ இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் பெட்ரோ சைனா அதிக அளவில் எண்ணெய் … Read more

குருணாகல் ஆயரை ஜனாதிபதி சந்தித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும், இலங்கை இராஜகுரு சபையின் தலைவரும், குருணாகல் கத்தோலிக்க மறைமாவட்ட ஆயருமான வண. பிதா கலாநிதி ஹரோல்ட் அந்தோனி பெரேராவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (02) பிற்பகல் நடைபெற்றது. குருநாகல் கத்தோலிக்க ஆயர் இல்லத்திற்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள், ஆயரது உடல்நிலை குறித்து கேட்டறிந்த பின்னர், கத்தோலிக்க சமய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினார்.   இந்தச் சந்திப்பில் குருணாகல் கத்தோலிக்க மறைமாவட்ட பதில் ஆயர் வண.பிதா பியல் ஜானக பெர்னாண்டோ மற்றும் குருநாகல் … Read more

இலங்கைக்கான வியட்நாம் தூதுவர், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ஹோ தி தான் ட்ரூக் அவர்கள் 2022 செப்டம்பர் 30ஆந் திகதி வெள்ளிக்கிழமை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். அமைச்சரின் நியமனம் குறித்து தூதுவர் வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், அவரது பதவிக்காலத்தில் அவருடன் நெருக்கமாகப் பணியாற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான பலதரப்பட்ட விடயங்கள் குறித்து தூதுவர் கலந்துரையாடினார். வியட்நாமும் இலங்கையும் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக அன்பான மற்றும் … Read more