குட்கா தடை நீக்கம் எதிர்த்து வழக்கு! உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: தமிழ்நாடு அரசின் குட்கா தடையை உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், அதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், குட்கா, புகையிலை பொருட்கள் தயாரிப்பு  நிறுவனங்கள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது,, கடந்த 2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை … Read more

வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் ரயில் நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு

திருப்பூர்: வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் ரயில் நிலையத்தில் தீடீரென குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பீகார் தொழிலாளி கொலை செய்யப்பட்டதாக வதந்தி பரவியதால் வடமாநில தொழிலாளர்கள் ரயில் நிலையத்தில் குவிந்தனர். தண்டவாளத்தை கடக்க முயன்றபோது பீகார் தொழிலாளி ரயிலில் அடிபட்டு இறந்ததாக காவல்துறை விளக்கமளித்துள்ளது.

கர்நாடகாவில் 300 ஏக்கரில் அமைகிறது ஐபோன் உற்பத்தி தொழிற்சாலை| iPhones To Be Built In 300-Acre Karnataka Factory, “To Create 1 Lakh Jobs”

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெங்களூரு: கர்நாடகாவில் 300 ஏக்கர் பரப்பளவில் அமையும் தொழிற்சாலையில் ஐபோன்கள் தயாரிக்கப்பட உள்ளதாக, மத்திய தகவல் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மற்றும் முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோர் அறிவித்துள்ளனர். இதன் மூலம் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூரு புறநகரில் இந்த தொழிற்சாலை அமைய உள்ளது. ஆப்பிள் போன்கள் தயாரிக்க அமைக்கப்படும் மிகப்பெரிய தொழிற்சாலைகளில் இதுவும் ஒன்றாக இருக்கும். உள்ளூரில் உற்பத்தியை துவக்க, இந்த தொழிற்சாலையில் … Read more

வாடகை வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுக்க பணம் இல்லை… இடது கிட்னி விற்பனை – வைரலாகும் போஸ்டர்..!

பெங்களூரு, கர்நாடக மாநிலம், பெங்களூருவில் போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், தனது இடது சிறுநீரகம் விற்பனைக்கு உள்ளது என்றும், நில உரிமையாளர்கள் கேட்கும் அட்வான்ஸ் கொடுக்க பணம் தேவை என்றும், விளம்பரதாரரின் சுயவிவரத்தை அணுக நில உரிமையாளர்கள் ஸ்கேன் செய்யக்கூடிய க்யூஆர் (QR) குறியீடு ஆகியவை குறிப்பிட்டு போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த போஸ்டரை முழுமையாக, படித்தபோது அது உண்மையாக கிட்னி விற்பனைக்கானது அல்ல.. நகைச்சுவைக்காக.. அதிகளவில் வாடகை, அட்வான்ஸ் … Read more

குரூப் 2: “இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடிக் கொண்டிருக்கிறது திறனற்ற திமுக அரசு" – அண்ணாமலை

பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 பிரதான தேர்வில், தாமதமாக தேர்வை தொடங்கியது, தேர்வர்களுக்கு ஓ.எம்.ஆர். விடைத்தாள் மாற்றி வழங்கப்பட்டது நடந்த குளறுபடிகள் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதன்பிறகு பலரும், மீண்டும் தேர்வு நடப்பட்ட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, `இந்த விவகாரத்தில் உடனடியாக மறுதேர்வு நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும்’ என வலியுறுத்தியிருக்கிறார். அண்ணாமலை இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாடு அரசுத் துறைகளில், … Read more

தமிழக தகவல் ஆணையர்கள் பதவி தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: காலியாக உள்ள தமிழ்நாடு தகவல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பெயர்கள் ஆளுநரின் ஒப்புதலை பெற்று அரசிதழில் வெளியிடப்படும். தமிழ்நாட்டில் தலைமை தகவல் ஆணையர், நான்கு தகவல் ஆணையர்களின் பதவியிடங்கள் காலியாக உள்ளது. தகவல் ஆணையர்கள் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதிவாய்ந்தவர்களின் பட்டியலை அதனை தயார் செய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி முதலமைச்சரிடம் வழங்கி உள்ளார். இந்த நிலையில், … Read more

கிரேக்கத்தில் 57 பேரை பலிகொண்ட ரயில் விபத்து: வெளியான சிசிடிவி காட்சி

கிரேக்கத்தில் 57 பேரைக் கொன்ற ரயில் விபத்து பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இணையத்தில் வெளியான இந்த காட்சிகள், சரக்கு ரயில் பயணிகள் ரயிலின் மீது மோதிய துல்லியமான தருணத்தைக் காட்டுகிறது. 57 பேர் பலியான கோரமான ரயில் விபத்து கிரேக்கத்தில் (Greece) செவ்வாய்கிழமை ஏற்பட்ட பயங்கரமான ரயில் விபத்தில் இதுவரை 57 பேர் உயிரிழந்ததாக அக்கணக்கிடப்பட்டுள்ளனர். மேலும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். Reuters செவ்வாய்கிழமை நள்ளிரவு 11.21 மணிக்கு பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலுகம் நேருக்கு … Read more

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தின் கீழ் நியமனம் செய்யப்பட்ட 2 அர்ச்சகர்களின் நியமனம் ரத்து

மதுரை: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தின் கீழ் நியமனம் செய்யப்பட்ட 2 அர்ச்சகர்களின் நியமனத்தை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது. கார்த்திக், பரமேஸ்வரன் ஆகிய தங்களை அர்ச்சகர்களாக நியமிக்க உத்தரவிடக்கோரிய வழக்கில் ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்காலில் 7ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 7ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மாசிமக திருவிழாவை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான செய்முறை பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தினத்தந்தி Related Tags : புதுச்சேரி பள்ளி விடுமுறை Puducherry school holidays