இரட்டை இலை வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு; இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு கூறுவதென்ன?!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் காரணமாக உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியின் இடையீட்டு மனு அவசர அவசரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. அதில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தேர்தல் ஆணையம் நேற்று பதிலளித்திருந்த நிலையில், இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. உச்ச நீதிமன்றம் உத்தரவு இதில் எடப்பாடி பழனிசாமி தரப்பு, ஓ.பி.எஸ் தரப்பு, தேர்தல் ஆணையத்தின் வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், `வேட்பாளர் தேர்வை அ.தி.மு.க பொதுக்குழு முடிவுசெய்யலாம். ஓ.பி.எஸ், பிரபாகர், … Read more

ராணுவத்தை தயார் நிலையில் இருக்கும்படி சீன ஜனாதிபதி ஜி உத்தரவு: அம்பலமாகும் பின்னணி

எதிர்வரும் 2027ம் ஆண்டுக்குள் தைவான் மீது படையெடுப்பதற்கு தயாராக இருக்குமாறு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தனது ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார் என அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார். தைவானை ஆக்கிரமிக்க  தைவான் மீதான சீன ஜனாதிபதியின் நோக்கத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் வில்லியம் பர்ன்ஸ் தெரிவித்துள்ளார். சிஐஏ இயக்குனரான வில்லியம் பர்ன்ஸ் தெரிவிக்கையில், நான்கு ஆண்டுகளில் தைவானை ஆக்கிரமிக்க தயாராக இருக்குமாறு தனது இராணுவத்திற்கு ஜி உத்தரவிட்டுள்ளார் என்றார். @getty இதனால் ஜனாதிபதி ஜி 2027ல் … Read more

ஈரோட்டில் தனியார் விடுதியில் தங்கள் தரப்பு நிர்வாகிகளுடன் பழனிசாமி ஆலோசனை

ஈரோடு: ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் தங்கள் தரப்பு நிர்வாகிகளுடன் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, எம்.சி.சம்பத் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் தென்னரசு ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாகவும், உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

பிரித்தானிய மகாராணியாரைத் தாக்க முயன்றது உண்மைதான்: ஒப்புக்கொண்டுள்ள இந்திய வம்சாவளி இளைஞர்

பிரித்தானிய மகாராணியாரின் அரண்மனை வளாகத்துக்குள் நுழைந்த இந்திய வம்சாவளியினர் ஒருவர், நான் ராணியைக் கொல்ல வந்திருக்கிறேன் என்று காவலர்களிடம் கூறிய விடயம் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். விண்ட்சர் மாளிகைக்குள் வில் அம்புடன் நுழைந்த நபர் 2021ஆம் ஆண்டு, கிறிஸ்துமஸ் தினத்தன்று, பிரித்தானிய மகாராணியாரின் விண்ட்சர் மாளிகைக்குள் வில் அம்புடன் நுழைந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். கைவிலங்கிடப்படும் முன், அரண்மனைக் காவலர்களிடம், நான் ராணியைக் கொல்ல வந்திருக்கிறேன் என்று கூறினாராம் அவர். விசாரணையில், பல்பொருள் அங்காடி ஒன்றில் பணியாற்றிவந்த … Read more

தமிழக ரயில் திட்டங்களுக்கு 7 மடங்குக்கும் அதிகமாக ரூ.6,080 கோடி ஓதுக்கீடு: அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

டெல்லி: தமிழக ரயில் திட்டங்களுக்கு 7 மடங்குக்கும் அதிகமாக ரூ.6,080 கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக ரயில் திட்டங்களுக்கு 2009-14 வரை ரூ.879 கோடி நிதி ஒதுக்கியதாக காணொலியில் அஸ்வினி வைஷ்ணவ் பேசியுள்ளார். ஜூனில் பாம்பன் பால வேலைகள் முடிந்து மீண்டும் ரயில் சேவை தொடங்கப்படும் என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

வேலையில்லா திண்டாட்டம் நிலவும் சூழல்… நூறு நாள் வேலை நிதியை குறைக்க நினைப்பது நியாயமா?

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் (MGNREGA) – 2005 -ன் செயல் திறனை ஆய்வு செய்யவும் அதனை மறுசீரமைக்கவும், மத்திய அரசு, ஊரக வளர்ச்சித் துறையின் முன்னாள் செயலாளர் மற்றும் பிரதமரின் ஆலோசகரான அமர்ஜீத் சின்ஹா தலைமையில் குழுவொன்றை அமைத்தது. இதைத் தொடர்ந்து வந்த ஊடகக் செய்திகளிலிருந்து, திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திப் பொதுச் சொத்துகளை உருவாக்கியுள்ள கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு நிதியைக் குறைக்கவும் பீகார் போன்ற ஏழ்மையான … Read more

புடினின் சிவப்பு கோடு மீறப்படும்… மாஸ்கோ மீதான தாக்குதல் உறுதி: ரஷ்யாவில் பரபரப்பு

உச்சகட்ட பாதுகாப்பு கொண்ட விளாடிமிர் புடினின் மாஸ்கோ அரண் தாக்குதலுக்கு இலக்காகும் வாய்ப்புகள் அதிகரித்துவருவதாக ரஷ்யாவின் மூத்த அதிகாரி ஒருவர் அச்சம் தெரிவித்துள்ளார். திட்டமிடப்பட்ட தாக்குதலாக இருக்கும் ரஷ்யாவின் முன்னாள் துணை வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரே ஃபெடோரோவ் என்பவரே, தற்போதைய சூழல் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், விளாடிமிர் புடினின் சிவப்புக் கோடுகளில் ஒன்றைக் கடக்கும் தவிர்க்க முடியாத அச்சுறுத்தல் இதுவாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். @getty மட்டுமின்றி, உக்ரைன் மீதான தனது படையெடுப்பை முழு … Read more

அதானி விவகாரம் : எல்ஐசி மற்றும் எஸ்பிஐ கிளைகள் முன்பு பிப். 6ம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் : காங்கிரஸ்

அதானி குழும விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க பிப்ரவரி 6 ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆயுள் காப்பீட்டுக் கழக (எல்ஐசி) அலுவலகங்கள் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கிளைகள் முன்பு நாடு தழுவிய போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், மத்திய அரசு சாமானியர்களின் பணத்தை தங்கள் நெருங்கிய நண்பர்களுக்கு ஆதரவாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டினார். திங்கள்கிழமை (பிப்ரவரி 6) எல்ஐசி … Read more