Bibarjoy Cyclone: ​​50,000 people sheltered in safe places | பிபர்ஜாய் புயல்: 50 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்

ஆமதாபாத், அதிதீவிர சூறாவளி புயலாக உருமாறியுள்ள, ‘பிபர்ஜாய்’ குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜக்காவ் துறைமுகம் அருகே இன்று மாலை கரையை கடப்பதை அடுத்து, அப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர பகுதிகளில் வசிக்கும் 50 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இது குறித்து, குஜராத் மாநில நிவாரண ஆணையர் அலோக் குமார் பாண்டே நேற்று கூறியதாவது: கட்ச் மாவட்டத்தில் இருந்து 290 கி.மீ., துாரத்தில் புயல் மையம் கொண்டுள்ளது. முன்னெச்சரிக்கை … Read more

தலைமைச் செயலகத்தில் IT, ED… எதிர்க்கட்சி தலைவராக… முதல்வராக… ஸ்டாலின் அன்றும் இன்றும்!

மாநில அரசின் உயிர்நாடியாகக் கருதப்படும் தலைமைச் செயலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருப்பதை தற்போதைய முதலமைச்சர் கடுமையாக விமர்சித்துள்ளார். ஆனால், கடந்த 2016-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையைக் கண்டித்தாரே தவிர, அன்று மாநில சுயாட்சி குறித்து பேசவில்லையே என்னும் விமர்சனமும் முன்வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறை வருகை ’அன்று – எதிர்க்கட்சித் தலைவராக’ தமிழகத்துக்கு தலைகுனிவு, ’இன்று- முதலமைச்சராக’ … Read more

இன்று செந்தில் பாலாஜி தொடர்பான 3 மனுக்களில் தீர்ப்பு

சென்னை இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான 3 மனுக்கள் மீது தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. அமலாக்கத்துறையால் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப் பட்ட தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அமைச்சர் நெஞ்சுவலி காரணமாக அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரியும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்ய அனுமதி கோரியும் … Read more

கோவையில் முகாமிட்டுள்ள அன்பகம் கலை! ஸ்டாலினுக்கு ஸ்பாட்டிலிருந்து பறக்கும் ரிப்போர்ட்! பெரிய அஜெண்டா

Tamilnadu oi-Arsath Kan கோவை: திமுக அமைப்புச் செயலாளரும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மிக மிக நெருக்கமானவருமான அன்பகம் கலை, கோவையில் முகாமிட்டு நாளை நடைபெறவுள்ள கண்டன பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை கவனித்து வருகிறார். அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது மருத்துவமனை சிகிச்சையில் உள்ள நிலையில், நாளை கோவையில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் அவசர அறிவிப்பு ஒன்று வெளியானது. இதையடுத்து அன்பகம் கலையை கோவைக்கு சென்று ஏற்பாடுகளை கவனித்துக் கொள்ளுமாறு … Read more

ஹீரோ Xtreme 160R 4V vs Xtreme 160R 2V எந்த பைக் வாங்கலாம் ?

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹீரோ மோட்டோகார்ப் Xtreme 160R 4V Vs Xtreme 160R 2V என இரு மாடல்களையும் ஒப்பீடு செய்து என்ஜின், பெர்ஃபாமென்ஸ், மைலேஜ் உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை சேர்க்கப்பட்டுள்ளது. 160cc பட்ஜெட் விலையில் கிடைக்கின்ற மாடலாக விளங்குகின்ற எக்ஸ்ட்ரீம் 160R 2v மாடலை விட கூடுதலாக 4 வால்வு, ஸ்பிளிட் சீட், கோல்டன் நிறத்திலான யூஎஸ்டி ஃபோர்க் ஆகியவற்றுடன் ஹீரோ கனெக்ட் 2.0 ஆகியவற்றை எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி பெற்றுள்ளது. … Read more

Doctor Vikatan: கிளாஸ் ஸ்கின் (Glass skin) எனப்படும் கண்ணாடி சருமம் எல்லோருக்கும் சாத்தியமா?

Doctor Vikatan: சமூக ஊடகங்களில் கிளாஸ் ஸ்கின் (glass skin) என்ற கண்ணாடி போல பளபளக்கும் சருமத்துக்கான கொரியன் அழகுக் குறிப்புகள் தொடர்பான வீடியோக்களை பார்க்கிறோம். உண்மையிலேயே கண்ணாடி போன்ற சருமம் பெறுவது எல்லோருக்கும் சாத்தியமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா. சருமநல மருத்துவர் டாக்டர் பூர்ணிமா கொரியன் அழகு சிகிச்சைகளில் சருமத்தின் இறந்த செல்களை நீக்கும் எக்ஸ்ஃபோலியேஷன் செய்வார்கள். பிறகு அதிகபட்ச மாய்ஸ்ச்சரைசர் உபயோகித்து, சருமத் துவாரங்களே தெரியாமல் செய்வார்கள். இதனால் … Read more

இன்று முதல் 4 நாட்களுக்கு சதுரகிரி கோவில் செல்ல பக்தர்களுக்கு அனுமதி

வத்திராயிருப்பு இன்று முதல் 4 நாட்களுக்கு சதுரகிரி கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு செய்ய விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்க சாமி கோவிலுக்கு 4 நாட்களுக்கு அனுமதி அளிப்பது வழக்கமாக உள்ளது. சதுரகிரி செல்ல இன்று (15-ந் தேதி) பிரதோஷம், 17-ந் தேதி ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற … Read more

தெலுங்கானாவில் ஆளுங்கட்சி எம்எல்ஏ வீடுகளில் புகுந்த வருமான வரித் துறை! 60 இடங்களில் திடீர் ரெய்டு

India oi-Halley Karthik ஹைதராபாத்: தெலங்கானாவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியை சேர்ந்த இரண்டு எம்ஏக்களின் வீடுகள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக ரெய்டு நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் புலனாய்வு/விசாரணை அமைப்புகள் சமீப நாட்களாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தி அவரை கைது செய்தது, அதேபோல பிரபல ஆங்கில நாளிதழின் முன்னாள் … Read more

Cessation of sale of rice-wheat to states | அரிசி – கோதுமை விற்பனை மாநிலங்களுக்கு நிறுத்தம்

புதுடில்லி, ஜூன் 15- வெளிச்சந்தையில், அரிசி மற்றும் கோதுமை விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காகவும், தட்டுப்பாடு காலங்களில்தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும், அரிசி மற்றும் கோதுமையை வெளிச்சந்தை விற்பனை திட்டத்தின் கீழ், மத்திய அரசு விற்பனை செய்து வருகிறது. இவை, தனியார் விற்பனையாளர்கள், மொத்தமாக வாங்குவோர் உட்பட, மாநில அரசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், 2023ம் ஆண்டுக்கான வெளிச்சந்தை விற்பனை திட்ட கொள்கையின் படி, மாநில அரசுகளுக்கு ஒரு குவின்டால் அரிசி 3,400 ரூபாய்க்கு விற்பனை செய்ய விலை … Read more