கடலூரில் திரைப்பட இயக்குநர் செந்தில் என்பவரது அலுவலகத்தை திறந்து வைக்க வந்த டிடிஎஃப் வாசன் மீது போலீசார் வழக்கு பதிவு

கடலூர், புதுப்பாளையைம் பகுதியில் திரைப்பட இயக்குநர் செந்தில் என்பவரது அலுவலகத்தை திறந்து வைக்க வந்த டிடிஎஃப் வாசன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். டிடிஎஃப் வாசன், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்ட 3 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. யூடியூப்பர் டிடிஎஃப் வாசனை காண வந்தவர்களை விரட்டியடித்த போலீசார் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர்.

ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பங்கேற்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜெய்பூர்: ராகுலின் 98வது நாள் யாத்திரையான, இன்று(டிச.,14) ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் பங்கேற்றார். காங்., எம்.பி. ராகுல் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3570 கிலோ மீட்டர் தூரத்துக்கான 150 நாட்கள் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதயாத்திரையை துவக்கினார். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்ரா, மத்திய பிரதேசத்தில் நடைபயணத்தை முடித்த பிறகு, கடந்த 3ம் தேதி … Read more

புதிய அமைச்சர் உதயநிதி முதல் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்ட பி.டி.ஆர் வரை… முழு விவரம்!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் சிவ மெய்யநாதன் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு துறை (இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு மாற்றாக) அமைச்சர் இ.பெரியசாமி முன்பு: கூட்டுறவுத்துறை தற்போது: ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் முன்பு: ஊரக வளர்ச்சித் துறை தற்போது: கூட்டுறவுத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் முன்பு: வனத்துறை தற்போது: சுற்றுலாத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சி … Read more

11 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி…

சென்னை: 11 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில், 11 மாவட்டங்களின் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)  வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த பணியிடங்களக்கு இன்று முதல் ஜனவரி 13ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம என்றும், அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான,  http://tnpsc.gov.in, http://tnpscexams.in  விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி  நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் … Read more

நாட்டில் மொத்த பணவீக்க விகிதம் நவம்பர் மாதத்தில் 5.85% ஆக குறைவு: ஒன்றிய நிதியமைச்சர் தகவல்

டெல்லி: நாட்டில் மொத்த பணவீக்க விகிதம் நவம்பர் மாதத்தில் 5.85% என குறைந்துள்ளதாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் மொத்த பணவீக்க விகிதம் 8.39% ஆக இருந்த நிலையில் நவம்பரில் குறைந்துள்ளது என ஒன்றிய நிதியமைச்சர் கூறியுள்ளார்.

இந்தியா- சீனா இடையே அமைதி நிலவ வேண்டும்: ஐ.நா. பொதுச்செயலாளர் வலியுறுத்தல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: இந்தியா- சீனா எல்லையில் ஏற்படும் பதற்றத்தை தணித்துவிட்டு, அமைதி நிலவ வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரஸ் வலியுறுத்தியுள்ளார். கடந்த 2020 ம் ஆண்டு மே மாதம் கிழக்கு லடாக்கில் சீன வீரர்கள் அத்துமீற முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்த போது இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்த நிலையில் சீன தரப்பில் 40க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என … Read more

"அனுராக் காஷ்யப் பேசியதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?"-விவேக் அக்னிஹோத்ரி

அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் அனுராக் காஷியப், ‘நல்ல கதைகளைத் தேடாமல், ஒருவரைப் பார்த்து அதே பாணியில் கதைகளைத் தேர்வு செய்து திரைப்படம் எடுப்பது திரையுலகின் அழிவிற்கு வழிவகுத்துவிடும்’ என்றும் ‘மிகப்பெரிய பட்ஜட்டில் வெற்றித் திரைப்படங்களை எடுக்க வேண்டும் என்ற செயல்களால்தான் பாலிவுட்டு தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் நிலைமைக்கு சென்றுள்ளது’ என்றார். இதுபற்றி விரிவாகப் பேசிய அவர், “காந்தாரா, புஷ்பா போன்ற திரைப்படங்கள் நல்ல கதைகளை படமாக்க நினைப்பவர்களுக்கு ஒரு தைரியத்தை கொடுக்கிறது. ‘கேஜிஎஃப்’ போன்ற … Read more

அவர் பேரழிவானவர், மோசமான நடுவர்! உலகக்கோப்பை தோல்வி குறித்து குரோஷிய கேப்டன் பரபரப்பு குற்றச்சாட்டு

அர்ஜென்டினாவுடனான போட்டியில் பெனால்டி தவறாக வழங்கப்பட்டதாக நடுவர் மீது குரோஷிய கேப்டன் லூகா மோட்ரிச் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். பெனால்டி குற்றச்சாட்டு லுஸைல் மைதானத்தில் நேற்று நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணியை வீழ்த்தியது. அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் மெஸ்சி பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார். ஆனால் அவருக்கு வழங்கப்பட்ட பெனால்டி தவறானது என குரோஷியா கேப்டன் மோட்ரிச் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து மோட்ரிச் கூறுகையில், ‘பெனால்டி கொடுக்கப்படும் … Read more

நந்தன் படத்தில் நடித்தபோது பேய் பிடித்ததாக கூறிய நடிகர் சசிகுமார்… சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்தார்…

‘கத்துக்குட்டி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இரா. சரவணன் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிக்கும் படம் நந்தன். இதில் சசிகுமாருக்கு ஜோடியாக பிக்பாஸ் ஸ்ருதி பெரியசாமி நடித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் உதயநிதி ஸ்டாலின் வெளிட்ட நந்தன் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பரபரபரப்பாக பேசப்பட்டது. இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்ட சசிகுமார் பிறகு தனது கேரக்டர் என்னவென்று தெரிந்ததும் ஏன்தான் ஒத்துக் கொண்டோமோ என்று மிகவும் கஷ்டப்பட்டதாக தற்போது தகவல் … Read more

வீனஸ் கிரகத்திற்கு விண்கலன்களை அனுப்புவதற்கான முயற்சிகளை இஸ்ரோ மேற்கொண்டுள்ளது: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: வீனஸ் கிரகத்திற்கு விண்கலன்களை அனுப்புவதற்கான முன்முயற்சிகளை இஸ்ரோ மேற்கொண்டுள்ளது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. வளிமண்டல குறித்த படிப்புகளுக்கான வாய்ப்புகள் தொடர்பாகவும் இஸ்ரோ பரிசீலித்து வருகிறது என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது.