ஒரே நேர்கோட்டில் 5 கிரகங்கள்… நாளை வானில் நிகழவிருக்கும் அற்புத நிகழ்வு குறித்து நாசா விஞ்ஞானி…

செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய 5 கிரகங்கள், நிலவுக்கு அருகே ஒரே வரிசையில் தோன்ற உள்ளது. இந்த வாரம், குறிப்பாக நாளை செவ்வாய் கிழமை வானில் நிகழப்போகும் இந்த அதிசயத்தை மக்கள் வெறும் கண்ணால் பார்த்து மகிழலாம் என்று வானியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நாசா விண்வெளி ஆய்வாளர் பில் குக் கூறியுள்ளதாவது “இந்த வாரம் அதிலும் குறிப்பாக செவ்வாய் கிழமை அன்று மேற்கு திசையில் நிலவை ஒட்டி செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, … Read more

31ம் தேதி தமிழக காங்கிரஸ் சார்பில் ஆலோசனை கூட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: ராகுல் காந்தி விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க 31ஆம் தேதி தமிழக காங்கிரஸ் சார்பில் கூட்டம் நடத்தப்படுகிறது. சென்னை சத்தியமூர்த்தி பவனில் 31ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆலோசனை நடைபெறுவதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து அடுத்தகட்ட போராட்டத்தை முன்னெடுப்பது பற்றி ஆலோசனை நடைபெற உள்ளது.

2 நாள் சுற்றுப்பயணம்: மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு உற்சாக வரவேற்பு| 2-day tour: President Dravupati Murmu received a warm welcome in West Bengal

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கோல்கட்டா: விஸ்வபாரதி பல்கலை விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று(மார்ச் 27) மேற்குவங்கம் சென்றார். அப்போது கோல்கட்டா விமானநிலையத்தில் ஜனாதிபதியை மாநில கவர்னர் ஆனந்தபோஸ் வரவேற்றார். மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் நகரில் உள்ள விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை 28ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொள்கிறார். பட்டமளிப்பு விழாவில் திரவுபதி முர்மு, மாநில கவர்னர் ஆனந்த்போஸ் … Read more

`நீங்களும் ஆரம்பிக்கலாம் இ-சேவை மையம்’ – தமிழக அரசின் அடுத்த அதிரடி!

இ – சேவை மையம் தமிழக மின்னணு நிறுவனம் மற்றும் தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலமாக இ- சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றனர். இங்கு சொத்து வரி, மின் கட்டணம், குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றல் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகளையும், கட்டணங்களையும் செலுத்தமுடியும். இ சேவை மையம் வீட்டில் இருந்தே பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்!அரசு அலுவலகம், இ-சேவை மையம் செல்ல வேண்டாம்! இது மட்டுமல்லாது, மாநாகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள இ.சேவை … Read more

எதுவுமே வாங்காமல் 20 கோடிக்கு பில் கொடுத்த கடைக்காரர்! ஜாக்கி சான் வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சியான சம்பவம்

புகழ்பெற்ற தற்காப்புக் கலைஞரும், நடிகருமான ஜாக்கி சான், ஆடம்பர வாழ்க்கைக்கு புதியவர் அல்ல, அவர் விரும்பும் எதையும் வாங்கக்கூடியவர். இருப்பினும், அவரது வாழ்க்கையில் அவரால் மறக்கமுடியாத அளவிற்கு ஒரு ஆச்சரியமான நிகழ்வு ஒன்று நடந்தது. 580,000 டொலருக்கு ஒரு பாரிய பில் ஒருமுறை ஜாக்கி சான் எந்த ஒரு பொருளும் வாங்காமல் அவருக்கு 580,000 டொலருக்கு (இலங்கை பணமதிப்பில் கிட்டத்தட்ட 19 கோடி) ஒரு பாரிய பில் வழங்கப்பட்ட சம்பவம் தான் அது. ஜாக்கி சான் ஒரு ஆடம்பரமான … Read more

தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் மீதான தாக்குதலுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி கண்டனம்

தஞ்சை: தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் முத்து மீதான தாக்குதலுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜகவினரின் இந்த வன்முறையை கண்டிக்கிறேன்; காங்கிரஸ் கட்சியினர் இதற்கெல்லாம் அஞ்ச மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இப்படியெல்லாம் அராஜகத்தில் ஈடுபட்டு கட்சியை வளர்க்க நினைத்தால் அது ஒரு போதும் நிறைவேறாது என்றும் கூறினார்.

BCCI Annual Contract: புரொமோஷன் பெற்ற ஜடேஜா, பாண்டியா; கீழே இறக்கப்பட்ட கே.எல்.ராகுல் – முழு விவரம்!

அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரையிலான 2022 – 23 சீசனுக்கான கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் தொடர்பான ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் கிரிக்கெட் வீரர்கள் வழக்கம்போல A+, A, B, C என்று கிரேடு வாரியாக வகைப்படுத்தப்பட்டு அவர்களுக்கான சம்பளப் பட்டியல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் A+ கிரேடு பிரிவில் இருப்பவர்களுக்கு ரூ.7 கோடி, A கிரேடுக்கு ரூ.5 கோடி, கிரேடு B க்கு ரூ.3 கோடி மற்றும் கிரேடு C-க்கு ரூ.1 … Read more

பிரித்தானிய மக்களுக்கு முக்கிய மருந்துகள் தொடர்பில் ஒரு எச்சரிக்கை: பின்னணியில் அதிகம் பேசப்படாத ஒரு தகவல்

பிரித்தானியாவில் அடிப்படை மருந்துகள் சிலவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அவற்றை தேவையில்லாமல் வாங்கி வீட்டில் குவிக்கவேண்டாமென மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் மருந்துகளுக்குக் கூட தட்டுப்பாடு பிரித்தானியாவில், காய்ச்சல் மற்றும் வலி நிவாரணியான Calpol முதல், Lemsip மற்றும் Gaviscon ஆகிய அடிப்படை மருந்துகள், கைவசம் குறைவாகவே உள்ளதாக மருந்தகங்கள் தெரிவித்துள்ளன. image: WalesOnline/Rob Browne குழந்தைகளுக்கான மருந்துகள் கூட குறைவாகவே கையிருப்பில் உள்ளதால், மக்கள் தேவையில்லாமல் அவற்றை வாங்கி வீட்டில் குவிக்கவேண்டாமென அறிவுறுத்தப்படுகின்றனர். பின்னணியில் இதுவரை அதிகம் … Read more

விலங்குகள் துன்புறுத்தல் தொடர்பான புகார்களை விசாரிக்க காவல்துறையில் சிறப்பு அலுவலர்கள்…

விலங்குகள் துன்புறுத்தப்படுவது தொடர்பான புகார்களைக் கையாள்வதற்காகவும், விலங்குகள் நல வாரியத்துட்ன் ஒருங்கிணைந்து செயல்படவும் காவல்துறையில் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை தலைவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தமிழ்நாடு காவல்துறையின் மாநில நோடல் அதிகாரியாக காவல் கண்காணிப்பாளர் சண்முக பிரியா நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விலங்குகள் துன்புறுத்தல் தொடர்பான புகார்களுக்கு மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண் அளிக்கப்படும் என்றும் மாநகரங்களின் காவல் ஆணையர்களும் மற்றும் மாவட்டத்தில் உள்ள காவல் கண்காணிப்பாளர்களும் தங்கள் தலைமையகத்தில் ஒரு அதிகாரியை … Read more