என்எல்சியால் கடலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் 1000 அடிக்கு கீழ் சென்றுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி சாடல்!!

சென்னை : என்எல்சியால் கடலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் 1000 அடிக்கு கீழ் சென்றுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 2025ம் ஆண்டுக்குள் என்எல்சி நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைப்பதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது என்றும் என்எல்சியை தனியாருக்கு விற்கும் நிலையில் எதற்காக 10,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என்றும் அன்புமணி வினவியுள்ளார்.

டில்லியில் ஜப்பானிய பெண் மானபங்கம்: 3 பேர் கைது| Japanese Tourist, Who Was Harassed During Holi Celebrations, Leaves India

புதுடில்லி: தலைநகர் டில்லியில் ஹோலி கொண்டாட்டத்தின் போது ஜப்பானில் இருந்து சுற்றுலா வந்த பெண் ஒருவரை மானபங்கபடுத்திய வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய டில்லியில் உள்ள பஹர்கன்ஜ் பகுதியில் தங்கியிருந்த அந்த பெண்ணை, ஹோலி கொண்டாட்டத்தின் போது, சிலர் வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்ததுடன், கலர்பொடிகளை தூவியும், தலையில் முட்டையை உடைத்தும் தாக்கினர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை … Read more

விபரீதமான விளையாட்டு; 10-ம் வகுப்பு மாணவன் மரணம் – சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்பட்ட 3 மாணவர்கள்!

திருச்சி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று இருக்கிறது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் தோளூர்பட்டியைச் சேர்ந்த மகேஷ் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்ற மாணவர் 10-ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். தேர்வு நெருங்குவதையொட்டி நேற்று மதியம் பள்ளி வளாகத்தில் மாணவ மாணவியர்கள் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தனர். அப்போது மாணவர்கள் சிலர் ஒருவர் மேல் ஒருவர் சிறு, சிறு கற்களை தூக்கிப்போட்டு விளையாடிக்கொண்டு இருந்திருக்கின்றனர். இதில் மகேஷுக்கும் … Read more

உக்ரைன் போருக்கு பின்னணியில் இவர்கள் தான்… வெறும் ரஷ்யா மட்டுமல்ல: போப் பிரான்சிஸ் வெளிப்படை

பல வல்லரசுகளின் நலன்களை கருத்தில் கொண்டே உக்ரைன் போர் ஓராண்டுகளாக நீடித்து வருவதாகவும், ரஷ்யா மட்டும் அதற்கு காரணமல்ல எனவும் போப் பிரான்சிஸ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஏகாதிபத்திய நலன்களால் ஓராண்டு காலமாக உக்ரைனில் நீடிக்கும் இந்த கொடூரமான போரானது ஏகாதிபத்திய நலன்களால் தான் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ரஷ்ய நாட்டின் நலன்கள் மட்டும் இதன் பின்னணியில் இருப்பதாக தாம் கருதவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். @getty மட்டுமின்றி தேச நலன்களை பின்னுக்கு தள்ளுவது என்பது சாம்ராஜ்யங்களின் உண்மையான முகம் … Read more

பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில் தடையில்லா மின்சாரம்! தமிழ்நாடு அரசு உத்தரவு…

சென்னை: பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க மின்சார வாரியத்துக்கு  தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில், பிளஸ்2, பிளஸ், 10வதுவகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அடுத்த வாரம் முதல் தொடங்கப்பட உள்ளது.  தமிழகத்தில் 12-ம் வகுப்புக்கு மார்ச் 13-ம் தேதி, 11-ம் வகுப்புக்கு மார்ச் 14-ம் தேதி, 10-ம் வகுப்புக்கு ஏப்ரல் 6-ம் தேதி  பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளது. இநத் நிலையில், மாணாக்கர்கள்,  தேர்வெழுதும்போது மின் தடை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் முன்னேற்பாடுகளை செய்ய மின்வாரியத்துக்கு தமிழ்நாடு … Read more

