15ந்தேதிக்குள் ஆதார் எண் இணைக்காவிட்டால் மின் கட்டணம் செலுத்த இயலாது! அதிகாரிகள் தகவல்..

சென்னை: தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 15ந்தேதிவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஆதார் எண் இணைக்காதவர்கள் பிப்ரவரி 15ந்தேதிக்கு பிறகு மின் கட்டணம் கட்ட இயலாது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி கடந்த 2022ம் ஆண்டு இறுதியில் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.   தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும் தொடங்கப்பட்ட இந்த மின் இணைப்பு … Read more

சென்னை பாண்டி பஜாரில் உள்ள துணிக்கடையில் ரூ.27 லட்சம் மதிப்புள்ள பட்டு சேலைகள் கொள்ளை

சென்னை: சென்னை பாண்டி பஜாரில் உள்ள துணிக்கடையில் ரூ.27 லட்சம் மதிப்புள்ள பட்டு சேலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பிரபல துணிக்கடைகளுக்கு சொந்தமான கிடங்கில் பட்டு சேலைகள் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில், உதயசூரியன் உதிக்கலையே… உங்க உறுதியான தொண்டர்கள் எல்லாம் ஊருக்கு போயிருந்தாங்களா?| In Tamil Nadu, Udayasuriyan is rising… have all your loyal volunteers gone to town?

தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி: தமிழகத்தில் பன்னீர்செல்வம், பழனிசாமி என்ன செய்தாலும் பயனில்லை. உதயசூரியன் உதித்தபடியே தான் இருக்கும். நல்ல தலைமையில் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. சிறந்த கொள்கை உடைய, உறுதியான தொண்டர்களை கொண்ட ஆட்சி, தமிழகத்தில் நடக்கிறது. அப்ப, 2011ல் இருந்து, 10 வருஷமா தமிழகத்தில், ‘உதயசூரியன்’ உதிக்கலையே… உங்க உறுதியானதொண்டர்கள் எல்லாம் ஊருக்கு போயிருந்தாங்களா? பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அடுத்த திருமண்டங்குடியில் உள்ள … Read more

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் கட்டாயம்: மொழி சிறுபான்மையின மாணவர்களுக்கு மேலும் ஓராண்டுக்கு விலக்கு – சுப்ரீம் கோர்ட்டு உத்…

புதுடெல்லி, தமிழ்நாடு அரசு 2006-ம் ஆண்டு கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தை கொண்டுவந்ததன் வாயிலாக, அனைத்து பள்ளிகளிலும் முதல் பாடமாக தமிழ் கட்டாயமாக்கப்பட்டது. இதனால் தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது உள்ளிட்ட பிறமொழி பள்ளி மாணவர்களும் பொதுத்தேர்வில் தமிழ் தேர்வை கட்டாயம் எழுத வேண்டியுள்ளது. இதற்கு எதிராக விலக்கு கோரி தமிழ்நாடு மொழிவாரி சிறுபான்மையினர் சங்கத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு முன் … Read more

மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டம்: 15 ஆண்டுகால கிடப்பும், புத்துயிர்ப்பும் | ஓர் அலசல்

சென்னை மாநரின் மிகப்பெரிய கனவுத் திட்டமாகக் கருதப்படும், மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்துக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் குழு அனுமதி வழங்கியிருக்கிறது. இந்த நிலையில், மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டம் கடந்து வந்த பாதை, சந்தித்த தடைகள் மற்றும் திட்டத்தின் செயலாக்கம் பற்றி விரிவாகக் காண்போம். இரண்டடுக்குப் பறக்கும் சாலை மாதிரி (வெளிநாடு) தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம்: பெருகிவரும் சென்னை போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காகவும், சென்னை துறைமுகத்திலிருந்து கண்டெய்னர் … Read more

கால்பந்து வரலாற்றில் கறுப்பு தினம்! 23 உயிர்கள் பலியான துயர சம்பவம்.. 65 ஆண்டுகளுக்கு பின் நினைவுகூர்ந்த ஜேர்மன் கிளப்

