சென்னை அருகே தாம்பரம் அடுத்த வரதராஜபுரத்தில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து..!!

சென்னை: சென்னை அருகே தாம்பரம் அடுத்த வரதராஜபுரத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவிலான பிளாஸ்டிக் கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர். தீ மளமளவென பரவி வருவதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

டிஜிட்டல் இந்தியா விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு | President Drabupati Murmu presented the Digital India Awards

புதுடில்லி: டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு டிஜிட்டல் இந்தியா விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று(ஜன.,07) வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியவதாவது: டிஜிட்டல் கண்டுபிடிப்புகளின் பிரதான நோக்கமாக சமூக நீதி இருக்க வேண்டும். நீதித்துறை, நிலப்பதிவு, உரம் அல்லது பொது விநியோக முறை என அனைத்து குடிமக்களுக்கும் எளிதாக வாழ்வதற்கு புதுமையான தீர்வுகளை வழங்குவதில் நமக்கு … Read more

“நான் இந்த நிலைக்கு உயர மாற்றுத்திறனாளியான என் மனைவிதான் காரணம்!’’ – நெகிழ்ந்த ஜி.பி. முத்து

வேலூர் சத்துவாச்சாரியில், மாற்றுத்திறனாளிகளுக்கு இடையே மாநில அளவிலான அமர்வு கைப்பந்துப் போட்டி இன்று தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் சமூகவலைதள பிரபலம் ஜி.பி.முத்து இருவரும் கலந்து கொண்டு இப்போட்டியை குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய ஜி.பி.முத்து, “என் மனைவியும் மாற்றுத்திறனாளிதான். ஆனால், அவரை ஒருநாளும் நான் மாற்றுத்திறனாளியாக நினைத்ததே கிடையாது. நான் இந்த உயரத்துக்கு வரக் காரணம் என் மனைவிதான். கே.எஸ்.அழகிரி உடன் ஜி.பி.முத்து வேலைக்குப் போகாமல் வீட்டில் உட்கார்ந்து கொண்டு … Read more

‘நீங்கள் அனுப்பிய பார்சல் திரும்பி வந்துள்ளது’! நூதன சைபர் க்ரைம் குறித்து தமிழக டிஜிபி வீடியோ மூலம் எச்சரிக்கை…

சென்னை: தமிழகத்தில் புதிதாக ஒரு சைபர் குற்றம் தொடர்பான புகார்கள் கடந்த சில நாட்களாக பதிவாகி வருவதாக கூறிய டிஜிபி சைலேந்திர பாபு, பொதுமக்களுக்கு அது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் புதிதாக சைபர் குற்றத்தில் ஈடுபட்டு வரும் ஒரு குடும்பல் தொடர்பாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “புதிய வகை சைபர் க்ரைம் தொடர்பாக புகார்கள் வந்துள்ளன. நீங்கள் அனுப்பி உள்ள பார்சல் திரும்பி வந்துள்ளதாக உங்களுக்கு கால் வரும். … Read more

நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோருக்கு பிடிவாரண்ட்..!!

மதுரை: நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருவரையும் ஜனவரி 20ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சம்பந்தப்பட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த பிராங்க்லின் ராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அடேயப்பா… சிங்கம் போல இருக்கும் நாய்; 20 கோடிக்கு வாங்கிய நபர்; காரணம் என்ன?

பெங்களூருவைச் சேர்ந்த இந்திய நாய் வளர்ப்போர் சங்கத்தின் தலைவராக இருக்கும் எஸ் சதீஷ் என்பவர், 20 கோடி ரூபாய்க்கு `காகசியன் ஷெப்பர்ட்’ (Caucasian Shepherd) இன நாயை ஹைதராபாத்தில் உள்ள ஒருவரிடம் இருந்து வாங்கி உள்ளார். ஒன்றரை வயதுடைய இந்த அரிய வகை நாய்க்கு, `கடபோம்ஸ் ஹேடர்’ என்று பெயர் வைத்துள்ளார். 100 கிலோ எடை கொண்ட இந்நாய் ஒரு பெண் சிங்கத்தைப் போல் பெரியது என சதீஷ் தெரிவித்துள்ளார். நாயின் தலை 38 அங்குல அளவிலும், … Read more

என்எல்சிக்கு கையகப்படுத்தும் நிலம் ஏக்கருக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்! அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்…

கடலூர்: நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்காக கையகப்படுத்தும் நிலங்களுக்கு ஏக்கருக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் சுரங்க விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதற்கு விவசாயிகள், பாமக உள்பட சில கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்டு19ந்தேதி கடலூரில் மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்ட ஆட்சித் … Read more

ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது நோட்டீஸ் தந்து அவகாசம் வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற ஆணையை பின்பற்றாதது ஏன்?: ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது நோட்டீஸ் தந்து அவகாசம் வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற ஆணையை பின்பற்றாதது ஏன்? என உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்றாத அதிகாரி ஆஜராகி விளக்கம் தர ஆணையிடப்பட்டது. திண்டுக்கல்லைச் சேர்ந்த சிவபெருமாள் என்பவர் ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். வேடசந்தூர் தாலுகாவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பாலமூர்த்தி என்பவர் ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தார்.

`சென்னை இலக்கியத் திருவிழாவில் திருநர் எழுத்தாளர்களுக்கான அமர்வு ஏன் இல்லை?’ – எழும்பும் குரல்கள்

ஊடகங்களும், செயற்பாட்டாளர்களும், பெண்ணிய இயக்கங்களும் பாலின சமத்துவத்தை பல்வேறு வடிவங்களில் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இன்றும் பாலினத்தை அடிப்படையாகக் கொண்டு பெண்களும் திருநர் சமூகத்தினரும் ஒடுக்குமுறைகளுக்கும் புறக்கணிப்புக்கும் உள்ளாகிறார்கள். அவர்களது திறமைக்கான அங்கீகாரம் எளிதில் கிடைப்பதில்லை. சென்னை இலக்கிய திருவிழா இந்நிலையில், சென்னை இலக்கியத் திருவிழா, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஜனவரி 6 – 8-ம் தேதி வரை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் கரன் கார்க்கி, இளம்பிறை, மனுஷ்யபுத்திரன், வெற்றிமாறன், மிஷ்கின், யுகபாரதி, கபிலன், கதை சொல்லி சதீஷ், … Read more

என்எல்சியை வெளியேற்றக் கோரி பாமக தலைவர் அன்புமணி நடைபயணம் – தமிழகஅமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு…

கடலூர்: என்எல்சி விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், என்எல்சியை வெளியேற்றக் கோரியும்  பாமக தலைவர் அன்புமணி  ராமதாஸ் 2 நாள் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இன்றும், நாளையும் அவர் கடலூர் மாவட்டத்தில் நடைபயணம் செய்து, மக்களிடையே ஆதரவை திரட்டி வருகிறார். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்பட்டதிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார்.  வன்னியர்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் அவரது நடைபயணம் அவ்வப்போது நடைபெற்று … Read more