பா.ஜ., நிர்வாகி ஹோட்டல் வெடிவைத்து தகர்ப்பு : கொலை வழக்கில் சிக்கியதால் நடவடிக்கை| Action taken after BJP executive caught in hotel bombing case

சாகர் : மத்திய பிரதேசத்தில் சாகர் மாவட்ட பா.ஜ., நிர்வாகியாக இருந்தவர் மிஷ்ரி சந்த் குப்தா. கடந்த மாதம் 22ல், குப்தா மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து, பால் பண்ணை தொழிலாளி ஜகதீஷ் யாதவ் மீது கார் ஏற்றி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதையடுத்து, கட்சியில் இருந்து மிஷ்ரி சந்த் குப்தா ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.இந்நிலையில், மிஷ்ரி சந்த் குப்தாவுக்கு சொந்தமான ஹோட்டல், கலெக்டர் தீபக் ஆர்யா, … Read more

ம.பி: அனஸ்தீசியா செலுத்திக் கொண்டு தற்கொலைசெய்த பெண் மருத்துவர் – போலீஸ் விசாரணை

மத்தியப் பிரதேசத்தின், போபாலில் அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரியின் விடுதியொன்றில், 24 வயது பெண் மருத்துவரொருவர் தனக்குத்தானே ஊசி மூலம் நான்கு டோஸ் மயக்க மருந்து (Anaesthesia) செலுத்திக்கொண்டு உயிரிழந்ததாக போலீஸார் இன்று தெரிவித்திருக்கின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியான தகவலின்படி, காந்தி மருத்துவக் கல்லூரியின் (ஜி.எம்.சி) விடுதியில் பெண் மருத்துவர் தற்கொலை செய்திருக்கிறார். தற்கொலை தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர், குழந்தை மருத்துவ (paediatrics stream) பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்துவந்திருக்கிறார். புதன்கிழமை காலை … Read more

ஆண்டின் முதல் சூரியபெயர்ச்சி! அதிர்ஷ மழையில் நனையப்போகும் ராசிக்காரர் இவர்கள் தான்.. நாளைய ராசிப்பலன்

2023 ஜனவரி 14 ஆம் திகதி சனி ஆளும் மகர ராசிக்கு செல்கிறார். சூரியன் எதிரி ராசிக்கு சென்றாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சியானது நற்பலனை வாரி வழங்கப் போகிறது. இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் நாளைய நாள் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிக்காரர் யார் என்று பார்ப்போம்.  உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW     மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி … Read more

அமேசான் நிறுவனம் மேலும் 18,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல்!

வாஷிங்டன்: அமேசான் நிறுவனம் மேலும் 18,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தலைமை நிர்வாகி ஆண்டி ஜாஸ்ஸி தனது அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பரில் 10,000 பேரை பணி ஏக்கம் செய்வதாக அறிவித்திருந்தது நிலையில், பொருளாதார காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க., பொதுக்குழு வழக்கு இந்த வாரமே முடிவுக்கு வருகிறது| ADMK, general committee case is ending this week itself

புதுடில்லி : அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம், பழனிசாமி தலைமையில் கடந்த ஆண்டு ஜூன் 23-ல் நடந்தது. இந்த கூட்டத்தில் எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை. அதன்பின், ஜூலை 11ல் நடந்த கூட்டத்தில் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர்,- இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டன. கட்சியின் இடைக்கால பொதுச் செயலராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து பன்னீர் செல்வம் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த தனி நீதிபதி, அ.தி.மு.க., பொதுக்குழு செல்லாது என்றும், இடைக்கால பொதுச் … Read more

பட்ஜெட் கோரிக்கைகள்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்னது என்ன?

விரைவில் 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் தயாரிப்பு வேலைகளில் நிதி அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தொழில் கூட்டமைப்புகள் சார்பாக பட்ஜெட் கோரிக்கைகளையும், பரிந்துரைகளையும் முன்வைப்பது வழக்கம். ஜெர்மனியில் நடைபெறும் உலக ஜவுளி கண்காட்சி… கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்பு! அந்தவகையில் தமிழகத்தின் ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் சார்பாக அதன் தலைவர் வ.நாகப்பன் சமீபத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்துள்ளார். நிதியமைச்சரிடம் ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் முன்வைத்த … Read more

ஆடையில்லாமல் இழுத்துச் செல்லப்பட்டு இறந்த பெண்.. மேலும் இருவர் கைது

இந்திய தலைநகர் டெல்லியில் காரில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழந்த விவகாரத்தில் 7 பேர் சம்பந்தப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். காரில் இழுத்துச் செல்லப்பட்டு இறந்த பெண் டெல்லியின் கஞ்சவாலா பகுதியில் கார் ஒன்று மோதி, வெகுதூரம் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு பெண்ணொருவர் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பெண்ணின் உடல் ஆடையில்லாத நிலையில் மீட்கப்பட்டது. இந்த விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இருவர் கைது இந்த நிலையில் மேலும் இருவர் பொலிஸாரால் கைது … Read more

தமிழ்நாட்டில் அனைத்து போராட்டங்களுக்கும் சுற்றுச்சுவருக்குள்தான் நடத்தப்படுகிறதா? ஆர்எஸ்எஸ் வழக்கில் நீதிமன்றம் கேள்வி…

சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து போராட்டங்களுக்கும் சுற்றுச்சுவருக்குள்தான் நடத்தப்படுகிறதா? இதே அணுகுமுறை தான் அனைத்து போராட்டங்களுக்கும் பின்பற்றப்படுகிறதா என தமிழகஅரசுக்கு ஆர்எஸ்எஸ் வழக்கில் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.  மேலும் தமிழகஅரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை சுற்றுச்சுவருக்குள் நடத்தும்படி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மேல் முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தொடர்பான வழக்கில்,  கோவை, பல்லடம், நாகர்கோவில் உள்ளிட்ட ஆறு இடங்கள் தவிர … Read more

எர்ணாகுளம்-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் சேவை ஜன.21, 28 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே

சென்னை: எர்ணாகுளம்-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் சேவை ஜன.21, 28 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மறுமார்கத்தில் சிறப்புரயில் சேவை ஜன.22, 29 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு அறிவித்துள்ளது. மேலும் ஜன.7,11,27ஆகிய தேதிகளில் காட்பாடி-ஜோலார்பேட்டை இடையே இருமார்க்கத்திலும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் வேலூர்-அரக்கோணம் மார்க்கத்திலும் ஜன.24ஆம் தேதி ரயில் சேவை  ரத்து என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பழனிசாமிக்கு ஏற்றபடி விதிமுறைகளை மாற்றி பதவி பெற முயற்சி: ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டு| Attempt to change rules to suit Palanisami to get post by shortcut: OPS side alleges

சென்னை: அதிமுக விதிமுறைகளில் பழனிசாமிக்கு ஏற்றபடி மாற்றம் உருவாக்கி, அதன் மூலம் குறுக்குவழியில் பொதுச்செயலாளர் பதவியை பெற பழனிசாமி முயல்வதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டம் பழனிசாமி தலைமையில் கடந்த ஆண்டு ஜூன் 23ல் நடந்தது. இந்த கூட்டத்தில் எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை. அதன்பின், ஜூலை 11ல் நடந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டன. கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பு … Read more