சர்க்கஸ் நிகழ்ச்சியின்போது பயிற்சியாளரின் கழுத்தை கடித்த புலி., வீடியோ வைரல்

இத்தாலியில் நேரலை நிகழ்ச்சியின் போது சர்க்கஸ் பயிற்சியாளரைத் தாக்கிய புலி அவரது கழுத்தைக் கடித்தது. அதன் வீடியோ தற்போது வைரலாகிவருகிறது. இத்தாலியின் Lecce மாகாணத்தில் கடந்த வியாழன் மாலை ஒரு நேரடி நிகழ்ச்சியின் போது சர்க்கஸ் பயிற்சியாளரை புலி தாக்கியது. சர்க்கஸ் பயிற்சியாளரை புலி இழுத்து தரையில் தள்ளி கழுத்தை கடித்த திகிலூட்டும் தருணத்தின் வீடியோ பல சமூக ஊடக தளங்களில் வெளிவந்தது. அசந்த நேரத்தில் தாக்கிய புலி அந்த வீடியோவில், சர்க்கஸ் பயிற்சியாளர் மற்றொரு புலி … Read more

ஒடிசாவில் மேலும் ஒரு ரஷ்யர் பலி 2 வாரத்தில் மூன்றாவது சம்பவம்| Another Russian killed in Odisha, third incident in 2 weeks

புவனேஸ்வர், ஒடிசாவில் ஏற்கனவே இரண்டு ரஷ்யர்கள் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், நேற்று பாரதீப் துறைமுகம் அருகே நிறுத்தப்பட்டுள்ள சரக்கு கப்பலில் இருந்த மேலும் ஒரு ரஷ்யர் உயிரிழந்தது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் உள்ள ஹோட்டலில், கடந்த மாதம் ௨௧ம் தேதி ரஷ்யாவைச் சேர்ந்த நான்கு பேர் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தனர். விசாரணை இவர்களில் ஒருவரான விளாடிமிர் பிடனோவ், ௬௩, கடந்த ௨௨ல் தன் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். … Read more

வெளி உணவுப்பொருட்களுக்கு தியேட்டர்களில் தடை விதிக்கலாம்| Outside food may be banned in theatres

புதுடில்லி: ‘தியேட்டர்களுக்கு படம் பார்க்க வருவோர், வெளியில் இருந்து உணவு பொருட்கள் மற்றும் பானங்களை கொண்டு வருவதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் தடை விதிக்கலாம். ‘அதேநேரத்தில், பார்வையாளர்களுக்கு சுத்தமான குடிநீரை இலவசமாக வழங்க வேண்டிய பொறுப்பு தியேட்டர் நிர்வாகத்துக்கு உள்ளது’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘மல்டிபிளக்ஸ் மற்றும் தியேட்டர்களுக்கு படம் பார்க்க வருவோர், வெளியில் இருந்து உணவு மற்றும் பானங்களை எடுத்து வந்தால், அதற்கு தியேட்டர் நிர்வாகம் தடை விதிக்கக் கூடாது’ என, ஜம்மு – காஷ்மீர் … Read more

திருமலை உண்டியல் வருவாய் ரூ.7.68 கோடி சாதனை வசூல்| Tirumala bill revenue is a record collection of Rs 7.68 crore

திருப்பதி : திருமலை ஏழுமலையானுக்கு, நேற்று முன்தினம் வரலாறு காணாத வகையில், 7.68 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலானது. திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்த பின், பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை, தேவஸ்தானம் சில்லரை ரூபாய் நோட்டுகள், மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் என பிரித்து, மொத்த தொகையை வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. சராசரியாக உண்டியல் காணிக்கை தினசரி 2 கோடி ரூபாய் முதல் 3 கோடி ரூபாய் வரை வசூலாவது வழக்கம். தற்போது பக்தர்கள் வருகை … Read more

