அரிசி ஆலை அதிபர்களிடம் ரூ.4.35 லட்சம் லஞ்சம்; விஜிலன்ஸில் வகையாகச் சிக்கிய சார்பு ஆய்வாளர்!

ஸ்ரீவில்லிப்புத்தூரில் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு சார்பு ஆய்வாளர் ஒருவர், ரூ.4.35 லட்சம் லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸாரிடம் விசாரித்தோம். நம்மிடம் பேசியவர்கள், “விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசி மற்றும் உணவுப் பொருள்கள் சட்டவிரோதமாக கள்ளச்சந்தைக்கு கடத்தப்பட்டு விற்கப்படும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இதைத் கண்டறிந்து தடுக்கும் பணியில் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த … Read more

பாஜக நிர்வாகிகளுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை

சென்னை: தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்ற தேர்தல் மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம்நடைபெறுகிறது.

திரும்பிய பக்கமெல்லாம் கொடிய விலங்குகள்! \"40 நாட்கள், 4 குழந்தைகள்!\" அமேசானில் உயிர் பிழைத்தது எப்படி

International oi-Vigneshkumar பொகோட்டா: கொலம்பிய நாட்டில் அமேசான் காடுகளில் 4 குழந்தைகள் 40 நாட்கள் கழித்து மீட்கப்பட்டிருந்தனர். இதற்கிடையே 40 நாட்கள் அவர்கள் எப்படி உயிர் பிழைத்து இருந்தனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. கொலம்பியா நாட்டில் உலகப் புகழ் பெற்ற அமேசான் காடுகள் உள்ளன. கடந்த மே 1ஆம் தேதி அமேசான் காட்டின் மீது பயணித்த ஒரு குட்டி விமானம் எதிர்பார்க்காத வகையில் விபத்தில் சிக்கியது. இந்த கொடூர விபத்தில் இருந்து 4 குழந்தைகள் மட்டும் … Read more

Railway Cop Rescues Man From Being Run Over By A Train In West Bengal | தண்டவாளத்தில் படுத்து தற்கொலைக்கு முயன்ற நபர்: காப்பாற்றிய பெண் போலீஸ்

கோல்கட்டா: ரயில் வரும் நேரத்தில், தண்டவாளத்தில் படுத்து தற்கொலைக்கு முயன்ற நபரை உடனடியாக காப்பாற்றிய பெண் போலீசுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மேற்கு வங்க மாநிலம் புர்மா மெத்னிபூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் வந்து நின்று கொண்டிருந்த நபர், திடீரென தண்டவாளத்தில் இறங்கி ரயில் வரும் பாதையில் தலை வைத்து படுத்தார். இதனை பார்த்த ரயில்வே போலீசாக பணிபுரியும் சுமதி என்பவர், உடனடியாக கீழே இறங்கி அந்த நபரை பிடித்து இழுத்து காப்பாற்றினார். போலீசுக்கு, உதவிக்கு மேலும் … Read more

Britain-ன் முதல் பெண் தலைமை நீதிபதி | Netflix-க்கு கைகொடுத்த Restriction – உலகச் செய்திகள்

சீனா சில காலமாக கியூபாவை உளவு பார்த்ததாகவும், 2019-ல் அதன் உளவுத்துறையின் வசதிகளை மேம்படுத்தியதாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாக அதிகாரி தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் பாகிஸ்தானில் கடத்திச் செல்லப்பட்டு, வலுக்கட்டாயமாக இஸ்லாத்துக்கு மதமாற்றம் செய்யப்பட்டு, திருமணம் செய்துவைக்கப்பட்டதாகக் கூறப்படும் 14 வயது இந்து சிறுமி, அவரின் பெற்றோருடன் செல்ல நீதிமன்றம் அனுமதி மறுத்திருக்கிறது. சோமாலியாவில் ஒரு ஹோட்டலில் அல் ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 6 காவலர்கள் உயிரிழந்தனர் மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். பிரான்ஸில் … Read more

தனியா வா.. நம்பி வந்த காதலியை துண்டு துண்டாக வெட்டிய காதலன்! அடுத்து நடந்த பகீர் சம்பவம்

