புதுடில்லி, புதுடில்லி சிறைகளில் உள்ள சிறைவாசிகளிடம் இருந்து, கடந்த இரண்டரை மாதங்களில் ௩௪௮ ‘மொபைல் போன்’கள் பறிமுதல் செய்யப்பட்டுஉள்ளன.
இது குறித்து, சிறை துறைத் தலைவர் சஞ்சய் பனிவால் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுடில்லியில் உள்ள மூன்றாம் எண் சிறையில், நேற்று முன்தினம் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில், ௧௮ மொபைல் போன்கள் மற்றும் அவற்றுக் குரிய ‘சார்ஜர்’கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த இரண்டரை மாதங்களில் சிறைக்குள் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், மொத்தம் ௩௪௮ மொபைல் போன்கள் மற்றும் சார்ஜர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சிறைக்குள் தகவல் பரிமாற்றம் வளர்ந்து வருவதை அறிந்த சிறை கண்காணிப்பாளர்கள், இந்த அதிரடி சோதனைகளை நடத்தினர். இது தீவிரமாக தொடரும். இதன் வாயிலாக, சிறைவாசிகள் தக்க பாடம் படித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement