மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த வேண்டும் : சஞ்சய் ராவத்

மும்பை சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்த வேண்டும் எனக் கூறி உள்ளார். மணிப்பூர் தற்போது கலவர பூமியாக மாறி உள்ளது. அம்மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மெய்தி இனத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று ஓங்கி குரல் கொடுக்கின்றனர். அங்குள்ள பழங்குடி இனத்தவராக உள்ள நாகா, குகி இன மக்கள் தீவிரமாக இதை எதிர்க்கின்றனர். கடந்த மே 3 ஆம் தேதி முதல் … Read more

"அனைத்து தேர்தல்களிலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி என்ற பெயரில் மட்டுமே போட்டியிடுவோம்" – அஜித் பவார் திட்டவட்டம்

மும்பை, மராட்டிய மாநிலத்தின் துணை முதல்-மந்திரியாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் இன்று பதவி ஏற்றார். அவருடன், 9 மூத்த தலைவர்களும் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இவர்களுக்கு அம்மாநில ஆளுநர் பதவி பிரமானம் செய்து வைத்தார். இதையடுத்து அஜித் பவார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தற்போது அமைந்துள்ள அரசாங்கத்திற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவளித்துள்ளது. மராட்டியத்தின் முன்னேற்றத்திற்காக அனைத்தையும் செய்வோம். சில எம்.எல்.ஏ.க்கள் வெளியூரில் இருப்பதால் தொடர்பு கொள்ள … Read more

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சித்த சரத் பவார்… கட்சியையே உடைத்த அஜித் பவார் – அரசியல் சதுரங்கம்: 2019 முதல் இன்று வரை…

மும்பை, 2019 மராட்டிய தேர்தல்:- மராட்டிய சட்டசபை தேர்தல் 2019-ம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டன. 288 தொகுதிகளை கொண்ட மராட்டியத்தில் ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 145 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். பாஜக – சிவசேனா கூட்டணி வெற்றி:- தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 105, சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 ஆகிய தொகுதிகளில் வெற்றிபெற்றன. தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணி சேர்ந்து … Read more

`ஊழல்வாதிகள் என்று சொன்னவர்களுக்கு அமைச்சர் பதவி; பிரதமர் மோடிக்கு நன்றி!' – சரத் பவார் கருத்து

மகாராஷ்டிரா அரசியலில் புதிய திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜித் பவார், இன்று கட்சியை உடைத்துக்கொண்டு தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து பா.ஜ.க-சிவசேனா (ஷிண்டே) அமைச்சரவையில் சேர்ந்திருக்கிறார். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும்விதமாக அமைந்துள்ளது. துணை முதல்வராக பதவியேற்ற பிறகு பேட்டியளித்த அஜித் பவார், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடு நன்றாக முன்னேறி வருகிறது. மற்ற நாடுகளிலும் மோடி பிரபலமாக இருக்கிறார். அவரையும், அவரது தலைமையையும் அனைவரும் ஆதரிக்கின்றனர். வரும் மக்களவைத் தேர்தல் … Read more

ரேஷன் கடைகள் மூலம் நியாய விலையில் காய்கறி விற்பனை செய்ய வேண்டும் – விஜயகாந்த் வலியுறுத்தல்

காய்கறிகளை ரேஷன் கடைகள் மூலம் நியாய விலையில் மக்களுக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடு்க்க வேண்டும் என்று விஜயகாந்த் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தக்காளி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 100ஐ தாண்டி விற்பனையாகி வருகிறது. விலைவாசி உயர்வால் அன்றாட செலவுக்கு கூட பணம் இல்லாமல் ஏழை எளிய மக்கள் தவித்து வரும் நிலையில், தற்போது காய்கறிகளின் விலை உயர்வால் விழி பிதுங்கி நிற்கின்றனர். ஏற்கனவே அனைத்து விலைவாசிகளின் உயர்வால் அன்றாட … Read more