2026 FIFA உலகக் கோப்பையில் மெஸ்ஸி வேண்டும்! அர்ஜென்டினா அணி வலியுறுத்தல்

அர்ஜென்டினாவில் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி அடுத்து வரும் 2026 FIFA உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று அவரது சக வீரர்கள் விரும்புகிறார்கள். 2026 FIFA உலகக் கோப்பையில் மெஸ்ஸி இறுதியாக FIFA உலகக் கோப்பை கோப்பையை வென்ற பிறகு, அர்ஜென்டினா தேசிய அணியில் லியோனல் மெஸ்ஸியின் எதிர்காலம் குறித்து ஊகங்கள் அதிகரித்து வருகின்றன. அர்ஜென்டினா ஜாம்பவான் முன்பு இந்த ஆண்டு கத்தாரில் நடைபெறும் போட்டி தனது கடைசி போட்டியாக அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். இருப்பினும், அர்ஜென்டினா … Read more

ம.பி.,யில் 12 வயது சிறுமி 58 வயது நபரால் பலாத்காரம்| A 12-year-old girl was raped by a 58-year-old man in MP

போபால் மத்திய பிரதேசத்தில், 12 வயது சிறுமி, 58 வயது நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பேதுல் நகரைச் சேர்ந்த 12 வயது சிறுமியை, 58 வயதான மாவு மில் உரிமையாளர் ரமேஷ் குல்ஹனே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்களும், பொதுமக்களும் ரமேஷின் வீட்டிற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது கார், பைக்கை அடித்து … Read more

தினமும் 5 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை:மாநகராட்சி தலைமை கமிஷனர் தகவல்

பெங்களூரு: பெங்களூருவில் கொரோனா பரவலை தடுப்பது குறித்து மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- பெங்களூருவில் கடந்த 2 நாட்களாக தினமும் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தினமும் 5 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பெங்களூருவில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் தான் உள்ளது. ஆனாலும் நாங்கள் பரிசோதனைகளை அதிகரித்து உள்ளோம். அக்டோபர் … Read more

அமைச்சரின் பேச்சு அரசின் கருத்தாக முடியாது | The speech of the minister cannot be the opinion of the government

புதுடில்லி: அமைச்சர்கள் போன்ற பொது சேவையில் ஈடுபட்டுள்ளோரின் கருத்து சுதந்திரத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க தேவையில்லை என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ‘அமைச்சரின் பேச்சை, அரசின் கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது’ என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்த ௨௦௧௬ ஜூலையில், புலந்த்ஷெஹர் நகரில் ஒரு பெண்ணும், அவருடைய மகளும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக அப்போது அமைச்சராக இருந்த சமாஜ்வாதி மூத்த … Read more

காங்கிரசின் முதல் வேட்பாளர் பட்டியல் இந்த மாதம் வெளியாகும்; சித்தராமையா பேட்டி

பெங்களூரு: கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா விஜயநகரில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- காங்கிரஸ் வேட்பாளர்கள் கர்நாடகத்தில் காங்கிரசுக்கு ஆதரவான அலை வீசுகிறது. மேலும் எங்கள் கட்சி பலமாக உள்ளது. அதனால் தான் அதிகம் பேர், டிக்கெட் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் முதல் பட்டியல் இந்த மாதம் வெளியிடப்படும். ஜனார்த்தனரெட்டி புதிய கட்சியை தொடங்கியுள்ளார். ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால் கட்சிகளை ஏற்பது குறித்து மக்கள் … Read more

பெரம்பலூர் அருகே சென்னையிலிருந்து கொடைக்கானல் சென்ற கார் இருசக்கர வாகனம், வேன் மீது மோதி விபத்து

பெரம்பலூர்: பெரம்பலூர் துறைமங்கலத்தில் சென்னையிலிருந்து கொடைக்கானல் சென்ற கார் முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதியதில் நிலை தடுமாறி கார் சென்டர் மிடியனை தாண்டி எதிர்திசையில் வந்த வேன் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மற்றும் காரில் வந்த ஒருவர் என இரண்டு பேர் இறந்தனர் வேன் சாலையில் கவிழ்ந்து பெண்களுக்கு காயம் ஏற்பட்டது.