துபாய்க்குச் சென்ற காரைக்கால் பெண் நடனக் கலைஞர் இறப்பு – மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தினர் புகார்

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், கீழகாசாக்குடி கிராமத்தைச் சேர்ந்த தேவதாஸ் என்பவருக்கு நான்கு மகள்கள். நடனக் கலைஞர்களான இவர்கள் அனைவரும், உள்ளூர் மற்றும் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நடனமாடுவது வழக்கம். இரண்டாவது மகள் அருணாவுக்குத் திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில், சென்னையிலுள்ள தனியார் அமைப்பு மூலம் துபாய் அபுதாபியிலுள்ள ஒரு விடுதியில் தங்கி நடனமாடுவதற்கான வாய்ப்பு வந்தது. அதனடிப்படையில் கடந்த 2022-ம் ஆண்டு குழந்தைகளை கணவருடன் விட்டுவிட்டு அபுதாபிக்குச் சென்ற அருணா, அங்கேயே … Read more

தாய்லாந்தில் இலங்கை பெண்களுக்கு ஏற்பட்ட நிலை., பின்னணியில் அரசியல் பிரமுகர்., திடுக்கிடும் தகவல்

வேலை வாங்கித் தருவதாக தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட இலங்கை பெண்கள் சீனர்களுக்கு அடிமைகளாக விற்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில், இலங்கையின் முக்கிய அரசியல் புள்ளிகள் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தகியுள்ளது. 5,000 டொலர்களுக்கு விற்கப்பட்ட இலங்கைப் பெண்கள்  தாய்லாந்தில் வேலை பெற்றுத் தருவதாக அழைத்துச் செல்லப்பட்ட இலங்கைப் பெண்கள் தலா 5,000 டொலர்களுக்கு சீனர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. விற்பனை செய்யப்பட்ட சில இலங்கைப் பெண்கள் சீனர்களிடமிருந்து தப்பிச் சென்று தாய்லாந்து பொலிஸாரின் காவலில் இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டு நாடு … Read more

மகளிர் டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய அணி 6வது முறையாக சாம்பியன்!!

கேப்டவுன்: மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

பாஜ., தேசிய பொதுச் செயலாளர் கூட்டம்| BJP, National General Secretary meeting

புதுடில்லி: டில்லியில் உள்ள பாஜ., தலைமை அலுவலகத்தில் பாஜ., தேசிய பொதுச் செயலாளர் கூட்டம், அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா தலைமையில் இன்று(பிப்.,26) நடைபெற்றது. புதுடில்லி: டில்லியில் உள்ள பாஜ., தலைமை அலுவலகத்தில் பாஜ., தேசிய பொதுச் செயலாளர் கூட்டம், அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா தலைமையில் இன்று(பிப்.,26) நடைபெற்றது. புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் Advertisement

“தியேட்டர்களே வரும் காலங்களில் இருக்காது; இது நல்லதா? கெட்டதா? எனத் தெரியவில்லை" – நசீருதின் ஷா

Sparsh, Paar, Iqbal போன்ற படங்கள் மூலம் 80’ஸ் காலங்களில் பாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகரான வளம் வந்தவர் நசீருதின் ஷா. இவர் நடித்த ‘Taj – Divided by Blood’ திரைப்படம் ‘Zee5’ ஓடிடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நசீருதின் ஷா, தென்னிந்திய திரைப்படத் துறை குறித்தும் ஓடிடி-யின் வளார்ச்சியால் இன்னும் பத்து ஆண்டுகளில் தியேட்டர் இருக்காது என்றும் பேசியுள்ளார். நசீருதின் ஷா இது பற்றி பேசிய அவர், “தமிழ், … Read more

பந்துவீச்சாளரை அடிக்க பேட்டை ஓங்கிய பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம்! வைரலாகும் வீடியோ

பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) போட்டியின்போது, எதிரணியில் பந்துவீசிய வீரரை பேட்டால் அடிப்பது போல் பாபர் அசாம் பயமுறுத்தியா வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. வியாழன் அன்று பெஷாவர் சல்மி மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) போட்டியில், பாகிஸ்தான் அணி வீரர் ஹசன் அலியுடன் பாபர் அசாம் மகிழ்ச்சியான தருணத்தைப் பகிர்ந்து கொண்டார். ஒரு சிங்கிள் ஓட்டம் எடுக்கும் போது, ​​பாபர் அசாம் எதிராளியை பந்துவீசிய வேகப்பந்து வீச்சாளர் ஹசன் … Read more

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது

டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார். 8 மணி நேர விசாரணைக்கு பின் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை சிபிஐ போலீசார் கைது செய்தனர்.

டில்லி புறப்பட்ட விமானம் ஆமதாபாத்தில் தரையிறக்கம் | The Delhi-bound flight landed at Ahmedabad

சூரத் : குஜராத் மாநிலம், சூரத்தில் இருந்து புதுடில்லி நோக்கி, ‘இண்டிகோ – ஏ320’ விமானம், இன்று (பிப்., 26)ம் தேதி மாலை புறப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அதன் இறக்கைகள் மீது, பறவைகள் மோதின. இதையடுத்து, ஆமதாபாத் விமான நிலையத்தில், விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இத்தகவலை, விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது. சூரத் : குஜராத் மாநிலம், சூரத்தில் இருந்து புதுடில்லி நோக்கி, ‘இண்டிகோ – ஏ320’ விமானம், … Read more

எல்லை விவகாரம்; சீனா குறித்த அமைச்சரின் பேச்சு – கடுமையாகச் சாடிய ராகுல்!

தனியார் செய்தி நிறுவனத்துக்கு சமீபத்தில் பேட்டியளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீனா விவகாரம் குறித்தும், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் குறித்தும் பதிலளித்தார். அப்போது, “இந்தியா – சீனா எல்லைக்கு (எல்.ஏ.சி) ராணுவத்தை அனுப்பியது யார்… ராகுல் காந்தியா… அல்ல, பிரதமர் மோடி. நாங்கள் எல்லையைப் பலப்படுத்துகிறோம். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாங்கள் எங்கள் எல்லை உள்கட்டமைப்பை சட்டபூர்வமாக உருவாக்குகிறோம். ஏனென்றால் சீனாவும் தங்கள் எல்லை உள்கட்டமைப்பை உருவாக்குகிறது. எனது பார்வையில், இந்தியா 25 ஆண்டுகளுக்கு முன்பே உள்கட்டமைப்பில் … Read more

பாகிஸ்தானின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர் மீது நடந்த துப்பாக்கிச் சூடு., தொடரும் அச்சுறுத்தல்கள்

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். திருநங்கை அதிர்ஷ்ட வசமாக உயிர்த் தப்பியுள்ளார். மர்வியா மாலிக் மீது துப்பாக்கிச் சூடு பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மர்வியா மாலிக் (26) இவருக்குத் தான் ஒரு செய்தி தொகுப்பாளர் ஆக வேண்டுமென்ற கனவிருந்திருக்கிறது. ஆனால் அவர் திருநங்கைகளுக்கு ஆதரவாகத் தொலைக்காட்சிகளில் பேசுவதாகக் கூறி அவரை சிலர் மிரட்டி வந்துள்ளனர். இந்த நிலையில் அவரை சிலர் மர்மமான முறையில் துப்பாக்கி … Read more