அவள் பெற்றோரிடம் எப்படி இதை சொல்வேன்! மனைவி, பிள்ளையை அடக்கம் செய்த நபர்..சூறாவளியால் சிதைந்த குடும்பம்

மலாவி நாட்டில் Freddy சூறாவளியால் தனது குடும்பத்தை இழந்த நபர் வேதனையுடன் கூறிய விடயம் சோகத்தை ஏற்படுத்தியது. Freddy சூறாவளி ஆப்பிரிக்க நாடான மலாவியில் Freddy புரட்டிப்போட்டுள்ளது. இதில் 400க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் மற்றும் இறந்தவர்களை அடக்கம் செய்யும் பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது. இந்த மோசமான சூறாவளியால் ரிச்சர்ட் கலேட்டா என்ற நபர் தனது மனைவி மற்றும் பிள்ளையை இழந்துள்ளார். நேற்றைய தினம் அவர் இருவரையும் தானே அடக்கம் செய்தார். அதன் … Read more

தேர்தல் கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து! பாஜக துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன்

சென்னை: தேர்தல் கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து, அதுகுறித்து தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என மாநில பாஜக துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை அமைந்தகரையில் உள்ள திருமண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் பாஜக தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். அதிமுகவுடன் கூட்டணி ஏற்பட்டால் தலைவர் பதவியை … Read more

தஞ்சை ஆசிரமம் வழக்கு: குழந்தைகள் நிலை பற்றி அறிக்கை தர ஐகோர்ட் கிளை ஆணை..!!

மதுரை: தஞ்சை ஆசிரமத்தில் இருந்து சமூக நல அலுவலரால் அழைத்துச் செல்லப்பட்ட 5 குழந்தைகளை மீண்டும் ஒப்படைக்கக் கோரிய வழக்கில் சிவசக்தி ஆசிரமத்தில் இருந்து 5 குழந்தைகள் எந்த தேதியில் அழைத்து செல்லப்பட்டனர்? என அறிக்கை தர ஆணையிடப்பட்டுள்ளது. விரிவான அறிக்கையை தஞ்சை மாவட்ட சமூக நல அலுவலர் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளின் தற்போதைய நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து அரசு வழக்கறிஞர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம், சட்டசபைகளுக்குஒரே நேரத்தில் தேர்தல் நடத்த என்னென்ன செய்ய வேண்டும்?- மத்திய சட்ட மந்திரி விளக்கம்

புதுடெல்லி, நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முறையை அமல்படுத்தும் முன்பு என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மத்திய சட்ட மந்திரி விளக்கம் அளித்தார். நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு கூறியதாவது:- நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஒரு நாடாளுமன்ற குழு ஆய்வு செய்து சில சிபாரிசுகளை அளித்துள்ளது. இந்த விவகாரம், மேற்கொண்டு ஆய்வு செய்வதற்காக சட்ட ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒரே … Read more

குஜராத்: காதல் திருமணத்துக்கு பெற்றோர் கையெழுத்து கட்டாயம் – சட்டப்பேரவையில் எம்எல்ஏ-க்கள் கோரிக்கை

குஜராத்தில் சட்டமன்றக் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது கலோல் பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ ஃபதேசின் சவுகான்,”பெற்றோரின் அனுமதியின்றி நடைபெறும் காதல் திருமணங்கள் மாநிலத்தில் குற்ற விகிதத்தை அதிகரிக்கின்றன. அத்தகைய திருமணங்கள் பெற்றோரின் கையெழுத்துடன் பதிவு செய்யப்பட்டால், குற்ற விகிதம் 50 சதவிகிதம் குறையும். ஏனென்றால் காதல் திருமணங்கள் அந்தந்தப் பகுதியிலல்லாமல், மற்ற மாவட்டங்களில் பதிவு செய்யப்படுகின்றன. எனவே, தற்போதுள்ள சட்டங்களைத் திருத்தி, காதல் திருமணம் செய்ய விரும்புபவர்கள் பெற்றோரின் சம்மதத்தைப் பெறுவதைக் கட்டாயமாக்க வேண்டும். … Read more

கருக்கலைப்பு மாத்திரைகளை தடை செய்த முதல் அமெரிக்க மாநிலம்!

அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரைகள் பயன்படுத்துவதை தடை செய்த முதல் மாநிலமானது வயோமிங் (Wyoming). முதல் அமெரிக்க மாநிலம் வயோமிங் மார்ச் 17 அன்று மருந்து கருக்கலைப்பு மாத்திரைகளின் பயன்பாடு அல்லது பரிந்துரைக்கப்படுவதை தடை செய்த முதல் அமெரிக்க மாநிலமாக மாறியுள்ளது. வயோமிங் கவர்னர் மார்க் கார்டன் (Mark Gordon), மாநிலத்தில் கருக்கலைப்பு மாத்திரைகளை தடை செய்யும் மசோதாவில் கையெழுத்திட்டார். இருப்பினும், உடலுறவுக்குப் பிறகு கர்ப்பத்திற்கு முன் காலையில் பயன்படுத்தப்படும் கருத்தடை மாத்திரைகளுக்கு தடையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. Gov. … Read more

பாஜகவுடன் கூட்டணி குறித்து முடிவு செய்வது நாங்கள்தான்! ஜெயக்குமார் பதிலடி

சென்னை: அதிமுக கூட்டணியில் சேர விரும்பவில்லை என்றும், தனித்து போட்டியிட விருப்பம் என்றும், இல்லையென்றால் தனது பதவியை ராஜினாமா செய்வேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது, பாஜக கட்சி மட்டுமின்றி, கூட்டணி கட்சியான அதிமுகவிலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக உள்ளார். இவர் நிரந்தர பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவதற்காக அதிமுகவில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்படுகிறது. வேட்பு மனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு … Read more

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 வழக்குகள்..!!

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மனோஜ்பாண்டியன், ஆர்.வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் தனித்தனியே மனு தாக்கல் செய்துள்ளனர். பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரிவிட்டு மாலையிலேயே சட்டவிரோதமாக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு நீதிமன்ற உத்தரவை மீறும் செயல் மட்டுமின்றி நீதிமன்றத்துக்கு அவமரியாதையை ஏற்படுத்தும் செயல். கட்சி விதிகளை திருத்த பொதுக்குழுவுக்கு அதிகாரம் இருந்தாலும் பொதுச்செயலாளர் தேர்தல் விதிகளை … Read more

`வரதட்சணை, பாலியல் குற்றங்கள் குறித்த புகார்கள் அதிகரித்துள்ளன!’ – ஸ்மிருதி இரானி

காலங்கள் கடந்தபோதும், கலாசாரங்கள் மாறிய போதும் பெண்களின் மீதான வன்முறைகள் குறைந்தபாடில்லை. அதைவிட துயரமான உண்மை, அவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பாலியல் வன்முறை இந்நிலையில் வரதட்சணை, பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமைக்கான முயற்சிகள் குறித்து தேசிய மகளிர் ஆணையத்தில் பெறப்பட்டுள்ள புகார்கள் அதிகரித்துள்ளதாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. மக்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்குப் பதிலளித்த  பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறுகையில், “கடந்த மூன்று … Read more

மன்னருடைய முடிசூட்டு விழாவிற்கு வரவேண்டாம்: ஹரி மேகன் தம்பதியரை எச்சரிக்கும் நிபுணர்

இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும், மன்னர் சார்லசுடைய முடிசூட்டு விழாவிற்கு வராமல் இருப்பதே நல்லது என கூறியுள்ளார் நிபுணர் ஒருவர். ஹரி மேகனுக்கு அழைப்பு மன்னர் சார்லசுடைய முடிசூட்டு விழாவிற்கு அவரது இளைய மகனான இளவரசர் ஹரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஹரியும் மேகனும் மன்னருடைய முடிசூட்டு விழாவிற்கு வருவார்களா மாட்டார்களா என்பது குறித்து அவர்கள் தரப்பிலிருந்து உறுதியான தகவல் எதுவும் இல்லை.   மன்னரின் அழைப்பை ஏற்றாலும் பிரச்சினை, ஏற்காவிட்டாலும் பிரச்சினை  இந்நிலையில், மக்கள் தொடர்பு … Read more