தமிழகத்தில் தன்னிடம் 2 மாதங்களாக பேசாமல் இருந்த காதலியை காதலன் வெட்டிக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வெர்ஜின் ஜோஸ்வா என்பவர் தனது கல்லூரி காலத்தில் தன்னுடன் படித்து வந்த ஒரு பெண்ணை காதலித்துள்ளார்.  இருவரும் தனது இளங்கலை படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார்கள். அந்த மாணவி மேலும் படிக்க வேண்டும் என்று பி.எட் படிக்கச் சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென அந்த மாணவி, வெர்ஜின் ஜோஸ்வாவுடனான காதலை முறித்துக்கொண்டதுடன் 2 மாதங்களாக … Read more

சோமாலியாவில் குண்டுவெடிப்பு: 27 பேர் உயிரிழப்பு

லோயர் ஷபெல்லே: சோமாலியாவில் குண்டுவெடிப்பு: 27 பேர் உயிரிழந்தனர். சோமாலியாவின் லோயர் ஷபெல்லே பகுதியில் உள்ள முரலே கிராமத்தில் உள்ள கால்பந்து மைதானத்தில் பயங்கர வெடிகுண்டு வெடித்தது. இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்ததாகவும், 53 பேர் பலத்த காயமடைந்ததாகவும் குவாரேலி மாவட்ட துணை ஆணையர் அப்டி அகமது தெரிவித்தார். இறந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் என்று தெரிகிறது. பழைய மோட்டார் ஷெல்லுடன் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனிடையே, சோமாலியா தலைநகர் மொகதிசுவில் … Read more

பீச்சில் அத்துமீறும் இளசுகள்.. அதுவும் \"நிர்வாணமாக..\" கொந்தளிக்கும் பொதுமக்கள்! வந்த அதிரடி உத்தரவு

International oi-Vigneshkumar ஆம்ஸ்டர்டாம்: பொதுவெளியில் அதிலும் குறிப்பாகக் கடற்கரைகளில் உடலுறவு கொள்ளும் போக்கு அதிகரித்து வரும் நிலையில், இதனால் அங்குள்ள மக்கள் நொந்துபோயுள்ளனர். கடற்கரை என்றாலே அனைவருக்கும் அழகிய கடற்கரை மணலும், பரந்து விரிந்து இருக்கும் கடல் நீரும் தான் ஞாபகத்திற்கு வரும். வார இறுதி நாட்களிலோ அல்லது மனது சங்கடமாக இருக்கும் நாட்களிலே கடற்கரையில் நேரத்தைச் செலவிடவே அனைவரும் விரும்புவார்கள். ஆனால், கடற்கரையில் நாம் பார்க்கவே முடியாத பல காட்சிகளைப் பார்க்க வேண்டி இருக்கும். இதற்காகவே … Read more

Wrestler complains of crisis to compromise | சமரசம் செய்ய நெருக்கடி மல்யுத்த வீராங்கனை புகார்

புதுடில்லி: ”இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் புகார்களை திரும்பப் பெற நெருக்கடி கொடுக்கப்படுகிறது,” என, மல்யுத்த வீராங்கனை சாக் ஷி மாலிக் கூறிஉள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக, ஒரு சிறுமி உட்பட ஏழு மல்யுத்த வீராங்கனையர் பாலியல் புகார் கூறியுள்ளனர். இது தொடர்பாக, அவர்கள் ஒரு மாதத்துக்கு மேலாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மல்யுத்த வீராங்கனை சாக் ஷி மாலிக் நேற்று … Read more

“9 ஆண்டுகளில் மோடி அரசு நாட்டுக்கு ரூ.100 லட்சம் கோடி கடனை ஏற்படுத்தியிருக்கிறது!" – காங்கிரஸ்

2014-ல் பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் ஆட்சியமைத்த பா.ஜ.க அரசு முழுமையாக ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இதன் ஒருபகுதியாக, நாடு முழுவதும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களை நடத்திவருகின்றனர் பா.ஜ.க-வினர். இந்த நிலையில், பா.ஜ.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இருந்த நாட்டின் மொத்த கடன் ரூ.55 லட்சம் கோடியை, ஒன்பதே ஆண்டுகளில் பிரதமர் மோடி ரூ.155 லட்சம் கோடியாக உயர்த்தியிருக்கிறார் என காங்கிரஸ் குற்றம்சாட்டியிருக்கிறது. மோடி இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் … Read more