உங்கள் கொலஸ்ட்ரால் அளவை எளியமுறையில் குறைக்கனுமா? இஞ்சியை இப்படி சாப்பிட்டால் போதுமாம்!

கொலஸ்ட்ரால் ஆபத்தான நோய்களுள் ஒன்றாக கருதப்படுகின்றது. கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக காணப்பட்டால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் கொலஸ்ட்ராலால் அபாயம் உள்ளது. இது சில நேரங்களில் உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம். இருப்பினும் இதனை ஆரம்பத்திலே கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பது அவசியமாகும். அதற்கு இஞ்சி தண்ணீர் உதவுவதாக கூறப்படுகின்றது. இது மொத்த கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளையும் குறைக்கிறது. அவ்வாறு செய்வதன் மூலம், இதய நோய் மற்றும் கொலஸ்ட்ரால் தொடர்பான பிற நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம். அந்தவகையில் … Read more

மாநில மொழிகளில் தீர்ப்புகள்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு…

மும்பை: மாநில மொழிகளில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புகள்  வழங்கப்பட வேண்டும் என்று மகாராஷ்டிராவில் நடைபெற்ற விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதற்கு பிரதமர் மோடி, முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். மஹாராஷ்டிரா மற்றும் கோவா சார்பில் மும்பையில் நடந்த வழக்கறிஞர்கள் சங்கம்  நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பேசும்போது, உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழிப்பெயர்த்து வெளியிடுவதற்கு ஆதரவாக பேசியிருந்தார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் இந்த பேச்சு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த … Read more

திருவனந்தபுரத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் அவசர தரையிறக்கம்

திருவனந்தபுரம்: மஸ்கட்டிற்கு புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருவனந்தபுரத்தில்  அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. 105 பயணிகளுடன் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் விமான நிலையத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டது. 

குடும்ப ஓய்வூதியம்… உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்புகள் சொல்வதென்ன?

எது ஒன்றன் மீதும் நாம் நமது உரிமையை நிலைநாட்டிக் கொள்ள முற்படுவதற்கு முன், அது தொடர்பான விதிகளை ஓரளவு தெரிந்து கொள்வது அவசியம். அவ்வாறு தெரிந்து கொண்டு செயல்பட்டபோதும் கூட, விதியில் உள்ள சிறு விடுபாடு அல்லது குறைபாடு, நமது உரிமையை இல்லாமல் ஆக்கி விடக்கூடும். அவ்வாறான வழக்கு ஒன்றன் மீது, நீதியரசர்கள் கே.எம். ஜோஸப் மற்றும் பி.வி. நாகரத்னா ஆகியோர் கொண்ட அமர்வு, கடந்த 17.01.2023 அன்று வழங்கியுள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பு பெரிதும் கவனத்துக்குள்ளாகி இருக்கிறது. … Read more

இது எனது தனிப்பட்ட விவகாரம்… திருமண உறவு குறித்து வெளிப்படையாக கலங்கிய நியூசிலாந்தின் புதிய பிரதமர்

தாம் விவாகரத்தின் விளிம்பில் இருப்பதாக நியூசிலாந்தின் புதிய பிரதமராக தெரிவாகியுள்ள கிறிஸ் ஹிப்கின்ஸ் தெரிவித்துள்ளார். ஓராண்டாக பிரிந்து வாழ்கிறோம் இது தமது தனிப்பட்ட விடயம் என குறிப்பிட்டுள்ள அவர், நியூசிலாந்து மக்கள் மதிப்பளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். நியூசிலாந்தின் புதிய பிரதமராக தொழில் கட்சி அவரை ஒருமனதாக தெரிவு செய்துள்ளதை அடுத்து, ஊடகங்களை சந்தித்த ஹிப்கின்ஸ், தாமும் மனைவியும் கடந்த ஓராண்டாக பிரிந்து வாழ்வதை குறிப்பிட்டார். Mark Coote/Bloomberg மேலும், தமது குடும்பத்துற்காக எடுத்த சிறந்த … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தமாகா சார்பில் 16பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைப்பு…

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக  தமாகா சார்பில் 16பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைத்து, அதன் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்து உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதி காலியான தாக அறிவிக்கப்பட்ட நிலையில், அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நேரத்தில் … Read more

பழனி கோயிலில் நுழைவுச்சீட்டு வழங்கும் பணி தொடங்கியுள்ளது

திண்டுக்கல்: திண்டுக்கல் பழனி முருகன் கோவிலில் குடமுழுக்கையொட்டி பக்தர்களுக்கு நுழைவுச்சீட்டு வழங்கும் பணி தொடங்கியுள்ளது. குலுக்கல் முறையில் தேர்வான பக்தர்களுக்கு தரிசனம் செய்வதற்கான அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது என்று கோவில் நிருவாகம் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. 27 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ள நிலையில் நாளை வரை அனுமதி சீட்டு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

கடற்படையில் ‛வகிர் நீர்மூழ்கி போர்க்கப்பல் சேர்ப்பு| Addition of Waqir sunken warship to the Navy

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, 5 வது ஐஎன்எஸ் ‛ வகிர்’ நீர்மூழ்கி கப்பல் இன்று(ஜன.,23) கடற்படையில் தளபதி ஹரிகுமார் தலைமையில் சேர்க்கப்பட்டது. இந்திய கடற்படையில் தற்போது 150க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் உள்ளன. இந்நிலையில் வரும் 2027ம் ஆண்டுக்குள் போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த மத்திய பாதுகாப்புத் துறை இலக்கு நிர்ணயித்திருக்கிறது. அதேபோல் கடற்படையில் 17 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. இதில் 2 நீர்மூழ்கி கப்பல்கள் அணு ஆயுத தாக்குதல் … Read more

“அவங்க ரூ.3000 கொடுப்பாங்களா… நாங்க ரூ.6000 தருவோம்” – பாஜக முன்னாள் அமைச்சர் சர்ச்சை பேச்சு

கர்நாடகா சட்டமன்றத்துக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடக்க இருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தலுக்கு தயாராகி வருகிறது. சில அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டன. கடந்த சில நாள்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகாவிற்கு வந்து மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கிவைத்துவிட்டு சென்றார். பாஜக முன்னாள் அமைச்சர் ரமேஷ், பெலகாவி மாவட்டத்தில் உள்ள சுலேபேவி என்ற கிராமத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். பெலகாவி ரூரல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.லட்சுமி பற்றி ரமேஷ் … Read more

திருவிழாவில் கிரேனில் தொங்கியபடி அம்மனுக்கு மாலை அணிவித்த போது விபத்து! பதைபதைக்கும் வீடியோ

தமிழகத்தில் நடந்த கோவில் திருவிழாவில் கிரேன் சரிந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. கிரேன் விபத்து ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே கீழவீதி கிராமத்தில் மண்டியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதில் நடந்த மயிலேறு நிகழ்ச்சியின் போது எதிர்பாராத விதமாக கிரேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. கிரேனில் தொங்கியபடி சுவாமிக்கு மாலை அணிவிக்க பக்தர்கள் முயற்சி செய்த போதே விபத்து நடந்தது. இந்த சம்பவத்தில் முத்துகுமார் (39), பூபாலன் (40), ஜோதிபாபு (19) ஆகிய … Read more