புதுச்சேரி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்: முதல் மந்திரி ரங்கசாமி

புதுச்சேரி, புதுச்சேரி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல் மந்திரி ரங்கசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து அனைத்து பெண்களும் புதுச்சேரி அரசு பேருந்தில் இலவச பயணம் செய்யலாம் என முதல் மந்திரி ரங்கசாமி அறிவித்தார். மேலும், புதுச்சேரி சட்டப்பேரவையில் விதவை உதவித்தொகை ரூ.2,500-லிருந்து ரூ.3,000 ஆக உயர்த்தி … Read more

பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்! – ஆவின் விநியோகம் முடங்குமா?!

மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருளான பால் மற்றும் பால் பொருள்களை விற்பனை செய்வதில், ஆவின் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழக பால்வளத்துறையின்கீழ் செயல்படும் ஆவின் நிறுவனம், தமிழகம் முழுவதுமிருந்து நாளொன்றுக்கு 41 லட்சம் லிட்டர் பால் வரை கொள்முதல் செய்து வந்தது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை படிப்படியாக சரிந்து தற்போது 27 லட்சம் லிட்டருக்கும் குறைவான பாலே, கூட்டுறவு பால் சங்கங்களின் வழியாகக் கொள்முதல் ஆகிறது. ஆவின் இல்லம் இதனால், தமிழகம் முழுவதும் … Read more

கடற்கரையில் பாம்புகள் இனச்சேர்க்கையில் ஈடுபடுவதாக எண்ணிய நபர்; பின்னர் கண்ட அதிர்ச்சியளிக்கும் காட்சி

அவுஸ்திரேலியாவில் கடற்கரைக்குச் சென்றிருந்த ஒருவர், இரண்டு பாம்புகள் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்துகொண்டிருப்பதைக் கண்டு, அவை இனச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளதாக எண்ணியுள்ளார். பாம்பை விழுங்கிய பாம்பு Cody Green என்பவர் மேற்கு அவுஸ்திரேலியாவிலுள்ள Binningup கடற்கரை என்னும் கடற்கரைக்கு காலாற நடப்பதற்காக சென்றுள்ளார். அப்போது, இரண்டு பாம்புகள் பின்னிப்பிணைந்திருப்பதைக் கண்டுள்ளார் அவர்.  அவை இனச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளதாக எண்ணி, அவற்றை தன் மொபைலில் படம் பிடிக்கத் துவங்கியுள்ளார் அவர். ஆனால், பிறகுதான் அந்த உண்மை அவருக்குப் புரிந்திருக்கிறது. Image : cody green … Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு; எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில், எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை நீதிமன்றம் ஏப்ரல் மாதத்துக்கு ஒத்தி வைத்துள்ளது. அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மோதல் உச்சத்திற்கு சென்ற நிலையில், கடந்த மாதம் பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்த கடந்தாண்டு ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் மனோஜ்பாண்டியன் … Read more

கோவையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை: கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

கோவை: கோவையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இளைஞர் அசாருதீனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிறுமிக்கு பாலியல்தொல்லை அளித்த வெள்ளலூரைச் சேர்ந்த அசாருதீன் (23) 2020-ல் கைது செய்தனர். அசாருதீனுக்கு ஆயுள் சிறையுடன் ரூ.15,000 அபராதமும் விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துளளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க கோவை போக்சோ நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளனர்.

பிரதமர் அலுவலக போலி அதிகாரிக்கு குண்டு துளைக்காத காரில் பாதுகாப்பு: காஷ்மீரில் நடந்த காமெடி| Gujarat Conman Poses as PM Official in Srinagar, Gets Z Plus Security Cover, Bullet Proof Car & Holds Meetings Before Arrest

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஸ்ரீநகர்: பிரதமர் அலுவலக உயர் அதிகாரி எனக்கூறி ஸ்ரீநகரில் இசட் பிளஸ் பாதுகாப்புடன் வலம் வந்து மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குஜராத்தை சேர்ந்த நபர், பிரதமரின் அலுவலகத்தில் கூடுதல் இயக்குனராக பணியாற்றுவதாக கூறி காஷ்மீருக்கு இந்தாண்டு இருமுறை சென்றுள்ளார். அங்குள்ள 5 நட்சத்திர விடுதியில் தங்க வைத்து குண்டு துளைக்காத காருடன் இசட் பிளஸ் பாதுகாப்பும் காஷ்மீர் மாநில நிர்வாகத்தால் அளிக்கப்பட்டுள்ளது. … Read more

