உலகளவில் 68.04 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.04 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.04 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 68.03 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 65.32 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு உலக அளவில் 6,803,746 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.03 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,803,746 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 680,486,975 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 653,290,195 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 40,608 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நெருப்போடு விளையாடும் மத்திய அரசாங்கம்!

மீண்டும் ஒருமுறை நெருப்போடு விளையாடியிருக்கிறது மத்திய அரசாங்கம். ஆம், சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலையை ஒரு தவணையில் ரூ.50 வரை உயர்த்தியதன்மூலம் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.1,168.50-ஆக உயர்ந்திருக்கிறது. இப்படி விலையேற்றியதன்மூலம் பொருளாதாரத்தின் வறிய நிலையில் இருக்கும் சாதாரண மக்களை மத்திய அரசாங்கம் வாட்டி வதைக்கத் துணிந்திருக்கிறது.சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை கடந்த ஐந்து ஆண்டுகளில் 100% உயர்ந்திருக்கிறது. 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு சிலிண்டரின் விலை … Read more

மார்ச்-04: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை:  சென்னையில் 287வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

ஆங்கில கால்வாயில் பயணித்த படகில் தீ விபத்து: விரைந்த பிரித்தானிய உயிர்காக்கும் படகுகள்

பிரித்தானியாவின் ஆங்கில கால்வாயை பயணிகள் படகு ஒன்று கடந்து கொண்டு இருக்கும்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. படகில் பற்றிய தீ டோவரில் இருந்து கலேஸ் நோக்கி சென்று கொண்டிருந்த ஐல் ஆஃப் இன்னிஸ்ஃப்ரீ (Isle of Innisfree) என்ற படகில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. படகு கால்வாயின் பாதி தூரத்தில் இருந்த போது இன்ஜின் அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. The Isle of Innisfree/Sky News இந்த சம்பவத்தின் போது படகில் 94 பயணிகள் மற்றும் … Read more

பிரபல புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் காலமானார்! முதல்வர் இரங்கல்

பிரபல புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் மறைமலைநகர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் காலமானார். பிரபல புகைப்பட கலைஞர் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்த ஸ்டாலின் ஜேக்கப்(37) சிறந்த புகைப்பட கலைஞராக பார்க்கப்பட்டார், இவரது பெரும்பாலான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் இவர் எடுத்த புகைப்படங்கள் பலவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இவர் க்ளவுட் கிட்சன் மற்றும் What a Karwad என்ற … Read more

இளவரசர் ஹரி போல் அலங்கரித்து நின்ற பிரித்தானிய சிறுவன்., வைரல் புகைப்படம்

மூன்று வயது பிரித்தானிய சிறுவன் உலக புத்தக தினத்திற்காக இளவரசர் ஹாரி போல் உடையணிந்தான். பிரித்தானியாவின் ரெட்ஹில் நகரத்தைச் சேர்ந்த மூன்று வயது சிறுவன், உலகப் புத்தக தினத்திற்காக இளவரசர் ஹரி போல் உடையணிந்து, அவரது நினைவுப்புத்தகமான ‘ஸ்பேர்’ (Spare) அட்டையின் போஸ்டருடன் போஸ் கொடுத்தான். முதலில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட இந்த படம் பின்னர் வைரலாகி, ஐடிவியில் லூஸ் வுமன் என்ற UK அரட்டை நிகழ்ச்சியிலும் இடம்பெற்றது. Image: Melissa Wright சிறுவனின் தாயார் மெலிசா, … Read more

இந்தியா-சீனா நட்புறவாக இருக்க வேண்டும்! ஜெலென்ஸ்கியிடம் இதை கேட்க முடியுமா? லாவ்ரோவ் பேச்சு

இந்தியாவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும் என்றே ரஷ்யா விரும்புகிறது என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். இந்தியா-சீனா-ரஷ்யா வெள்ளிக்கிழமை புதுடெல்லியில் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், இந்தியாவும் சீனாவும் நட்புறவுடன் இருக்க வேண்டும் என்று ரஷ்யா விரும்புகிறது என தெரிவித்துள்ளார். ரைசினா(Raisina) உரையாடலில் சீன-இந்தியா மற்றும் சீன-ரஷ்யா உறவுகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த லாவ்ரோவ்,   சீனா, இந்தியா ஆகிய இருநாடுகளுமே ரஷ்யாவுடன் … Read more

“காதல் திருமணம் செய்ததால் ஊரைவிட்டு ஒதுக்கிவிட்டனர்” – இளம் தம்பதி புகாரால் தஞ்சையில் பரபரப்பு!

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே இருக்கிறது பொட்டலங்குடிக்காடு கிராமம். குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இந்தக் கிராமத்தில், மக்கள் ஊர் ஊராகச் சென்றும், அலுவலகம் அமைத்தும் ஜோதிடம் பார்ப்பதை பிரதான தொழிலாகச் செய்துவருகின்றனர். இந்த ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்துவருகிறார். இவரும், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்திருக்கின்றனர். அண்மையில் இருவரும் தங்கள் வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். புகாரளித்த தம்பதி பொட்டலங்குடிக்காடு கிராமத்தில் காதல் … Read more

தண்டனைக்கு பயந்து காட்டில் 14 ஆண்டுகள் குகையில் வாழ்ந்த நபர்: இறுதியில் மனம்மாறி எடுத்த முடிவு

குற்ற தண்டனைக்கு பயந்து 14 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்து வந்த நபரை கண்டு சீனாவில் அனைவரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். 2009ல் செய்த குற்றம் சீனாவில் லூயி என்ற நபர் கடந்த 2009ம் ஆண்டு ₹ 1859 ரூபாய் பணத்தை திருடியுள்ளார். இந்த திருட்டு சம்பவத்தால் பெரும் அச்சத்திற்கு உள்ளான லூயி, காவலர்களுக்கு பயந்து காட்டுக்குள் தப்பி ஓடியுள்ளார்.  லூயி-க்கு பயம் இறுதிவரை விலகாத காரணத்தினால், காட்டுக்குள் உள்ள குகையிலேயே 14 ஆண்டுகள் வாழ்ந்து வந்துள்ளார். மனம்மாறி லூயி … Read more