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா : ஆளுநர் ஆர்.என்.ரவி செயலை கண்டித்து முத்தரசன் தலைமையில் தர்ணா

சென்னை : வடசென்னை மிண்ட் மணிக்கூண்டு அருகே ஆளுனரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி செயலை கண்டித்து முத்தரசன் தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஜெர்மனில் தவிக்கும் குழந்தையை மீட்க மத்திய அரசுக்கு பெற்றோர் கோரிக்கை| Parents request central government to rescue child in distress in Germany

மும்பை: ஜெர்மனியில் குழந்தைகள் உரிமை காப்பகத்தில் உள்ள தங்களின், 3 வயது மகளை மீட்டுத் தரும்படி, மத்திய அரசுக்கு குழந்தையின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். குஜராத்தின் ஆமதாபாத்தைச் சேர்நத பவேஷ் ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அங்கு தன் மனைவி தாரா ஷா மற்றும் மகளுடன் இவர் வசித்து வந்தனர். கடந்த 2021ல் குழந்தையின் அந்தரங்க உறுப்பில் காயம் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனைக்கு பவேஷ் – தாரா தம்பதி அழைத்துச் சென்றனர். பரிசோதனையில் … Read more

“காலக்கோளாறு; ஜாதகக்கோளாறு… அண்ணாமலைக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டியுள்ளது”- ஆர்.எஸ்.பாரதி பேச்சு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில், தி.மு.கவின் அமைப்புச்செயாளர் ஆர்.எஸ்.பாரதி  சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மகளிருக்கு என இலவச பஸ் திட்டம்  செயல்பாட்டில் உள்ளது. பா.ஜ.கவின்அண்ணாமலை போன்ற அரைவேக்காடுகளுக்கு பதில் கூற வேண்டிய நிலை உள்ளது. நான் அரசியலுக்கு வந்த போது, அண்ணாமலையின் தந்தை கூட பிறந்திறக்கமாட்டார். காலக்கோளாறு, ஜாதகக் கோளாறு அண்ணாமலைக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை … Read more

ஹோலி கொண்டாட்டத்தில் ஜப்பானிய இளம் பெண்ணை மானபங்கம் செய்தவர்கள் கைது

டெல்லியில் ஹோலி கொண்டாட்டத்தின்போது ஜப்பானிய இளம் பெண்ணை தாக்கி மானபங்கம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டனர். துன்புறுத்தப்பட்ட ஜப்பானிய சுற்றுலாப் பயணி இந்தியாவை விட்டு வெளியேறினார். 3 பேர் கைது இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஹோலி பண்டிகையன்று (மார்ச் 8) ஜப்பானை சேர்ந்த பெண் ஒருவரை துன்புறுத்திய மற்றும் மானபங்கம் செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இளம் சுற்றுலாப் பயணி மத்திய டெல்லியில் உள்ள பஹர்கஞ்சில் தங்கியிருந்ததாகவும், குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர், ஒரு சிறார், அதே … Read more

நாகூர் அருகே கச்சா எண்ணெய் குழாயில் 4வது முறையாக மீண்டும் கசிவு! பட்டினச்சேரிமக்கள் பீதி

நாகூர்:  நாகூரில் அமைக்கப்பட்டுள்ள சிபிசிஎல் கச்சா எண்ணெய் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமகா, அந்த பகுதி கடலில் கச்சா எண்ணை பரவி கடுமைனா இன்னல்களை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுவரை  இரண்டுமுறை எண்ணை கசிவு  சரி செய்யப்பட்ட பிறகும் மீண்டும் மற்றொரு இடத்தில் எண்ணை கசவு ஏற்பட்டுள்ளது. கசிந்து வானுயரத்தில் கச்சா எண்ணெய் பீய்ச்சி அடிப்பதால், நாகூர் பட்டினச்சேரியில் மக்களின் அச்சமடைந்துள்ளனர். மீனவர்கள் கொந்தளித்து வருகின்றனர். நாகை அடுத்த நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் சிபிசிஎல் நிறுவனத்தின் சார்பாக … Read more