சோப்பு டப்பாக்குள் மறைத்து ரூ.12 கோடி மதிப்பிலான ஹெராயின் கடத்தல்…3 பேர் கைது

கவுகாத்தி, அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படை துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பார்த்த சாரதி மஹந்தாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் கூடுதல் எஸ்.பி. கல்யாண் பதக் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கவுகாத்தியில் இருந்து துப்ரி நோக்கி ஒரு எஸ்யுவி ரக கார் வந்தது. அதனை நிறுத்தி போலீசார் சோதித்தனர். அதனுள் ஏராளமான சோப்பு டப்பாக்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில் … Read more

Monaco Energy Boat Challenge: "முதல்வர் தந்த 15 லட்சம்!" – படகுடன் மொனாக்கோ செல்லும் கோவை மாணவர்கள்

கோயம்புத்தூர் குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் பயிலும் பத்து மாணவர்கள், இன்று முதல் ஜூலை 8ம் தேதி வரை ஐரோப்பாவின் மொனாக்கோவில் நடக்கவுள்ள `மொனாக்கோ ஆற்றல் படகுப் போட்டி’யில் (Monaco Energy Boat Challenge) ‘Team Sea Sakthi’ என்ற பெயரில் பங்கேற்கவுள்ளனர். தங்களின் படகுக்கு `யாழி’ என்றும் தமிழில் பெயர் வைத்துள்ளனர். மொனாக்கோவில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 16 குழுக்களுடன் போட்டிப் போட்டு, இவர்கள் வடிவமைத்த படகைக் காட்சிப்படுத்தி இயக்க வேண்டும்.  Team Sea Sakthi இக்குழுவைச் … Read more

ரூ. 100 கோடி ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான மகாராஷ்டிர எம்எல்ஏ-வுக்கு அமைச்சர் பதவி வழங்கி கௌரவப்படுத்தியது பாஜக

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் இன்று இணைந்தார். முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில் அஜித் பவார் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். ஏற்கனவே தேவேந்திர பட்நாவிஸ் துணை முதலமைச்சராக உள்ள நிலையில் தற்போது இரண்டு துணை முதலமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். இதன் மூலம் இரட்டை எஞ்சின் கொண்ட பாஜக அரசில் தற்போது மூன்று எஞ்சின் பொறுத்தப்பட்டு அனைத்து திட்டங்களும் அதிவேகத்தில் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. அஜித் … Read more

‛கள்ளக்காதல்’.. காதலனுக்காக 2 வயது மகன் கொலை! ‛பாபநாசம்’ பட பாணியில் உடலை மறைத்த பெண்! நடுங்குதே

India oi-Nantha Kumar R சூரத்: கள்ளக்காதல் கண்ணை மறைக்க, காதலனை கரம்பிடிக்க வசதியாக பெற்றெடுத்த 2 வயது மகனை பெண் ஒருவர் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு போலீசில் சிக்காமல் இருக்க குழந்தையின் உடலை தமிழில் வெளியான ‛பாபநாசம்’ பட ஸ்டைலில் மறைத்து நாடகமாடிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் நயானா மாண்டவி. இவர் குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் திண்டோலி பகுதியல் வசித்து வருகிறார். கட்டட தொழிலாளியான … Read more

"மூன்று என்ஜின் கொண்ட அரசு புல்லட் ரெயிலைப் போல இயங்கும்" – அஜித் பவார் பதவியேற்பு குறித்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கருத்து

மும்பை, மும்பை, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் உடனான மோதலால் கட்சியை உடைத்தார் அஜித் பவார். இதைத்தொடர்ந்து தேசியவாத காங்கிரசில் இருந்து அஜித்பவார் உள்ளிட்டோர் விலகி ஆளும் பாஜக கூட்டணியில் இன்று இணைந்தனர். இந்தநிலையில், சிவசேனா – பாஜக கூட்டணி அரசில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார். அஜித் பவார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 8 பேருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். ஏற்கனவே தேவேந்திர பட்னாவிஸ் துணை … Read more