மீரிகம, லோலுவாகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்

மீரிகம, லோலுவாகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் அமைந்துள்ள Aussee Oats Milling PVT LTD எனப்படும் உணவு உற்பத்தித் தொழிற்சாலையைப் பார்வையிடுவதற்கான கள விஜயத்தினை (10) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டார். இவ்வாறான தொழிற்சாலைகள் ஊடாக அலங்கார மீன் வளர்ப்பினை விருத்தி செய்வதற்கான அடிப்படை தேவைகளுள் ஒன்றான மீன் உணவுகளை புதிய முறையில் உற்பத்தி செய்து விருத்தி செய்வதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நோக்கமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.  

50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு ,தேசிய வளி மண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 செப்டம்பர்12ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 செப்டம்பர்12ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின்ஏனைய  பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்தியமலை நாட்டின் மேற்கு சரிவுப்பகுதிகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் … Read more

இலங்கைக்கு மற்றுமொரு நெருக்கடி! எரிபொருள் இறக்குமதி விண்ணப்பங்களை புறக்கணிக்கும் வெளிநாடுகள்

இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான திறந்த கேள்விப்பத்திரங்களுக்கு எண்ணெய் உற்பத்தி செய்யும் எந்தவொரு நாடும்  விண்ணப்பிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய, 20-25 நிறுவனங்கள் மாத்திரம் கேள்விப்பத்திரத்திற்கு விண்ணப்பித்துள்ள நிலையில் அவற்றில் மிகவும் பொருத்தமான 10 விண்ணப்பங்கள் மாத்திரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தரகு நிறுவனங்களின் எரிபொருள் இறக்குமதி இருப்பினும் அவற்றில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் எவையும் உள்வாங்கப்படவில்லை எனவும் அவை அனைத்தும் முகவர் நிறுவனங்கள் எனவும்  தெரிவிக்கப்படுகின்றது. எனவே, முகவர் நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதிப்பதா, வேண்டாமா … Read more

இலங்கையிலிருந்து இரகசியமாக வெளியேறும் வைத்தியர்கள்!

இலங்கையிலிருந்து கடந்த 8 மாதங்களில் சுமார் 500 வைத்தியர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையிலிருந்து வைத்தியர்கள் வெளிநாடு செல்வது பாரதூரமான விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடு செல்லும் வைத்திய நிபுணர்கள் கடந்த இரண்டு மாதங்களில் வெளிநாடு சென்ற வைத்தியர்கள் பலர் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்காமல் வெளிநாடு சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை, பதவி விலகலை அறிவித்துள்ள … Read more

யாழில் மூத்த சகோதரனின் இழிவான செயல்: உயிரை மாய்த்த 20 வயது யுவதி

யாழில் போதைப்பொருள் பாவித்த மூத்த சகோதரனால் வன்புணர்வுக்கு உள்ளாகிய இளம் பெண் மனவிரக்திக்கு உள்ளாகி தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இந்தச் சம்பவம் நேற்று (10) இடம்பெற்றுள்ளது. 20 வயதுடைய இளம் பெண்ணே இவ்வாறு தவறான முடிவை எடுத்துள்ளார். போதைப்பொருள் பாவனையால் ஏற்பட்ட பாதிப்பு போதைப்பொருள் பாவித்த மூத்த சகோதரன் தனது சகோதரியை வன்புணர்வுக்கு உள்படுத்தியுள்ளதாகவும் அதனால் விரக்தியடைந்த சகோதரி குரல் பதிவில் நடந்தவற்றை பதிவு செய்து நண்பிக்கு அனுப்பிவிட்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக … Read more

மனித உரிமைகள் பேரவையில் நம்பிக்கையை வெல்ல முயற்சிக்கும் இலங்கை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வுகள் நாளை ஆரம்பமாகும் நிலையில், இலங்கைக்கு நெருக்கடி கொடுக்க நாடுகள் தயாராகின்றன. எனினும் இந்த முறை இலங்கைக்கு தண்டனையில் இருந்து விலக்களிக்கும் காரணம் கிடைத்திருக்கின்றது. வழமையாக ஏதாவது காரணங்களை கூறி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை ஏமாற்றி வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கைக்கு எதிராக முக்கிய நாடுகள் தீர்மானம் ஒன்றை கொண்டு வரவுள்ளன. இலங்கையில் நிலவும் பொருளாதார கீழ்நிலை அத்துடன் மனித உரிமைகள் பேரவையும் கடும் நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.இந்த … Read more

போலி கடவுச்சீட்டு மூலம் நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த இருவர் கைது

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த ஈரான் மற்றும் சோமாலிய பிரஜைகள் இருவர் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் பிரான்ஸ் மற்றும் தென்னாபிரிக்காவிற்கு செல்ல முயற்சித்த போது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி கடவுச்சீட்டு அவர்களது கடவுச்சீட்டுகள் போலியானவை என சந்தேகத்தின் பேரில் குடிவரவு அதிகாரிகள் சோதனையிட்டதையடுத்து சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும், சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் … Read more

ஆசிய கிண்ண ரி20 போட்டித் தொடர்: கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றியது

ஆசிய கிண்ண ரி20 போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் ,பாகிஸ்தான் அணியை இலங்கை அணி தோற்கடித்து கிண்ணத்தை கைப்பற்றியது.  

அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் நாயகத்தின் இலங்கைக்கான விஜயம்

அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் மார்ட்டின் சுன்கொங் இன்றைய தினம் (11) இலங்கை வர இருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார். ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்ஹ பிரதமராக இருந்தபோது விடுத்த அழைப்பிற்கு அமைய அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் நாயகத்தினுடைய இந்த இலங்கை விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அமைய இன்றைய தினம் (11) இலங்கை வரவிருக்கும் மார்ட்டின் சுன்கொங் அவர்களை பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ அங்கஜன் ராமநாதன் … Read more

இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் பங்கேற்க அமெரிக்கா தயார் : சமந்தா பவர் (Video)

இலங்கை தனது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முற்படுகையில், அமெரிக்கா கடனளிப்பவராகவும் பாரிஸ் கிளப்பின் உறுப்பினராகவும் இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் பங்கேற்க தயாராக இருப்பதாக அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி உதவி திட்டத்தின் நிர்வாகி சமந்தா பவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,  கடன் மறுசீரமைப்பு “இலங்கையின் அனைத்து கடன் வழங்குநர்களும், குறிப்பாக சீன மக்கள் குடியரசு இந்தச் செயன்முறைக்கு வெளிப்படையாக ஒத்துழைக்க வேண்டியது … Read more