ரேஷன் கடைகள் மூலம் நியாய விலையில் காய்கறி விற்பனை செய்ய வேண்டும் – விஜயகாந்த் வலியுறுத்தல்

காய்கறிகளை ரேஷன் கடைகள் மூலம் நியாய விலையில் மக்களுக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடு்க்க வேண்டும் என்று விஜயகாந்த் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தக்காளி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 100ஐ தாண்டி விற்பனையாகி வருகிறது. விலைவாசி உயர்வால் அன்றாட செலவுக்கு கூட பணம் இல்லாமல் ஏழை எளிய மக்கள் தவித்து வரும் நிலையில், தற்போது காய்கறிகளின் விலை உயர்வால் விழி பிதுங்கி நிற்கின்றனர். ஏற்கனவே அனைத்து விலைவாசிகளின் உயர்வால் அன்றாட … Read more

சோப்பு டப்பாக்குள் மறைத்து ரூ.12 கோடி மதிப்பிலான ஹெராயின் கடத்தல்…3 பேர் கைது

கவுகாத்தி, அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படை துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பார்த்த சாரதி மஹந்தாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் கூடுதல் எஸ்.பி. கல்யாண் பதக் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கவுகாத்தியில் இருந்து துப்ரி நோக்கி ஒரு எஸ்யுவி ரக கார் வந்தது. அதனை நிறுத்தி போலீசார் சோதித்தனர். அதனுள் ஏராளமான சோப்பு டப்பாக்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில் … Read more

Monaco Energy Boat Challenge: "முதல்வர் தந்த 15 லட்சம்!" – படகுடன் மொனாக்கோ செல்லும் கோவை மாணவர்கள்

கோயம்புத்தூர் குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் பயிலும் பத்து மாணவர்கள், இன்று முதல் ஜூலை 8ம் தேதி வரை ஐரோப்பாவின் மொனாக்கோவில் நடக்கவுள்ள `மொனாக்கோ ஆற்றல் படகுப் போட்டி’யில் (Monaco Energy Boat Challenge) ‘Team Sea Sakthi’ என்ற பெயரில் பங்கேற்கவுள்ளனர். தங்களின் படகுக்கு `யாழி’ என்றும் தமிழில் பெயர் வைத்துள்ளனர். மொனாக்கோவில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 16 குழுக்களுடன் போட்டிப் போட்டு, இவர்கள் வடிவமைத்த படகைக் காட்சிப்படுத்தி இயக்க வேண்டும்.  Team Sea Sakthi இக்குழுவைச் … Read more

ரூ. 100 கோடி ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான மகாராஷ்டிர எம்எல்ஏ-வுக்கு அமைச்சர் பதவி வழங்கி கௌரவப்படுத்தியது பாஜக

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் இன்று இணைந்தார். முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில் அஜித் பவார் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். ஏற்கனவே தேவேந்திர பட்நாவிஸ் துணை முதலமைச்சராக உள்ள நிலையில் தற்போது இரண்டு துணை முதலமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். இதன் மூலம் இரட்டை எஞ்சின் கொண்ட பாஜக அரசில் தற்போது மூன்று எஞ்சின் பொறுத்தப்பட்டு அனைத்து திட்டங்களும் அதிவேகத்தில் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. அஜித் … Read more

‛கள்ளக்காதல்’.. காதலனுக்காக 2 வயது மகன் கொலை! ‛பாபநாசம்’ பட பாணியில் உடலை மறைத்த பெண்! நடுங்குதே

India oi-Nantha Kumar R சூரத்: கள்ளக்காதல் கண்ணை மறைக்க, காதலனை கரம்பிடிக்க வசதியாக பெற்றெடுத்த 2 வயது மகனை பெண் ஒருவர் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு போலீசில் சிக்காமல் இருக்க குழந்தையின் உடலை தமிழில் வெளியான ‛பாபநாசம்’ பட ஸ்டைலில் மறைத்து நாடகமாடிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் நயானா மாண்டவி. இவர் குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் திண்டோலி பகுதியல் வசித்து வருகிறார். கட்டட தொழிலாளியான … Read more

