வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த சர்வதேச பயணிகளில் இதுவரை 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

டெல்லி: வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்களில்  சர்வதேச பயணிகளில்இதுவரை 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. செய்யப்பட்டு உள்ளது. இவர்களின் 11 பேரும் ஒமிக்ரான் துணை வகைகள் கண்டறியப்பட்டு இருப்பதாக இந்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. சீனா உள்பட சில உலக நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சீனாவில் தற்போது பரவி வரும் புதிய வகை கொரோனா மாறுபாடு வைரசால் கொத்து கொத்தாக மக்கள் உயிரிழப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஓமிக்ரான் பிஎஃப் 7 வகை … Read more

ஜன.07: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

வரலாறு காணாத உச்சத்தில் 2022 உலக உணவு பொருட்களின் விலை!

உலக உணவுகளின் விலை 2022இல் வரலாறு காணாத உயர்வை எட்டி இருப்பதாக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது. உக்ரைன்-ரஷ்யா போர் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையால் ஏற்பட்ட இடையூறு மற்றும் ஏற்றுமதி பற்றாக்குறை ஆகியவற்றால் கடந்த ஆண்டு பெரும்பாலான உணவுப் பொருட்களின் விலை அதிகரித்தது. இவை ஐ.நா உணவு முகமையின் சராசரி விலை குறியீட்டை வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த நிலைக்கு அனுப்பியது. அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலை இந்நிலையில் உலக அளவில் … Read more

நடுவானில் பயணிக்கு மாரடைப்பு உயிரை காப்பாற்றிய டாக்டருக்கு பாராட்டு| Kudos to the doctor who saved the life of a mid-air passenger from a heart attack

மும்பை, ஐேராப்பிய நாடான பிரிட்டனில் இருந்து மும்பை வந்த விமானத்தில் இருந்த பயணிக்கு, நடுவானில் இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, உடன் பயணித்த டாக்டர், நீண்ட நேரம் போராடி அவரது உயிரை காப்பாற்றிய தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் விஸ்வராஜ் வெமலா. டாக்டரான இவர், பிரிட்டனின் பர்மிங்காம் நகரில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். அறிவிப்பு சமீபத்தில், தன் தாயைப்பார்ப்பதற்காக ‘ஏர் இந்தியா’ விமானத்தில் பிரிட்டனில் இருந்து பெங்களூருக்கு பயணித்தார். நடு … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,707,963 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.07 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,707,963 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 667,565,153 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 639,019,731 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 43,829 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆம்புலன்ஸ் கட்டணம் செலுத்த முடியாததால் தாயின் உடலை தோளில் சுமந்து சென்ற மகன்| The son carried his mothers body on his shoulders as he could not pay the ambulance fee

ஜல்பைகுரி,:மேற்கு வங்கத்தில் ஆம்புலன்சிற்கு அதிக கட்டணம் கேட்டதால் தாயின் உடலை, அவரது மகன் 40 கி.மீ., வரை சுமந்து சென்ற அவலம் அரங்கேறியுள்ளது. மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஜல்பைகுரி மாவட்டத்தின் கிராந்தி பகுதியைச் சேர்ந்தவர் ராம் பிரசாத். சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்ட தன், 72 வயதான தாயை, ஜல்பைகுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதையடுத்து தாயின் உடலை … Read more

ரொனால்டோ விளையாட தடை: அல் நாசர் கிளப்பிற்கு காத்திருந்த அதிர்ச்சி

கிறிஸ்டியானோ ரொனால்டோ தன்னுடைய புதிய அல் நாசர் கிளப்பிற்காக ஜனவரி 6ம் திகதி விளையாட இருந்த நிலையில், இங்கிலாந்து கால்பந்து சம்மேளனத்தால் அவர் இரண்டு போட்டிகளில் விளையாட கூடாது எனத் தடை விதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. புதிய அணியில் ரொனால்டோ மான்செஸ்டர் அணியில் இருந்து விலகி பிறகு, சுமார் 1700 கோடி ரூபாய் சம்பளத்துடன், 2025ஆம் ஆண்டு வரை சவுதி அரேபியாவின் அல் நாசர் கிளப்பிற்கு விளையாட கால்பந்து வீரர் ரொனால்டோ ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார். ரொனால்டோவின் வருகையை … Read more

ஆம் ஆத்மி – பா.ஜ., உறுப்பினர்கள் மோதல் புதுடில்லி மாநகராட்சி கூட்டம் ஒத்திவைப்பு| Aam Aadmi Party – BJP members clash postpones New Delhi Municipal Corporation meeting

புதுடில்லி, ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ.,உறுப்பினர்களின் மோதலை அடுத்து, மேயர் தேர்தல் நடைபெறாமலேயே புதுடில்லி மாநகராட்சி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. சமீபத்தில் நடந்து முடிந்த புதுடில்லி மாநகராட்சி தேர்தலில், 250 வார்டுகளில், 134 வார்டுகளை ஆம் ஆத்மி கைப்பற்றியது. மாநகராட்சி தேர்தலுக்குப் பின், முதன்முறையாக நேற்று கூடிய மாமன்றக் கூட்டத்தில், கவுன்சிலர்கள் பதவியேற்ற பின், மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. முன்னதாக, துணை நிலை கவர்னர் பரிந்துரையின்படி, ‘ஆல்டர்மேன்’ எனப்படும் 10 … Read more

மணிப்பூரை பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து விடுவித்தோம் அமித்ஷா பெருமிதம்

இம்பால், பா.ஜனதா ஆட்சி நடக்கும் திரிபுராவில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கும் என்று தெரிகிறது. அம்மாநில முதல்-மந்திரியாக இருந்த பிப்லப்குமார் தேவ் நீக்கப்பட்டு மாணிக் சஹா முதல்-மந்திரி ஆனார். தேர்தலில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெற்றால், முதல்-மந்திரி பதவிக்கு மாணிக் சஹாவுடன் பிப்லப்குமார் தேவ், மத்திய மந்திரி பிரதிமா பவ்மிக், மாநில பா.ஜனதா தலைவர் ரஜிப் பட்டாச்சார்யா ஆகியோர் போட்டி போடுகிறார்கள். ஒவ்வொருவரின் ஆதரவாளர்களும் ஆதரவு திரட்டி வருகிறார்கள். இந்தநிலையில், திரிபுரா சென்ற மத்திய உள்துறை … Read more

 கூட்டுறவு கூட்டாட்சி விஷயத்தில்…புதிய சகாப்தம்!| In the case of cooperative federalism…a new era!

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், அனைத்து மாநில தலைமை செயலர்களின் தேசிய மாநாடு நேற்று துவங்கியுள்ள நிலையில், மாநில அரசுகளின் ஆலோசனை மற்றும் பங்களிப்புடன் திட்டங்களை வகுப்பது, அதை நடைமுறைப்படுத்துவதன் வாயிலாக, கூட்டுறவு கூட்டாட்சியின் புதிய சகாப்தத்தை மத்திய அரசு துவக்கி வைத்துள்ளதாக அதிகாரிகள் புகழாரம் சூட்டினர். அனைத்து மாநிலங்களின் தலைமை செயலர்கள் பங்கேற்ற தேசிய மாநாடு, ஹிமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் கடந்த ஆண்டு நடந்தது. மாநிலங்களின் பங்களிப்பு இந்த மாநாடு மிகவும் ஆக்கப்பூர்வமாக நடந்து … Read more