'இடது சிறுநீரகம் விற்பனைக்கு உள்ளது' பெங்களூரு இளைஞரின் போஸ்டர் வைரல்!

வாடகை வீட்டின் உரிமையாளர் கேட்கும் வைப்புத்தொகையை செலுத்த பணம் தேவைப்படுவதால், தனது இடது சிறுநீரகம் விற்பனைக்கு உள்ளதாக பெங்களூரூவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒட்டிய போஸ்டர் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. அதிகப்படியான டெபாசிட் தொகை பெங்களூரில் வாடகைக்கு ஒரு வீட்டைப் பெறுவதற்கான அதிகப்படியான டெபாசிட் தொகை கேட்கப்படுவது இணையத்தில் பரபரப்பான தலைப்பாக மாறியது. பல சந்தை ஆய்வுகளின்படி, பெங்களூரு வீட்டு உரிமையாளர்கள் வாடகைக்கு குடியிருக்க வருபவர்களிடமிருந்து அதிக வாடகை மற்றும் டெபாசிட் பணத்தை கோருகின்றனர். தற்போது இந்த … Read more

மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டமன்ற தேர்தல்: இரு மாநிலங்களிலும் வாக்குப்பதிவு தொடங்கியது…

ஷில்லாங்: மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது.   பதிவாகும் வாக்குகள் மார்ச் 2-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறும் இரு மாநிலங்களிலும் பாஜக 80 வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. இதில் 75 பேர் கிறிஸ்தவர்கள். காங்கிரஸும் வழக்கம் போல இதே பார்முலாவைத்தான் கடைபிடித்து களத்தில் உள்ளது. இரு மாநிலங்களிலும் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு … Read more

2 லட்சம் ஆணுறைக்கு மத்தியில் நடந்த பிரம்மாண்ட பேஷன் ஷோ: ஆச்சரியப்பட வைக்கும் காரணம்

பாலியல் சுகாதாரத்தை உணர்த்தும் வகையில் இத்தாலியில் 2 லட்சம் ஆணுறைகளுக்கு மத்தியில் நடந்த பேஷன் ஷோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மிலான் ஃபேஷன் ஷோ உலகில் நடைபெறும் டாப் 4 பேஷன் ஷோக்களில் இத்தாலியின் மிலான் நகரில் நடைபெறும் பேஷன் ஷோவும் ஒன்றாகும். அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான மிலான் பேஷன் ஷோ இத்தாலி நகரில் சிறப்பாக நடைபெற்று வருகிறது, இந்த விழாவை முன்னணி ஆடம்பர ஆடை பிராண்ட் நிறுவனமான “டீசல்” நடத்தி வருகிறது. அத்துடன் இந்த … Read more

பிப் 27: பெட்ரோல் விலை ரூ.102.63, டீசல் விலை ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

வட கொரியாவில் கடுமையான உணவு தானிய தட்டுப்பாடு: வேளாண் கொள்கை குறித்து தீவிர ஆலோசனை

வட கொரியாவில் கோவிட் கால பேரழிவிற்கு பின்னர் கடுமையான தானிய தட்டுப்பாடு அதிகரித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. தானிய தட்டுப்பாடு சமீபத்தில் விரோதப்  படைகளுக்கு எதிராக அணு ஆயுத எதிர் தாக்குதல் நடத்தும் திறனை வெளிப்படுத்தும் வகையில் வட கொரியா  நான்கு மூலோபாய கப்பல் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக அதன் அரசு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. இவ்வாறு போர் பதற்றங்கள் மற்றும் உலக நாடுகளின் தனிமைப்படுத்தல் போன்ற சிக்கலுக்கு இடையில் கொரோனா தொற்று பாதிப்புகளும் வட கொரிய … Read more

சாலை பலமுறை கவிழ்ந்த ஜேர்மன் பேருந்து: ஆஸ்திரியாவில் அரங்கேறிய பயங்கர விபத்து

ஆஸ்திரியாவில்  பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் 31 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 32 பேர் வரை காயமடைந்துள்ளனர். பேருந்து கவிழ்ந்து விபத்து ஆஸ்திரியாவில் ஜேர்மன் பேருந்து ஒன்று சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 32 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.   இந்த விபத்தில் 31 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பஸ் டிரைவர் மற்றும் ஏராளமான பயணிகள் காயங்களுடன் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். Euro … Read more

மகளிர் டி20 உலகக்கோப்பை: 6வது முறையாக உலக சாம்பியன்! தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அவுஸ்திரேலியா சாதனை

பெண்கள் டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது. உலக கோப்பை இறுதிப் போட்டி 8வது பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் கடந்த 10ம் திகதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய … Read more

பள்ளி செல்வதை தடுக்க…பெண் சிறுமிகளுக்கு ஊட்டப்படும் விஷம்! உண்மையை வெளிப்படுத்திய அமைச்சர்

ஈரானில் பெண் குழந்தைகளை பள்ளிக்கு செல்ல விடாமல் தடுக்க அவர்களுக்கு விஷம் கொடுக்கப்படுவதாக அந்த நாட்டின் அமைச்சர் மறைமுகமாக அறிவித்துள்ளார். பெண் குழந்தைகளுக்கு விஷம் ஈரானின் தெஹ்ரானில் உள்ள புனித நகரான கோமில்(Qom) பெண்களுக்கான கல்வியை நிறுத்தும் நோக்கில், பள்ளிச் சிறுமிகளுக்கு சிலர் விஷம் ஊட்டுவதாக ஈரானிய துணை அமைச்சர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  நவம்பர் பிற்பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான சுவாச நச்சு வழக்குகள் பள்ளி மாணவிகளிடையே பதிவாகி வருவதாகவும், அவற்றிலும் … Read more

மணமகள் இறந்த பின்பும் நடைபெற்ற திருமணம்! குடும்பத்தினர் செயலால் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் திருமண சடங்களின் போது மணப்பெண் மாரடைப்பால் உயிரிழந்ததால், குடும்பத்தினர் மணப்பெண்ணின் தங்கையை மணமகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். உயிரிழந்த மணப்பெண் குஜராத் மாநிலத்தின் பாவ்நகர் பகுதியை சேர்ந்த ஹெட்டால் என்ற மணப்பெண்ணுக்கும், நரி கிராமத்தைச் சேர்ந்த மணமகன் விஷாலுக்கும் இடையே திருமண ஏற்பாடுகள் பகுவானேஷ்வர் மகாதேவ் கோவில் முன்பு நடைபெற்று வந்தது. அப்போது மணப்பெண் ஹெட்டால் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ஹெட்டால் மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். … Read more