கழுகார்: `பஞ்சமி நில மீட்பு… விசிக-வின் அடுத்த ஆயுதம் முதல் மாநாட்டை ரத்துசெய்த தலைமை வரை’

போட்டுடைக்கும் சீனியர் கதர்கள்!நேரில் செல்லத் தயங்கும் தலைமை… சாம்சங் ஊழியர்கள் போராட்டத்துக்கு, தி.மு.க-வின் கூட்டணிக் கட்சிகள் சார்பில் அதன் தலைவர்கள் பலர் சென்று ஆதரவு தெரிவித்துவிட்டு வந்தனர். ஆனால், காங்கிரஸ் கமிட்டி சார்பில் மட்டும் மாநிலத் தலைவருக்கு பதிலாக, முன்னாள் தலைவர் தங்கபாலு அனுப்பிவைக்கப்பட்டிருந்தார். ‘புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக அகில இந்திய தலைமையிடம் கலந்தாலோசிக்க வேண்டியிருந்ததால், செல்வப்பெருந்தகை டெல்லிக்குச் சென்றுவிட்டார். அதனால்தான் அவருக்கு பதிலாக வேறொருவரை அனுப்பிவைத்திருக்கிறார்கள்’ என அப்போது காரணம் சொல்லப்பட்டது. செல்வப்பெருந்தகை ஆனால், … Read more

சென்னையில் மழை பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் மருத்துவ முகாம்! அமைச்சா் மா.சு தகவல்…

சென்னை: சென்னையில் மழை பாதித்த இடங்களில்  நோய் தொற்று பரவாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்றும் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதுபோல சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கன மழையால் வெள்ளம் தேங்கிய பகுதிகளில் மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு, டைபாய்டு பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க  தீவிர நடவடிக்கை எடுக்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டு உள்ளது. சென்னையில் பெருமழை பெய்த கடந்த 15ந்தேதி அன்று சென்னையின் பல … Read more

ஹர்தீப் சிங் கொலை.. இந்தியா மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை.. பின்வாங்கிய கனடா பிரதமர் ட்ரூடோ

டொரான்டோ: கடந்த சில மாதங்களுக்கு முன்பு, காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலையில் இந்திய அரசுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பரபரப்பைக் கிளப்பி இருந்தார். இதற்கிடையே இப்போது திடீரென இந்தியா மீதான குற்றச்சாட்டுகள் தகவல் அடிப்படையிலானது மட்டுமே என்றும் ஆதாரம் இல்லை என்று சொல்லி பேக் அடித்துள்ளார். இந்தியர்கள் அதிகம் Source Link

டொயோட்டா டைசோர் லிமிடெட் எடிசன் அறிமுகமானது

டொயோட்டா நிறுவனம் தனது டைசோர் கிராஸ்ஓவர் எஸ்யூவி காரில் பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு லிமிடெட் எடிசன் என்ற பெயரில் கூடுதல் ஆக்செரீஸ் சேர்க்கப்பட்ட மாடல் விற்பனைக்கு ரூ.10.56 லட்சம் முதல் ரூ.12.88 லட்சம் வரை விலையில் கொண்டு வந்திருக்கின்றது. இந்த பண்டிகை கால எடிசன் ஆனது 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எடிசனில் 5 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக மட்டும் அறியப்படுகின்றது. இந்த சிறப்பு எடிசனில் வெளிப்புறத்தில் அண்டர்பாடி … Read more

“எல்லாம் ஐயப்பன் அருள்… பல ஆண்டு ஆசை நிறைவேறி உள்ளது'' சபரிமலை புதிய மேல்சாந்தி நெகிழ்ச்சி!

