புழுக்களை சாப்பிட்டு உயிர் வாழ்ந்தேன்! 31 நாட்களுக்கு பிறகு அமேசான் காட்டில் இருந்து மீட்கப்பட்ட நபர்

அமேசான் காடுகளில் தொலைந்து போன 30 வயதான ஜொனாட்டன் அகோஸ்டா என்ற நபர், புழுக்களை சாப்பிட்டும், மழை நீரை குடித்தும் உயிர் வாழ்ந்ததாக தெரிவித்துள்ளார். அமேசான் காட்டில் தொலைந்து போன நபர் ஜொனாட்டன் அகோஸ்டா(30) என்ற நபர் தனது நான்கு நண்பர்களுடன் வடக்கு பொலிவியாவில் வேட்டையாடிக் கொண்டிருக்கும் போது காட்டில் பிரிந்து சென்று தொலைந்து போகியுள்ளார். இதையடுத்து முடுக்கி விடப்பட்ட தேடுதல் வேட்டையை தொடர்ந்து, ஜொனாட்டன்(Jhonattan Acosta) அகோஸ்டா 31 நாட்களுக்கு பிறகு உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டார். Reuters  அகோஸ்டா … Read more

தேர்தல் கமிஷன் சீர்திருத்தம் கோரிய வழக்கில் இன்று உத்தரவு ?| In the case of the Election Commission seeking reform, the verdict is today

புதுடில்லி: தேர்தல் கமிஷனர்கள் நியமனத்தில் சீர்திருத்தம் கொண்டு வர கோரிய மனுக்கள் மீது நாளை முக்கிய தீர்ப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நியமனத்தில், சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும்’ எனக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கலாகின. இவற்றை சமீபத்தில் விசாரித்த நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு, ‘தேர்தல் கமிஷனர்கள் நியமன டைமுறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். இந்த நியமனங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தும் குழுவில், உச்ச … Read more

“நீங்கள் பிடிவாதமானவரை திருமணம் செய்து கொண்டீர்கள்” ஷர்துல் தாக்கூர் மனைவி மித்தாலிக்கு சிறப்பு அறிவுரை

“நீங்கள் மிகவும் பிடிவாதமான மனிதரை திருமணம் செய்து கொண்டு  இருக்கிறீர்கள்” என குறிப்பிட்டு ஷர்துல் தாக்கூரின் மனைவி மித்தாலி பருல்கருக்கு KKR உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயர் அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். ஷர்துல் தாக்கூர்-மித்தாலி பருல்கர் திருமணம் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் மற்றும் மித்தாலி பருல்கர் ஆகிய இருவரும் மும்பையில் திங்கட்கிழமை திருமணம் செய்து கொண்டனர். 31 வயதான ஷர்துல் தாக்கூர், மித்தாலி பருல்கர் இருவரும் நீண்ட காலமாக டேட்டிங் செய்து வந்த நிலையில்,  கடந்த … Read more

ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பை எதிர்க்கும் தமிழக அரசு மனு நாளை விசாரணை| Tamil Nadu governments plea against RSS, march to be heard tomorrow

புதுடில்லி :ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு சார்பில் அணிவகுப்பு மற்றும் கூட்டங்கள் நடத்த அனுமதி அளித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கை, உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது. நாட்டின் ௭௫வது சுதந்திர தினம், அம்பேத்கர் பிறந்த நாள், விஜயதசமி ஆகியவற்றை முன்னிட்டு, தமிழகத்தில் கடந்தாண்டு அக்., ௨ல் அணிவகுப்பு மற்றும் கூட்டங்கள் நடத்த அனுமதி கேட்டு ஆர்.எஸ்.எஸ்., சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த … Read more

02.03.23 | Daily Horoscope | Today Rasi Palan | March – 02 | வியாழக்கிழமை | இன்றைய ராசி பலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

சுற்றுலா பயணிகளுக்கு 5 லட்சம் விமான டிக்கெட்டுகள் இலவசம்! பிரபல நாடு எடுத்துள்ள திட்டம்

