ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்ட டிரைவர்; கொலையாளிகளை கடைக்குள் வைத்துப் பூட்டிய பொதுமக்கள்!

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் தினேஷ் (26). ஆட்டோ டிரைவரான இவர், நேற்றிரவு கிண்டி வழியாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது தினேஷை வழிமறித்த இரண்டு பேர், அவரை ஓட ஓட விரட்டி வெட்டினர். அவர்களிடமிருந்து தப்பிக்க தினேஷ், வண்டிக்காரன் தெருவுக்குள் ஓடினார். பின்னர் அந்த் தெருவுக்குள் உள்ள கடைக்குள் ஓடி தினேஷ் மறைந்து கொண்டார். ஆனாலும் அந்த இரண்டு பேர் கடைக்குள் நுழைந்தனர். கடையிலிருந்தவர்களை கத்திமுனையில் மிரட்டிய இருவரும், தினேஷை வெட்டிக் கொலைசெய்தனர். இந்தச் சமயத்தில் கடையிலிருந்தவர்கள் வெளியில் … Read more

இந்திய சிந்தனைக்கு எதிரான பொதுச் சிவில் சட்டம் : மேகாலயா முதல்வர்

ஷில்லாங் பன்முகத்தன்மை கொண்ட இந்திய சிந்தனைக்கு எதிராக பொதுச் சிவில் சட்டம் உள்ளதாக மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா தெரிவித்துள்ளார். பாஜகவின் மத்திய அரசு நாடெங்கும் பொதுச் சிவில் சட்டம் கொண்டுவருவதில் கடும் தீவிரத்தைக் காட்டி வருகிறது/   ஆனால் எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் கண்டனம்  தெரிவித்து வருகின்றது/  பிரதமர் மோடி இது குறித்து, ‘நாட்டு நிர்வாகத்தை‘இருவிதமான சட்டங்களால் நாட்டு முடியாது. மக்கள் அனைவரும் சமம் என அரசியல் சாசனம் கூறுவதால், நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது … Read more

UK Firm Plans 800-Acre Semiconductor Unit In Odisha Worth ₹ 2 Lakh Crore | ஒடிசாவில் 800 ஏக்கரில் அமைகிறது செமி கண்டக்டர் ஆலை

புவனேஸ்வர்: ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் 800 ஏக்கரில் மொத்தம் ரூ.2 லட்சம் கோடியில் செமி கண்டக்டர் ஆலையை பிரிட்டனை சேர்ந்த நிறுவனம் அமைக்க உள்ளது. பிரிட்டனை சேர்ந்த எஸ்ஆர்ஏஎம் & எம்ஆர்ஏஎம் நிறுவனம் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளது. இந்த ஆலை அமைப்பது தொடர்பாக ஒடிசா அரசுக்கும், இந்த நிறுவனம் மற்றும் அதன் இந்திய கிளை நிறுவனமான புராஜக்ட்ஸ் இந்தியா நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆலை அமையும் இடத்தை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். … Read more

புதிய நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

புதுடெல்லி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் முன்னதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றத்தில் வைத்து நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், வருகிற 20ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ந்தேதி வரை நடைபெறும் என்று மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். இதனிடையே மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் கலவரம், விலைவாசி உயர்வு, பொது சிவில் … Read more

உதயநிதிக்கு கைமாறும் 'பவர்'! – 'தமிழரல்லாத உயரதிகாரிகள்' சர்ச்சை – வீட்டுக் கடன் தகவல் – Mr.மியாவ்

‘தம்பிகிட்ட பேசிக்கோங்க…’ – உதயநிதிக்கு கைமாறும் ‘பவர்’ ! தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு, எத்தனையோ முறை அதிகாரிகள் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ஆனால், சமீபத்தில் நடந்த மாற்றம் குறித்து ரொம்பவே பரபரக்கிறது கோட்டை வட்டாரம். டேவிட்சன் மாற்றம் தொடர்பாக தம்மை சந்தித்த சில மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம், ‘தம்பிகிட்ட பேசிக்கோங்க…’ என ஒற்றைவரியில் முதல்வர் அவர்களைக் கடந்துவிட்டதாக சொல்கிறார்கள். “இதுவரை அதிகாரிகள் மாற்ற விஷயம் தொடர்பான ‘பவர்’, இந்த முறை உதயநிதி கைக்கு மாறியிருக்கிறது” என்கிறார்கள் விவரமறிந்த … Read more

தமிழக அரசுப் பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை

சென்னை தமிழக அரசுப் பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்க அரசாணை பிறப்பித்துள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு பணியிடங்களில் முன்னுரிமை வழங்கப்படும் எனச் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசுப் பணியிடங்களில் முன்னுரிமை வழங்குவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு இன்று அரசாணையாக வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில், “மனித வள மேலாண்மைத்துறையின் 2021-2022-ம் ஆண்டிற்கான … Read more

கொந்தளிக்கும் பிரான்ஸ்! எங்கு பார்த்தாலும் போர் சூழல்! விதை போட்டது 17 வயது சிறுவன்! யார் இந்த நஹெல்

International oi-Vigneshkumar பாரீஸ்: பிரான்ஸ் நாடே கடந்த சில நாட்களாகப் பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. 17 வயது சிறுவன் நஹெலை போலீசார் சுட்டுக் கொன்றதே இதற்குக் காரணம். ஒட்டுமொத்த நாட்டையும் கொதித்து எழ வைத்த இந்த சிறுவன் யார் என்பது குறித்து பார்க்கலாம். ஒட்டுமொத்த பிரான்ஸும் இப்போது பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக அங்கே மக்கள் போராட்டம் உச்சத்தில் இருக்கிறது. பல இடங்களில் இந்த போராட்டங்களில் கலவரமும் ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் … Read more

வளர்ந்த, தன்னிறைவு பெற்ற இந்தியா என்ற இலக்கை நோக்கி நம் நாடு செயல்பட்டு வருகிறது – பிரதமர் மோடி

புதுடெல்லி, டெல்லியில் உள்ள சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் 17வது இந்திய கூட்டுறவு மாநாடு துவங்கியது. சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு நடைபெறும் மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “2014ஆம் ஆண்டுக்கு முன் விவசாயத் துறைக்காக 5 ஆண்டுகளில் ரூ.90,000 கோடி செலவழித்த நிலையில் இருந்து 3 மடங்கு தொகையை செலவிடும் பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற ஒரே … Read more

ஜூலை 01: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 43 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 5 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 90 காசுகள் அதிகரித்து 75 ரூபாய், 70 காசுகள் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. The post ஜூலை 01: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் first … Read more