ஸ்ரீபெரும்புத்தூர் – வாலாஜா 6 வழிச்சாலை: மத்தியஅமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..

சென்னை:  ஸ்ரீபெரும்புத்தூர் – வாலாஜா 6 வழிச்சாலை பணிகளை விரைவுபடுத்தக் கோரி மத்தியஅமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். 6 வழிச்சாலை பணிகள் தொடர்பாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஸ்ரீபெரும்புத்தூர் – வாலாஜா 6 வழிச்சாலை பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார். அந்த கடிதத்தில், ஆறுவழிச்சாலை பணிகளை விரைவுபடுத்தவும், சாலையை நல்ல நிலையில் பராமரிக்கவும் தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை … Read more

ஏர் ஏசியா விமான நிறுவனத்துக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்தது விமான போக்குவரத்து இயக்குனரகம்

கர்நாடக: ஏர் ஏசியா விமான நிறுவனத்துக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்தது விமான போக்குவரத்து இயக்குனரகம். விதிமுறைகளின்படி ஏர் ஏசியா விமானிகள் பயிற்சி பெறாத புகாரில் விமான போக்குவரத்து இயக்குனரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ரூ.240 கோடிக்கு குடியிருப்பு வாங்கிய மும்பை தொழிலதிபர்| BK Goenka buys penthouse for ₹230 cr

மும்பை : மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை, ‘வெல்ஸ்பன்’ குழுமத்தின் தலைவர் பி.கே.கோயங்கா என்பவர் 240 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளார். மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள வொர்லி பகுதியில் தொழிலதிபர்கள் அதிகளவு வசித்து வருகின்றனர். இங்கு, ‘360 வெஸ்ட்’ என்ற அடுக்குமாடி குடியிருப்பு மிகவும் பிரபலமானது. ஓபராய் ரியால்டி குழுமத்தால் இரு ‘டவர்’ களாக கட்டப்பட்ட இந்த கட்டடத்தில், டவர் பி — யில் உள்ள 63, 64, 65 ஆகிய மூன்று தளங்களும் விற்பனை செய்யப்பட்டு … Read more

`அதானி சொத்துகள் தேசியமயமாக்க வேண்டும்’ – சுப்பிரமணியன் சுவாமி யோசனையின் பின்னணி என்ன?

அதானி நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. அதில், “இந்திய நிறுவனமான அதானி குழுமம், மோசமான பங்கு கையாளுதல், கணக்கு மோசடி ஆகியவற்றின் மூலமாக மோசடி செய்திருப்பதற்கான ஆதாரங்களை முன்வைத்து, எங்களின் இரண்டு வருட விசாரணையின் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்துகிறோம். அதானி குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான கௌதம் அதானி, கடந்த மூன்று ஆண்டுகளில் $100 பில்லியனுக்கும் அதிகமான நிகர மதிப்பைச் சேர்த்திருக்கிறார். மோடி-அதானி அதானி குழுமத்தின் முன்னாள் மூத்த நிர்வாகிகள் உட்பட டஜன் கணக்கான … Read more

5 நாட்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பெண்ணை மீட்க துருக்கியர்களுடன் கைகோர்த்த கனேடியர்கள்: நெகிழவைக்கும் காட்சிகள்

உலக நாடுகள் சில, போர் என்ற பெயரால் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று குவிக்கின்றன. அப்படிக் கொல்பவர்களை துருக்கி, சிரியாவில் நிகழ்ந்த நிநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மீட்புப் பணிகளுக்கு அனுப்பிவைத்தால், ஒருவேளை உயிரின் மதிப்பை அவர்கள் உணரக்கூடும் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆம், ஒரு பெண்ணைக் காப்பாற்ற, இரண்டு நாட்டு மீட்புக் குழுவினர் போராடுவதையும், ஒரு உயிரைக் காப்பாற்றியதை அவர்கள் கொண்டாடுவதையும் காணும்போது மனம் நெகிழ்கிறது. 5 நாட்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பெண்ணை மீட்கப் போராடிய இரு நாட்டவர்கள் துருக்கியிலுள்ள … Read more

கொடுத்த வாக்குறுதியை தவறி வருகிறது: பரந்தூர் போராட்டத்தில் திமுக அரசை சாடிய தவாக தலைவர் வேல்முருகன்..

சென்னை: பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு எதிரான போராட்டம் இன்று 200வது நாளை எட்டியுள்ளது. இன்றைய போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கலந்துகொண்டு, போராட்டக்கார்களுக்கு ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து பேசியவர், திமுக தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியை தவறி வருகிறது, இரட்டை நிலையை எடுக்கிறது  என விமர்சித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 2ஆவது சர்வதேச விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் முடிவெடுத்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதற்காக 4,800 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன. … Read more

சத்தியமங்கலம் புங்கம்பள்ளி கிராமத்தில் ஆம்புலன்ஸுக்கு வழிவிடாத கார் ஓட்டுனருக்கு அபராதம்

சத்தியமங்கலம்: புங்கம்பள்ளி கிராமத்தில் ஆம்புலன்ஸுக்கு வழிவிடாத கார் ஓட்டுனருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 6-ம் தேதி புங்கம்பள்ளி கிராமத்தில் 3 மாத குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டது. புங்கம்பட்டியில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, குழந்தைகள் கோவை நோக்கி ஆம்புலன்ஸ் சென்றது.   

மகாராஷ்டிரா: 18,000 போலீஸ் பணியிடங்களுக்கு 7 லட்சம் பட்டதாரிகள் உட்பட 18 லட்சம் பேர் விண்ணப்பம்!

மகாராஷ்டிராவில் கடந்த 2020ம் ஆண்டிலிருந்து போலீஸ் பணிக்குப் புதிதாக ஆட்கள் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் அதிக அளவில் காலியிடங்கள் இருக்கின்றன. அதேசமயம் போலீஸாரின் தேவை என்பதும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதையடுத்து, தற்போது 18,331 போலீஸ் பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் பணி தொடங்கி இருக்கிறது. ஏற்கெனவே மாநில அரசு இதற்காக விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. மொத்தம் 18 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கின்றனர். அவர்களில் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பட்டதாரி இளைஞர்கள் ஆவர். போலீஸ் பணிக்கு 12வது வகுப்பு படித்திருந்தால் … Read more

துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தவர்களுக்காக..PSG அணி வெளியிட்ட அறிவிப்பு

துருக்கி, சிரியாவில் உயிரிழந்தவர்களுக்கு இன்றைய போட்டிக்கு முன்பாக மௌன அஞ்சலி செலுத்தப்படும் என PSG அணி அறிவித்துள்ளது. உயரும் பலி எண்ணிக்கை மத்திய கிழக்கு நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்களால் பலியானோரின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் பலவும் பாதிப்பிற்கு உள்ளான துருக்கி, சிரியாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. @Rami al-Sayed/AFP/Getty இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் துரிதகதியில் நடைபெற்று … Read more

ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள பள்ளிவாசல் மட்டும் பூட்டப்பட்டு தொடந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது: ஜவாஹிருல்லா கண்டனம்

சென்னை: ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள பள்ளிவாசல் மட்டும் பூட்டப்பட்டு தொடந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. மாநில ஆளுநர் வழிபாட்டுத் தலத்தை முடக்கக் கூடாது என த.மு.மு.க.தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் ஆளுநர் மாளிகையின் முதல்வாசல் அருகே உள்ள பள்ளிவாசலை முடக்கக்கூடாது என அவர் தெரிவித்தார்.