இலங்கையில் முற்றாக முடங்கும் அபாயத்தில் கிராமிய வைத்தியசாலைகள்

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக கிராமிய வைத்தியசாலைகளின் பணிகள் முற்றாக தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உள்நோயாளிகளை அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்க அந்த மருத்துவமனைகளின் அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளதுடன், வெளிநோயாளர் சிகிச்சை நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. வைத்தியசாலையின் செயற்பாடுகள் முடக்கம் வைத்தியசாலை ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை காரணமாகவே வைத்தியசாலையின் செயற்பாடுகள் முடங்கியுள்ளன. எனினும் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை பிரதான வைத்தியசாலைகளுக்கு மாற்றுவதன் மூலம் அவர்களுக்கு தேவையான சிகிச்சை வழங்கப்படுவதாக வைத்தியர்கள் … Read more

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் , பொருளாதாரப் பிரச்சினைகளால் கல்வி சீர்திருத்தப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன

பொருளாதாரப் பிரச்சினைகளால் கல்வி சீர்திருத்தப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கல்வி சீர்திருத்தம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த நாட்டில் கல்விச் சீர்திருத்தங்கள் தொழில் சந்தைக்கும் உலகத்திற்கும் ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். கல்வி சீர்திருத்தங்களில், இந்த நாட்டில் மனித வளத்தின் தேவையை முதலில் அடையாளம் காணப்பட வேண்டும்.இந்த நாட்டில் அவ்வாறானதொன்று … Read more

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவ வீரர் மீது கத்தி வீச்சு

எம்பிலிபிட்டிய, 99 ஆவது மைல் கல் பிரதேசத்தில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திy; ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்த முயன்ற இராணுவ வீரர் ஒருவர் நேற்று (03) மாலை கத்தியால் குத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு 5 நாட்களுக்குப் பின்னர் நேற்று எரிபொருள் கிடைத்துள்ளது, சில மணித்தியாலங்களில் அவை தீர்ந்துள்ளன. அதனைத் தொடர்ந்து அங்கு வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் அமைதி இன்மையை ஏற்படுத்திaதாக எம்பிலிபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த சந்தர்ப்பத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் … Read more

இலங்கை கடவுச்சீட்டை பயன்படுத்தி வீசா இன்றி செல்லக் கூடிய நாடுகளின் பட்டியல் வெளியீடு

உலகில் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் இலங்கைக்கு 83 ஆவது இடம் கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் கடவுசீட்டுகளின் அடிப்படையில் பாஸ்போர்ட் இன்டெக்ஸ் நிறுவனத்தினால் இந்த தரப்படுத்தல் வெளியாகி உள்ளது.  ஒவ்வொரு நாட்டின் கடவுச்சீட்டும் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்ற பட்டியல் ஒவ்வொரு வருடமும் வெளியிடப்படுகிறது. விசா பெறாமல் வேறு நாட்டிற்கு பயணிக்கும் கடவுச்சீட்டின் திறனைப் பொறுத்து இந்த தரவரிசை மாறுபடும். இலங்கைக்கு 83வது இடம் அதற்கமைய, இந்த பட்டியலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முன்னிலையில் உள்ளது. அந்த … Read more

பற்றி எரியும் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ… தீயை கட்டுப்படுத்த வீரர்கள் போராட்டம்: வீடியோ காட்சிகள்!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள வானளாவிய மூலதன கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் நடவடிக்கையால் உலகளாவிய அளவில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதுடன் மட்டும் இல்லாமல் உணவுப் பொருள்களின் தட்டுப்பாடும் அதிகரித்து உலக மக்களை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இருப்பினும் ரஷ்ய ஆதரவாளர் அதிகமாக வசிக்கும் கிழக்கு உக்ரைனிய பகுதிகளை உக்ரைனிடம் இருந்து முழுமையாக … Read more

குறைவாக இயங்கும் பேருந்துகள்! பயணிகள் பெரும் பாதிப்பு(Video)

ஹட்டனில் பேருந்துகள் குறைவாக இயங்குவதால், அலுவலக ஊழியர்கள் உட்பட பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக பொது போக்குவரத்து சேவை முடக்கப்பட்டுள்ளது. அந்த சூழ்நிலையில் பயணிகள் மிகவும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர். ஆபத்தான பயணம்  எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஹட்டனிலும் பேருந்துகள்  குறைவாகவே செயற்பட்டு வருகின்றது. இதனால் ஹட்டன் நகரில் இருந்து வேலைக்கு செல்பவர்கள் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்காக பயணிக்கும் பயணிகள் மிகுந்த அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருப்பதை காணக்கூடியதாக உள்ளது. இந்நிலையில், சேவையில் ஈடுப்பட்டுள்ள பஸ்களில் மருத்துவமனைகளுக்குள் … Read more

இலங்கையில் இன்று பதிவான டொலரின் பெறுமதி! வெளியானது மத்திய வங்கியின் அறிவிப்பு

இன்றைய தினத்திற்கான நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது 356.59 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதியானது 367.31 ரூபாவாக காணப்படுகிறது. ஸ்ரேலிங் பவுண்ட் ஸ்ரேலிங் பவுண்டொன்றின் கொள்முதல் பெறுமதியானது 428.86 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை விற்பனை பெறுமதியானது 445.83 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. குவைத் தினார் மற்றும் கட்டார் ரியால் குவைத் தினாரின் பெறுமதியானது 1172.46 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை கட்டார் ரியாலொன்றின் … Read more

லங்கா ஐஓசி: ஒரு மில்லியன் லீட்டர் எரிபொருள் சந்தைக்கு விநியோகம்

எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக, திருகோணமலையில் உள்ள ஐஓசி வளாகத்தில் இருந்து நேற்று (03) ஒரு மில்லியன் லீற்றர் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார் அத்துடன், நேற்றைய தினம் விடுமுறை நாளாக இருந்தாலும், எரிபொருளை விநியோகிப்பதற்காக முடிந்த அளவு நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

50-60 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஜூலை05ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2022ஜூலை 04ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டில் சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்குமாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது … Read more

உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டது! அமைச்சரின் உத்தியோகபூர்வ அறிவிப்பு

2021ஆம் ஆண்டுக்கான உயிர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.   கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இது தொடர்பான அவிறிப்பை வெளியிட்டுள்ளார்.   பிற்போடப்பட்ட பரீட்சை இதன்படி,  ஒகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி  அளவில் பெறுபேறுகள் வெளியிடப்படும் என  அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.  இன்று (04) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த  வருடம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சையை  ஒரு மாத காலத்திற்கு பிற்போடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார் நடைமுறை … Read more