Odisha train accident; The death toll rises to 290 | ஒடிசா ரயில் விபத்து; பலி எண்ணிக்கை 290 ஆக உயர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புவனேஸ்வரம்: ஒடிசா ரயில் விபத்து சம்பவத்தில் காயமடைந்த மேலும் ஒருவர் இன்று ( 16 ம் தேதி) சிகிச்சை பலனின்றி இறந்தார்.இதனால் பலி எண்ணிக்கை 290 ஆனது. ஒடிசாவின், பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநகர் ரயில் நிலையம் அருகே கடந்த 2ம் தேதி மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட விபத்தில், 288 பேர் உயிரிழந்தனர். 1,000க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.இந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த … Read more

கர்நாடகா: டிராக்டர் ஏற்றி தலைமைக் காவலர் கொலை – மணல் மாஃபியாக்கள் வெறிச்செயல்!

கர்நாடகா மாநிலம், கலபுருகி மாவட்டத்திலுள்ள பீமா நதியிலிருந்து, மணல் கொள்ளையடிக்கப்படுவது தொடர்கதையாக இருப்பதால், மணல் கொள்ளையைத் தடுக்க, மாவட்ட போலீஸார் தினமும் பீமா நதியை ஓட்டிய பகுதிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்றிரவு கலபுருகி மாவட்டத்தின், ஜெயவர்கி தாலுகாவிலுள்ள நாராயணபுரா பகுதியில், பீமா நதியில் மணல் கொள்ளை நடப்பதாக, நாராயணபுரா போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, தலைமைக் காவலர் மயூர், பிரமோத் ஆகிய இருவரும், தனித்தனி பைக்குகளில் அந்தப் பகுதியில் ரோந்துக்குச் சென்றனர். கொலைசெய்யப்பட்ட தலைமைக் … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து டிவீட் : சவுக்கு சங்கருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

சென்னை அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து டிவீட் வெளியிட்ட சவுக்கு சங்கருக்கு உயர்நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமானவராக இருக்கும் சவுக்கு சங்கர் தன்னைப் பற்றி தொடர்ச்சியாக அவதூறான கருத்துக்களைத் தெரிவித்து வருவதாகவும், தனக்கு மான நஷ்ட ஈடாக ரூ.2 கோடி வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், செந்தில் பாலாஜி குறித்து அவதூறான கருத்துக்களைப் பதிவு செய்வதற்குச் … Read more

'இந்துத்துவா’ பஜ்ரங் தள் தொண்டர்களை லத்தியால் வெளுத்த போலீஸ்- பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில்தான்!

India oi-Mathivanan Maran இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் திடீரென மறியல் போராட்டம் நடத்திய இந்துத்துவா அமைப்பான பஜ்ரங் தள் இயக்கத்தின் தொண்டர்களை போலீசார் சரமாரியாக தடியடி நடத்தி விரட்டியத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக ஆளும் ம.பி.யில் பஜ்ரங் தள் தொண்டர்கள் போலீசாரால் அடித்து விரட்டியடிக்கப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகிவிட்டது. இந்துத்துவா கொள்கையை தீவிரமாக பேசக் கூடிய பல அமைப்புகளில் பஜ்ரங்க தள் ஒன்று. இந்த இயக்கத்துக்கு பல்வேறு வன்முறை … Read more

Adipurush Hanuman will be welcomed by fans…! Today on social media | ரசிகர்களிடையே வரவேற்பு பெறும் ஆதிபுருஷ் அனுமன்…! சமூக வலைதளத்தில் இன்று

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டீ சீரீஸ் தயாரிப்பில் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் திரைப்படம் இன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்று காலை முதலே ரசிகர்கள் பலர் ஆதிபுருஷ் படத்தில் அனுமன் வேடத்தில் நடித்த நடிகரின் நடிப்பைப் பாராட்டி வருகின்றனர். அனுமன் கதாப்பாத்திரமேற்ற நடிகர் குறித்த தகவல்களைப் பார்ப்போம். மஹா., மாநிலத்தின் ரைகாட் மாவட்டத்தில் உள்ள … Read more

 முக்கிய பிரமுகர்கள் வரும்போது தடையில்லா மின்சாரம் வழங்க தமிழக அரசு உத்தரவு

சென்னை அரசு நிகழ்வுகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரும் போது தடையில்லா மின்சாரம் வழங்க தமிழக மின்வாரியம்  உத்தரவு இட்டுள்ளது. அண்மையில்  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார்.  தம்மை காண வந்த தொடர்களை பார்க்க அவர் விமான நிலைய வாயில் அருகே காரை நிறுத்தியபோது மின் தடை ஏற்பட்டது.   ஆயினும் அமித்ஷா சிறிது தூரம் நடந்து சென்று தொண்டர்களைப் பார்த்துக் கையசைத்த பிறகு வாகனத்தில் ஏறிச் சென்றார். பிறகு பாஜகவினர் திட்டமிட்டு இந்த மின்தடை ஏற்படுத்தப்பட்டதாகக் … Read more

தமிழகத்திலேயே முதல்முறையாக.. தஞ்சாவூரில் வரும் \"ஆச்சரியம்\".. லுலு வீசிய குறி.. குஷியில் ஒட்டன்சத்திரம்

Tamilnadu oi-Hemavandhana கோவை: தமிழ்நாட்டின் முதல் லுலு ஹைப்பர் மார்க்கெட் கோவையில் இன்று திறக்கப்பட்டுள்ளது.. இதற்கான விற்பனையும் ஆரம்பமாகிவிட்டது. தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் 4 நாள் அரசு முறை பயணமாக துபாய் சென்றிருந்தார்.. அங்கு தொழிலதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ்நாட்டிற்கு முதலீடுகளையும் ஈர்த்திருந்தார். முதல்வர் ஸ்டாலின்: அதன் ஒரு பகுதியாக, சர்வதேச அளவில் பெரும் ஹைபர் மால்களை நடத்தி வரும், கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் யூசுப் அலிக்கு சொந்தமான … Read more

படிக்க இடமின்றி அலைக்கழிக்கப்படும் அரசுப் பள்ளி மாணவிகள்; புதுச்சேரி கல்வித்துறை அவலம்!

புதுவை ஆம்பூர் சாலையிலுள்ள பழைய சட்டக் கல்லூரி வளாகத்தில் சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வந்தது. அது பழைமையான கட்டடம் என்பதால், அங்கு மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவியது. அதனால் அங்கு படித்துக் கொண்டிருந்த மாணவிகளைக் கடந்த ஆண்டு குருசுகுப்பத்திலுள்ள என்.கே.சி பள்ளிக்கு மாற்றியது கல்வித்துறை. அதையடுத்து அங்கு இரண்டு பள்ளிகளும் ஷிஃப்ட் முறையில் இயங்கி வந்தன. ஆனால் என்.கே.சி பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பள்ளி இயங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் இந்த ஆண்டு சுப்பிரமணிய … Read more