7,000 புதிய தீவுகளைக் கண்டுபிடித்த ஜப்பான்| இஸ்ரேலில் வெடிக்கும் மக்கள் போராட்டம் – உலகச் செய்திகள்

2006 -2017 ஆண்டுகளில் ரகசியமாக வட கொரியா நடத்திய ஏவுகணை சோதனைகளால், தென் கொரியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சியோலில் உள்ள மனித உரிமைகள் அமைப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. ஜெர்மனியின் டஸ்சல்டாரஃபை (Düsseldorf) சேர்ந்த நபருக்கு இருந்த ஹேச்.ஐ.வி, புற்றுநோய் பாதிப்பு, குருத்தணு மாற்றுச் சிகிச்சையின் மூலம் தற்போது முழுமையாகக் குணப்படுத்தப்பட்டிருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 47,000 பேர் உயிரிழந்துள்ள … Read more

ஆங்கிலக்கால்வாயில் சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றிக்கொண்டிருந்த சிறுபடகு: சோதனையிட்ட பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஆங்கிலக்கால்வாயில் சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றிக்கொண்டிருந்த படகு ஒன்றை பரிசோதித்த பொலிசாருக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. சிறுபடகு குறித்து கிடைத்த இரகசிய தகவல் ஆங்கிலக்கால்வாய் வழியாக சிறுபடகுகள் பிரித்தானியாவுக்குள் நுழைந்தாலே, அவற்றில் பிரான்சிலிருந்து சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோர் இருக்கலாம் என்ற சந்தேகம்தான் இதுவரை பொலிசாருக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால், தங்களுக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த படகை சோதனையிட்ட பொலிசார், படகுக்குள் ஏராளமான போதைப்பொருட்கள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். பெரும் அளவிலான பாதிப்பு தவிர்ப்பு அந்த சிறு படகுக்குள் 350 … Read more

கள ஆய்வில் முதலமைச்சர்: மார்ச் 5, 6ந்தேதிகளில் மதுரை உள்பட 5 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம்..

சென்னை: கள ஆய்வில் முதலமைச்சர்  திட்டத்தின் அடுத்த நடவடிக்கையாக, மார்ச் 5,6 தேதிகளில் மதுரை உள்பட 5 மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. “மக்களுக்காகத்தான் அரசு! மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான் நல்லரசு! அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளை நாடி வரும் மக்கள் மனநிறைவுடன் திரும்பிச் செல்லும் வகையில் பணியாற்ற வேண்டியது அரசின் அங்கமாக இருக்கும் ஒவ்வொருவரின் கடமை. அதை உறுதிப்படுத்த நான் மேற்கொள்ளும் ஆய்வுகள் தொடரும்” என ஏற்கெனவே தெரிவித்திருந்தார்கள். மேலும், கள … Read more

புறநகர் ரயில்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகளை பெற இனி ஸ்மார்ட் கார்டு தேவையில்லை: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: புறநகர் ரயில்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகளை பெற இனி ஸ்மார்ட் கார்டு தேவையில்லை என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள தானியங்கி டிக்கெட் இயந்திரங்களில் புறநகர் ரயில் டிக்கெட்டுகளை பெறலாம். UPI செயலியை பதிவிறக்கம் செய்து QR கோட் மூலம் செல்போனில் டிக்கெட் கட்டணத்தை செலுத்து வசதி. மேலும், தெற்கு ரயில்வேயின் 6 கோட்டங்களிலும் 254 மேம்படுத்தப்பட்ட தானியங்கி டிக்கெட் மிஷின்களை ஏப்ரலுக்குள் நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.   

