அவசரகால நிலை சட்ட விதிகளை நீடிப்பதற்கு அங்கீகாரம்

பாராளுமன்ற்றத்தில் எவ்வித விவாதங்களும் இன்றி, இன்று (12) அவசரகால நிலை சட்ட விதிகளை நீடிப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.. இதன்படி, அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை பாராளுமன்றத்தினால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ பதவி விலகியதையடுத்து, கடந்த மாதம் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தயார் நிலையில் இருக்கவும்!! வெளியானது அறிவிப்பு

இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும். 1. 30 ஆண்டுகளாக நாட்டில் இருந்த புலிகளின் பயங்கரவாதம் இந்த பொருளாதார நெருக்கடிக்கு … Read more

மன்னாரில் மீண்டும் கொரோனா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை

மன்னார் மாவட்டத்தில் கடந்த 11 தினங்களில் 103 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (12) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த 11 தினங்களாக கொரோனா தொற்று மிகவும் அதிகமாக காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்த வருடத்தில் மொத்தமாக 967 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,இதுவரையில் மாவட்டத்தில் மொத்தமாக 40 நபர்கள் கொரோனா … Read more

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. டெங்கு இரத்தக்கசிவு நிலை காரணமாக ஏழு குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக குழந்தைகள் நல விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இயன்றளவு திரவ ஆகாரங்களை வழங்க வேண்டும். நன்றாக ஓய்வெடுக்க விடவும்,இ அவர்களுக்கு பெரசிட்டமோல் மாத்திரையை வழங்கவும் என்று வைத்தியர் தீபால் பெரேரா பெற்றோர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மாலையில் குழப்ப நிலை

யாழ்ப்பாணத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இரவு நேரங்களில் குழப்பங்கள், விரும்பத்தகாத செயல்கள் இடம்பெறுவதினால் மாலை வேளையுடன் பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக யாழ் மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர்இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த வாரம் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டேன் அதன் போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மாலை வேளைகளில் மது போதையில் கூடுபவர்கள் கறுப்பு … Read more

35 ஆயிரம் மெட்ரிக் தொன் பெற்றோளுடனான கப்பல்

எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் நடவடிக்கைகள்  மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதேவேளை, 35 ஆயிரம் மெற்றிக் தொன் பெற்றோளை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இலங்கையை வந்தடையுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்ததுடன் ,இதனை இறக்கும் பணிகள் இன்று இடம்பெறும் என்றும் தெரிவித்தார். கப்பலுக்கான கொடுப்பனவு நேற்று முன்தினம் மத்திய வங்கி ஊடாக செலுத்தப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

சர்ச்சைக்குரிய சீனக்கப்பல் தொடர்பில் வெளியான தகவல்

சீனாவின் யுவான் வாங்-5 கப்பல் இன்னும் 650 கடல் மைல் தொலைவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று குறித்த அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், நேற்று பிற்பகல் நிலவரப்படி கப்பல் 650 கடல் மைல் தொலைவில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் அடுத்து வரும் இரண்டு தினங்களில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  நேற்று பிற்பகல் நிலவரப்படி, கப்பல் சுமார் 650 கடல் மைல் தொலைவில் இருந்ததாகவும், கப்பல் தொடர்பில் வெளியுறவு அமைச்சு மற்றும் துறைமுக அதிகாரசபை … Read more

போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள் தொடர்பான அறிக்கை

கட்டணம் அறவிட்டு, பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள் தொடர்பான அறிக்கையொன்றை வழங்குமாறு எரி சக்தி அமைச்சு, போக்குவரத்து அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிக்கை கிடைத்ததன் பின்னர் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்காக வழங்கப்படும் எரிபொருள் கோட்டாவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது..

சரத் பொன்சேகாவை உடன் கைது செய்ய வேண்டும் – ஜனாதிபதியிடம் கோரிக்கை

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை கைது செய்ய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அத்தடன், நாட்டில் சமாதானம் மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி மாளிகை போன்ற நாட்டின் அரச சொத்துகள் கையகப்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவைத் … Read more