போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள் தொடர்பான அறிக்கை

கட்டணம் அறவிட்டு, பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள் தொடர்பான அறிக்கையொன்றை வழங்குமாறு எரி சக்தி அமைச்சு, போக்குவரத்து அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிக்கை கிடைத்ததன் பின்னர் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்காக வழங்கப்படும் எரிபொருள் கோட்டாவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது..

சரத் பொன்சேகாவை உடன் கைது செய்ய வேண்டும் – ஜனாதிபதியிடம் கோரிக்கை

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை கைது செய்ய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அத்தடன், நாட்டில் சமாதானம் மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி மாளிகை போன்ற நாட்டின் அரச சொத்துகள் கையகப்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவைத் … Read more

அனைத்துக் கட்சிகளுக்கும் நியாயமான பிரதிநிதித்துவத்துடன் கூடிய ஒரு ஆட்சிக் கட்டமைப்பு உருவாக்கப்படும்! – ஜனாதிபதி

ஒவ்வொரு கட்சிக்கும் நியாயமான பிரதிநிதித்துவத்துடன் கூடிய ஒரு ஆட்சிக் கட்டமைப்பை உருவாக்குவதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார். சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் பல்வேறு கட்சிகளுடன் நேற்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் அவர்களின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்(ACMC), பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்சன யாப்பா உள்ளிட்ட குழுவினர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் … Read more

சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு எரிபொருள்

சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்கா விஜேசிங்க தெரிவித்துள்ளார். பதிவு செய்யப்பட்ட சகல வாகனங்களுக்கும் போதியளவிலான எரிபொருள் வழங்கப்படும் என்று தெரிவித்த பணிப்பாளர் நாயகம் அதிகாரசபையின் உத்தியோகபூர்வ இணைதளத்தில் இது தொடர்பான பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்றும் கூறினார்.

கண்டி எசல பெரஹராவின் இறுதி ரந்தோலி இறுதி ரந்தோலி

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹரா தற்போது வீதி உலா இடம்பெறுகிறது. இன்று மாலை 6.35க்கு பெரஹரா வீதி உலா ஆரம்பமானது. இதேவேளை, கதிர்காம தேவாலய எசல பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹராவும் இன்றிரவு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்க கிரிக்கட் சபை: ரி-20 லீக் சுற்றுத்தொடரில் இலங்கை அணி வீரர்கள்

இலங்கை அணி வீரரான துஷ்மந்த சமீரவின் ஒப்பந்தத்தின் பெறுமதி இரண்டு லட்சம் அமெரிக்க டொலர்களாகும். சாமிக்க கருணாரட்ன ஒரு லட்சத்து 50 ஆயிரம் டொலர்களுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார். மஹிஸ் தீக்ஷன ஒரு லட்சம் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்யப்பட்டிருக்கின்றார். அகில தனஞ்ஜய, நிரோஷன் திக்வெல்ல, சீக்குகே பிரசன்ன, நுவன் பிரதீப், விஷ்வ பெர்னாண்டோ போன்ற வீரர்களும் இந்த சுற்றுத்தொடரில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை ,தென்னாபிரிக்க கிரிக்கட் சபை ஒழுங்கு செய்யும் ரி-20 லீக் சுற்றுத்தொடரில் பங்கேற்கும் … Read more

தேசிய விளையாட்டு சபையின் புதிய உறுப்பினராக தளபதி நியமனம்

கிரிக்கட் அணி முன்னாள் தலைவர் திரு. அர்ஜுன ரணதுங்க தலைமையிலான தேசிய விளையாட்டு சபைக்கு மீண்டும் உறுப்பினர்களை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்ததை அடுத்து, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் விளையாட்டு அமைச்சின் தேசிய விளையாட்டு சபை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று(10) புதிய உறுப்பினர்கள் டொரிங்டன் வீதியில் அமைந்துள்ள தேசிய விளையாட்டு சபை அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டதன் பின்னர் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களிடம் நியமனக் கடிதம் வழங்கப்பட்டது. விளையாட்டுத் துறையின் … Read more

தேசிய பாதுகாப்பு கல்லூரியில் விருந்தினர் விரிவுரை தளபதியினால்

இலங்கையின் முப்படைகள் மற்றும் பொலிஸாரின் மிக உயர்ந்த கல்வி கற்கும் இடமான கொழும்பு 3 தேசிய பாதுகாப்பு கல்லூரியில் (10) தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பாடநெறி இல 1 யின் ‘தளபதி விரிவுரை’ இனை மாணவ அதிகாரிகளுக்கு வழங்க இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் அழைக்கப்பட்டார். ‘தேசிய பாதுகாப்பு தொடர்பில் இலங்கை இராணுவம்’ என்ற கருப்பொருளில் இடம்பெற்ற இந்த விரிவுரையானது, சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு சவால்கள் மற்றும் … Read more

பொன்சேகாவின் பீல்ட் மார்ஷல் பதவி தொடர்பில் முடிவு எடுங்கள்: ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா வகிக்கும் பீல்ட் மார்ஷல் பதவி சம்பந்தமாக தீர்மானம் ஒன்றை எடுக்குமாறு அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சரத் பொன்சேகா அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்து, அவர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர். உயிர் தியாகம் செய்தேனும் போராட்டத்தை வெல்ல வேண்டும் இறுதியான போராட்டத்திற்கு கொழும்புக்கு வருமாறும் உயிர்களை தியாகம் செய்தேனும் போராட்டத்தை வெல்ல வேண்டும் … Read more