குறைமாதத்தில் பிறந்தாலும் குழந்தைதான்- காப்பீடு தர மறுத்த நிறுவனத்துக்கு நீதிமன்றம் கொடுத்த பதிலடி

மும்பையைச் சேர்ந்த ரிதா ஜோஷி என்பவருக்கு, 2018 செப்டம்பரில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர். ஆனால் இக்குழந்தைகள் 30 வாரங்களிலேயே பிறந்திருக்கின்றனர். இந்தக் குழந்தைகளுக்கு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டிருக்கிறது. ஜோஷி, 2007-ல் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்திடம் ரூ.20 லட்சம் மதிப்புள்ள இரண்டு காப்பீடுகளை எடுத்துள்ளார். தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் அதற்கான பிரீமியம் தொகையைச் செலுத்தி புதுப்பித்தும் வந்துள்ளார். இந்நிலையில் அவருடைய இரட்டைக் குழந்தைகளின் சிகிச்சைக்கு ஆன செலவு ரூ.11 லட்சத்தை கிளெய்ம் செய்ய … Read more

35 தங்க ஐபோன்களை ஆர்டர் செய்த மெஸ்ஸி! யாருக்காக.? எதற்காக.?

FIFA 2022 உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணி வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்காக 35 தங்க ஐபோன்களை கேப்டன் லியோனல் மெஸ்ஸி பரிசாக வழங்குகிறார். அணியில் ஒவ்வொரு வீரரின் பெயர், எண் மற்றும் அர்ஜென்டினா லோகோ பொறிக்கப்பட்டு தனித்துவமான வடிவமைக்கப்பட்டுள்ள இந்த iPhone 14 Pro போன்களை லியோனல் மெஸ்ஸி ஆர்டர் செய்தார். 24 காரட் தங்கத்தால் ஆன இந்த ஐபோன்களின் ஆர்டர் சனிக்கிழமை மெஸ்ஸியின் குடியிருப்பில் டெலிவரி செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக மெஸ்ஸி 175,000 … Read more

மேற்குவங்கு மாநிலத்தில் 51ஆண்டுகளுக்கு பிறகு சாகர்திகியை கைப்பற்றியது காங்கிரஸ் கட்சி!

கொல்கத்தா: மேற்கு வங்காளம் சாகர்திகி  சட்டப்பேரவை தொகுதி, மகாராஷ்டிரா மாநில பாஜக கோட்டையான கசாபாபேட் தொகுதி மற்றும் ஈரோடு கிழக்கு தொதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில், களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது. மேற்குவங்க மாநிலம் சாகர்திகி  இடைத்தேர்தலில்  சுமார் 51 ஆண்டுகளுக்கு பிறகு, காங்கிரஸ் கட்சி  வெற்றியை  பெற்றுள்ளது. 3மாநில சட்டமன்ற தேர்தலுடன் அருணாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.  பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு: எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிர்ச்சி!

ஈரோடு: அதிமுகவுக்கு செல்வாக்கு உள்ள மேற்கு மண்டலத்திலேயே பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளனர். இரட்டை இலை சின்னம் கிடைத்தும் மொத்தம் பதிவான வாக்குகளில் பாதியை கூட பழனிசாமி தரப்பால் பெற முடியவில்லை.

மாடியிலிருந்து குழந்தைகளை வீசிய கொடூர நபர் கைது| The brutal man who threw children from the floor was arrested

தானே, மஹாராஷ்டிராவில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த இரு குழந்தைகளை, இரண்டாவது மாடியிலிருந்து துாக்கி வீசிய கொடூர நபர் கைது செய்யப்பட்டார். இதில், ஒரு குழந்தை பலியானது; மற்றொரு குழந்தை படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறது. மஹாராஷ்டிராவின் தானே நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியில் ஆசிப் மற்றும் அவரது மனைவி வசிக்கின்றனர். இத்தம்பதிக்கு குழந்தை இல்லாத நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இவர்களின் பக்கத்து வீட்டில் வசிக்கும் நபருக்கு 5 வயதில் … Read more

திண்டுக்கல்: இடத்தகராறு; இருவரை துப்பாக்கியால் சுட்ட ஓய்வுபெற்ற ராணுவ வீரர்! – நடந்தது என்ன?

