மனைவி மீது தாக்குதல்: கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மீது வழக்கு| FIR against ex-cricketer Vinod Kambli on charge of assaulting wife; police issue notice to him to record statement

மும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி, குடிபோதையில் பாத்திரத்தை தன் மீது வீசி தாக்கியதாக அவரது மனைவி ஆண்ட்ரியா போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: நேற்று முன்தினம்(பிப்.,3) நள்ளிரவில் மது போதையில் வந்த வினோத் காம்ப்ளி தன்னை தகாத வார்த்தைகளால் திட்டினார். மகன் தலையிட்டு தட்டி கேட்ட போது, சமையலறைக்கு சென்று பாத்திரத்தை எடுத்து வந்து தன் மீது வீசினார். அதில் தனக்கு காயம் ஏற்பட்டு உள்ளது எனக்கூறியுள்ளார். இதன் அடிப்படையில், பாந்த்ரா போலீசார் … Read more

ஏலத்திற்கு விடப்பட்ட மார்லன் பிராண்டோ எழுதிய பிரேக் அப் கடிதம்; விலை எவ்வளவு தெரியுமா?

‘தி மென்’ என்ற படத்தில் அறிமுகமான மார்லன் பிராண்டோ ‘எ ஸ்ட்‌‌ரீட் கார் நேம்டு டிஸையர்’, ‘ஆன் தி வாட்டர் ஃப்ரெண்ட்’ போன்ற படங்களில் நடித்து புகழின் உச்சிக்குச் சென்றவர். உலகம் முழுக்க எத்தனையோ கேங்க்ஸ்டர் படங்கள் வந்திருந்தாலும்  அவற்றுக்கெல்லாம் முன்னோடி ‘தி காட்ஃபாதர்’ திரைப்படம். அத் திரைப்படத்தில் தனது நேர்த்தியான மற்றும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் நடிகர் மார்லன் பிராண்டோ. மார்லன் பிராண்டோ 1973 ஆம் ஆண்டு நடைப்பெற்ற 45- வது ஆஸ்கர் விருது வழங்கும் … Read more

டால்பின்களுடன் நீந்தும் ஆசையில் சுறா மீனுக்கு இரையான சிறுமி

அவுஸ்திரேலியாவில் டால்பின்களுடன் நீந்திய 16 வயது சிறுமி சுறா மீன் தாக்கி கொல்லப்பட்டார். மேற்கு அவுஸ்திரேலியாவின் மாநிலத் தலைநகர் பெர்த்தில் உள்ள ஆற்றில் சுறா கடித்ததில் 16 வயது சிறுமி சனிக்கிழமை உயிரிழந்தார். பெர்த்தின் ஃப்ரீமண்டில் துறைமுகப் பகுதியில் உள்ள ஸ்வான் ஆற்றின் போக்குவரத்துப் பாலம் அருகே உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மதியம் 3:45 மணியளவில் தாக்குதல் நடந்த இடத்திற்கு அழைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். iStock & DT பலத்த காயங்களுடன் தண்ணீரிலிருந்து இழுக்கப்பட்ட சிறுமி சம்பவ … Read more

நெல் ஈரப்பதம் 19%ஆக இருந்தாலும் கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தல்

திருவாரூர்: நெல் ஈரப்பதம் 19%ஆக இருந்தாலும் கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தியுள்ளார். ஞாயிற்றுக் கிழமைகளிலும் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறந்து நெல் கொள்முதல் செய்ய அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். திருவாரூர் அருகே முதல் சேத்தியிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்து வருகிறார். நெல் அதிகம் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களின் அருகே மற்றொரு கொள்முதல் திறக்கவும் அமைச்சர் உத்தரவு அளித்துள்ளார்.

”டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை, 2.15 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிப்பு!” – அமைச்சர் சக்கரபாணி தகவல்

டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறிய மழை பெய்ததால் 2.15 லட்சம் ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர், உளுந்து உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தஞ்சாவூரில் ஆய்வுசெய்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். நெல் ஈரப்பதத்தை ஆய்வுசெய்த அமைச்சர் சக்கரபானி டெல்டா மாவட்டங்களான, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் கடந்த 1-ம் தேதி முதல் தொடர்ந்து நான்கு நாள்கள் மழை பெய்தது. பருவம் தவறிய இந்த மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன. வயலில் தேங்கிய … Read more

யாருமே இல்லையே! மகளுடன் சேர்ந்து தற்கொலை செய்த நடுத்தர வயது பெண்.. சிக்கிய கடிதம்

தமிழகத்தில் மகன் இறந்தநாளில் 37 வயதான பெண் தனது மகளுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாமி கும்பிட்டு விட்டு தற்கொலை சிவகாசியை சேர்ந்தவர் பாண்டி தேவி(37). இவரது கணவர் சாலைமுத்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களுக்கு புவனேஸ்வரி (17) என்ற மகளும், மகாராஜா என்ற மகனும் உள்ளனர். பாண்டிதேவி சித்துராஜபுரத்தில் அங்கன்வாடி பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மகன் மகாராஜா கடந்த 2022 ஜனவரி 3- ம் திகதி உடல்நிலை … Read more

தமிழ்மகன் உசேனின் சட்டவிரோத செயலுக்கு உடந்தையாக இருக்க மாட்டோம்: பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி

சென்னை: அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனின் கடிதத்தை  ஓ.பன்னீர்செல்வம் தரப்பு புறக்கணித்துள்ளது. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற உரிமை, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது என்று வைத்திலிங்கம் கூறியுள்ளார். நடுநிலை தவறி ஒருசிலரின் கைப்பாவையாக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் செயல்பட்டுள்ளார். தமிழ்மகன் உசேனின் சட்டவிரோத செயலுக்கு உடந்தையாக இருக்க மாட்டோம் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

உ.பி: "என்னை மணக்காவிட்டால் வன்கொடுமை வழக்கு பதிவுசெய்வேன்" – மிரட்டிய காதலி, உயிரை மாய்த்த இளைஞர்

உத்தரப்பிரதேச மாநிலம், மோகன்லால்கஞ்சில் நேற்று 24 வயது இளைஞர் ஒருவரின் உடல் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்திருக்கிறது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள், சஉடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை, இளைஞரின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தது. அதைத் தொடர்ந்து விசாரணையையும் மேற்கொண்டது. அதில் தற்கொலை செய்துகொண்டவர் பர்வார் பஸ்சிம் பகுதியைச் சேர்ந்த திலீப் குமார் என்பது தெரியவந்தது. மேலும், அவருக்கு கடந்த வாரம்தான் நிச்சயதார்த்தம் முடிந்தது என்றும், … Read more

கனடா வீட்டில் கிடைத்த 2 சடலங்கள்! வெளியாகும் பின்னணி

கனடாவில் வீடு ஒன்றில் இருந்து இரண்டு பேரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. 2 பேரின் சடலம் டர்ஹாம் பிராந்திய பொலிஸ் இது தொடர்பில் விசாரணை நடத்தி வருகிறது. சனிக்கிழமை மதியம் 2.15 மணிக்கு தகவலின் பேரில் பொலிசார் அங்குள்ள ஒரு வீட்டிற்கு சென்றனர். அப்போது இரண்டு ஆண்கள் சடலமாக கிடந்தனர், அவர்கள் ஏதோ அதிர்ச்சியில் பாதிக்கப்பட்டது போன்று தெரிந்தது. இந்த மரணங்கள் 2023 இல் டர்ஹாம் பிராந்தியத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது கொலைகளாக பதிவாகியுள்ளது. சாட்சிகள் இரண்டு பேரின் … Read more

திருச்சி மணப்பாறை அருகே மலையடிப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு

திருச்சி: திருச்சி மணப்பாறை அருகே மலையடிப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியில் 574 காளைகள், 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். 28 பேர் காயமடைந்துள்ளனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.