மறைந்த மனைவியின் சிலிக்கான் சிலையுடன் வாழும் கணவர் – கொல்கத்தா அரசு அதிகாரியின் காதல் கதை!

கொல்கத்தாவைச் சேர்ந்த 65 வயதான ஓய்வுபெற்ற அரசு ஊழியரான தபஸ் சாண்டில்யாவின் மனைவி இந்திராணி. கோவிட்-19 தொற்றுநோயின் இரண்டாவது அலையின் போது மே 4, 2021 அன்று இந்திராணி இறந்துவிட்டார். அவர் பிரிவைத் தாங்க முடியாத தபஸ் சாண்டில்யா, தனது மனைவியின் நினைவாக 2.5 லட்சம் செலவில் 30 கிலோ எடை கொண்ட சிலிக்கான் சிலை ஒன்றைச் செய்து வீட்டில் வைத்துள்ளார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், தன் மனைவியின் சிலையை தன்னுடனே வீட்டில் வைத்துத் தங்க நகைகளை … Read more

அழகிய இளம்பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ரஷ்ய ஜனாதிபதி… செய்தி ஏஜன்சிகளுக்கும் உத்தரவு

ரஷ்யாவைச் சேர்ந்த அழகிய இளம்பெண் ஒருவருக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி புடின். இளம்பெண் அன்னா (Anna Linnikova, 22) என்ற அழகிய இளம்பெண், ரஷ்யா சார்பில் இம்மாதம் 14ஆம் திகதி அமெரிக்காவில் நடைபெறும் பிரபஞ்ச அழகிப்போட்டியில் பங்கேற்கிறார். அன்னாவுக்கு புடின் வெளிப்படையாக தனது ஆதரவைத் தெரிவித்துள்ளதுடன், புடின் ஆதரவு செய்தி ஏஜன்சிகள் அனைத்தும் அவருக்கு ஆதரவளிக்க கிரெம்ளின் வட்டாரம் உத்தரவிட்டுள்ளதாம். image: @ann_lnnn/EAST2WEST NEWS கோபத்தில் உக்ரைன் ஆனால், பல நாடுகள் ரஷ்யா மீது … Read more

ராகுல் காந்தி ஒரு போர்வீரன், அரசின் பலத்திற்கு பயப்படுவதில்லை! பிரியங்கா

லக்னோ: ராகுல் காந்தி ஒரு போர்வீரன், அரசின் பலத்திற்கு பயப்படுவதில்லை என உ.பி.யில் ராகுல்காந்தியுடன் பாதயாத்திரையில் மீண்டும் இணைந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா வத்ரா தெரிவித்தார். ராகுலின் பாரத்ஜோடோ யாத்திரை இன்று காலை டெல்லியில் தொடங்கிய நிலையில், பிற்பகல் உ.பி. மாநிலம் காஜியாபாத்தில் நுழைந்துள்ளது.  அங்குள்ள  லோனி எல்லையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் ராகுலுக்க  பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரியங்கா,  கன்னியாகுமரியில் இருந்து 3,000 கி.மீ தூரம் கடந்து … Read more

"பெண் காவலருக்கே பாதுகாப்பில்ல; திமுக-வில் உள்ள ரெளடிகளுக்கு தைரியம் வந்துவிட்டது"- வானதி சீனிவாசன்

தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி உட்பட பலர் கலந்துகொண்ட பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழாவில், பெண் காவலருக்கு தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் பலவும் தி.மு.க-வுக்கெதிராக கண்டனம் தெரிவித்துவருகின்றன. இந்த நிலையில், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றவாளிகளைக் கைதுசெய்யவிடாமல் தடுத்தவர்களையும் கைதுசெய்ய வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார். வானதி சீனிவாசன் இது குறித்து வானதி சீனிவாசன் … Read more

இறப்பு எண்ணிக்கை… தீவிரமடையும் பாதிப்பு: மருத்துவர்களே இறுதியில் ஒப்புக்கொள்ளும் பரிதாபம்

சீனாவில் கொரோனா தொடர்பான இறப்பு எண்ணிக்கை மிக மிக அதிகம் என்பதை அதிகாரிகளே தற்போது ஒப்புக்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 70% பேர்களுக்கும் பாதிப்பு ஷாங்காய் பகுதியில் மட்டும் மொத்த மக்கள் தொகையான 25 மில்லியனில் 70% பேர்களுக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், சீன பயணிகள் தொடர்பில் மேற்கத்திய நாடுகள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு அந்த நாடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் எதிர்விளைவுகள் கட்டாயம் எதிர்பாருங்கள் எனவும் சீனா மிரட்டல் விடுத்துள்ளது. … Read more

இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டி அணியில் ஜஸ்பிரித் பும்ரா சேர்க்கப்பட்டுள்ளார்…

இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை தேசிய தேர்வுக் குழு சேர்த்துள்ளது. முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக செப்டம்பர் 2022 முதல் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து விலகி இருக்கும் பும்ரா ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை போட்டியில் இருந்தும் விலகினார். தேசிய கிரிக்கெட் அகாடமியால் (NCA) நடத்திய புத்துணர்ச்சி முகாமில் கலந்துகொண்ட பும்ரா தற்போது முழு உடல் தகுதி பெற்றுள்ளார். விரைவில் டீம் இந்தியா … Read more

முன்னாள் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் முன்ஜாமின் கோரி கடலூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்..!!

கடலூர்: முன்னாள் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் முன்ஜாமின் கோரி கடலூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், அவரது சகோதரர் தங்கமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் முன்னாள் உதவியாளரின் குடும்பத்தினரை தாக்கிய புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மர்மமான முறையில் உயிரிழக்கும் காட்டு பன்றிகள்: ஆப்பிரிக்கன் ஸ்வின் காய்சசலா என, சந்தேகம்| Wild boars die mysteriously: ‘African swine flu’, suspected

கூடலூர்:முதுமலையில், காட்டு பன்றிகள் உயிரிழப்புக்கு, ஆப்பிரிக்கன் ஸ்வின் காய்சசல் (African Swine flu) பாதிப்பா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், அதன் மாதிரிகள், ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பக வன பகுதியில் நவ., மாதம், காட்டு பன்றிகள் ஆப்பிரிக்கன் ஸ்வின் காய்சசல் (African Swine flu) தாக்கி உயிரரிழந்தது தெரியவந்தது. இந்நிலையில், நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமை … Read more

`விநோத ஆசைதான், ஆனா, இது என் கனவு' ஓநாயை போல மாற 18 லட்சம் ரூபாய் செலவு செய்த நபர்!

ஆசை இல்லா மனிதர்கள் இல்லை. தும்பியை விரட்டி பிடிப்பது, பட்டம் விடுவது எனச் சின்ன சின்ன ஆசைகள் முதல், வீடு கட்டுவது, செட்டில் ஆவது என நீண்ட ஆசைகளையும் பலர் வைத்திருப்பதுண்டு. ஆனால் ஒருவர் ஓநாயைப் போல மாற வேண்டும் என்ற வினோதமான ஆசையை நிறைவேற்றி இருக்கிறார். ஓநாய் உலக அளவில் அதிகரிக்கும் முட்டை ஏற்றுமதி! நாமக்கலில் வரலாறு காணாத விலை உயர்வு! அதெப்படி எனக் கேட்கிறீர்களா, ஜப்பானைச் சேர்ந்த ஒருவருக்கு சிறுவயதில் இருந்தே ஓநாயை போல … Read more