ஹாங்காங்கில் சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில் வெளிநாட்டினருக்கு 5 லட்சம் விமான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்குவதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. 5 லட்சம் விமான டிக்கெட் சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு, உலகம் முழுவதும் பரவி ஒட்டுமொத்த மனித செயல்பாட்டுகளையும் முடக்கியது. பெரும்பாலான நாடுகள் இன்று வரை ஊரடங்கு நடவடிக்கையால் பொருளாதாரம் சீர்குலைந்து சிக்கலில் தவித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உருக்குலைந்த சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில், வெளிநாட்டினருக்கு 5 லட்சம் … Read more

இலங்கை குற்றவாளியின் விடுதலை தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு| Court orders release of Sri Lankan convict to Tamil Nadu government

புதுடில்லி :கடந்த 35 ஆண்டு களாக சிறை தண்டனை அனுபவித்து வரும் இலங்கையைச் சேர்ந்த குற்றவாளியை முன்கூட்டியே விடுதலை செய்யும் கோரிக்கையை மறுபரிசீலனை செய்யும்படி, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் குற்றம் புரிந்து ஆயுள் தண்டனை பெற்ற இலங்கையைச் சேர்ந்த குற்றவாளி கடந்த 35 ஆண்டுகளாக தமிழக சிறையில் உள்ளார். இவரை முன்கூட்டியே விடுதலை செய்ய, தமிழக அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை, தமிழக அரசு கடந்த ஆண்டு நிராகரித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, … Read more

Live : “நாற்பதும் நமதே, நாடும் நமதே..!" – பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

“நாற்பதும் நமதே, நாடும் நமதே..!” – ஸ்டாலின் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் எனக்கு எழுபதாவது பிறந்தநாள். நான் தனிப்பட்ட ஸ்டாலின் அல்ல, இந்த அரங்கத்தில் நான்கு பக்கமும் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருக்கும் உங்களையெல்லாம் சேர்த்துதான். ஸ்டாலின் என்ற பெயருக்குள் கோடிக்கணக்கான உடன்பிறப்புகள் இருக்கின்றனர். கருணாநிதிக்கு நான் மட்டுமா பிள்ளை… நீங்கள் அனைவரும் அவருக்குப் பிள்ளைகள்தான். மு.க.ஸ்டாலின் என்னும் நான் வீட்டுக்கு விளக்காக இருப்பேன். நாட்டுக்குத் தொண்டனாக இருப்பேன். மக்களுக்காக கவலைப்படக்கூடிய … Read more

24 மணிநேரத்தில் மட்டும் 85 தாக்குதல்கள்: ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிராக போராடும் உக்ரைன்

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ரஷ்ய படைகள் நடத்திய 85 தாக்குதல்களை உக்ரைனிய படைகள் முறியடித்துள்ளனர். 85 மேற்பட்ட பகுதிகளில் தாக்குதல் ரஷ்யாவின் போர் நடவடிக்கைகள் ஓராண்டை நிறைவு செய்து இருக்கும் நிலையில், கிழக்கு உக்ரைனிய பகுதியில் உள்ள பாக்முத் நகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.   இந்த முன்னேற்றங்களுக்காக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 85 க்கும் மேற்பட்ட தாக்குதல்களை ரஷ்ய படைகள் முன்னெடுத்துள்ளன என உக்ரைனிய பாதுகாப்பு … Read more

“ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள்‌ எடுக்கப்படும்போதெல்லாம் திமுக-வுக்கு மூக்கு வியர்க்கும்!" – அண்ணாமலை

டெல்லியில் ஆம் ஆத்மி அரசு கொண்டுவந்த புதிய மதுபானக்கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக, துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது பா.ஜ.க குற்றம்சாட்டிவந்ததையடுத்து, விசாரணை மேற்கொண்ட சி.பி.ஐ, கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரைக் கைதுசெய்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து பல்வேறு கண்டனங்கள் எழுந்தன. தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலுகூட, இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, `தி.மு.க-வுக்கு ஏன் இந்தப் பதற்றம்’ என்று விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார், அண்ணாமலை அதில், “டெல்லியில்‌ ஆம்‌ ஆத்மி … Read more