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர் தனபால். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர், திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை பகுதியிலுள்ள அகஸ்தியர்புர​த்தில் 5 ஏக்கர் நிலத்தை வாங்கி வாழை, எலுமிச்சை விவசாயம் செய்து வ​ந்திருக்கிறார். தொடர்ந்து அவரால் விவசாயம் செய்ய முடியாத நிலையில், தனது விவசாய நிலத்தில் நிலத்தை அய்யம்பாளையம் அருகேயுள்ள நெல்லூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவருக்கு விற்பனை செய்திருக்கிறார். காயமடைந்தவர் ​தனபால் விற்பனைசெய்த ஐந்து ஏக்கர் நில​த்தை அளவீடு செய்து பார்த்தபோது, இடத்தின் அளவு குறைவாக இருந்திருக்கிறது. இது குறித்து கருப்பையா​, ​ராஜாக்கண்ணு … Read more

1963ம் ஆண்டு நாகாலாந்து மாநிலம் உருவானதில் இருந்து முதன்முறையாக 2 பெண்கள் எம்எல்ஏக்களாக தேர்வு

கோகிமா: நாகாலாந்து மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில்  போட்டியிட்ட பெண் வேட்பாளர்களில் 2 பெண்கள் முதன்முறையாக  வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். 1963ம் ஆண்டு நாகாலாந்து மாநிலம் தோன்றிய காலத்திலிருந்து பெண்கள் எம்எல்ஏவாக தேர்வானது இல்லை. இந்த நிலையில், சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு, நாகலாந்து வரலாற்றில்,  முதல் முறையாக ஹெக்கானி ஜக்காலு  மற்றும் சல்ஹுட்டோனு குர்ஸே ஆகிய 2 பெண்கள் எம்எல்ஏக்களாக  தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 60தொகுதிகளைக்கொண்ட நாகலாந்து மாநில சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 27ந்தேதி … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அமோக வெற்றி!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அமோக வெற்றி பெற்றுள்ளார். இடைத்தேர்தல் வெற்றியின் மூலம் 39 ஆண்டுகளுக்கு பிறகு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஈரோடு சட்டமன்ற உறுப்பினரானார்.

மார்கோனி பரிசு வென்ற இந்திய வம்சாவளி|வின்ட்சர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட ஹாரி? -உலகச் செய்திகள்

கம்போடியாவில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், இந்த நோய்த்தொற்று மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவவில்லை என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். பப்புவா நியூ கினியாவின் கிம்பே பகுதியில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. ஜப்பானில் தன்பாலின திருமணங்கள் தடைசெய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்த நடவடிக்கை பாகுபாட்டின் வெளிப்பாடு இல்லை என்று அரசு தரப்பில் விளக்களிக்கப்பட்டிருக்கிறது. கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெலானி ஜோலி (Mélanie Joly) G20 நாடுகளின் மாநாட்டில் … Read more

பிரித்தானியாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற 10 ஆண்டுகள் போராடும் கடினமான வழிமுறை: ஒரு திடுக் செய்தி

பிரித்தானியாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற 10 ஆண்டுகள் போராடும் கடினமான வழிமுறைகுறித்து அறிந்திருக்கிறீர்களா? படிக்கவே கொடுமையாக இருக்கிறது அந்த செய்தியை… வேண்டுமென்றே அறிமுகம் செய்யப்ப்பட்ட கொடுமையான வழிமுறை 2012ஆம் ஆண்டு, அப்போதைய உள்துறைச் செயலராக இருந்த தெரஸா மேயால் அறிமுகம் செய்யப்பட்டது, பிரித்தானியாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெறும் 10 ஆண்டுகள் காத்திருக்கும் வழிமுறை. அதாவது, பிரித்தானியாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற விரும்பும் வெளிநாட்டவர்கள், 10 ஆண்டுகள் பிரித்தானியாவில் சட்டப்படி, முறைப்படி தங்கியிருக்கவேண்டும். புலம்பெயர்தலைக் … Read more