“செந்தில் பாலாஜியுடன் ஒன்றாகப் பயணித்தவன்; அவரின் சித்து விளையாட்டுகளை அறிவேன்!" – ஆர்.பி.உதயகுமார்

“செந்தில் பாலாஜியோடு மாணவர் அணியில் ஒன்றாக பயணித்தவன் என்ற அடிப்படையில், அவரின் அரசியல் சித்து விளையாட்டுகளை ஆரம்பத்திலேயே அறிந்தவன் நான்.” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “முதலமைச்சர் ஸ்டாலின், `எங்களுக்கு எல்லா அரசியலும் தெரியும். உருட்டல், மிரட்டல்களுக்குப் பயப்பட மாட்டோம்’ என்று கூறிவிட்டு, செந்தில் பாலாஜியின் அரசியலைப் பற்றி தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார். ஆர்.பி.உதயகுமார் செந்தில் பாலாஜியோடு மாணவர் அணியில் ஒன்றாகப் பயணித்தவன் என்ற அடிப்படையில், அவரின் … Read more

கர்நாடக மாநில காவல்துறையின் அதிரடி நடவடிக்கை

பெங்களூரு கர்நாடக மாநில காவல்துறை சமீபத்தில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் அதிகாரிகள் தொலைபேசி எண்களைப் பார்வைக்கு வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலச் சட்டசபைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்து காங்கிரஸ் கட்சி வென்று ஆட்சியை பிடித்துள்ளது. இங்கு முதல்வராக சித்தராமையா மற்றும் துணை முதல்வராக சிவக்குமார் ஆகியோர் பதவி ஏற்றுள்ளனர்.   முந்தைய பாஜக ஆட்சியில் நடந்த பலவித குற்றச்சாட்டுகளையும் தவிர்க்க தற்போதைய அரசு பல உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. முந்தைய பாஜக ஆட்சியின் போது கர்நாடக மாநிலம் முழுவதுமே … Read more

Indias Defence Ministry Approves Predator Drone Deal Ahead of PM Modis US Visit | அமெரிக்காவிடமிருந்து அதிநவீன ட்ரோன் வாங்க ஒப்புதல்:! ராணுவ அமைச்சக கவுன்சில் கூட்டத்தில் முடிவு

வல்லரசு நாடுகளின் ராணுவங்களில் கண்காணிப்பு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டு வரும், அதிநவீன தொழில்நுட்பம் உள்ள ‘எம்.க்யூ., – 9 பிரிடேட்டர்’ எனப்படும் ‘ட்ரோன்’களை அமெரிக்காவிடமிருந்து வாங்க, நம் ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, 21- 24ம் தேதி வரை அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது, அமெரிக்க படைகளால் பயன்படுத்தப்படும், பிரிடேட்டர் ரக ட்ரோன் எனப்படும் ஆளில்லா அதி நவீன சிறிய விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. … Read more

"மனித நாகரீகத்தின் இதயம் விவசாயம்…" – ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

ஐதராபாத், ஐதராபாத்தில் நடைபெறும் ஜி20 நாடுகளின் வேளாண்துறை அமைச்சர்களுக்கான மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாடினார். தெற்குலகில் விவசாயம் மொத்த ஜிடிபியில் 30 சதவீதம் வகிப்பதோடு மொத்த வேலைவாய்ப்பில் 60 சதவீதம் வகிப்பதாக குறிப்பிட்டார். மேலும் கொரோனா காரணமாக விநியோக சங்கிலியில் ஏற்பட்ட பாதிப்புகள் உலகளாவிய அரசியல் சூழலால் மேலும் மோசம் அடைந்ததாகக் குறிப்பிட்ட அவர், மனித நாகரீகத்தின் இதயமாக விவசாயம் திகழ்வதாகவும், மனித குலத்தின் எதிர்காலத்திற்கான மிகப்பெரிய பொறுப்பை ஜி20 நாடுகளின் வேளாண் அமைச்சர்கள் … Read more

