தலைப்பு செய்திகள்
நாகாலாந்து சட்டமன்றத்தில் முதல் முறையாக காலடி எடுத்து வைக்கும் பெண் எம்.எல்.ஏ.க்கள்… 60ஆண்டுகளில் மிக பெரிய திருப்பம்
நாகலாந்து, நாகலாந்து சட்டமன்ற தேர்தலில் இம்முறை 183 வேட்பாளர்களில் 4 பெண் வேட்பாளர்கள் களமிறங்கியது, தேர்தல் களத்தை சுவாரஸ்யமாக்கியிருந்தது. இந்த முறையாவது முதல் பெண் எம்.எல்.ஏ சட்டமன்றத்திற்கு காலடி எடுத்து வைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு தான் இதற்கு காரணமாகியிருந்தது. இத்தனைக்கும் இங்கு ஆண் வாக்களர்களை விட பெண் வாக்களர்களே அதிகம். சுமார் ஆறு லட்சத்து 56 ஆயிரத்து 143 பெண் வாக்காளர்களை கொண்ட நாகலாந்தில் பெண்களின் உரிமைக்காக குரல் கொடுக்க ஒரு பெண் எம்.எல்.ஏ கூட இல்லாதது … Read more
ஆன்லைன் ரம்மி; மகாபாரதத்தை குறிப்பிட்டு சாடிய ஸ்டாலின் – நாராயணன் திருப்பதி பதில்
தமிழ்நாட்டில் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் இருக்கும் முக்கிய மசோதாக்களில் ஒன்று, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு தடை விதிக்கவேண்டி, அரசு கொண்டுவந்த சட்ட மசோதா. முதல்வர் ஸ்டாலின் இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற தனது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “மகாபாரதத்தில் சூதாட்டம் இருப்பதால் தான் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க மறுக்கிறீர்களா…” என விமர்சித்துக் கேள்வியெழுப்பியிருந்தார். இந்த நிலையில் தமிழ்நாடு பா.ஜ.க-வின் மாநில துணைத் தலைவர் நாராயணன் … Read more
கடைசி வரை போராடிய அஸ்வின், ஜடேஜா..இந்திய அணி படுதோல்வி..பதிலடி கொடுத்த அவுஸ்திரேலியா
இந்தூர் டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இந்தூர் டெஸ்ட் இந்திய கிரிக்கெட் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில், இந்தூரில் மூன்றாவது டெஸ்ட் போட்டி 1ஆம் திகதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 109 ஓட்டங்களும், அவுஸ்திரேலிய அணி 197 ஓட்டங்களும் எடுத்தன. அதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்க்சை ஆடிய இந்திய அணி 163 ஓட்டங்களில் சுருண்டது. அதிகபட்சமாக புஜாரா 59 ஓட்டங்கள் எடுத்தார். அவுஸ்திரேலிய அணியின் … Read more
மாசி திருவிழா 7வது நாள்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சண்முகர் வீதி உலா – வீடியோக்கள்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் மாசித்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், 7ம் நாளான இன்று சண்முகர் விதி உலா வந்தார். அவரை ஏராளமான பக்தர்கள் தரிசித்து ஆசி பெற்றனர். தமிழக்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா பிப்ரவரி 25ந்தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவையொட்டி, தினசரி சண்முகர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 7-ம் திருவிழாவையொட்டி (மார்ச் 3-ம் … Read more
ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று: கே.எஸ்.அழகிரி பேட்டி
சென்னை: ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்குத் தொகுதி வெற்றிக்கு திமுக ஆட்சியின் மீதான மக்களின் திருப்தியே காரணம் என்று அவர் தெரிவித்தார்.
இந்தியா எங்கள் குருபீடம்: கைலாசா நாட்டு ‛‛பெண் தூதர் பேச்சு| India Our Temple: Kailash Woman Ambassador Speech
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: சாமியார் நித்யானந்தாவின் பெண் சிஷ்யை விஜயபிரியா என்பவர், ஐ.நாவிற்கான கைலாசாவின் நிரந்தர தூதர் எனக் குறிப்பிட்டு, ‛இந்தியா எங்கள் குருபீடம் என்றும், ஹிந்து மதத்திற்கு எதிரான சக்திகள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும்’ இந்திய அரசை வலியுறுத்துவதாக வீடியோ வெளியிட்டுள்ளார். சர்ச்சைக்கு பெயர்போன சாமியார் நித்யானந்தா, ஹிந்துக்கள் மட்டுமே வாழும் ‛கைலாசா’ என்னும் தனி நாட்டை துவங்கியுள்ளதாக அறிவித்ததுடன், கைலாசா ரிசர்வ் வங்கி துவங்கியுள்ளதாகவும் கூறி அதிர்ச்சியடைய … Read more
குட்கா நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்..!
புதுடெல்லி, கடந்த 2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். ஆண்டுதோறும் இதுசம்பந்தமாக அறிவிப்பாணைகளும் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து கடந்த மாதம் 25-ந்தேதி தீர்ப்பளித்தது. சென்னை … Read more
சாப்பிடும் கேப்பில் தப்பிய அக்யூஸ்ட்; 2 மணி நேரமாக மூச்சிரைக்கத் தேடிய போலீஸ் – என்ன நடந்தது?
அருப்புக்கோட்டை அருகே கல்லூரணி மேலத்தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன் (59). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கும் வீடு கட்டுவது தொடர்பாக முன்பகை இருந்திருக்கிறது. இந்த நிலையில், இருவருக்குமிடையே நேற்றைய தினம் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது கிருஷ்ணமூர்த்திக்கு ஆதரவாக அவரது வீட்டில் வசிக்கும் தங்கபாண்டி (40) என்பவர் வந்து பேசியதாகத் தெரிகிறது. தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி சொன்னதின்பேரில், வேல்முருகனின் வீட்டின் முன்னால் இருந்த தேக்கு மரத்தை தங்கபாண்டி வெட்டியிருக்கிறார். இதைத் தட்டிக்கேட்ட வேல்முருகனின் மனைவி மகாலட்சுமியையும், அரிவாளால் தங்கப்பாண்டி … Read more
பனிப்பாறைச் சரிவில் சிக்கி புதைந்த நபர் செய்த செயல்: ஒரு வைரல் வீடியோ
சுவிட்சர்லாந்தில் பனிப்பாறைச் சரிவில் சிக்கிய ஒருவர் பனியில் புதைந்தார். அவரைத் தேடி மீட்புக் குழுவினர் விரைந்தனர். மீட்புக் குழுவினரின் கமெராவில் சிக்கிய காட்சி சுவிட்சர்லாந்திலுள்ள Lidairdes என்ற பகுதியில் பனிச்சறுக்கு விளையாடச் சென்றுள்ளார் ஒருவர். அப்போது பனிப்பாறைச் சரிவில் அவர் சிக்கிக்கொண்டார். அவர் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் மீட்புக்குழுவினரின் உதவியை நாட, மீட்புக் குழுவினர் அவரது குடும்பத்தினர் கூறிய இடத்துக்கு விரைந்துள்ளனர். நல்லவேளையாக அவர் தான் செல்லும் பாதை குறித்து தன் குடும்பத்தினரிடம் முன்னரே தெரிவித்துள்ளார். … Read more