'கோவின்' தளத்தை தொடர்ந்து தொடர் தடுப்பூசி பணிகளுக்காக 'யு-வின்' இணையதளம் தொடக்கம்

புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பணிகளை நிர்வகிப்பதற்காக கோவின் இணையதளம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் கொரோனா தடுப்பூசி நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டதுடன், சர்வதேச அளவிலும் இந்த இணையதளம் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து பிறந்த குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் போன்றவர்களுக்கான தொடர் தடுப்பூசி நடவடிக்ைககளுக்காக புதிய இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கி இருக்கிறது. இந்தியாவின் சர்வதேச தடுப்பூசி திட்டத்தை டிஜிட்டல் மயமாக்கும் இந்த இணையதளத்துக்கு ‘யு-வின்’ என பெயரிடப்பட்டு உள்ளது. இது பரிசோதனை முயற்சியாக அனைத்து மாநிலங்கள் மற்றும் … Read more

“எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆவி தான் சசிகலாவை சிறையில் தள்ளியது!” – அதிமுக முன்னாள் எம்.பி ப.குமார்

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா பொதுகூட்டம் திருச்சி மாவட்டம், லால்குடி திருமணமேடு பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளாரும், முன்னாள் எம்.பியுமான ப.குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.  பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், “அம்மா(ஜெயலலிதா) எப்போது மறைவார், இந்த இயக்கத்தை குறுக்கு வழியில் நாம் கைப்பற்ற வேண்டும் என்கின்ற கெட்ட எண்ணத்தோடு சசிகலா இந்த இயக்கத்தை கைப்பற்றுவதற்கு முயற்சி செய்தார்கள். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் அம்மாவுடைய … Read more

உலகின் உணவு பிரச்சனை…இந்த இரண்டு நாடுகளின் நடவடிக்கைகளே காரணம்! அமெரிக்கா குற்றச்சாட்டு

உலகின் உணவு பிரச்சனைகளுக்கு ரஷ்யாவும் சீனாவும் முக்கிய காரணம் என்று அமெரிக்காவின் கருவூல செயலர் ஜேனட் யெலன் தெரிவித்துள்ளார். வட்டமேசை கூட்டம் செனகலில் உள்ள டாக்கரில் ஜனவரி 20ம் திகதி அன்று பெண்கள் மற்றும் இளைஞர் வணிக காப்பகத்தில் பெண் தொழில் முனைவோர்களின் வட்டமேசை கூட்டம் நடைபெற்றது. இதில் அமெரிக்காவில் கருவூல செயலர் ஜேனட் யெலன் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த உரையில் ரஷ்யாவின் போர் நடவடிக்கை பல பிரச்சனைகளை உலக அளவில் ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்தார், … Read more

உலகளவில் 67.34 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 67.34 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.34 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 67.47 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 64.53 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி குடியரசுதின விழா ஒத்திகை: பெண்களை மையப்படுத்திய தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி

புதுடெல்லி, டெல்லியில் கடந்த ஆண்டு நடைபெற்ற மத்திய அரசின் குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களை மையப்படுத்தி அலங்கார ஊர்தியாக அது வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த அலங்கார ஊர்தியை தமிழகம் முழுவதும் வலம் வரச்செய்தார். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான குடியரசு தின விழா அணிவகுப்புக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஊர்தி வடிவமைப்பின் மாதிரிகள் மத்திய … Read more

ஜனவரி 24: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 248-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 248-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஜன-24: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

முதல்வருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி| The case against the Chief Minister was dismissed

புதுடில்லி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பா.ஜ.,வைச் சேர்ந்த உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ௨௦௧௮ல் ராஜஸ்தானின் ஆல்வாரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார். அவருடைய பேச்சு தன் மத நம்பிக்கையை புண்படுத்தியுள்ளதாக, உத்தர பிரதேசத்தின் மாவ் மாவட்டத்தைச் சேர்ந்த நாவல் கிஷோர் சர்மா என்பவர், மாவ் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்; அது நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து, அவர் அலகாபாத் உயர் … Read more

சுகேஷ் சந்திரசேகர் நிதி முறைகேடு வழக்கு: நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் நேரில் ஆஜராக விலக்கு – டெல்லி கோர்ட்டு உத்தரவு

புதுடெல்லி, பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் மீதான ரூ.200 கோடி முறைகேடு விவகாரத்தில் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறை தொடர்ந்த இந்த வழக்கில் கடந்த நவம்பர் 15-ந் தேதி அவருக்கு டெல்லி கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் அவரை விசாரணைக்காக அமலாக்கத்துறை பலமுறை அழைத்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இந்த வழக்கு டெல்லி கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாக்குலின் … Read more