சிறையில் அமைச்சர்கள்… அரவிந்த் கெஜ்ரிவாலின் அடுத்த மூவ் என்ன?!

பா.ஜ.க எதிர்ப்பு நிலையில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கு, பா.ஜ.க தரப்பிலிருந்து நெருக்கடி கொடுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் நம்பிக்கைக்குரிய தளபதிகளான டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும், சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினும் சிறையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இருவரும் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்திருக்கிறார்கள். ஆம் ஆத்மி அமைச்சரவையில் நிதி, கல்வி, தொழிற்கல்வி, பொதுப்பணித்துறை, தொழிலாளர் துறை, கலால் துறை ஆகிய துறைகளுக்கு அமைச்சராக … Read more

தன்பாலின பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம்! பிரித்தானிய நட்சத்திரம் வெளியிட்ட அறிவிப்பு

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீராங்கனையான டேனியல் வியாட் தனது தோழியுடன் திருமண நிச்சயம் செய்துள்ளதாக அறிவித்துள்ளார். தன்பாலின ஜோடி நடச்சத்திர கிரிக்கெட் வீராங்கனையான டேனியல் வியாட், 102 ஒருநாள் போட்டிகள் மற்றும் 143 டி20 போட்டிகளில் விளையாடியவர். இவரது தோழி ஜார்ஜ் ஹாட்ஜ், லண்டனில் உள்ள மகளிர் கால்பந்து குழுவான CAA Base-யின் தலைவராக உள்ளார். இவர்கள் இருவரும் திருமண நிச்சயம் செய்துள்ளதாக தங்கள் பதிவுகளில் குறிப்பால் உணர்த்தியுள்ளனர். @AFP சமூக வலைதள பதிவு டேனியல் வியாட் … Read more

தெலுங்கானா கவர்னர் தமிழிசைக்கு எதிராக சந்திரசேகரராவ் அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு…

டெல்லி: தெலுங்கானா மாநிலத்தில் கவர்னருக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில்,  கவர்னர் தமிழிசைக்கு எதிராக தெலுங்கானா மாநிலஅரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில், மாநில அரசின் மசோதாக்களுக்கு அனுமதி தர மறுப்பதாக குற்றம் சாட்டி உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சி செய்து வரும், தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி (தற்போது பாரத் ராஷ்டிரிய சமீதி) கட்சி தலைவர் சந்திரசேகரராவுக்கும், மத்திய பாஜக அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த விவகாரத்தில் மாநில கவர்னரையும், … Read more

ஹிஜாவு குழும இயக்குனர் நெஞ்சுவலியால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதி

சென்னை: ஹிஜாவு குழும நிர்வாக இயக்குனர் சவுந்தரராஜன் நெஞ்சுவலியால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரூ.800 கோடிக்கு மேல் மோசடி செய்த வழக்கில் போலீசால் தேடப்பட்ட நிலையில் கடந்த 20ம் தேதி சரணடைந்தார். சிறையில் உள்ள சவுந்தரராஜனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்த நிலையில் நெஞ்சுவலி என கூறியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மோடியை உதயநிதியை சந்தித்தன் பின்னணி அரசியல் என்ன?!

தமிழ்நாடு விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரண்டுநாள் பயணமாக டெல்லி சென்றிருந்தார். தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர், பிப்ரவரி 28-ம் தேதி மாலை 4.30 மணிக்கு பிரதமர் இல்லத்தில் பிரதமர் நரந்திர மோடியைச் சந்தித்தார். அமைச்சரான பிறகு மோடியை முதல்முறையாக உதயநிதி சந்திப்பதால் அரசியல் வட்டாரத்தில் கவனிக்கப்பட்டது. இந்த சந்திப்பு முடிந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த உதயநிதி, “டெல்லி வரும்போது தன்னை வந்து சந்திக்கும்படி மோடி சொல்லியிருந்தார். இந்த … Read more

தமிழகத்தில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை…

சென்னை: சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், காய்ச்சல் தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகம் முழுவதும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகின்றன. பொதுவாக பருவகாலங்களில், அதற்கேற்றவாறு நோய்கள் பரவுவது வழக்கம்தான். ஆனால், தற்போது பரவி வரும் காய்ச்சலுக்கு ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த வைரஸ் காய்சலால் கடுமையாக … Read more

கடக ராசிக்காரர்களே இன்று எச்சரிக்கையாக இருங்க! உங்களுக்கு சந்திராஷ்டமமாம்

இன்று சுபகிருது வருடம் மாசி மாதம் 19 ஆம் நாள். சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணிக்கின்றார். இன்று பூசம், கேட்டை என்ற இரண்டு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். ஆகவே சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது நல்லது. மேலும் மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய பலன் எப்படி இருக்கின்றது என்று பார்க்கலாம்.      உங்களது இன்றைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW     … Read more

சுரங்கப் பாதையில் ரயில் சிக்கியதால் அரசினர் தோட்டம் வழியே ஆலந்தூர் செல்லும் நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

சென்னை: சுரங்கப் பாதையில் ரயில் சிக்கியதால் அரசினர் தோட்டம் வழியே ஆலந்தூர் செல்லும் நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்ட்ரல் – கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் ஆலந்தூர் வரை மட்டுமே இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

“தேர்தல் தோல்வியை சாதனையாக பேசும் காங்கிரஸை பாராட்டத்தான் வேண்டும்" – அஸ்ஸாம் முதல்வர் கிண்டல்

இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஒன்பது மாநில சட்டமன்றத் தேர்தல்களில், வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திரிபுராவில் பா.ஜ.க 32 இடங்களில் வெற்றிப்பெற்று தனிப்பெரும்பான்மையுடனும், நாகாலாந்தில் கூட்டணிமுறையிலும் ஆட்சியமைக்கிறது. மேகாலயாவில் 2 தொகுதிகளிலும் வெற்றிப்பெற்றிருக்கிறது. இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், தனது ட்விட்டர் பதிவில்,”நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் 33 ஆண்டுகளுக்குப் பிறகு மகாராஷ்டிராவில் கஸ்பா … Read more