பற்களை சரிசெய்வதற்காக உக்ரைனுக்கு பறந்த பிரித்தானியர்: வெளியான உண்மை காரணம்

பற்களை சரி செய்வதற்காக பிரித்தானியர் ஒருவர் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு பயணம் செய்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தீராத பல் வலியால் அவதி ரிச்சர்ட் ஹோவ்(58) என்ற பிரித்தானியர் ஒருவர் கடுமையான பல் வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில்,  கேம்பிரிட்ஜ்ஷையரில்(Cambridgeshire) உள்ள Ely-யில் மருத்துவ சந்திப்பு ஒன்றை பதிவு செய்ய முயன்றுள்ளார். சம்பந்தப்பட்ட மருத்துவமனை புதிய NHS நோயாளிகளை எடுப்பது இல்லை என்று தெரிவித்துள்ளது. அத்துடன் தனிப்பட்ட சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்றால் கிட்டத்தட்ட £ 1,000 … Read more

“மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல, நான் காந்தி… ராகுல் காந்தி…” தகுதிநீக்கத்திற்கு பின் ராகுல்காந்தி ஆவேச பேட்டி

2019 பொதுத்தேர்தல் பரப்புரையில், எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது என மோடி குறித்து அவதூறாக பேசியதாக குஜராத் முன்னாள் எம்.எல்.ஏ. பூர்ணேஷ் மோடி தொடர்ந்த வழக்கில், ராகுல் காந்தியை சூரத் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளதோடு, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்து இருந்தது. 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றைய தினம் ராகுல் காந்தியின் எம்.பி பதவியை பறித்து நாடாளுமன்ற செயலகம் அறிவிப்பு வெளியிட்டது. ராகுல் காந்தி தகுதி நீக்கம் … Read more

நாகை மாவட்டத்தில் 1.50கோடி மதிப்புள்ள ஒரு டன் கடல் அட்டைகள் பறிமுதல்: 3 பேர் கைது

நாகை: நாகை மாவட்டம் திடீர் குப்பத்தில் 1.50 கோடி மதிப்புள்ள ஒரு டன் கடல் அட்டைகள் பறிமுதல் செய்து  3 பேரை கைது செய்துள்ளனர். வெளிநாடுகளுக்கு கடத்த முயற்சித்த சபரிநாதன், சுரேஷ், செல்வம் ஆகியோரை கடலோர போலீசார் கைது செய்தனர்.

`இரண்டு மினி லாரிகளில் வந்த பரிசுப்பொருள்கள்’ – ஸ்டாலின் பிறந்தநாளுக்காக வழங்கிய அமைச்சர் முத்துசாமி

ஈரோடு மாநகராட்சி, சூரியம்பாளையம் பகுதி, 4ஆவது வார்டுக்குள்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது. அமைச்சர் சு.முத்துசாமியின் சொந்த தொகுதியான ஈரோடு மேற்கு தொகுதிக்குள்பட்ட இந்த பகுதியைச் சேர்ந்த சுமார் 400 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பரிசு பெட்டகம் வழங்கப்பட்டது. அதில் 3 லிட்டர் குக்கர், எவர்சில்வரில் பெரிய தட்டு, சின்னதட்டு, தம்ளர், எவர்சில்வர் ஜக் என சுமார் ரூ.1,500 மதிப்பிலான பொருள்கள் இருந்தன. பரிசு பொருள்களை விநியோகிக்கும் … Read more

இங்கிலாந்து அணி வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடிய மகிழ்ந்த பிரிட்டன் பிரதமர்- வைரலாகும் வீடியோ!

இங்கிலாந்து அணி வீரர்களுடன் பிரிட்டன் பிரதமர் கிரிக்கெட் விளையாடிய மகிழ்ந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பிரித்தானியப் பிரதமராக முதல்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பதவியேற்றார். கிரிக்கெட் விளையாடிய பிரிட்டன் பிரதமர் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் கோப்பையுடன் பிரதமர் அலுவலகத்தில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார். அதில், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் டி20 உலக சாம்பியன்களான இங்கிலாந்து அணி வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடியுள்ளார். ஜோடர்ன், சாம் … Read more

திருச்சியில் வன்முறையை தூண்டும் வகையிலும், அவதூறாகவும் பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு

திருச்சி: திருச்சியில் வன்முறையை தூண்டும் வகையிலும், அவதூறாகவும் பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். சீமான் உட்பட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 500பேர் மீது கன்டோண்மென்ட் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர். மார்ச் 23ல் திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகே நடந்த போராட்டத்தில் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

” எந்தவொரு மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டேன் “: பொங்கினார் ராகுல் | I will not stop asking questions, I will keep questioning; Rahul

புதுடில்லி: ஜனநாயகத்திற்கு எதிரான சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்புவேன் என்றும், எந்தவொரு மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டேன் ” என்றும் காங்., முன்னாள் தலைவரும், எம்.பி., பதவியிழந்தவருமான ராகுல் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார். அதானி் முறைகேடு குறித்து பேசினேன் டில்லியின் காங்., தலைமை அலுவலகத்தில் அவர் பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது: இந்தியாவில் ஜனநாயகம் மீது தாக்குதல் நடந்துள்ளது. அதானிக்காக பல்வேறு சட்டங்கள் வளைக்கப்பட்டுள்ளன. மோடி, அதானி இடையிலான தொடர்பு குறித்து பார்லி.,யில் கேள்வி எழுப்பினேன். என்னை … Read more

IPL 2023 Preview : `புதிய கோச்; புதிய கேப்டன்!' புத்துயிர் பெறுமா சன்ரைசர்ஸ் ஹைதராபாத்?!

சமீப சீசன்களாக `சன்ரைசர்ஸ்’ என்பதை பெயரில் மட்டுமே தாங்கியிருக்கிறது ஹைதராபாத் அணி. அந்த அணியின் பெர்ஃபார்மென்ஸில் எந்தவித உதயமோ எழுச்சியோ வெளிப்பட்டிருக்கவே இல்லை. எல்லாமே சறுக்கல் மட்டும்தான். இந்நிலையில் வரவிருக்கும் இந்த சீசனில் சன்ரைசர்ஸ் எப்படி பெர்ஃபார்ம் செய்யப்போகிறது? அந்த அணியின் பலம் பலவீனங்கள் என்னென்ன? என்பதை பற்றிய ஓர் அலசல். Just another reasons to love us more Welcome back, coach @Murali_800 | #OrangeFireIdhi #OrangeArmy #IPL2023 pic.twitter.com/nru1k8S9Tx — SunRisers … Read more

அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் மழை – பிரான்சில் அரசாங்கத்துக்கெதிராக போராட்டம் (உலக செய்திகள் ஓர் தொகுப்பு)

ஆஸ்திரேலியாவில் இருந்து அருகிலுள்ள தீவு நாடான பப்புவா நியூ கினி-க்கு ரேடாரில் சிக்காத வண்ணம், விமானத்தை தாழ்வாக இயக்கி மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருளை கடத்த முயன்ற கும்பலை ஒன்றை பொலிசார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். அதிகரபூர்வமற்ற எல்லைகள் ஊடாக வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை நிராகரிப்பதற்கான இணக்கப்பாடு ஒன்று அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளிடையே ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசாங்கத்தின் ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு எதிராக, பிரான்ஸ் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களின் போது 80 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். கலிபோர்னியா … Read more

தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, தென்காசி, திருச்சி, கரூர், ராணிப்பேட்டை, நாமக்கல், ஈரோடு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.