தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே மின்கம்பி உரசி யானை உயிரிழந்தது தொடர்பாக மின்வாரியம் மீது வழக்குப் பதிவு

தருமபுரி: கம்பைநல்லூர் அருகே மின்கம்பி உரசி யானை உயிரிழந்தது தொடர்பாக மின்வாரியம் மீது வழக்குப் பதிவு போடப்பட்டுள்ளது. யானை உயிரிழப்பு தொடர்பாக மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மீதும் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.உணவு தேடி கெலவள்ளி கிராமத்தில் புகுந்த யானை தாழ்வாக சென்ற மின்கம்பி மீது உரசியதில் உயிரிழந்தது

மும்பை – ஆமதாபாத் ‛புல்லட் ரயில் : புதிய ஒப்பந்தம் கையெழுத்து| Mumbai-Ahmedabad Bullet Train: New contract signed

மும்பை: தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம், மும்பை ‛புல்லட்’ ரயில் திட்டத்துக்கான, புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் இருந்து மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை இடையே, புல்லட் ரயில் இயக்க திட்டமிடப்பட்டு, 2021 ஆக.,ல் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், அது நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம், ஐதராபாத்தைச் சேர்ந்த மேகா பொறியியல் மற்றும் உட்கட்டமைப்பு நிறுவனம், ஹிந்துஸ்தான் கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து, மும்பை பாந்த்ரா குர்லா வளாகத்தில், புல்லட் … Read more

பெரம்பூர் நகைக்கடை கொள்ளையில் திடீர் திருப்பம்; நகையை உருக்கிப் பணமாகிய இருவர் சிக்கியது எப்படி?!

சென்னை, பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்குச் சொந்தமான நகைக்கடையில் ஷட்டரின் வெல்டிங் மெஷினில் துளையிட்டு, கடையின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 6 கோடி ரூபாய் மதிப்பிலான ஒன்பது கிலோ தங்க நகைகள், 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைரங்கள் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. கடையிலிருந்த கண்காணிப்பு கேமராவின் ஹார்டு டிஸ்க்கும் திருடப்பட்டிருந்த நிலையில், ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் கொள்ளையர்களைத் தேடி வந்தனர். கொள்ளையர்கள் இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் பெங்களூரூவிலுள்ள … Read more

கோழிக்கால்களை சாப்பிடச் சொன்ன அரசு., கோபமடைந்த குடிமக்கள்

எகிப்தில் உணவு நெருக்கடியை சமாளிக்க கோழிக்கால்களை சாப்பிடுங்கள் என்று கூறிய அரசாங்கத்தின் மீது எகிப்திய குடிமக்கள் கோபமடைந்துள்ளனர். கோழிக்கால்களை சாப்பிடுங்கள் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்து வருவதால், கோழிக்கால்களை சாப்பிடுமாறு மக்களைக் கேட்டுக்கொண்ட எகிப்திய அரசின் உத்தரவு, மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எகிப்து கடந்த ஐந்தாண்டுகளில் மிக மோசமான பொருளாதார ஸ்திரமின்மையை எதிர்கொண்டுள்ளது. அதன் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 30 சதவீதத்திற்கு மேல் சென்றது, இதனால் மக்கள் … Read more

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்குத் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்! தேடல் குழு அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்குத் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அதற்காக அமைக்கப்பட்டுள்ள  தேடல் குழு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே பல்கலைக் துணைவேந்தராக உள்ள  சுதா சேஷையனின் பதவிக்காலம் கடந்த டிசம்பர் மாதம் 30ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்ய அறிவிப்பாணை வெளியாகி உள்ளது. சென்னை கிண்டியில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவி வகித்த சுதா சேஷையன் அவர்களின் … Read more

காங்கேயத்தில் ஓட்டலை சூறையாடி கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தில் அதிமுக நிர்வாகிகள் இருவர் நீதிமன்றத்தில் சரண்

