தலைப்பு செய்திகள்
பிரித்தானியாவில் 92 வயது மனைவியை கொன்ற 91 வயது முதியவர்!
பிரித்தானியாவில் 91 வயது முதியவர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். குடியிருப்பில் சடலமாக கிடந்த மூதாட்டி Weston-super-Mare நகரைச் சேர்ந்தவர் ஜான் வுட்பிரிஜிட்ஜ்(91). இவரது 92 வயது மனைவி அன்னே அவர்களுக்கு சொந்தமான இடத்தில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அன்னேவின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். @Getty அப்போது வுட்பிரிஜிட்ஜ் தான் அவரது மனைவியை கொன்றுள்ளார் என்று குற்றம்சாட்டப்பட்டது. திங்கட்கிழமை காலையில் அன்னே … Read more
புதுடில்லி சிறைகளில் 348 மொபைல் போன்கள் பறிமுதல்| 348 mobile phones seized in New Delhi jails
புதுடில்லி, புதுடில்லி சிறைகளில் உள்ள சிறைவாசிகளிடம் இருந்து, கடந்த இரண்டரை மாதங்களில் ௩௪௮ ‘மொபைல் போன்’கள் பறிமுதல் செய்யப்பட்டுஉள்ளன. இது குறித்து, சிறை துறைத் தலைவர் சஞ்சய் பனிவால் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுடில்லியில் உள்ள மூன்றாம் எண் சிறையில், நேற்று முன்தினம் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில், ௧௮ மொபைல் போன்கள் மற்றும் அவற்றுக் குரிய ‘சார்ஜர்’கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த இரண்டரை மாதங்களில் சிறைக்குள் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், மொத்தம் ௩௪௮ மொபைல் போன்கள் … Read more
03. 02.23 | Daily Horoscope | Today Rasi Palan | February – 03 | வெள்ளிக்கிழமை | இன்றைய ராசிபலன் |
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link
வீறுநடை போட்டு வந்து இறுதிப்போட்டியில் தோற்ற இந்திய அணி! முத்தரப்பு தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா
மகளிர் இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முத்தரப்பு டி20 தொடரை தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியது. இறுதிப் போட்டி தென் ஆப்பிரிக்காவில் மகளிர் முத்தரப்பு டி20 தொடர் நடந்தது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. இறுதிப்போட்டியில் இன்று இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் ஆடிய இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 109 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹர்லீன் தியோல் 46 ஓட்டங்கள் எடுத்தார். தென் … Read more
தெலுங்கானா முதல்வருக்கு ஷூ பரிசளித்து ஆந்திர முதல்வரின் சகோதரி விடுத்த சவால்| Andhra CMs sister challenges Telangana CM by gifting shoes
ஹைதராபாத், ”தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் என்னுடன் பாத யாத்திரை வந்து மக்களின் குறைகளை கேட்க தயாரா?” என, சவால் விட்டுள்ள ஒய்.எஸ்.ஆர்., தெலுங்கானா கட்சி தலைவர் ஷர்மிளா, அவருக்கு ஒரு ஜோடி ஷூக்களை பரிசாக அளித்துள்ளார். தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில், பாரத் ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி, ஒய்.எஸ்.ஆர்., தெலுங்கானா என்ற தனிக்கட்சியை நடத்தி வருகிறார். ஜெகன் மோகனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு … Read more
சென்னை: `தங்கை இப்படி வாழ்வது அவமானமாக இருந்தது' – கொலை வழக்கில் கைதான அண்ணன் `பகீர்' தகவல்!
சென்னை, புழல் லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் சுதாசந்தர் (22). இவர் தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்தார். இந்த நிலையில் சுதா சந்தரும் அவருக்குத் தெரிந்த இளம்பெண் ஒருவரும், கடந்த 31.1.2023-ம் தேதி பைக்கில் விநாயகபுரம் பகுதியில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது பைக்கை வழிமறித்து, ஆட்டோவிலிருந்து இறங்கிய சிலர், கண்இமைக்கும் நேரத்தில் சுதாசந்தரை வெட்டிச் சாய்த்து விட்டு தப்பி ஓடினர். இந்தச் சம்பவத்தை பார்த்த இளம்பெண் அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக புழல் காவல் நிலையத்துக்கு தகவல் … Read more
85 வயது முதியவரை காதல் திருமணம் செய்த 24 வயது இளம்பெண்!
அமெரிக்காவில் 24 வயது பெண்ணொருவர் 85 வயது முதியவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். 61 வயது வித்தியாசம் மிஸிஸிப்பியின் ஸ்டார்வில்லேவைச் சேர்ந்த இளம் பெண் மிராக்கிள் போக்(24). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு சலவைக் கடையில் பணிபுரிந்துள்ளார். அப்போது சார்லஸ் போக் (85) என்ற நபரை சந்தித்துள்ளார். இருவரும் நட்பாக பழகத் தொடங்கியுள்ளனர். தனது தாத்தாவை விட சார்லஸ் 10 வயது மூத்தவர் என்பதை மிராக்கிள் பின்னாளில் அறிந்து கொண்டார். இருவருக்கும் வயது வித்தியாசம் 61 ஆகும். … Read more
விதிகளை மீறியதாக 36,7000 பயனர்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தகவல்…
டெல்லி: விதிகளை மீறியதாக 36,7000 பயனர்களின் கணக்குகள் 2022 டிசம்பர் மாதம் மட்டும் முடக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தகவல் வளியிட்டு உள்ளது. இந்தியாவில் அதிக பயனர்களைக்கொண்ட சமூக வலைதளங்களில் வாட்ஸ்அப் முதன்மை சமூக வலைதளமாக செயல்பட்டு வருகிறது. 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனர் களை கொண்டுள்ளது. இதுபோன்ற சமூக வலைதளங்கள் மூலம் வதந்திகள் பரப்பப்பட்டு, தேவையற்ற பிரச்சினைகள் எழுவதால், சமூக வலைதளங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை இந்திய அரசு அறிவித்து உள்ளது. அதன்படி, சமூக வலைத்தளங்கள் ஒவ்வொரு மாதமும் … Read more
இன்று இலங்கை செல்கிறார் அமைச்சர் முரளிதரன்
ஒன்றிய இணை அமைச்சர் முரளிதரன் 2 நாள் பயணமாக இன்று இலங்கை செல்கிறார். அப்போது பிரதமர் ரணில், வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரே ஆகியோரை சந்தித்து பேச உள்ளார். மேலும் இலங்கையின் 75 வது சுதந்திர தினவிழாவில் பங்கேற்க உள்ளார்.