அமைச்சர் செந்தில் பாலாஜியைக் காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது உடல்நிலை சரியில்லாமல் அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் உள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. இன்று இந்த மனு  உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.  மனுவின் மீதான விசாரணையின் போது வழக்கின் … Read more

“யூ டர்ன்” அடித்த பைபர்ஜாய் புயல்.. எஸ்கேப் ஆன பாகிஸ்தான்! ஆ.. அலறுதே குஜராத் – ஆரம்பமே இப்படியா?

India oi-Noorul Ahamed Jahaber Ali காந்திநகர்: அரபிக் கடலில் நிலைகொண்டு இருக்கும் பைபர்ஜாய் புயல் பாகிஸ்தானில் கரையை கடக்கும் என்று கடந்த சில நாட்களாக கூறப்பட்டு வந்த நிலையில் அது குஜராத்தில் கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ள நிலையில் அங்கு இப்போதே பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இன்று பிற்பகல் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், “நேற்று (14.06.2023) வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய மிகத்தீவிர புயல் “பிப்பர்ஜாய், வடக்கு … Read more

குஜராத்தில் பிபர்ஜாய் புயல் கரையை கடக்க தொடங்கியது

ஆமதாபாத், தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை, வலுவடைந்து புயலாக உருமாறியது. ‘பிபர்ஜாய்’ என பெயரிடப்பட்ட இந்த புயல் வடக்கு நோக்கி நகர்ந்து கடந்த 11-ந்தேதி அதிதீவிர புயலாக வலுவடைந்தது.குஜராத் கடற்பகுதியை நோக்கி நகர்ந்து வரும் இந்த அதிதீவிர புயலானது குஜராத்தின் கட்ச் மாவட்டம் மாண்ட்விக்கும், பாகிஸ்தானின் கராச்சிக்கும் இடையே குஜராத்தின் ஜகாவு துறைமுகம் அருகே கரையைக் கடந்து வருகிறது தினத்தந்தி Related Tags : பிபர்ஜாய் புயல் 

Hero maxi scooter – ஹீரோ மேக்ஸி ஸ்கூட்டர் அறிமுகம் எப்பொழுது ?

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தொடர்ந்து பிரீமியம் ரக மாடல்களை களம் இறக்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றது. அந்த வகையில் மேக்சி ஸ்டைல் ஸ்கூட்டர் ஒன்றை காப்புரிமை கோரி பதிவு செய்துள்ளது. மேக்சி ஸ்டைல் மாடல் ஆனது மிகவும் நேர்த்தியான ஸ்போட்டிவ் டிசைன் பெற்று உயர்தரமான பாகங்களை கொண்டு தயாரிக்கப்பட உள்ள மாடலாகும் மேலும் இதனுடைய எஞ்சின் பற்றி எந்த விபரங்களும் தற்பொழுது கிடைக்கவில்லை. Hero Maxi Scooter அனேகமாக அது 125சிசி அல்லது 150சிசி என்ஜினை … Read more

ராமநாதபுரம்: நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராக வந்த கைதிக்கு கஞ்சா சப்ளை செய்ய முயற்சி!- வாலிபர் கைது

ராமநாதபுரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வழக்கு ஒன்றில் நிபந்தனை ஜாமீன் கையெழுத்திட வந்த ராமநாதபுரம் சிவஞானபுரத்தைச் சேர்ந்த அசோக்குமார் என்பவரை, ஆர்.எஸ்.மடையைச் சேர்ந்த கொக்கி குமார் என்ற ரௌடி நீதிமன்றத்துக்குள் வாளுடன் நுழைந்து, நீதிபதி தீர்ப்பு வழங்கும் வளாகத்துக்குள்ளேயே புகுந்து சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பினார். அவரை கேணிக்கரை ஆய்வாளர் ஆடிவேல் தலைமையிலான போலீஸார் சுட்டுப் பிடித்தனர். நீதிபதியின் விசாரணை அறையில் நடந்த இந்தக் கொலை முயற்சி சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. அதைத் … Read more

இம்பாலில் மீண்டும் வன்முறை : கரும் பதற்றம் 

இம்பால் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. கடந்த மாதம் மணிப்பூரில் இரு பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடையே மோதல் ஏற்பட்டது.  இதனால் மணிப்பூர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது.  இதுவரை இந்த வன்முறைச் சம்பவங்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு 349 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  இன்று மணிப்பூர் தலைநகர் இம்பாலில் பாதுகாப்புப் படையினர் மற்றும் கலவரக்காரர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. கலவரத்தில் ஈடுபடுவோர் மீது … Read more

பைபர்ஜாய் புயல் LIVE: 150 கி.மீ வேகத்தில் கரையைக் கடந்து வருகிறது பைபர்ஜாய் புயல்!

LIVE பைபர்ஜாய் புயல் LIVE: 150 கி.மீ வேகத்தில் கரையைக் கடந்து வருகிறது பைபர்ஜாய் புயல்! India oi-Noorul Ahamed Jahaber Ali காந்திநகர்: அரபிக் கடலில் நிலைகொண்டு இருக்கும் பைபர்ஜாய் புயல் கரையைக் கடக்க தொடங்கி இருக்கிறது. பைபர்ஜாய் புயல் கரையை முழுவதுமாக கடக்க சுமார் 6 மணி நேரம் ஆகும் என என கூறப்படுகிறது. Newest First Oldest First 10:03 PM, 15 Jun பைர்ஜாய் புயல் கரையை கடந்து வரும் நிலையில், … Read more

டெல்லியில் பயிற்சி மையத்தில் திடீர் தீ விபத்து – கயிறு கட்டி இறங்கியதால் உயிர்தப்பிய மாணவர்கள்

புதுடெல்லி, டெல்லி முகர்ஜி நகர் பகுதியில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மதியம் 12.30 மணியளவில் கட்டிடத்தின் மேல்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து பயிற்சி மையத்தில் படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் பீதி அடைந்தனர். படிக்கட்டு வழியாக வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து மாடியில் இருந்து கயிறு மூலம் மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக கீழே இறங்கினர். இந்த நிலையில் தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு … Read more

ola electric car – ஓலா எலக்ட்ரிக் காரின் டிசைன் வெளியானது

இந்தியாவின் முதன்மையான எலக்ட்ரிக் டூவீலர் தயாரிப்பாளரான ஓலா எலக்ட்ரிக் தற்பொழுது எலக்ட்ரிக் காரை உற்பத்தி செய்வதற்கான முயற்சியும் மேற்கொண்டு வருகின்றது. இதற்கான காப்புரிமை கோரிய படங்கள் தற்பொழுது வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த மாடல் ஆனது டெஸ்லா கார்களை போன்ற வடிவமைப்பை நினைவுப்படுத்துகின்றது. ஓலா எலக்ட்ரிக் காரின் விலை ரூ.30 லட்சத்திற்குள் துவங்கலாம். Ola Electric Car Design குறிப்பாக இந்த எலக்ட்ரிக் காரில் 70 முதல் 80Kwh பேட்டரி கொண்டிருக்கும். மேலும், 500 கிலோமீட்டர் வரையிலான … Read more