நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த முறையில்வீட்டு வேலை செய்பவர்களும் ஊழியர்கள் தான்

பெங்களூரு- ஊழியர்கள் விடுவிப்பு பெங்களூருவில் மைசூரு எலெக்ட்ரிக்கல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் சார்பில் வீடுகள், தொழிற்சாலைகளுக்கு ஒப்பந்த முறையில் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர். கடந்த 2000-ம் ஆண்டில் அந்த நிறுவனம், தான் மேற்கொண்டிருந்த அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்தது. இதனால் அந்த நிறுவனத்தின் கீழ் வீடு, தொழிற்சாலைகளில் வேலை செய்து வந்தவர்கள் வேலையை இழந்தனர். இதையடுத்து வேலையை இழந்தவர்கள், அந்த நிறுவனத்திற்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு விசாரணையின்போது, வேலையில் இருந்து நீக்கப்பட்டவர்களை … Read more

புதுச்சேரியில் `கௌரவ ரேஷன் கார்டு’ அறிமுகம் – இதன் பயன்பாடு என்ன?!

புதுச்சேரி மாநிலத்தில் குடிமை பொருள் வழங்கல் துறை மூலம் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு சிகப்பு அட்டையும்,  வறுமை கோட்டுக்கு மேல் இருப்பவர்களுக்கு மஞ்சள் நிற அட்டையும் வழங்கப்படுகிறது.  அரசின் அனைத்து இலவச திட்டங்களும் இந்த ரேஷன் கார்டுகள் மூலமாகத்தான் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் அரசின் இலவசங்கள் தேவைப்படாத, வசதி வாய்ந்த குடும்பங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி புதுச்சேரி அரசின் கௌரவ குடும்ப அட்டை பெற்றுக் கொள்ளும்படி … Read more

ரஷ்யாவின் எச்சரிக்கையை புறக்கணித்த அமெரிக்கா! ஜெர்மன் அதிபரைச் சந்தித்த ஜோ பைடன்

ஜேர்மன் அதிபரைச் சந்தித்த ஜோ பைடன் அமெரிக்கா உக்ரைனுக்கு ராணுவ உதவி செய்வதைக் கண்டித்த ரஷ்யாவின் அறிக்கையைப் பகிரங்கமாக அமெரிக்க அதிபர் புறக்கணித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாஸ்கோவிற்கு எதிரான ஒற்றுமை மாஸ்கோவிற்கு எதிரான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் வெள்ளை மாளிகையில் ஜேர்மன் அதிபர் ஸ்கோல்ஸ் மற்றும் ஜோ பைடன் சந்திப்பு நடைபெற்றது. அமெரிக்கா உக்ரைனுக்கு சுமார் 400 கோடிக்கு ராணுவ ஆயுதங்கள் வழங்க இருப்பதாக சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தது. இதற்கு எச்சரிக்கை தெரிவிக்கும் வகையில் … Read more

2 நாளில் 219 அழைப்புகள்: ஹோலி கொண்டா ஊருக்கு போறோம்! வடமாநில தொழிலாளர்கள்

சென்னை:  தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பரவிய வதந்திகளைத்  தொடர்ந்து, காவல்துறை சார்பில், உதவி மையம் திறக்கப்பட்டு உள்ளது. அதில், கடந்த  2 நாளில் 219 அழைப்புகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல, வட மாநிலங்களுக்கு திரும்பும் தொழிலாளர்கள், ஹோலி கொண்டா ஊருக்கு போறோம், திரும்பி வருவோம் என கூறியுள்ளனர். கடந்த சில நாட்களாக வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக 2 விடியோக்கள் பரவி வைரலானது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பீகார் … Read more

அனைத்து தொழிலாளர்களும் எங்கள் தொழிலாளர்கள்; அவர்கள் எங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவுபவர்கள் என நிதிஷ்குமாரிடம் கூறினேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அனைத்து தொழிலாளர்களும் எங்கள் தொழிலாளர்கள்; அவர்கள் எங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவுபவர்கள் என நிதிஷ்குமாரிடம் கூறினேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்பதை தமிழர்களைவிட புலம்பெயர் தொழிலாளர்கள் அழுத்தமாக சொல்வார்கள். புலம்பெயர் தொழிலாளர் தோழர்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநில தொழிலாளர்களுக்கும் அரணாக திமுக அரசும், தமிழ்நாட்டு மக்களும் இருப்பார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மேக்கப்பால் கோரமான முகம்: இளம்பெண் திருமணத்தில் சிக்கல்| Karnataka Bride Lands In ICU After Makeup Disfigures Her Face, Beautician Detained For Questioning

