"நிதிஷ், எங்கள் கட்சியை தன் கட்சியுடன் இணைக்க அழுத்தம் கொடுக்கிறார்"- பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளம் ஆட்சியில் இருக்கிறது. இந்த ஆட்சியில் பீகார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சியின் மகனும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவருமான சந்தோஷ் குமார் சுமன், மாநில அரசில் எஸ்.சி/எஸ்.டி நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்துவருகிறார். இந்த நிலையில், சந்தோஷ் குமார் சுமன் அமைச்சரவையிலிருந்து விலகுவதாக அறிவித்து ராஜினாமா கடிதத்தை பீகார் நாடாளுமன்ற விவகார அமைச்சரான விஜய் குமார் சவுத்ரியிடம் வழங்கியிருக்கிறார். சந்தோஷ் குமார் சுமன் இது … Read more

மேலும் ஒரு அணையை ரஷ்யா தகர்த்துள்ளதாக உக்ரைன் குற்றச்சாட்டு

கீங் உக்ரைன் நாட்டில் மேலும் ஒரு அணையை ரஷ்ய குண்டு வீசி தகர்த்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது.   உக்ரைன் தனது நட்பு நாடுகளின் உதவியோடு ரஷ்யாவின் தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறது.  இந்நிலையில் உக்ரைன் நாட்டின் கொசான் பிராந்திய படைப்பிரிவு செய்தி தொடர்பாளர் வேலரி ஷொஷேன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், ”ரஷ்ய ஆக்கிரமிப்பு படையினர் மோக்ரி யாலி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையைக் … Read more

சென்னை உள்ளிட்ட 7 மாநகரங்களில் வெள்ளத்தடுப்பு திட்டத்திற்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு – மத்திய மந்திரி அமித்ஷா

புதுடெல்லி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட 7 மாநகரங்களில் வெள்ளத்தடுப்பு திட்டத்துக்காக ரூ.2,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்தார். பேரிடர் மேலாண்மை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமித் ஷா தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில், மாநில பேரிடர் மேலாண்மைத் துறை மந்திரிகள் , தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, சென்னை, மும்பை, ஐதராபாத், பெங்களூரு, … Read more

இன்றைய ராசிபலன் 14.6.23 | Horoscope | Today RasiPalan | புதன்கிழமை | June 14 | Daily RasiPalan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் இந்தி திணிப்புக்கு மன்னிப்பு கோரியது

சென்னை இந்தி மொழியில் அலுவல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சுற்றறிக்கை வெளியிட்டதற்கு நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் மன்னிப்பு கோரி உள்ளது. இந்தியாவின் பொதுக் காப்பீடு நிறுவனங்களில் முதன்மையில் உள்ள நிறுவனங்களில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனமும் ஒன்றாகும்.   இது எல் ஐ சி போல மத்திய அரசின் ஒரு அங்கமான நிறுவனமாகும்.   சமீபத்தில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது. அந்த சுற்றறிக்கையில், “ அனைத்து மண்டல அலுவலகங்களிலிருந்து தலைமை அலுவலகத்துக்கு  அனுப்பப்படும் அறிக்கைகள் இந்தியில் மட்டுமே இருக்க … Read more

Unprecedented International Air Force Exercise | வரலாறு காணாத பன்னாட்டு விமானப்படை பயிற்சி

புதுடில்லி:நாட்டின் மேற்கு பாலைவனப் பகுதியில், பன்னாட்டு விமான போர் பயிற்சியை நடத்த உள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது, இதுவரை செய்யப்படாத வகையில், மிகப் பெரிய போர் பயிற்சியாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. நடப்பு ஆண்டின் இறுதி காலாண்டில் நடத்தப்படும் இந்த பயிற்சியில், அமெரிக்கா உள்பட 10க்கும் மேற்பட்ட முக்கிய நாடுகளின் விமானப்படை கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த பயிற்சியின் போது, மிகக் கடினமான போர் முறைகளை இந்நாடுகள் கையாள உள்ளதாகவும் கூறப்படுகிறது. … Read more

மும்பை-புனே விரைவு சாலையில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து – 4 பேர் உயிரிழப்பு

மும்பை, மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பை-புனே விரைவு சாலையில் ரசாயனம் ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்றுள்ளது. இந்த லாரி கண்டலா காட்டில் உள்ள குனே பாலத்தில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாலத்தின் கீழ் சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக … Read more

ராமநாதசுவாமி கோயில்: `விதிமீறல் செய்யும் இணை ஆணையரை மாற்றுக'- இந்து அமைப்பினர் முற்றுகைப் போராட்டம்

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயிலில் இணை ஆணையராகப் பதவி வகித்து வருபவர் மாரியப்பன். இவர் ஆகம விதி மீறல்களில் ஈடுபடுவதாகவும், பக்தர்களின் ஆன்மிக நம்பிக்கையை சீர்குலைத்து, கோயிலை வருவாய் ஈட்டும் நிறுவனமாக மாற்றிவிட்டதாவும், மக்கள் பேரவை அமைப்பினர், இந்து அமைப்பினர் மற்றும் பா.ஜ.க-வினர் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கோயிலின் கிழக்கு கோபுர வாசலில் அமைந்திருக்கும் அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் இது தொடர்பாக நம்மிடம் பேசிய போராட்டக்காரர்கள், “உலகப் பிரசித்திப் … Read more

நாளை 12ஆம் வகுப்பு மறு கூட்டல் ,மறு மதிப்பீடு முடிவுகள் வெளியிடு

சென்னை தமிழக அரசின் தேர்வுத்துறை நாளை 12ஆம் வகுப்பு மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு முடிவுகள் வெளியாகும் என அறிவித்துள்ளது.  கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் 12ஆம் வகுப்புத் தேர்வுகள் நடந்து அதன் முடிவுகள் வெளியாகின.   இந்த தேர்வு எழுதிய மாணவர்களில் சிலர் தங்களது விடைத்தாளை மறு கூட்டல் செய்ய மற்றும் மறு மதிப்பிடு செய்ய விண்ணப்பித்திருந்தனர்.   இதன் முடிவுகள் நாளை பிற்பகல் வெளியிடப்படும் எனத் தமிழக அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இந்த முடிவுகள் பட்டியலில் உள்ள … Read more

திகில் டுவிஸ்டு.. மது குடித்து பலியான இருவர்! 2 சகோதர்களாலேயே படுகொலை – மயிலாடுதுறை ஆட்சியர் திடுக்

Tamilnadu oi-Noorul Ahamed Jahaber Ali மயிலாடுதுறை: மது அருந்திய இருவர் உயிரிழந்ததாக செய்தி வெளியான நிலையில், அவர்கள் சைனைடு கலந்து படுகொலை செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பரபரப்பு தகவலை தெரிவித்து உள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் தத்தங்குடியை சேர்ந்தவர் பழனி குருநாதன் (வயது 55). மங்கைநல்லூர் பகுதியில் இவர் நடத்தி வரும் இரும்புப் பட்டறையில் அதே பகுதியைச் சேர்ந்த பூராசாமி (வயது 65) என்பவர் பணியாற்றி வந்து இருக்கிறார். இருவரும் வழக்கம்போல் நேற்று மாலை … Read more