65 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த விமான விபத்தில், கால்பந்து வீரர்கள் உட்பட 23 பேர் பலியான சம்பவத்தை பாயர்ன் முனிச் அணி நினைவுகூர்ந்துள்ளது. சோக சம்பவம் கடந்த 1958 ஆண்டு பிப்ரவரி 6ஆம் திகதி, புகழ்பெற்ற கிளப் அணியான மான்செஸ்டர் யுனைடெட் பஸ்பி பேப்ஸ்-யின் வீரர்கள் பயணித்த விமானம் விபத்தில் சிக்கியது. முனிச்-ரீம் விமான நிலையத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில், கால்பந்து வீரர்கள் உட்பட 23 பேர் பலியாகினர். இதனால் இந்த சோக சம்பவம் கால்பந்து வரலாற்றில் … Read more

உயர்நீதிமன்றத்தில் இன்று 5 நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஐந்து கூடுதல் நீதிபதிகள் இன்று பதவியேற்க உள்ளனர். வழக்கறிஞர்கள் விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேர் கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

திருத்தணி முருகன் கோயிலில் குரங்குகள் அட்டகாசத்தால் தரிசனம் நிறுத்தம்

சென்னை: திருத்தணி முருகன் கோயில் மூலவர் சன்னதியில் குரங்குகள் அட்டகாசத்தால் தரிசனம் ஒரு மணி நேரமாக நிறுத்தப்பட்டது. மூலவர் சன்னதியில் 30-க்கும் மேற்பட்ட குரங்குகள் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றன. மூலவர் சன்னதிக்குள் நுழைந்த குரங்குகளை விரட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியாளர் மீது கபடி வீராங்கனை பாலியல் புகார் – டெல்லி போலீஸ் விசாரணை

புதுடெல்லி, டெல்லியைச் சேர்ந்த 27 வயதான கபடி வீராங்கனை தன்னுடைய பயிற்சியாளர் ஜோகிந்தர் மீது பாலியல் புகார் அளித்து உள்ளார். டெல்லி துவாரகாவில் உள்ள பாபா அரிதாஸ்நகர் போலீஸ் நிலையத்தில் இந்த புகார் அளிக்கப்பட்டது. அதில் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்தே கபடி பயிற்சி பெற்றதாகவும், 2015-ம் ஆண்டு பயிற்சியாளர் தன்னை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துவிட்டதாகவும், அப்போது எடுக்கப்பட்ட படங்களை வெளியிடுவதாக கூறி மிரட்டியதாகவும் கூறியுள்ளார். இது மட்டுமின்றி 2018-ம் ஆண்டு தனக்கு கிடைத்த பரிசுத்தொகையில் ரூ.40 … Read more

"`பொண்ணை ரோட்டுல ஆட விட்டுட்டியா'ன்னு என் அம்மாவைக் காயப்படுத்தினாங்க!" – `ரோஜா' காவ்யா

மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற `ரோஜா’ தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. அதில் வில்லியாக நடித்து பலரது பாராட்டைப் பெற்றவர் காவ்யா. நடிகையாக மட்டுமின்றி ஆர்கெஸ்ட்ராக்களில் தற்போதுவரை பாடிக் கொண்டிருக்கிறார். இவர் ஆரம்ப காலகட்டத்தில் தொகுப்பாளினியாகவும் வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் பயணித்துக் கொண்டிருப்பவரை நம் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம். காவ்யா “சின்ன வயசில ஏதோ சொந்தக்காரங்க கல்யாணத்துல ஆடச் சொன்னாங்க. அப்படி ஆடினதைப் பார்த்துட்டு தொடர்ந்து ஆடச் சொன்னாங்க. கல்யாண வீடுகளில், கோயில் திருவிழாக்களில் கச்சேரிகளுக்குத்தான் ஆடப் போனேன். அப்ப நான் ஏழாம் வகுப்பு … Read more