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஹாசன்: திருமணத்துக்காக, பியூட்டி பார்லரில் ‘மேக்கப்’ செய்து கொண்ட இளம்பெணின் முகம் கோரமாக மாறியதால், திருமணத்துக்கு முட்டுக்கட்டை விழுந்துள்ளது. பொதுவாக திருமணத்துக்கு தயாராகும் பெண்கள், தங்களின் அழகை அதிகரிக்கும் நோக்கில், பியூட்டி பார்லருக்கு செல்வது வழக்கம். சில சந்தர்ப்பங்களில், இதுவே அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சம்பவங்கள், ஆங்காங்கே நடக்கின்றன. ஹாசன், அரசிகெரேவில் வசிக்கும் 20 வயது இளம் பெண்ணுக்கு, திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இவர் இங்குள்ள பியூட்டி பார்லரில் ‘மேக்கப்’ … Read more

ஜோ பைடனின் புற்றுநோய் தோல் புண் அகற்றம் முதல் கொலம்பியா போராட்டம் வரை… உலகச் செய்திகள்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு தனது மார்பு பகுதியிலிருந்த புற்றுநோய் தோல் புண் அகற்றப்பட்டுள்ளது. வழக்கமான மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டு வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது. மேலும் எந்த விதமான சிகிச்சையும் தேவையில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஒன்றரை ஆண்டு ரஷ்ய உக்ரைன் போருக்குப் பிறகு, உக்ரைனின் பஹ்க்மூத் பகுதியை ரஷ்யா ஆக்கிரமித்துள்ளது. இந்தோனேசியாவில் எண்ணெய் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 50 பேர் படுகாயமடைந்தனர். கொலம்பியாவில் … Read more

தண்ணீரில் எலுமிச்சை போட்டு வைப்பதில் இவ்வளவு நன்மைகளா?

சாதாரணமாகவே எலுமிச்சை திருஷ்டிக்காகவோ சகுணம் பார்ப்பதற்காகவோ பயன்படுத்துவர். வீடுகளில் வியாபாரஸ்தலங்களில் எலுமிச்சையை கட்டி தொங்கவிட்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கும்.   சகுணம் பார்த்தல் அதுமட்டுமில்லாது இன்றைய நாள் எவ்வாறு அமையப்போகிறது என கணித்தல் போன்ற காரியங்களுக்காக இவ்வாறு செய்வது ஒரு நம்பிக்கையாக இருக்கிறது. ஒரு எலுமிச்சையைக்கொண்டே நாள் சிறப்பானதாக அமையுமா?அல்லது சாதாரணமாக இருக்குமா?என நமது பெரியோர்கள் கூறி விடுவார்களாம். சாதாரணமாகவே எலுமிச்சைக்கு நேர்மறை ஆற்றலிருக்கிறது என விஞ்ஞான ஆய்வுகள் கூறுகின்றது. அதிலும் இதனை தண்ணீரோடு சேர்ப்பதன் மூலம் பல நன்மைகளை … Read more

முதலமைச்சர் பிறந்தநாள் விழாவில் வடமாநில தலைவர்கள் பங்கேற்றதால் பொறாமை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்….

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிறந்தநாள் விழாவில் வடமாநில தலைவர்கள் பங்கேற்றதால் பொறாமைப்பட்டு, சிலர்  வதந்தி பரப்புகின்றனர், என வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். மேலும்,  சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” “தமிழ்நாட்டில் மட்டும் தான் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்” என்றார். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் சில வீடியோக்கள் வேகமாக பரவின. இந்த வீடியோவை ஷேர் செய்தவர்கள், “தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள்” … Read more

வெளிநாடுகளில் தடை செய்யப்படும் மருந்துகள், தீங்கு விளைவிக்கும் மருந்துகள் தமிழ்நாட்டில் அனுமதிக்கப்படாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: வெளிநாடுகளில் தடை செய்யப்படும் மருந்துகள், தீங்கு விளைவிக்கும் மருந்துகள் தமிழ்நாட்டில் அனுமதிக்கப்படாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனம் ஆடவர் கலைக்கல்லூரி வளாகத்தில் ரூ.3.70 கோடி மதிப்பு கலையரங்கம் கட்டப்பட உள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.