காங்கேயம்: காங்கேயத்தில் ஓட்டலை சூறையாடி கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தில் அதிமுக நிர்வாகிகள் இருவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். கடந்த 13-ம் தேதி இரவு வீரணம்பாளையத்தை சேர்ந்த பெரியசாமியின் ஓட்டலை 20-க்கும் மேற்பட்ட முகமூடி கும்பல் ஓட்டலை சூறையாடி உரிமையாளர் பெரியசாமியை குடும்பத்துடன் கொல்ல முயன்ற சிசிடிவி காட்சியுடன் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஓட்டல் சூறையாடப்பட்ட சிசிடிவி காட்சி வெளியானதை அடுத்து அதிமுக நிர்வாகிகள் இருவர் காங்கேயம் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.

தென்காசி: நடுரோட்டில் அமைக்கப்பட்ட வாருகால் – அதிகாரிகள் மெத்தனத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி!

தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஒன்றியத்தில் நாகல்குளம் கிராமம் இருக்கிறது. இந்தக் கிராமத்தின் தலைவராக கோமதி நாச்சியார் செயல்பட்டு வருகிறார். அங்கிருக்கும் 4-வது வார்டில் கடந்த வாரத்தில் வாருகால் அமைத்திருக்கின்றனர். பேவர் பிளாக் சாலையின் நடுவில் வாருகால் அமைக்கப்பட்டிருப்பதால் சாலையைப் பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். நாகல்குளம் கிராமம் வார்டு உறுப்பினரான ஹெலன் அனுஷியா என்பவருக்குத் தெரியாமலே இந்த வாருகால் சாலையின் நடுவில் அமைக்கப்பட்டதற்கு அவரும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். தனக்குத் தெரியாமலே இரண்டே முக்கால் லட்சம் ரூபாய் … Read more

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங்கை விட அதிக IQ உடைய இந்திய வம்சாவளி சிறுமி!

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோரை விட தனக்கு அதிக நுண்ணறிவு (IQ) இருப்பதைக் கண்டறிந்த இந்திய வம்சாவளி சிறுமி மென்சாவில்(mensa) உறுப்பினராக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளார். அதிக நுண்ணறிவு உலகின் மிகப் பழமையான மற்றும் புகழ்பெற்ற IQ சமூகமான மென்சாவுடன் தேர்வில் அன்விதா பாட்டீலுக்கு(Anwita patel) 11 வயது தான் ஆகியிருந்தது. அன்விதாவின் தாயான அனு ஒரு கணிதவியலாளராவார், அவர் கணிதத்தில் பிஎச்டி பட்டம் பெற்றவர் மற்றும் அவரது தந்தை ஒரு NHS ஆலோசகர் ஆவார். … Read more

நேற்று இளைஞர் தீக்குளிக்க முயற்சி – இன்று விவசாயி கோவணத்துடன் ஆட்சியர் அலுவலகத்தில் புகார்! இது சேலம் சம்பவம்…

சேலம்:  சேலத்தில் நேற்று பொறியியல் பட்டதாரியான இளைஙர் ஒருவர்  ஆட்சியர் அலுவலகம் வந்து, தனது புகார்மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி  தீக்குளிக்க முயற்சித்த  நிலையில், இன்று  இன்று விவசாயி ஒருவர், சொத்து பிரச்சினை குறித்துநடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  கோவணத்துடன்  தனது குடும்பத்தினருடன் ஆட்சியர் அலுவலகம் வருகை தந்தார்.  இரு செயல்களின் பின்னணியிலும் திமுகவினர் உள்ளது குறிப்பிடத்தக்கது. சேலம் மாவட்டம் அரிசிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் என்ற பொறியாளர்,  நேற்று  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். … Read more

ஈரோட்டில் மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த மின்வாரிய ஊழியர் கைது

ஈரோடு: ஈரோட்டில் மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த மின்வாரிய ஊழியரை கைது செய்தனர். 25 பேரிடம் ரூ.1.25 கோடி பெற்று மோசடி செய்த பவானி சிங்கம்பேட்டையை சேர்ந்த மின்வாரிய ஊழியர் மூர்த்தியை கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் மூர்த்தியை ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது.