தாயைப் பறிகொடுத்த இந்திய வம்சாவளி பெண்: உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதி

அமெரிக்காவில் நடந்த விமான விபத்தில் இந்த வம்சாவளி பெண் உயிரிழந்துள்ளார், அவரது மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விமான விபத்து அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ரோமா குப்தா 63, மற்றும் அவரது மகள் ரீவா குப்தா 33 இருவரும் நான்கு இருக்கைகள் கொண்ட சிறிய பயிற்சி விமானத்தில் பயணம் செய்துள்ளனர். இந்த பைபர் செரோகி விமானம் லாங் ஐலேண்டில் உள்ள குடியரசு விமான நிலையத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் தீப்பிடித்ததில் ரோமா இறந்தார். அவருடன் பயணித்த அவரது … Read more

போலி டாக்டர் பட்ட விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் தொடர்பு? போலீஸ் நோட்டீஸ்…

சென்னை:  கிண்டி  அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி டாக்டர் பட்டம் வழங்கிய வழக்கில், பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம் அளிக்க கோரி கோட்டூர்புரம் காவல்துறை  சில கேள்விகளை எழுப்பி கடிதம் கொடுத்துள்ளனர். தமிழ்நாட்டின் பிரபலமான அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே அண்ணா பல்கலைக்கழகம் பெயரில், உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், திரையுலகைக் சேர்ந்த நடன இயக்குநர் சாண்டி, சின்னத்திரை பிரபலமான ஈரோடு மகேஷ், யூடியூப் பிரபலங்களான கோபி – சுதாகர் உட்பட 30க்கும் மேற்பட்டோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது இந்த … Read more

ராமநாதபுரம் அழகன்குளம் கிராமத்தில் அருங்காட்சியகம் அமைக்க 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது: தமிழ்நாடு அரசு

மதுரை: ராமநாதபுரம் அழகன்குளம் கிராமத்தில் அருங்காட்சியகம் அமைக்க 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அழகன்குளம் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  2015-16-ல் அழகன்குளம் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு தொடர்பாக அறிக்கை தயார் செய்யப்பட்டது. நிபுணர்களின் ஒப்புதலுக்காக அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு பதில் அளித்துள்ளது.

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு| Pongal worship at Bhagwati Amman temple by the river

திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் பிரசித்திபெற்ற திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற பொங்கல் விழாவில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர் கேரளா மாநிலத்தில் பிரசித்த பெற்ற ஆலயங்களுள் மிகமுக்கியமானது திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் திருக்கோவில் மதுரையை எரித்த கண்ணகி குழந்தையாக கிள்ளியாற்றின்கரையில் அவதரித்தநாளான மாசி மாதம் பூரம் நட்சத்திரத்தில் பவுர்ணமி நாள் ஆற்றுக்கால் பொங்கல் திருவிழா நடைபெறுகிறது மதுரையை எரித்த கோபத்திலிருந்த கண்ணகியை பெண்கள் பொங்கலிட்டு அமைதிப்படுத்தி வழிபட்டனர் என்பது வரலாறு. … Read more

ரூ.40 லட்சம் லஞ்ச வழக்கு; கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு ரூ.5 லட்சத்திற்கு இடைக்கால ஜாமீன்

பெங்களூரு, கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் மாடால் விருபாக்ஷப்பா. மைசூரு சாண்டல் சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனத்திற்கு ரசாயனம் சப்ளை செய்ய ஒரு தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்க ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியபோது பெங்களூருவில் உள்ள எம்.எல்.ஏ.வின் அலுவலகத்தில் வைத்து, மாடால் விருபாக்ஷப்பாவின் மகனும், அரசு அதிகாரியுமான பிரசாந்த் கைது செய்யப்பட்டார். இதன் பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் அலுவலகம் மற்றும் வீட்டில் ரூ.7.72 கோடி சிக்கி இருந்தது. … Read more

ஹீரோ Super Splendor பைக் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்

125சிசி சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் Super Splendor பைக்கில் Xtech என்ற கூடுதல் வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர டிரம், டிஸ்க் பிரேக் என இரு விதமான ஆப்ஷனில் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதிகளை கூடுதலாக பெற்றுள்ளது. Super Splendor Xtec மற்றும் Super Splendor என இரு மாடல்களும் பொதுவாக 124.7cc ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு BS6 இன்ஜின் OBD-2 பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 10.72 bhp பவர் 10.6 … Read more

வேகமாகப் பரவி வரும் A (H3N2) வைரஸ்… நோய்‌ பாதிப்பில் இருந்து பாதுகாப்பது எப்படி? மருத்துவ விளக்கம்

கடந்த மூன்று மாதங்களாகவே இந்தியா‌ முழுவதும் குளிர்க் காய்ச்சல் பாதிப்பு இருந்து வருகிறது. தற்போது இந்தக் குளிர்க் காய்ச்சல் பற்றிய தகவல்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள பல நோயாளிகளின் மாதிரிகளை ஆராய்ந்ததில், மூன்று மாதங்களாகவே பரவலாக பலரிடம் காணப்படும் இந்தக் காய்ச்சல் A (H3N2) வகைத் தொற்று என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் காய்ச்சல் பற்றிய கூடுதல் தகவல்களை மருத்துவர் சிவராம கண்ணனிடம் கேட்டோம்… டாக்டர் சிவராம கண்ணன் “இந்த … Read more

நடுவானில் மொத்த பயணிகளுக்கும் கொலை மிரட்டல்… ஊழியரை தாக்கி அவசர கால கதவை திறக்க முயன்ற நபர்

அமெரிக்காவில் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்திலேயே பயணி ஒருவர் ஆண்கள் அனைவரையும் கொல்லப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். திடீரென்று வன்முறை குறித்த விமானமானது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து போஸ்டன் நோக்கி பயணித்துள்ளது. இந்த விவகாரத்தில் 33 வயதான Francisco Severo Torres என்பவரை பொலிசார் கைது செய்துள்ளதுடன், பல பிரிவுகளில் வழக்கும் பதிந்துள்ளனர். @simik அந்த விமானம் நடுவானில் பறந்து சென்று கொண்டிருந்த போது Torres திடீரென்று வன்முறையில் ஈடுபட்டுள்ளார். பின்னர் உடைந்த ஸ்பூன் ஒன்றுடன் விமானத்தின் முன்பகுதி … Read more

தமிழக அரசின் நடவடிக்கை திருப்தி: தலைமைச்செயலாளரை சந்தித்த பின்பு பீகார் குழுவினர் பேட்டி…

சென்னை; வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுத்தது தங்களுக்கு திருப்திகரமாக உள்ளது என பீகார் மாநில அதிகாரிகள்குழுவினர் தெரிவித்தனர். முன்னதாக பீகார் குழுவினர் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் வடமாநில தொழிலாளர்களை சந்தித்த நிலையில், இன்று காலை தலைமைச்செயலாளர் இறையன்புவை சந்தித்து பேசினர். தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான வதந்திகள் அண்மையில் பரவியதால் வடமாநிலத்தவர்கள் வேலை செய்யும் பல்வேறு இடங்களில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதனை கட்டுக்குள் கொண்டு வர அரசு … Read more

உயிர் மருத்துவ கழிவுகள் முழுவதும் மூடப்பட்ட வாகனத்திலேயே கொண்டு செல்லப்பட வேண்டும்: ஐகோர்ட் கிளை

உயிர் மருத்துவ கழிவுகள் முழுவதும் மூடப்பட்ட வாகனத்திலேயே கொண்டு செல்லப்பட வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மனித மருத்துவக் கழிவுகளை கொண்டு செல்லும் வாகனம் குப்பை தொட்டி போல இருக்கக் கூடாது. பார் கோட் ஸ்கேனிங் வசதியுடன் உயிர் மருத்துவக் கழிவுகள் சேகரிக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. மனித மருத்துவக் கழிவுகளை சேகரிக்கும் இடமும், அவற்றை அகற்றும் இடமும் முறையாக குறிப்பிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.