இந்தியா – சிங்கப்பூர் இடையே யு.பி.ஐ., பண பரிவர்த்தனை: துவக்கி வைத்தார் பிரதமர் மோடி| India-Singapore UPI, business transaction: Prime Minister Modi inaugurated

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: இந்தியா -சிங்கப்பூர் இடையேயான யு.பி.ஐ., பண பரிவர்த்தனை முறையை இன்று(பிப்.,21) பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக துவக்கி வைத்தார். எளிதாக பணம் பெறுவதற்கு, செலுத்துவதற்கு மத்திய அரசு அறிமுகப்படுத்திய யு.பி.ஐ. முறை வெற்றிகரமான பணபரிவர்த்தனை சேவை அமைப்பாக உருவெடுத்துள்ளது. இதனை என்.பி.சி.ஐ எனப்படும் தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற ஒழுங்குபடுத்தும் அமைப்பு கண்காணித்து வருகிறது. பல்வேறு வங்கி கணக்குகளை ஒரே செயலி மூலம் பரிவர்த்தனைக்கு … Read more

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எதிர்க்க காங்கிரசும், பிற கட்சிகளும் விட்டுக்கொடுத்து செயல்பட வேண்டும் ப.சிதம்பரம் அறிவுறுத்தல்

புதுடெல்லி, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எதிர்கொள்ளும் வகையில் எதிர்க்கட்சி கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை ஏற்குமா? என கேட்கப்பட்டது. அதற்கு ப.சிதம்பரம் பதில் அளித்து கூறியதாவது:- நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எதிர்கொள்வதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்ட முன்னணியை உருவாக்க வேண்டும் என்ற உணர்வு அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு கட்சிக்கும் அதன் சொந்த பலம் உள்ளது. அதன் … Read more

“முப்பெரும் விழா; மாவட்டம் டு கிளை நிர்வாகிகள் நியமனம்" – பன்னீர்செல்வத்தின் திட்டம்தான் என்ன?!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் தனது சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளர் செந்தில் முருகனை வாபஸ் பெற்ற பன்னீர், இரட்டை இலைக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப் போவதாக அறிவித்தார். அதற்காக பன்னீர் தரப்பு சமர்பித்த நட்சத்திர பேச்சாளர் பட்டியலை நிராகரித்து ஷாக் கொடுத்தது தேர்தல் ஆணையம். தமிழ்நாட்டில் உள்ள மொத்த கட்சியும் ஈரோடு இடைத்தேர்தலில் தீயாய் சுற்றிவந்த நேரத்தில், கடந்த இரண்டு வார காலமாக அரசியல் முடக்கத்தை சந்தித்தது பன்னீர் தரப்பு. பன்னீர்செல்வம் இந்நிலையில்தான், சென்னையில் உள்ள தனியார் … Read more

இன்னும் 5 மாதங்களில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000..! ஈரோடு பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் தகவல்..

ஈரோடு: திமுகவின் தேர்தல் அறிக்கையின் முக்கியமான அறிவிப்பான குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் 5 மாத காலத்திற்குள் செயல்படுத்தப்படும் என ஈரோடு கிழக்கு தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்கு வேட்டை யாடிய  அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற போது திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை, பால் விலை … Read more

திண்டுக்கல் மறவப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் 12 பேர் காயம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே மறவப்பட்டியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 12 பேர் காயமடைந்தனர். புனித அந்தோனியார் கோயில் திருவிழாவை ஒட்டி ஜல்லிகட்டுப் போட்டி நடைபெற்றுவருகிறது.

மதுபான கொள்கை வழக்கில் ஆஜராக சிசோடியாவுக்கு சி.பி.ஐ., நோட்டீஸ்| CBI issues notice to Sisodia to appear in liquor policy case

புதுடில்லி: புதுடில்லியில் மதுபானக் கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கை, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. மதுபான வியாபாரிகளுக்கு உரிமம் வழங்கும் இந்த புதிய கொள்கை குறிப்பிட்ட சில வியாபாரிகளுக்கு சாதகமாக இருப்பதாகவும், இதில், பல கோடி ரூபாய் ஊழல் நடந்து உள்ளதாகவும், சி.பி.ஐ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த முறைகேட்டில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா உள்ளிட்ட அரசியல்வாதிகள், விஜய் நம்பியார், அபிஷேக் உள்ளிட்ட தொழில் அதிபர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த விவகாரம் சர்ச்சையை … Read more