'எங்கள் கட்சி ஆபத்தில் உள்ளது' நிதிஷ்குமார் மந்திரி சபையில் இருந்து கூட்டணி கட்சி மந்திரி ராஜினாமா

பாட்னா, பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நிதிஷ் குமார் முதல்-மந்திரியாக செயல்பட்டு வருகிறார். இதனிடையே இந்த கூட்டணியில் இந்துஸ்தானி அவம் மோச்சா என்ற கட்சியும் இடம்பெற்றுள்ளது. இக்கட்சி தலைவராக சந்தோஷ்குமார் சுமன் உள்ளார். நிதிஷ் குமார் தலைமையிலான அரசில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சி என்பதால் சந்தோஷ்குமார் சுமனிக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. பட்டியலின மற்றும் பழங்குடியின சமூகத்துறை மந்திரியாக சுமன் செயல்பட்டு வருகிறார். இதனிடையே, சுமனின் தந்தை ஜிதன் ராம் … Read more

செந்தில் பாலாஜி: வாக்கிங் சென்ற நேரத்தில் ED என்ட்ரி; கதவைத் தட்டிய ஆர்.எஸ்.பாரதி – Raid ரவுண்ட்அப்

சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்துக்குள், இன்று காலை அவர் வாக்கிங் சென்ற சமயத்தில் அதிரடியாகப் புகுந்தனர் அமலாக்கத்துறை அதிகாரிகள். சரியாக 7:45 மணிக்கு வந்ததாகப் பாதுகாவலர்கள் தகவல் தெரிவிக்கிறார்கள். தகவலறிந்த அமைச்சர் செந்தில் பாலாஜி வாக்கிங்கைப் பாதியில் நிறுத்திவிட்டு, டாக்ஸியில் திரும்பி வீட்டுக்குள் சென்றதும் விசாரணை தொடங்கியிருக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி வெறிச்சோடிய அமைச்சரின் இல்லம்! கடந்த மே மாதம் 25-ம் தேதி கரூரில் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை … Read more

அடுத்த மாதம் மேற்கிந்தியத் தீவுகள் செல்லும் இந்திய கிரிக்கெட் அணி

மும்பை அடுத்த மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இந்திய கிரிக்கெட் அணி சென்று விளையாட உள்ள போட்டி அட்டவணை வெளியாகி உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து நாட்டிற்கு இந்திய அணி சென்றிருந்தது.  இங்கிலாந்தில் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளது. தற்போது இந்திய அணி வீரர்கள் தாயகம் திரும்பி உள்ளனர். அடுத்த மாதம் இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் … Read more

NEET result release: Tamilian student tops national level | நீட் தேர்வு முடிவு வெளியீடு:தமிழக மாணவர் தேசிய அளவில் முதலிடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழக மற்றும் ஆந்திர மாணவர் முதலிடத்தையும், தமிழகத்தை சேர்ந்த 4 பேர் முதல் 10 இடங்களிலும் இடம் பிடித்துள்ளனர். மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்பில் சேர நுழைவுத்தேர்வான நீட் தேர்வு நாடுமுழுதும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகளை தேசிய தேர்வு முகமை சார்பில் கடந்த மாதம் 7 ம் தேதி 13 மொழிகளில் நடத்தப்பட்டது. 499 நகரங்களில் … Read more

முதல் கணவருடன் செல்ல விருப்பம்: 2-வது கணவருக்கு ராக்கி கயிர் கட்டி சகோதரரே…என அழைத்த இளம்பெண்… நடந்தது என்ன?

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் பாலேசார் பகுதியைச் சேர்ந்த தருணா சர்மா என்ற இளம் பெண் தன்னுடன் பள்ளியில் படித்த இளைஞரான சுரேந்திரா சங்கலா என்ற நபரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த திருமணத்தில் தருணாவின் தந்தைக்கு உடன்பாடு இல்லை என்று கூறப்பட்டது. திருமணமான 10வது நாளிலேயே தம்பதியை பெண் வீட்டார் கண்டுபிடித்து, காவல்நிலையத்திற்கு கூட்டி வந்து இருவரையும் கட்டாயமாக பிரித்து வைத்துள்ளனர். அதன் பின்னர் அடுத்த 5 மாதத்திற்கு பெண்ணை … Read more

Hero Xtreme 160r 4v – ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4வி பைக் எதிர்பார்ப்புகள்

நாளை விற்பனைக்கு வரவிருக்கும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி மாடல் பல்வேறு மேம்பாடுகளுடன் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக விற்பனையில் உள்ள 2 வால்வு எக்ஸ்ட்ரீம் 160r மாடலை அடிப்படையாக கொண்டதாகும். 2023 Hero Xtreme 160R 4V எக்ஸ்ட்ரீம் 160r 4v மாடலில் குறிப்பாக முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷனுக்கு பதிலாக கோல்டு நிறத்திலான யூஎஸ்டி ஃபோர்க் மாடல் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்தப்படியாக, Xtreme 160R 4V பைக்கில் திருத்தப்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் கூடுதல் … Read more

“பிரதமர் மோடி பச்சைத் தமிழனாகப் பணியாற்றி வருகிறார்!” – ஆளுநர் தமிழிசை கூறுவததென்ன?

புதுச்சேரியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “புதுச்சேரியில் ரத்துசெய்யப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. விரைவில் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். தமிழர் பிரதமராக வருவதற்கான வாய்ப்பு தி.மு.க-வால்தான் மறுக்கப்பட்டது என்பதை உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார். தமிழர் பிரதமராக வருவது மட்டுமின்றி, தமிழர் அப்துல் கலாம் மீண்டும் ஜனாதிபதி ஆவதையும் தி.மு.க, காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து தடுத்தன என்ற வரலாற்றை மறைக்க முடியாது.  தமிழிசை … Read more

ஆயிரக்கணக்கான மீன்கள் டெக்ஸாஸ் கடற்கரையில் செத்து மிதப்பு

டெக்ஸாஸ் ஆயிரக்கணக்கான மீன்கள் டெக்ஸாஸ் கடற்கரையில் செத்து மிதந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள வளைகுடா கடற்கரையில் திடீரென ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன.   எல்லா மீன்களும்  செத்துக் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.  இதையொட்டி கடல்சார் நிபுணர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் வெதுவெதுப்பான நீரே இவ்வளவு மீன்களின் இறப்புக்குக் காரணம் என்பது தெரிய வந்தது. பொதுவாகக் குளிர்ந்த நீரில் அதிக அதிக ஆக்ஸிஜன் இருக்கும்;  அதே வேளையில் வெதுவெதுப்பான … Read more

Odisha train accident: Death toll rises to 289 | ஒடிசா ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 289 ஆக உயர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புவனேஸ்வரம்: ஒடிசா ரயில் விபத்து சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் இன்று ( 13 ம் தேதி) சிகிச்சை பலனின்றி இறந்தார். ஒடிசாவின், பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநகர் ரயில் நிலையம் அருகே கடந்த 2ம் தேதி மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட விபத்தில், 288 பேர் உயிரிழந்தனர். 1,000க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.இந்த விபத்தில் காயமடைந்து கட்டாக் நகரில் உள்ள எஸ்.சி.பி. மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை … Read more

காஷ்மீர் என்கவுண்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் இன்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். குப்வாரா மாவட்டம் டொபனர் பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் … Read more