மதுரை சரவணா ஸ்டோரில் ஏற்பட்ட தீ விபத்தால் 3 பேர் மூச்சுத்திறனல்

மதுரை: மதுரை சரவணா ஸ்டோரில் ஏற்பட்ட தீ விபத்தால் 3 பேர் மூச்சுத்திறனல் ஏற்பட்டு மருத்துவனமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரை சரவணா ஸ்டோர் கடையின் 9-வது தளத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக தீ எரிந்து வருகிறது

முதல்வர் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக ஏன் இருக்க கூடாது?: பரூக் அப்துல்லா| Why CM Stalin should not be PM candidate?: Farooq Abdullah

ஸ்ரீ நகர்: முதல்வர் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக ஏன் இருக்க கூடாது? என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் ப்ரூக் அப்துல்லா கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், எதிர்கட்சிகள் ஒற்றுமையாக தேர்தலை சந்தித்தபின் பிரதமர் தேர்வு பற்றி முடிவெடுக்கலாம். முதல்வர் ஸ்டாலின் எதிர்கட்சிகளை ஒருங்கிணைந்த முன்னெடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது எனக் கூறியுள்ளார். ஸ்ரீ நகர்: முதல்வர் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக ஏன் இருக்க கூடாது? என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் ப்ரூக் அப்துல்லா கூறியுள்ளார்.மேலும் அவர் கூறுகையில், எதிர்கட்சிகள் … Read more

50 லட்சம் அப்பாச்சி பைக்குகளை விற்ற டிவிஎஸ் மோட்டார்

கடந்த 2005 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டிவிஎஸ் மோட்டார் அப்பாச்சி பைக்குகள் தற்போது 160cc முதல் 310cc வரையிலான மாறுபட்ட பிரிவுகளில் 60க்கு மேற்பட்ட நாடுகளில் 50 லட்சத்துக்கு அதிகமான வாகனங்களை விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2020 அக்டோபரில் 4 மில்லியன் யூனிட் விற்பனை மைல்கல்லை கடந்த நிலையில் 27 மாதங்களுக்குப் பிறகு உலகளவில் 5 மில்லியனுக்கும் அதிகமான அப்பாச்சி பைக்குகளை விற்பனை செய்துள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் அப்பாச்சி ரோட்ஸ்டர் பிரிவில் அப்பாச்சி ஆர்டிஆர் 160, … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; நாளை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை!

காலை 8 மணிக்குத் தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை! ஈரோடு கிழக்குத் தொகுதியில் கடந்த மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவானது, இரவு 9:30 மணி வரை நீடித்தது. எந்தவித சலசலப்பு, சச்சரவுகளுமின்றி வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் 74.79 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாகத் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நாளைய தினம் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, … Read more

சீனா-ரஷ்யா உறவுகளுக்கு ஆணையிட அமெரிக்காவுக்கு உரிமை இல்லை! கொந்தளித்த சீனா

ரஷ்யாவுக்கு உதவினால் பின் விளைவுகள் மோசமாக இருக்கும் என அமெரிக்கா எச்சரித்த நிலையில், எங்களுக்கு ஆணையிட உரிமை இல்லை என சீனா பதிலடி கொடுத்துள்ளது. சி.ஐ.ஏ இயக்குனர் குற்றச்சாட்டு கடந்த வெள்ளிக்கிழமை ஊடகத்திடம் பேசிய சி.ஐ.ஏ இயக்குனர் பில் பர்ன்ஸ், ‘உக்ரைனுடனான மோதலில் ரஷ்யாவுக்கு ராணுவ ரீதியாக உதவும் வகையில், ஆபத்தான உபகரணங்களை வழங்க சீனாவின் தலைமை பரிசீலித்து வருவதாக நாங்கள் நம்புகிறோம்’ என குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், அவரது இந்தக் குற்றச்சாட்டை சீனா மறுத்தது. அத்துடன் ரஷ்யா-உக்ரைன் … Read more

பிளஸ்1, பிளஸ்2 மாணாக்கர்களுக்கு 3ந்தேதி ஹால்டிக்கெட் விநியோகம்…

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், பிளஸ்1, பிளஸ்2  பொதுத்தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கு மார்ச் 3ந்தேதி ஹால்டிக்கெட் விநியோகிக்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்து உள்ளது. ஹால்டிக்கெட்  இணையத்தில்  இருந்து பதிவிறக்கம் செய்து கொடுக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த  பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, வரும், 13, 14ம் தேதிகளில் பொதுத் தேர்வு துவங்க உள்ளது. தேர்வுக்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதன் முதற்கட்டமாக, பிளஸ் 1, பிளஸ் 2 செய்முறை … Read more

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 3 பேருக்கு ஆயுள் தண்டனை: போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளனர். மறுவாழ்வு இல்லத்தில் இருந்த 14 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொழிலில் தள்ளியதாக வழக்கு தொடரப்பட்டது. 3 பெண்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொரோனா: சீனாவைக் குற்றம்சாட்டும் அமெரிக்கா | வடகொரியாவில் உணவுப் பற்றாக்குறை! – உலகச் செய்திகள்

பறவைக் காய்ச்சல் காரணமாக, சீனாவில் கோழிகள் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கோழி இறைச்சியின் விலை அங்கு பலமடங்கு அதிகரித்திருக்கிறது. ஆஸ்திரேலியாவில் முகமது ரஹமதுல்லா சையத் அகமது என்ற தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர், தூய்மைப் பணியாளரை கத்தியால் குத்தியதுடன், காவலர்களையும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாக, அவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். `கொரோனா வைரஸ் சீனாவின் வூஹானின் ஆய்வகங்களிலிருந்துதான் அநேகமாகப் பரவியிருக்கக் கூடும்’ என அமெரிக்க உளவு அமைப்பான FBI-ன் இயக்குநர் கிறிஸ்டோபர் வ்ரே  (Christopher Wray) தெரிவித்திருக்கிறார். … Read more

ரஷ்யாவில் வெளிநாட்டு வார்த்தைகள் பயன்படுத்த தடை! புடின் உத்தரவு

ரஷ்ய அரசு அதிகாரிகள் வெளிநாட்டு வார்த்தைகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. புடின் கையெழுத்து ரஷ்ய அரசு அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செய்யும்போது வெளிநாட்டு வார்த்தைகள் மற்றும் முகபாவனைகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட சட்டத்தின்படி, அதிகாரிகள் ரஷ்ய மொழியை முறையாகப் பயன்படுத்த வேண்டும். இதற்கான உத்தரவில் அதிபர் விளாடிமிர் புடின் செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டார். AP சொற்கள் மற்றும் முகபாவனைகள் ரஷ்ய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள வாசகத்தின்படி, 2005 சட்டத்தின் திருத்தங்கள் ‘ரஷ்யாவின் நிலையைப் பாதுகாப்பதற்காகவும் ஆதரிப்பதற்காகவும்’ … Read more

பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.50 லட்சம் கோடி!

டெல்லி: 2023 பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.50 லட்சம் கோடி என மத்திய நிதியமைச்சகம்  தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் ஒரே வரியாக சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) கடந்த 2017 ஜூலை மாதம் அமலுக்கு வந்தது. அதன்படி ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வசூல் குறித்த தகவலை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டு வருகிறது.. அதன்படி, கடந்த மாதம் (பிப்ரவரி) ஜிஎஸ்டி வசூல் ரூ.1.50 லட்சம் கோடி வசூலாகி உள்ளது.  கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.1.55 … Read more