சொத்துகுவிப்பு வழக்கில் ஜெ.விடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் யாரிடம் உள்ளது தெரியுமா? ஆர்.டி.ஐ. பரபரப்பு தகவல்…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 28 வகையிலான பொருட்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கர்நாடக நீதிமன்ற வழக்கறிஞர் கோரியிருந்த நிலையில், அந்த பொருட்கள் ஜெயலலிதாவின்  நாமினியிடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. சமூக ஆர்வலர் ஒருவர் இது தொடர்பாக ஆர்டிஐ மூலம் கேட்ட கேள்விகளுக்கு தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் பதில் அளித்துள்ளனர். அதில்,  “நீதிமன்ற ஆவணத்தில் பட்டியலிடப்பட்ட பொருட்கள் ஜெயலலிதாவின் நாமினியான பாஸ்கரனிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது என்று … Read more

More than 700 trains canceled due to rain flooding on reserve lines | இருப்பு பாதைகளில் மழை வெள்ளம் 700க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து

புதுடில்லி, வடக்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களில் கொட்டிவரும் கனமழையால் இருப்புப் பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், நாளை வரை எக்ஸ்பிரஸ் மற்றும் பயணியர் ரயில்கள் உட்பட, 700க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கனமழை தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து ராஜஸ்தான், ஹிமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், ஹரியானா மாநிலங்களிலும், புதுடில்லி, ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசங்களிலும் கனமழை கொட்டி வருகிறது. வரலாறு காணாத மழையால் நீர்நிலைகள் நிரம்பி, முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. … Read more

டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்: பள்ளிகள், அலுவலகங்களை மூட உத்தரவு

புதுடெல்லி, டெல்லி, இமாசலபிரதேசம், உத்தரகாண்ட், அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. அதனால், இமாசலபிரதேசத்தில் இருந்து அதிக அளவில் திறந்து விடப்பட்ட தண்ணீர், அரியானா மாநிலம் ஹத்னிகுண்ட் தடுப்பணையை அடைந்தது. அங்கிருந்து வினாடிக்கு 1 லட்சத்து 5 ஆயிரம் கனஅடி நீர், யமுனை ஆற்றில் திறந்து விடப்பட்டது. யமுனை ஆற்றில் வேறு தடுப்பணையோ, அணையோ இல்லாததால், அந்த தண்ணீர் முழுவதும் டெல்லியை நோக்கி வந்தது. நேற்று முன்தினம் அதிகாலையில், 45 … Read more

மகாராஷ்டிரா: “152 தொகுதிகள் டார்கெட்; தொண்டர்கள் உழைக்க வேண்டும்!" – தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் உடைத்துக்கொண்டு பா.ஜ.க.கூட்டணி அரசில் சேர்ந்ததில் இருந்து பல்வேறு அரசியல் மாற்றங்கள் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு பா.ஜ.க. இப்போதே தன்னை தயார்படுத்திக்கொள்ளும் வேலையில் இறங்கி இருக்கிறது. மும்பை அருகில் உள்ள பீவாண்டியில் பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய தேவேந்திர பட்னாவிஸ், “அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் கட்சி … Read more

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் கண்டனம்…

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள பாரிஸ் சென்றுள்ள மோடிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் தொடர் கலவரம், வன்முறை மற்றும் தீவைப்பு சம்பவங்களை அடுத்து உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதைக் கண்டித்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நரேந்திர மோடியின் “தேசியம் குறித்த பேச்சு வெற்று கூச்சல்” என்று வர்ணித்துள்ளது. மனித உரிமை மீறல் … Read more

சாப்பிட கூட உணவு இல்லை! இமாச்சலை சூழ்ந்த வெள்ளம்.. ஹெலிகாப்டரில் நிவாரண பொருட்கள்! உதவும் மக்கள்

India oi-Nantha Kumar R சிம்லா: தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இமாச்சல பிரதேச மாநிலத்தின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தற்போது வரை 1000 சாலைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் 50,000 சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். தொடரும் மழையால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் உணவு இன்றி தவிக்கும் நிலையில் விமானப்படை, ராணுவ ஹெலிகாப்டர்களில் உணவு உள்பட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த மழையின் காரணமாக தலைநகர் … Read more

Initiation of Mental Health Authority in Puducherry: Action under Maintenance Act | புதுச்சேரியில் மனநல ஆணையம் துவக்கம்: பராமரிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை

புதுச்சேரி: மனநிலை பாதித்தவர்களை மீட்பதற்காக மாநில மனநல ஆணையம்தோற்றுவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் மனநிலை பாதித்தவர்கள் அதிகம் உள்ளனர். மனநிலை பாதிப்புடன், மொழி தெரியாமலும் இவர்கள் குப்பைகளில் கிடக்கும் பொருட்களை உண்டு, இரவு முழுவதும் துாங்காமல் சுற்றி திரிகின்றனர். இந்நிலையில், சாலையில் சுற்றி திரியும் மனநிலை பாதித்தவர்களை மீட்டு மறுவாழ்வு கொடுப்பதற்காக, புதுச்சேரியில் மாநில மனநல ஆணையம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்திற்கு சுகாதார துறை செயலர் சேர்மனாகவும், 15 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆணையம், மனநலம் பாதித்தவர்களுக்கு … Read more

அறிவியல் ஆராய்ச்சியை ஒழித்துக்கட்ட மோடி அரசு திட்டம் – மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

புதுடெல்லி, நாட்டின் முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களில் பணியாற்றும் விஞ்ஞானிகளுக்கு வழக்கமாக ஏப்ரல் மாதம் ஆராய்ச்சிக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யும். ஆனால், இந்த ஆண்டு இன்னும் நிதி ஒதுக்கவில்லை என்றும், நிதியை எதிர்பார்த்து விஞ்ஞானிகள் காத்திருப்பதாகவும் ஊடகங்களில் தகவல் வெளியானது. இந்நிலையில், இதை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களில் பணியாற்றும் விஞ்ஞானிகளுக்கு மோடி அரசு இன்னும் நிதி … Read more

Kia India – 10 லட்சம் உற்பத்தி இலக்கை எட்டிய கியா மோட்டார்ஸ்

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் கியா மோட்டார்ஸ் நிறுவனம், 2023 செல்டோஸ் காரின் உற்பத்தியை தனது 10,00,000 வது காராக உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. ஒட்டுமொத்த உற்பத்தியில் செல்டோஸ் மட்டுமே 5 லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கையை பெற்றுள்ளது. தற்பொழுது இந்திய சந்தையில் கியா நிறுவனம், செல்டோஸ், சோனெட், கேரன்ஸ், மற்றும் எலக்ட்ரிக் EV6 ஆகியவற்றை விற்பனை செய்து வருகின்றது. சமீபத்தில் செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகம் செய்தது. Kia Motors 2019 ஆம் ஆண்டு … Read more

Tamil News Live Today: டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு… நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும் அண்ணாமலை!

டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு… நீதிமன்றத்தில் ஆஜராகிறார் அண்ணாமலை! அண்ணாமலை தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை `DMK Files’ என்ற பெயரில், தி.மு.க-வினரின் சொத்துப் பட்டியல் என சில விவரங்களை வெளியிட்டிருந்தார். அதில், தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு குறித்த விவரங்களும் இடம்பெற்றிருந்தன. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட இந்த விவகாரத்தில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆண்ணாமலை மீது டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு விசாரணையில், ஜூலை 14-ம் தேதி அண்ணாமலை நேரில் ஆஜராக வேண்டும் … Read more