கிட்டதட்ட 2 மாத சரிவில் தங்கம் விலை.. இன்று எவ்வளவு குறைஞ்சிருக்கு தெரியுமா?

தங்கம் விலையானது கடந்த அமர்வில் 2 மாத சரிவில் காணப்பட்ட நிலையில், இன்றும் சற்று தடுமாற்றத்தில் அதே லெவலில் காணப்படுகின்றது. இது பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் இன்றும் சற்று சரிவினைக் காணலாமோ என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இதற்கிடையில் இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 2 மாதத்தில் இல்லாத அளவுக்கு, 50,200 ரூபாயாகவும், இதே கிலோ வெள்ளியின் விலையானது பல வருடங்களில் இல்லாத அளவுக்கு 52,395 ரூபாயாகவும் சரிவினைக் கண்டுள்ளது. இது இன்று … Read more

MIKHAIL GORBACHEV: சோவியத் யூனியனின் கடைசி அதிபர் கோர்பசேவ் சாதித்ததும்… சறுக்கியதும்!

சோவியத் யூனியன் உடைவதற்கு முன்பு கடைசியாகத் தலைமைப் பொறுப்பிலிருந்த மிகைல் கோர்பசேவ் கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 30) அன்று காலமானார். 91 வயதான கோர்பசேவ்வின் மரணத்துக்கு ரஷ்ய அதிபர் புதின், இந்தியப் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன் தொடங்கி உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். உலக அளவில் மதிப்பு பெற்றிருக்கும் கோர்பசேவ் யார்? சோவியத் ஒன்றியத்தின் கடைசி அதிபர்! 1931-ம் ஆண்டு ரஷ்யாவிலுள்ள சிறிய கிராமத்தில் பிறந்தார் கோர்பசேவ். மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர், … Read more

பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், இன்று தீர்ப்பு

சென்னை: அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது. அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம். துரைசாமி, சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தனித்தனியாக மனுக்கள் … Read more

அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்த பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, சுந்தர், மோகன் அமர்வு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. 

என்னாது விநாயகருக்கு ஆதார் கார்டா?.. \"அலற\" வைக்கும் அட்ரஸ்.. எப்போ பிறந்தாரு தெரியுமா?

News oi-Vishnupriya R ராஞ்சி: விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆதார் அட்டை வடிவில் விநாயகருக்கு பேனர் வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாகக் நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது. வரும் ஞாயிற்றுக்கிழமை விநாயகர் விஜர்சன ஊர்வலம் நடத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலைகள் சிறியது முதல் பெரிய சைஸ்களால் ஆனது வரை விற்பனை செய்யப்படும். இதில் அச்சு பிள்ளையார், பிளாஸ்டர் ஆப் பாரிஸில் செய்யப்படும் பிள்ளையார், விக்கிரகம் உள்ளிட்டவை விற்பனையாகும். கொரோனா … Read more

41 ஆயிரம் கியூபிக் மீட்டர் மணல் அகற்ற திட்டம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுச்சேரி: புதுச்சேரி தேங்காய்த்திட்டில் உள்ள மீன்பிடி துறைமுகம் கடந்த 15.10.2003ல் திறக்கப்பட்டது. இங்கு மீன் ஏலக்கூடம், படகு பழுது பார்க்கும் தளம், மீனவர் தகவல் மையம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. படகுகள் சேதம் இந்த துறைமுகத்தில் இருந்து, 18 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டிற்கு 40 ஆயிரம் மெட்ரிக் டன் மீன் உற்பத்தியை இந்த துறைமுகம் அளித்து வருகிறது.சரியான திட்டமிடல் … Read more

இன்று பங்கு சந்தையின் போக்கு எப்படியிருக்கும்.. 10 கவனிக்க வேண்டிய விஷயங்கள்.. கவனமா இருங்க!

கடந்த அமர்வில் இந்திய சந்தைகள் சற்று சரிவில் முடிவடைந்தன. குறிப்பாக சென்செக்ஸ் 770 புள்ளிகள் சரிந்து, 58,767 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 216 புள்ளிகள் குறைந்து, 17,543 புள்ளிகளாகவும் இருந்தது. குறிப்பாக கச்சா எண்ணெய் விலை கணிசமான சரிவினைக் கண்டிருந்தாலும், ஐடி பங்குகள், மெட்டல்ஸ், பார்மா, எஃப் எம் சி ஜி, ஆயில் & கேஸ், நிதித்துறை உள்ளிட்ட பங்குகள் சரிவில் காணப்பட்டன. இதன் காரணமாக சந்தையானது அழுத்தத்தில் காணப்பட்டது. எனினும் தினசரி கேண்டில் பேட்டர்னில் சற்று … Read more

போதை பொருள் பயன்பாடு அதிகரிக்க மத்திய அரசே காரணம்: அமைச்சர் குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் போதை பொருள் பயன்பாடு அதிகரிக்க மத்திய அரசே காரணம் என்று அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், போதைப் பொருட்கள் வெளிநாட்டில் இருந்துதான் இங்கே இறக்குமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக குஜராத்தில் இருக்கிற முந்த்ரா துறைமுகம்தான் இதில் நம்பர் ஒன். அங்குதான் அதிகமாக கடத்தல் நடைபெற்று கொண்டிருக்கிறது. இவைகளை எல்லாம் தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் பலமுறை சுட்டிக்காட்டி இருக்கிறார் என்று தெரிவித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கேரளா பயணம்!

சென்னை: இன்று காலை 11.30 மணியளவில் சென்னையிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரளா பயணம் மேற்கொள்ள உள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து அவருடன் முல்லை பெரியாறு, சிறுவாணி, நெய்யாறு உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரி: “மதுபான தொழிற்சாலை விவகாரத்தில் முறைகேடு” – சிபிஐ விசாரணை கேட்கும் காங்கிரஸ்

புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதுச்சேரி மாநிலத்தில் மதுபான தொழிற்சாலைகளுக்கு அரசு பூர்வாங்க அனுமதி அளித்துள்ளதாக தெரிகிறது. பெரிய மதுபான தொழிற்சாலைகள் கொண்டுவருவதற்கு முகாந்திரம் இல்லை. அதனால் புதுச்சேரி இளைஞர்கள் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும் என தெரியவில்லை. சட்டசபையில் அதற்கான பதில் கிடைக்கும் என எதிர்பார்த்தோம், ஆனால் கிடைக்கவில்லை. புதுச்சேரியில் போதிய அளவு மதுபான ஆலைகள் இயங்கி வருகிறது. இதில் உற்பத்தியாகும் மதுவை குடித்து ஏற்கனவே மக்கள் மயக்கநிலையில்தான் … Read more