வேளாண் பட்ஜெட் 2023-24 குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன் கருத்து…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில்  இன்று தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்lடது. மிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்  பச்சை நிற துண்டு அணிந்து  தமிழக சட்டப்பேரவையில்  3வது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப் பட்டு உள்ளன. வேளாண் பட்ஜெட் குறித்து செய்தியளார்களிடம் பேசிய  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “வேளாண் பெருமக்களுக்கு பெரிய திட்டங்கள் உள்ளது. பல துறைகளைச் சேர்த்து 2 மணி நேர பட்ஜெட்டை அமைச்சர் வாசித்து … Read more

தமிழ்நாட்டில் புலம் பெயர் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக வதந்தி பரப்பிய பீகாரைச் சேர்ந்தவர் கைது

திருப்பூர்: தமிழ்நாட்டில் புலம் பெயர் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக வதந்தி பரப்பிய பீகாரைச் சேர்ந்த உபேந்திர ஷானி என்பவர் திருப்பூர் போலீசாரால் கைது செய்துள்ளனர். பீகாரின் ரத்வாரா பகுதியில் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்து, திருப்பூர் அழைத்துவந்து சிறையில் அடைத்தனர்.

ஜப்பான் பிரதமருக்கு 'பானி பூரி ட்ரீட்' கொடுத்த பிரதமர் மோடி – வைரலாகும் வீடியோ

புதுடெல்லி, இந்தியா வருகை தந்திருந்த ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவிற்கு பானிப்பூரியை ருசித்து சாப்பிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. டெல்லியில் உள்ள புத்த ஜெயந்தி பூங்காவில் பிரதமர் மோடியுடன் ஜப்பான் பிரதமர் நேரம் செலவிட்டார். அப்போது ஜப்பான் பிரதமருக்கு இந்தியாவின் உணவு வகைகளான ப்ரைட் இட்லிஸ், மாம்பழ ஜூஸ் மற்றும் பானிப்பூரி உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இதில் ஜப்பான் பிரதமர் பானிப்பூரியை மிகவும் விரும்பி சாப்பிடும் வீடியோ தான் தற்போது நெட்டிசன்களின் லைக்ஸ்களை குவித்து வருகிறது. தினத்தந்தி … Read more

திருமணம் செய்வதாக ஆசைக்காட்டி இளைஞரிடம் ரூ.2.23 லட்சம் மோசடி! – இளம்பெண்களைக் கைதுசெய்த போலீஸ்

தஞ்சாவூரில் இளைஞரிடம் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, ரூ.2.23 லட்சம் மோசடி செய்த இரண்டு பெண்கள் போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தஞ்சாவூர் அருகேயுள்ள ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்தவர் 28 வயது இளைஞர். எம்.பி.ஏ படித்திருக்கும் இவர், வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முயற்சி செய்துவந்திருக்கிறார். இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இவரது வாட்ஸ்அப் நம்பருக்கு பெண் ஒருவர் போன் செய்திருக்கிறார். அப்போது அந்த இளைஞர் ராங் நம்பர் எனக் கூறி போனை கட் செய்துவிட்டார். திருமணம் … Read more

டெக்சாஸில் மீண்டும் பள்ளியில் துப்பாக்கிச்சூடு: மாணவர் கைது

டெக்சாஸில் மீண்டும் பாடசாலை ஒன்றில் மாணவர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாடசாலையில் துப்பாக்கிச்சூடு திங்கட்கிழமை காலை டல்லாஸ் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு மாணவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். இதற்கிடையில், கொலைக் குற்றச்சாட்டில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் மற்றும் பள்ளி மாவட்ட அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையின்படி, அதிகாலை 6:55 மணியளவில் ஆர்லிங்டனின் புறநகர்ப் பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் துப்பாக்கிச்சூடு தொடங்கியது. … Read more

சாலையில் நாற்று நட்டு பெண்கள் நூதன போரட்டம்! இது வேலூர் மாவட்ட சம்பவம்…

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் பராமரிக்கப்படாமல் சேரும்  சகதியுமாக காணப்படும்  சாலையில் அந்த பகுதி  பெண்கள் நாற்று நட்டு நூதன போரட்டம் நடத்தினர். இது அம்மாவட்ட ஆட்சியாயர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த விநாயகபுரம் பகுதியில் வேலூர் காட்பாடி சாலை இணைக்கும் கூட்ரோடு பகுதியில் பாலம் கட்டுவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால்  பாலம் கட்டும் பணிகள் ஆமை வேகத்தில்  நடைபெற்று வருகின்றன. இதனால், அந்த பகுதியில் வாகனம் செல்லும் … Read more

சென்னை வானகரத்தில் செல்போன் செயலி மூலம் ஐ.டி. ஊழியரிடம் ரூ.5 லட்சம் மோசடி: போலீசார் விசாரணை.

சென்னை: சென்னை வானகரத்தில் செல்போன் செயலி மூலம் ஐ.டி. ஊழியரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக புகார். ரூ.5 லட்சம் முதலீடு செய்து ரூ.30 லட்சம் லாபம் ஈட்டலாம் எனக் கூறி மோசடி செய்த கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு. மோசடி கும்பலிடம் பணத்தை இழந்த ஐ.டி. ஊழியர் ரகுராம் அளித்த புகாரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தப்பி ஓடிய நபர்களை விட்டு விடுகின்றனர்; எதிர்க்கட்சியினர் மீது சி.பி.ஐ. பாய்கிறது: காங்கிரஸ் காட்டம்

புதுடெல்லி, ரூ.13,500 கோடி பணமோசடி வழக்கில் சர்வதேச போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் வைர வியாபாரி மெகுல் சோக்சி. இந்நிலையில், அவருக்கு எதிராக பிறப்பித்த ரெட்-கார்னர் நோட்டீஸ் உத்தரவை இண்டர்போல் நீக்கியுள்ளது. எனினும், இந்தியாவில் அவருக்கு எதிராக நிலுவையில் உள்ள குற்ற வழக்கை இந்த நடவடிக்கை எந்த வகையிலும் பாதிக்காது. பஞ்சாப் தேசிய வங்கி பணமோசடி வழக்கு விசாரணையில், எந்த பாதிப்பும் இதனால் ஏற்படாது. அந்த வழக்கு தொடர்ந்து நடைபெறும் என கூறப்படுகிறது. ரெட்-கார்னர் நோட்டீசானது, சோக்சி வேறு … Read more

சொந்த வாகனங்களை பயன்படுத்துவதாக இல்லை… அரசாங்கத்தை அறிவித்த பிரித்தானியர்கள்: வெளிவரும் பின்னணி

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான சாரதிகள் தங்கள் வாகனங்களை பயன்பாட்டில் இருந்து விலக்குவதாக வெளியான தகவலுக்கு, விலைவாசி உயர்வை காரணமாக கூறப்படுகிறது. SORN விண்ணப்பம் பிரித்தானியாவில் கடந்த 2022ல் மட்டும் சுமார் 2.7 மில்லியன் வாகனங்கள், இனி பயன்படுத்தப்படாது என அரசாங்கத்திடம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. @shutterstock SORN விண்ணப்பம் அளிக்கப்பட்ட வாகனங்களை எந்த அவசரத்திற்கும் சாரதிகள் பயன்படுத்த முடியாது. மட்டுமின்றி, தனிப்பட்ட பகுதியில் அந்த வாகனங்களை நிறுத்த வேண்டும். மேலும், இந்த வாகனங்களுக்கு காப்பீடு மற்றும் வரியும் … Read more