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. வரும் 21-ம் தேதி இரவு வரை பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் மாதம் 30 -ம் தேதி மாலையில் சபரிமலை நடை திறக்கிறது 31-ம் தேதி சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அந்த இரு தினங்களும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் மண்டல மகர விளக்கு கால பூஜைகளுக்காக நவம்பர் மாதம் 15-ம் தேதி மாலை சபரிமலை நடை … Read more

மூன்று விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் சத்தீஸ்கரை சேர்ந்த 17 வயது மைனர் கைது…

மூன்று விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். சமூக வலைதளங்கள் மூலம் மூன்று நாட்களில் குறைந்தது 19 இந்திய விமானங்களுக்கு அடுத்தடுத்து வந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக மும்பை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்னந்த்கான் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவனது பெற்றோருக்கு சம்மன் அனுப்பிய போலீசார் அவனிடம் விசாரணை நடத்தினர். … Read more

உணவில் எச்சில் துப்பினால் 1 லட்சம் வரை அபராதம்.. சிறை தண்டனை.. உபி பாணியில் உத்தரகாண்ட் அரசு முடிவு

டேராடூன்: “உணவில் எச்சில் துப்புதல்” சம்பவங்களை தடுக்க உத்தரப்பிரதேச அரசு பாணியில் உத்தரகாண்ட் மாநிலமும் அதிரடியாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. முசோரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு பழச்சாறில் எச்சில் துப்பிய சம்பவத்தை அடுத்து, கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி உணவில் எச்சில் துப்புதல் சம்பவத்தில் ஈடுபடுவோருக்கு 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச உணவகங்களில் Source Link

புதிய நிறத்தில் டிரையம்ப் ஸ்கிராம்பளர் 400X வெளியானது

புதிய டிரையம்ப் ஸ்கிராம்பளர் 400X மாடலில் மெக்கானிக்கல் உட்பட அடிப்படையான மாற்றங்களும் இல்லாமல் புதிய பியர்ல் மெட்டாலிக் வெள்ளை நிறத்தை மட்டும் பெற்று ரூ.₹2,64,496 (ex-showroom) விலையில் வெளியாகியுள்ளது. பெர்ல் மெட்டாலிக் வெள்ளை நிறத்துடன் டேங்கின் மேலிருந்து கீழாக கருப்பு பட்டை  மற்றும் பைக்கின் தோற்றத்திற்கு கவர்ச்சியை தருகின்றது. மற்றபடி, 400X பைக்கில் தொடர்ந்து மேட் காக்கி பச்சை உடன் வெள்ளை, சிவப்பு உடன் கருப்பு, கருப்பு உடன் சில்வர் ஐஸ் என தற்போது 4 நிறங்களை … Read more

Satellite Spectrum: `ஏலம் விடுவதா?’ எலான் மஸ்க் Vs அம்பானி நிறுவனங்கள் – மத்திய அரசு முடிவென்ன?

இந்தியாவில் தொலைத் தொடர்பு, இணைய சேவைகள், இரண்டு முறைகளில் வழங்கப்பட்டு வருகிறது. தற்போதுவரை பெருவாரியான இடங்களில், டவர் அமைத்துதான் வழங்கப்பட்டு வருகிறது. வயாசாட், ஓம் டெலிகாம், சிபி டெக்னாலஜிஸ், ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட சில நிறுவனங்கள் செயற்கைக்கோள் வழியாகவும் சேவைகள் வழங்கி வருகின்றன. பார்தி ஏர்டெல் நிறுவனமும் செயற்கைக்கோள் வழி இணைய சேவை வழங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. செல்போன் டவர் இந்த நிலையில், எலான் மஸ்கின் ஸ்டாா்லிங்க், அமேசான் நிறுவனத்தின் குப்பியா், பாரதி குழுமத்தின் ஒன்வெப் … Read more

கன்னட நடிகரால் கொல்லப்பட்டவர் மனைவிக்கு ஆண் குழந்தை

சித்திரதுர்கா கன்னட நடிகர் தர்ஷனால் கொல்லப்பட்ட ரேனுகாசாமியின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. கன்னட நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகரான கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி தர்ஷனுடைய தோழியான நடிகை பவித்ரா கவுடாவுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி இருந்தார். எனவே அவரை நடிகர் தர்ஷன், தனது கூட்டாளிகள் மூலம் கடத்தி வந்து படுகொலை செய்தார். இந்த கொலை வ்ழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரேணுகாசாமி படுகொலை … Read more