"மூன்று என்ஜின் கொண்ட அரசு புல்லட் ரெயிலைப் போல இயங்கும்" – அஜித் பவார் பதவியேற்பு குறித்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கருத்து

மும்பை, மும்பை, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் உடனான மோதலால் கட்சியை உடைத்தார் அஜித் பவார். இதைத்தொடர்ந்து தேசியவாத காங்கிரசில் இருந்து அஜித்பவார் உள்ளிட்டோர் விலகி ஆளும் பாஜக கூட்டணியில் இன்று இணைந்தனர். இந்தநிலையில், சிவசேனா – பாஜக கூட்டணி அரசில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார். அஜித் பவார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 8 பேருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். ஏற்கனவே தேவேந்திர பட்னாவிஸ் துணை … Read more

BMW : 2024 பிஎம்டபிள்யூ G 310 சீரிஸ் பைக் அறிமுகமானது

பிஎம்டபிள்யூ மோட்டார்டு நிறுவனத்தின் G 310 சீரிஸ் பைக்குகளுக்கான 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, பல்வேறு அமெரிக்கா மற்றும் கனடா வரிசை பைக்குகள் வெளியிடப்பட்டுள்ளன. ஜி 310 வரிசையில் உள்ள G 310 R, G 310 GS, மற்றும் G 310 RR ஆகிய மாடல்களும் டிவிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ கூட்டணியில் உருவாக்கப்பட்ட மாடலாகும். 2024 BMW G 310 Series பிஎம்டபிள்யூ ஜி310 பைக்கில் நேக்டூ ஸ்போர்ட்டிவ் ஜி 310 … Read more

காண்டம்: சரியான அளவை பயன்படுத்துங்கள்! – காமத்துக்கு மரியாதை | S3 E 48

காண்டம் பற்றிய விழிப்புணர்வு இன்றைக்குக் கிட்டத்தட்ட அனைவரிடமும் இருக்கிறது. ஆனால் யார், எதைப் பயன்படுத்த வேண்டும்; காண்டம் அலர்ஜி ஏற்பட்டால் என்ன செய்வது என்பன போன்ற முழுமையான விழிப்புணர்வு பலரிடமும் இல்லை. இதுகுறித்தே, இந்த வார காமத்துக்கு மரியாதையில் பாலியல் மருத்துவர் காமராஜ் விரிவாகப் பேசியிருக்கிறார். “காண்டம் பற்றிய விழிப்புணர்வு தகவல்களை சொல்வதற்கு முன்னால், அதுபற்றி சொல்லப்படுகிற சுவாரஸ்யமான ஒரு தகவலை சொல்ல விரும்புகிறேன். இங்கிலாந்தை ஆட்சி செய்து வந்த இரண்டாம் சார்லஸ், உறவில் அதிக ஈடுபாடு … Read more

உலகின் மிக அமைதியான நாடாக ஐஸ்லாந்து தேர்வு

வாஷிங்டன் தொடர்ந்து 15 ஆம் முறையாக உலகின் மிக அமைதியான நாடாக ஐஸ்லாந்து வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. உலகின் மிகவும் அமைதியான நாடாக இந்த ஆண்டிலும் ஐஸ்லாந்து தொடர்ந்து 15வது முறையாகத் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு உலகளாவிய அமைதி குறியீட்டின் படி, இந்த ஆண்டு ஐஸ்லாந்து தொடர்ந்து 15 வது முறையாக உலகின் மிகவும் அமைதியான நாடாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூர், போர்த்துகல், ஸ்லோவேனியா, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளன. இதற்கு முன் தரவரிசையில் … Read more

காதலியின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட காதலன் – போலீசார் விசாரணை

பஹ்ரைச், உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் பகுதியில் காதலியின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காதலன் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்பால் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், ஒரு பெண்ணை திருமணம் செய்ய விரும்பினார். அவர்களின் காதலை அந்த பெண்ணின் தந்தை விரும்பவில்லை. இதையடுத்து நேற்று பஞ்சாயத்து கூட்டம் கூட்டப்பட்டது. பின்னர் இரவில், அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் சந்திக்க முடிவு செய்தனர். இதையறிந்த அந்த பெண்ணின் தந்தை இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் … Read more