ஈரோடு மாவட்டத்தில் புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு நீர்த்தேக்கத்திலிருந்து 108 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விட அரசு ஆணை

ஈரோடு: ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், வரட்டுப்பள்ளம் அணையின்  புதிய  ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு 05.03.2023 முதல் 12.06.2023 முடிய வரட்டுப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து  108 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டத்திலுள்ள சங்கராபாளையம், எண்ணமங்கலம் மற்றும் அந்தியூர் கிராமத்திலுள்ள 2924 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கூறியுள்ளார்.

“அதிமுக-வின் படுதோல்விக்கு துரோகி எடப்பாடி பழனிசாமிதான் காரணம்" – ஓபிஎஸ் காட்டம்

நடந்துமுடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட தென்னரசு 43,923 வாக்குகள் மட்டுமே பெற்று, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இத்தகைய தோல்விக்குப் பிறகு, `பணநாயகம் வென்றுவிட்டது, ஜனநாயகம் தோற்றுவிட்டது’ என அ.தி.மு.க தரப்பில் கூறப்பட்டது. மேலும், அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், `ஜனநாயக முறையில் தேர்தல் நடந்திருந்தால் அ.தி.மு.க வென்றிருக்கும்’ என நேற்று குற்றம்சாட்டியிருந்தார். எடப்பாடி பழனிசாமி இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “கழகத்தை அழிவுப் பாதைக்கு … Read more

வங்கதேச அணியை துவம்சம் செய்த வீரர்! 12வது சதம் விளாசி மிரட்டல்

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேசன் ராய், வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் அபார சதம் விளாசினார். சரிந்த தொடக்க விக்கெட்டுகள் இங்கிலாந்து – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி டாக்காவில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வங்கதேசம் பந்துவீச்சை தெரிவு செய்ததால், இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாடியது. @Getty Images தொடக்க வீரர் பிலிப் சால்ட் 7 ஓட்டங்களிலும், மாலன் 11 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த ஜேம்ஸ் வின்ஸ் 5 … Read more

ஈரோடு இடைத்தேர்தல் தோல்விக்கு எடப்பாடி என்ற நம்பிக்கை துரோகியே காரணம்! ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை!

சென்னை: ஈரோடு இடைத்தேர்தல் தோல்விக்கு எடப்பாடி என்ற நம்பிக்கை துரோகியே காரணம் என  ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்துள்ள நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்  பரபரப்பு அறிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “ஒரு கட்சியினுடைய வலிமை அதனுடைய சுயபலத்தில் இல்லை. அந்தக் கட்சியை எதிர்க்கின்ற எதிர்கட்சிகளின் வலிவின்மையில் தான் இருக்கிறது” என்றார் பேரறிஞர் அண்ணா . நேற்றைய … Read more

ஒன்றிய அரசு நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியீடு

டெல்லி: ஒன்றிய அரசு நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. கடந்த டிசம்பர் முதல் பிப்ரவரி வரை நடந்த தேர்வுக்கான முடிவுகளை ctet.nic.in என்ற தளத்தில் அறியலாம். முதல் தாள் தேர்வு எழுதிய 14.22 லட்சம் பேரில் 5.79 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.   

வேலூரை அச்சுறுத்தும் சுகாதார சீர்கேடு – நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?!

கடந்த அதிமுக ஆட்சியில், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் காலியாக இருந்த உள்ளாட்சி அமைப்புகளில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்தாண்டு தேர்தல் மூலம் உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தேடுக்கப்பட்டனர். இதில் வேலூர் மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சுஜாதா, மேயராக பொறுப்பேற்ற சில மாதங்களில், வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். கொட்டுபவரை வீடியோ எடுத்து மாநகராட்சிக்கு தெரிவிப்பவருக்கு 200 ரூபாய் அன்பளிப்பு கொடுக்கப்படும்” என்ற அதிரடி அறிவிப்பு ஒன்றை செய்து, … Read more

ஹரி மேகன் பிரித்தானிய வீட்டிலிருந்து வெளியேற உத்தரவு: மன்னர் சார்லஸின் கோபத்தைத் தூண்டியது எது?

ஹரி மேகன் தம்பதியரை எலிசபெத் மகாராணியார் அவர்களுக்குக் கொடுத்த வீட்டிலிருந்து வெளியேற மன்னர் சார்லஸ் உத்தரவிட்டுள்ளார். இளவரசர் ஹரியும் மேகனும், ஓபரா பேட்டி முதல் நெட்ப்ளிக்ஸ் தொடர்வரை, பல்வேறு வகையில் பிரித்தானிய ராஜ குடும்பத்துக்கு அவமானங்களை ஏற்படுத்திக்கொண்டே இருந்தபோதுகூட மௌனம் காத்த மன்னர் சார்லஸ், தற்போது இப்படி ஒரு அதிரடி முடிவை எடுக்கக் காரணம் என்ன?  மன்னரின் கோபத்தைத் தூண்டியது எது? தன் மனைவியாகிய ராணி கமீலாவை ஹரியும் மேகனும் அவமதிக்கத் துவங்கியதாலேயே மன்னர் இந்த முடிவெடுத்துள்ளார். … Read more

வீட்டிற்குள்ளேயே ஃபேன், ஏசி வைத்து ஜோராக கஞ்சா செடி வளர்த்த பலே கில்லாடிகள் கைது!  இது சென்னை சம்பவம் – வீடியோ

சென்னை: வீட்டிற்குள்ளேயே ஃபேன், ஏசி போட்டு அமோகமாக கஞ்சா செடி வளர்த்து வந்த 4 பலே கில்லாடிகளை சென்னை காவல்துறை யினர் கைது செய்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் கஞ்சா உள்பட போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் வளர்க்க தடை உள்ளது. இருந்தாலும், சிலர் மறைமுகமாக கஞ்சா செடி வளர்த்து வருவதும்,  அவர்கள் கைது செய்யப்படுவதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. பொதுவாக, மலைப்பிரதேசங்களிலும் குளிர் பிரதேசங்களிலும் பயிர்களுக்கு ஊடே கஞ்சா செடியை சிலர் வளர்த்து … Read more

மானியத்துடன் உரம் வாங்க சாதி விவரங்களா?: அன்புமணி ராமதாஸ் பேச்சு

சென்னை: மானியத்துடன் உரம் வாங்க சாதி விவரங்களை கேட்கும் நடவடிக்கையை மத்தியஅரசு கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். உர விற்பனை மென்பொருளில் சாதி பெயர் வசதியை சேர்த்துள்ளது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.