“கோபாலபுரத்தை நோக்கிப் பயணிக்கும் கொங்கு மண்டலம்!" – கோவை கண்டனக் கூட்டத்தில் கொதித்த டி.ஆர்.பாலு

பண மோசடி விவகாரம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை, `பா.ஜ.க-வின் யதேச்சதிகாரப் போக்கு, அரசியல் பழிவாங்கல்’ என தி.மு.க-வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் விமர்சித்து, பா.ஜ.க-வுக்குக் கண்டனம் தெரிவித்துவருகின்றன. கண்டனக் கூட்டம் இந்த நிலையில் பா.ஜ.க-வுக்கு எதிராக, தி.மு.க-வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் கோயம்புத்தூரில் மாபெரும் கண்டனக் கூட்டம் நடத்திவருகின்றன. இதில், ஆ.ராசா, டி.ஆர்.பாலு, கி.வீரமணி, வைகோ, திருமாவளவன் உட்பட அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய … Read more

என் எல் சி ஒப்பந்த தொழிலாளர்கள் 25 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம்

நெய்வேலி நெய்வேலியில் உள்ள என் எல் சி நிறுவனத்தின்  ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நி|றுத்த அறிவிப்பை அளித்துள்ளனர்.  நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் வரும் 25-ந்தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். மாதம் 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. நிர்வாகத்திடம் வேலைநிறுத்த அறிக்கை வழங்கப்பட்டிருந்தது. இது குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் வரும் 22, … Read more

மணிப்பூர்: புதிய போர்க்களமாக இம்பால்! தீ வைத்த வன்முறை கும்பல் – கண்ணீர்புகை குண்டு வீசிய போலீஸ்!

India oi-Mathivanan Maran இம்பால்: மணிப்பூர் தலைநகர் இம்பாலில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வீட்டுக்கு வன்முறை கும்பல் தீ வைக்க முயன்றது. இதனையடுத்து வன்முறை கும்பலுக்கும் அதிவிரைவுப் படை போலீஸுக்கும் இடையே மோதல் வெடித்தது. பாதுகாப்பு தரப்பினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி வன்முறை கும்பலை விரட்டியடித்தனர். மணிப்பூரில் குக்கி பழங்குடிகள்- மைத்தேயி இனக்குழு இடையேயான மோதல் மே 3-ந் தேதி முதல் நிகழ்ந்து வருகிறது. இந்த மோதல்களில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் … Read more

நெல்லை: முகநூலில் முதலமைச்சர் குறித்து அவதூறு பதிவு; தலைமைக் காவலர் சஸ்பெண்ட்! – நடந்தது என்ன?

நெல்லை மாவட்டம், களக்காடு காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராகப் பணியாற்றி வந்தவர் பெருமாள். அவர் முகநூலில் ஆக்டிவாக இருந்து வந்திருக்கிறார். ’நெல்லை பெருமாள்’ என்ற பெயரில் முகநூலில் செயல்பட்ட அவர், முதல்வர் குறித்து அவதூறு கருத்தைப் பதிவிட்டதாகத் தெரிகிறது. இது குறித்து அறிந்த நெல்லை மாவட்ட எஸ்.பி-யான சிலம்பரசன், அவரைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார். அவதூறு பதிவிட்ட காவலர் பெருமாள் தலைமைக் காவலர் பெருமாளின் பதிவைப் பார்த்த தி.மு.க-வினர் கொந்தளித்திருக்கின்றனர். இது தொடர்பாக முன்னாள் … Read more

வங்க தேசத்தில் நில நடுக்கம் : அசாமில் உணரப்பட்டது

டாக்கா வங்க தேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு அது அசாம் மாநிலத்தில் உணரப்பட்டுள்ளது. இன்று காலை சுமார் 10.15 மணிக்கு வங்க தேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. மக்கள் நிலநடுக்கத்தால் அச்சமடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. குறிப்பாக அசாம் தலைநகர் கவுகாத்தி உள்ளிட்ட நகரங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.