வெளியே போங்கள் மூத்த வழக்கறிஞரிடம் கொதித்த தலைமை நீதிபதி| Get out, Chief Justice fumed at senior advocate

புதுடில்லி :மனு விசாரணை தொடர்பாக கடும் வாக்குவாதம் நடந்த நிலையில், கோபம் அடைந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, டி.ஒய்.சந்திரசூட், ‘குரல் எழுப்பாதீர்கள்; வெளியே போங்கள்’ என, மூத்த வழக்கறிஞரிடம் கடுமையுடன் குறிப்பிட்டார். வாக்குவாதம் தலைமை நீதிபதி சந்திரசூட் அடங்கிய அமர்வு நேற்று பல வழக்குகளை விசாரித்தது. அப்போது, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவரான, மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், உச்ச நீதிமன்றத்துக்கு அரசு அளித்துள்ள நிலத்தில், வழக்கறிஞர்களுக்கு அறைகள் கட்டுவது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், … Read more

ரஷ்ய தீமை என்றும் வெல்லாது…ஏவுகணை தாக்குதலை எதிர்த்து கொந்தளித்த ஜெலென்ஸ்கி

ஜபோரிஜியாவில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் மூன்று பேர் வரை கொல்லப்பட்ட நிலையில், “ரஷ்ய தீமை வெல்லாது” என உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதல் ஓராண்டை நிறைவு செய்து இருக்கும் நிலையில், கிழக்கு உக்ரைனில் உள்ள பாக்முட் நகரை சுற்றி வளைக்க திட்டமிட்டு ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உக்ரைனின் ஜபோரிஜியா(Zaporizhzhia) நகரின் மீது அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் … Read more

முகம் அடையாளம் காண திருமலையில் ஏற்பாடு| Organized in Tirumala for facial recognition

திருப்பதி, ”திருமலையில் முகம் அடையாளம் காணும் தொழில்நுட்பம், சோதனை முறையில் செயல்படுத்தப்படுகிறது,” என, தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி நேற்று தெரிவித்தார். திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி நேற்று கூறியதாவது: திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வழங்கும் வசதிகள் வெளிப்படைத்தன்மையுடனும், விரைவாகவும் இருப்பதை உறுதி செய்வோம். இதற்காகவே, முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் திருமலையில் மார்ச் 1ம் தேதி முதல் சோதனை முறையில் செயல்படுத்தப்படுகிறது. திருமலையில் இடைத்தரகர் முறையை … Read more

உக்ரைன் போரால் ஏற்பட்டுள்ள சர்வதேச பாதிப்புகளை குறைக்க நடவடிக்கை | Russo-Ukraine War: India, US Ministerial Consultation

புதுடில்லி: ரஷ்ய- உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக ஜி-20 வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க அமைச்சர் ஆண்டனி பிளிங்கனிடம் விரிவாக ஆலோசித்தார். ஜி-20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு டில்லியில் நடந்து வருகிறது. இம்மாநாட்டில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனிடம் பேச்சு நடத்தினார். அப்போது உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரால் ஏற்பட்டுள்ள சர்வதேச பாதிப்புகளை குறைக்க நடவடிக்கை எடுப்பது பற்றியும், இந்திய -பிசிபிக் … Read more

நாய் இறைச்சி உணவகத்திற்கு அனுமதி! ஆரோக்கியமான உணவு இயக்கத்தின் கீழ் வட கொரிய ஜனாதிபதி ஒப்புதல்

வட கொரிய மக்களிடையே ஆரோக்கியமான உணவை ஊக்குவிக்கும் வகையில் புதிய நாய் இறைச்சி கடைகளுக்கு அந்த நாட்டின் ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஒப்புதல் வழங்கியுள்ளார். நாய் இறைச்சி கடைகளுக்கு அனுமதி  கோவிட் கால பேரழிவு, போர் பதட்டங்கள் மற்றும் உலக நாடுகளின் தனிமைப்படுத்தல் போன்ற சிக்கல்களால் கடுமையான உணவு தானிய தட்டுப்பாடு ஏற்பட்டு வட கொரியாவில் பல உயிர்கள் பட்டினியால் உயிரிழந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் வட கொரிய மக்களிடையே ஆரோக்கியமான உணவை ஊக்குவிக்கும் … Read more

03.03.23 | Daily Horoscope | Today Rasi Palan | March – 03 | வெள்ளிக்கிழமை | இன்றைய ராசி பலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

75 வயதில் காதல் திருமணம்! கன்னம் சிவக்க மணப்பெண்ணாக ஜொலித்த மூதாட்டி

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதியோர் இல்லத்தில் சந்தித்த 70 வயது அனுசுயா ஷிண்டே என்ற மூதாட்டியை பாபுராவ் பாட்டீல் என்ற முதியவர் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். முதுமையில் பூத்த காதல் மகாராஷ்டிரா மாநிலத்தில் கோலாப்பூரில் உள்ள முதியோர் இல்லத்தில் சந்தித்து கொண்ட 75 வயது முதியவரும் 70 வயது மூதாட்டியும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். வாழ்க்கை துணையை இழந்து, பின் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்த பாபுராவ் பாட்டீல்(75)-அனுசுயா ஷிண்டே(70) ஆகிய இருவரும் முதியோர் இல்லத்தில் சந்தித்து காதலித்து தற்போது … Read more

மதுரை எய்ம்ஸ்; “கட்டுமானப் பணிகள் 2024 டிசம்பரில் தொடங்கும்!" – ம.சுப்பிரமணியன் தகவல்

`மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு நிதி ஒதுக்காமல் ஒன்றிய பா.ஜ.க அரசு தாமதப்படுத்தி வருகிறது’ என தி.மு.க-வும், அதன் கூட்டணிக் கட்சியினரும் சாடி வருகின்றனர். இந்த நிலையில், `2024-ல் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடங்கும்’ என சுகாதாரத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். கட்டண அறையை திறந்து வைத்தபோது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரூ.1.2 கோடி மதிப்பில் கட்டணப் படுக்கை வசதியை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் … Read more

3வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் இந்திய அணி 163 ரன்களுக்கு ஆல்அவுட்: ஆஸ்திரேலிய அணிக்கு 76 ரன்கள் இலக்கு

இந்தூர்: 3வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் இந்திய அணி 163 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணிக்கு 76 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக புஜாரா 59 ரன்களை எடுத்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் லியோன் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

“அராஜகம், அத்துமீறல், ஜனநாயகப் படுகொலை..!" – ஈரோடு இடைத்தேர்தல் குறித்து எடப்பாடி பழனிசாமி

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், இன்று காலை முதலே முன்னிலை வகித்துவந்த, தி.மு.க கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசுவை 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இறுதிச்சுற்று முடிவுகளின்படி, இளங்கோவன் 1,10,039 வாக்குகளும், தென்னரசு 43,642 வாக்குகளும் பெற்றனர். மற்றபடி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 10,804 வாக்குகளும், தே.மு.தி.க வேட்பாளர் சொற்ப வாக்குகளும் பெற்று டெபாசிட் இழந்தனர். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இந்த நிலையில் அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, … Read more