சவப்பெட்டியில் 4 மணிநேரத்திற்கு பின் உயிருடன் எழுந்த மூதாட்டி! திகைத்துப்போன குடும்பத்தினர்

இறந்ததாக அறிவிக்கப்பட்ட 76 வயது மூதாட்டி, சவப்பெட்டியில் நான்கு மணிநேரம் உயிருடன் இருந்தது ஈக்குவடாரில் பரபரப்பை ஏற்படுத்தியது. 76 வயது மூதாட்டி ஈக்குவடார் நாட்டின் லாஸ் ரியோஸ் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் பெல்லா மொண்டோயா எனும் 76 வயது மூதாட்டி அனுமதிக்கப்பட்டார். இதயம் தொடர்பான பிரச்சனைகள் அவருக்கு இருந்த நிலையில், உடல்நலக்கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் பரிசோதித்தனர். அதன் பின்னர் சிகிச்சையில் இருந்த பெல்லா 12 மணியளவில் பக்கவாதம் ஏற்பட்டு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. சவப்பெட்டியில் உயிருடன் … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது : முதல்வர் ஸ்டாலின் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை

சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவித்ததை அடுத்து முதல்வர் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் வீட்டில் 17 மணி நேரம் சோதனை நடத்தி உள்ளனர்.   பிறகு அவர்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள தங்கள் அலுவலகத்துக்கு அமைச்சரை அழைத்துச் சென்ற போது அவருக்கு கடும் நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். … Read more

WPI inflation declines to 3-year low of (-) 3.48 pc in May | மொத்த விலை பணவீக்கம் குறைந்தது

புதுடில்லி: கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவாக, மே மாதம் மொத்த விலை பணவீக்கம் மைனஸ் 3.48 ஆக பதிவாகி உள்ளது. உணவு பொருட்கள் மீதான பணவீக்கம் குறைவை தொடர்ந்து மே மாதம் மொத்த விலை பணவீக்கம் சரிவை சந்தித்துள்ளது கடந்த ஆண்டு (2022) ஆண்டில் மொத்த விலை பணவீக்கம் 16.63 ஆக இருந்தது. 2020 மே மாதம், மொத்த விலை பணவீக்கம் மைனஸ் 3.37 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. புதுடில்லி: கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத … Read more

தலைமைச் செயலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள்… பல மணிநேர சோதனை முதல் தலைவர்கள் கண்டனம் வரை?!

ஜூன் 13-ம் தேதி காலை 7 மணிக்கு சென்னை கீரின்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்ய அமலாக்கத்துறையினர் வருகை தந்தனர். இந்த நிலையில், அங்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரின் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. குறிப்பாக, வங்கி பரிவர்த்தனை தொடர்பாக கிடைக்கப்பெற்ற ஆதாரங்கள் அடிப்படையில் தலைமைச் செயலகத்துக்கு சென்றதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளே நடந்தது என்ன ? சரியாக, நண்பகல் 11.30 மணிக்கு … Read more

தொடர்ந்து மயக்க நிலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி : மருத்துவமனை தகவல்

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிவிப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து மயக்க நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வெகு நேரம் சோதனை நடத்தினர்.  பிறகு, அமைச்சரை விசாரணை நடத்துவதற்காக அழைத்துச் செல்வதாக வீட்டில் இருந்து அழைத்துச் செல்ல முயன்றனர். அமைச்சருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். செந்தில் பாலாஜியின் சகோதரரிடம் அமைச்சரின் கைது குறித்துத் தெரிவிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். செந்தில் … Read more

செந்தில் பாலாஜியின் சொந்த ஊரிலேயே கெத்தா கொண்டாடுவோம்… பட்டாசு ஸ்வீட்டுடன் அதிரவைத்த நபர்

Tamilnadu oi-Velmurugan P கரூர்: அமைச்சர் செந்தில் பாலாஜி கைதை வரவேற்று கரூரில் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்துக் கொண்டாட வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை போலீசார் கைது செய்து அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அவரது சொந்த ஊரான கரூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் திடீர் கரூர் நகருக்குள் … Read more

'அட்ராசிட்டி செந்தில் பாலாஜி' – தொடர்ந்து அட்டைப்பட கட்டுரை வெளியிட்ட ஜூ.வி… கையிலெடுத்த ED!

தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. முன்னதாக அவர் அ.தி.மு.க-வில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவர் வேலை வாங்கித்தருவதாகப் பலரிடம் பணம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. செந்தில் பாலாஜி இதற்கிடையில் கடந்த மாதம் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையதாகக் கூறப்படும் சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். குறிப்பாக கரூரில் இருக்கும் செந்தில் பாலாஜியின் … Read more

செந்தில் பாலாஜி கைதுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்

சென்னை: செந்தில் பாலாஜி கைதுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை, கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, அவரது சகோதரர் அசோக் என்பவரது வீடு உள்ளிட்ட 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள், நேற்று (ஜூன் 13) காலை 09.00 மணி முதல் மத்திய பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் அதிரடியாக சோதனை நடத்தி வந்தனர். மேலும், சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் உள்ள … Read more

கேரள கோயில்: பெண்கள் மார்பகத்தை மறைக்கும் உரிமைக்காகப் போராடிய தேவகி நம்பீசன் காலமானார்!

கடந்த 1950-களில் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள மணிமலர்காவு கோயிலில், (`மரு மரக்கால் சமரம்’) மார்பகத்தை மறைக்கும் உரிமைக்கு எதிரான போராட்டத்தில் பங்குபெற்றுப் போராடிய தேவகி நம்பீசன், ஞாயிற்றுக்கிழமையன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். 89 வயதான இவர், வயதுமூப்பினால் உண்டாகும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். மணிமலர்காவு கோயில் திருவிழாக்களில், சடங்கின்போது நாயர் பெண்கள் மார்பகத்தை மறைக்காமல், மேலாடை ஏதும் அணியாமல் கலந்து கொள்ள வேண்டும் என்ற சம்பிரதாயம் இருந்துள்ளது. அதோடு பட்டியலின பெண்களை கோயிலின் உள்ளேயும் அனுமதிக்கவில்லை. … Read more