அசாமில் அனைத்து மதரஸாக்களையும் மூடுவோம்: முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா

கவுகாத்தி, கர்நாடகாவின் பெலகாவியில் நடைபெற்ற ஒரு பேரணியில் உரையாற்றிய அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா, தங்கள் மாநிலத்தில் அனைத்து மதரசாக்களையும் மூடுவோம் என்று பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் கூறியதாவது:- “புதிய இந்தியாவிற்கு மதரஸாக்களுக்கு பதிலாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள்தான் தேவை. தனது அரசாங்கம் ஏற்கனவே 600 மதரஸாக்களை மூடிவிட்டது. மற்ற அனைத்தையும் விரைவில் மூட இருக்கிறோம். மேலும், எங்களுக்கு மதரஸாக்கள் தேவையில்லை, பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்கள்தான் தேவை” என்றார். … Read more

கொலம்பியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம்| அணு ஆயுத தளத்திலிருந்து காணாமால் போன யூரேனியம் – உலகச் செய்திகள்

கொலம்பியாவில் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 -ஆக உயர்ந்திருக்கிறது. இந்த நிலையில் சுரங்கப்பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரவி சௌத்ரி, அமெரிக்க விமானப் படையின் உதவிச் செயலராக நியமிக்க உறுதி செய்யப்பட்டிருக்கிறார். பயங்கரவாத குறியீட்டுப் பட்டியலில் ஆப்கானிஸ்தானைப் பின்னுக்குத் தள்ளி பாகிஸ்தான் முதலிடத்தைப் பிடித்தது. பயங்கரவாத தாக்குதலில் தெற்காசியாவில் அதிக பாதிப்புக்குள்ளான நாடாக பாகிஸ்தான் இருக்கிறது. கனட தேர்தலில் சீனாவின் … Read more

”வட கொரியா 33 வினாடிகளில் அமெரிக்காவை அழித்துவிடும்” சீன பாதுகாப்பு விஞ்ஞானிகள்

வடகொரியாவிடமிருக்கும் அணு ஆயுதங்களால் அமெரிக்காவை 33 வினாடிகளில் அழித்து விட முடியுமென சீன பாதுகாப்பு விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 33 வினாடிகள் போதும் அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே நிலவும் பதற்றத்திற்கு மத்தியில், சீனாவில் உள்ள ராணுவ பாதுகாப்பு விஞ்ஞானிகள் வடகொரியாவின் இராணுவ திறன்கள் குறித்து ஆபத்தான கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். @NORTH KOREA STATE MEDIA சீன பாதுகாப்பு விஞ்ஞானிகள் “வட கொரியா மிகவும் சக்திவாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணையை(ballistic missile) வைத்திருக்கிறது, அது அமெரிக்க மண்ணில் 33 நிமிடங்களில் அழிவை … Read more

இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு கடன் வாங்க அவசியமில்லை! டெல்லியில் நிதியமைச்சர் பிடிஆர் தகவல்…

டெல்லி: தமிழ்நாடுஅரசு இந்த ஆண்டு கடன் வாங்க அவசியம் இருக்காது என்று கூறிய தமிழ்நாடு  நிதியமைச்சர் பிடிஆர் ”ஒரு வேலை உலக பொருளாதார மந்தநிலை வந்தால் அன்றைக்கு கடன் வாங்குவதற்கான தேவை ஏற்படும் என்று கூறினார். டெல்லி சென்றுள்ள தமிழக நிதியமைச்சர் பிடிஆர், அங்கு  வெளியுறவுத்துறை அமைச்சர் அங்கு நிதிதுதறை செயலரை சந்தித்து பேசியதுடன், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள், மீனவர்கள் பிரச்சினை உள்பட பல நிகழ்வுகள் குறித்து … Read more