உயிரை பாதுகாக்க வேண்டுமானால் முக்கவசம் அணியுங்கள்: திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

திருச்சி:  முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திருச்சி வருகை தந்துள்ள நிலையில், இன்று காலை திருச்சி வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில், கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். அப்போது, முகக்கவசம் அணிவது அவரவர் உயிரை அவரவர்  பாதுகாத்துக்கொள்ளும் நடவடிக்கை என்று கூறினார். அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு வந்துள்ளார்.  இந்த நிலையில், திருச்சி விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை … Read more

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு போட்டித்தேர்வை கட்டாயமாக்கும் அரசாணையை ரத்து செய்க: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு போட்டித்தேர்வை கட்டாயமாக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். போட்டித் தேர்வுக்கு பதிலாக தகுதித் தேர்வு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

மத்தியப் பிரதேச முதல்வர் புதுச்சேரியில் ஓய்வு| Madhya Pradesh Chief Minister rests in Puducherry

புதுச்சேரி : ஓய்வெடுக்க குடும்பத்துடன் புதுச்சேரிக்கு வந்துள்ள மத்தியப் பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ்சிங் சவுகானை சபாநாயகர் செல்வம் வரவேற்றார். மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ., ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக ஷிவ்ராஜ்சிங் சவுகான் உள்ளார். அவர் குடும்பத்துடன் தனி விமானம் மூலம் நேற்று மாலை 3:50 மணிக்கு புதுச்சேரிக்கு வந்தார். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் பூரணாங்குப்பம் சரோவர் லகூன் தனியார் விடுதியில் தங்கிய அவரை சபாநாயகர் செல்வம், அசோக்பாபு எம்.எல்.ஏ., ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். … Read more

இலவச வேட்டி சேலை திட்டம்: "நெசவாளர்களிடமும் 10% கமிஷன் கேட்பவர்தான் அமைச்சர் காந்தி" – அண்ணாமலை

இலவச வேட்டி சேலை திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட ரூ.487.92 கோடியை வெளிமாநிலத்தின் தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க திட்டமிட்டிருந்தால், அதை பார்த்துக்கொண்டு தமிழக பா.ஜ.க சும்மா இருக்காது என அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நாளில் ஏழை, எளிய மக்கள் புத்தாடைகள் அணிய வேண்டும் என்பதற்காகவும், கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துக்காகவும் மறைந்த முன்னாள் முதல்வர் … Read more

திருமணத்திற்கு முன் காதலனை சந்தித்த மணமகள்: தோழியின் செயலால் மணமகன் எடுத்த திடீர் முடிவு

ஆப்பிரிக்க நாடான கானாவில் முன்னாள் காதலனை மணப்பெண் சந்தித்ததை அறிந்த மணமகன் சில மணி நிமிடங்களில் நடக்க இருந்த திருமணத்தை தடாலடியாக நிறுத்தியுள்ளார். இணையத்தில் வைரல்  சமீபத்திய காலமாக திருமண மேடை வரை வந்த கல்யாணங்கள் கூட இறுதி நொடியில் எதிர்பாராத காரணங்களால் தடைபடுவதை தொடர்ந்து பார்க்க முடிகிறது. உதராணமாக இந்தியாவில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமகன் மணமகளுக்கு மணமேடையில் வைத்து முத்தம் கொடுத்ததற்காக ஆத்திரமடைந்து காவல் நிலையம் வரை சென்று பிரிந்த நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளது. அந்த வகையில் ஆப்பிரிக்க … Read more

கொரோனா பரவல்: புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு ‘நோ’ கட்டுப்பாடு – கோயம்பேடு வியாபாரிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்!

சென்னை: புதிய வகை கொரோனா வேகமாக பரவி வருவதால், முக்கவசம் மற்றும் கூட்டம் கூடுவதை தவிர்க்க மத்தியஅரசு வலியுறுத்தி உள்ள நிலையில், தமிழகஅரசு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு எந்தவித தடைகளும் விதிக்காத நிலையில், கோயம்பேடு வியாபாரிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. சீனா உள்ளிட்ட சில நாடுகளிலும் இந்தியாவின் வட மாநிலங்களிலும் மீண்டும் கொரோனா நோய் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ள சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு கொரோனா நோய் தொற்றை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் … Read more

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கூடலூரில் சிபிசிஐடி போலீஸ் விசாரணை..!!

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கூடலூரில் சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. 2017ல் கொலை, கொள்ளையில் ஈடுபட்டவர் கூடலூர் வழியாக கேரளா தப்பிச் சென்ற நிலையில் விசாரணை நடைபெறுகிறது. கேரளா தப்பிச் செல்ல கூடலூரில் உதவியதாக ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டது.

முக எலும்பு சீரமைப்பு கருத்தரங்கம்| Facial bone alignment seminar

புதுச்சேரி : புதுச்சேரி இந்திராகாந்தி அரசு பொதுமருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு மையம் சார்பில் முக எலும்பு சீரமைப்பு குறித்த கருத்தரங்கம் நடந்தது. மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள் தலைமை தாங்கினார். பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் அசோக்குமார் முக எலும்பு சீரமைப்பு குறித்து பேசினார். சென்னை எம்.ஜி.எம்., ெஹல்த் கேர் மருத்துவமனை குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் ஹரிச்சந்திரன் குழந்தைகளுக்கு செய்யப்படும் அறுவை சிகிச்சை குறித்து பேசினார். கருத்தரங்கில் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி கருணாநிதி, மக்கள் தொடர்பு … Read more

ஆந்திரா: சந்திரபாபு நாயுடு கட்சி பொதுக்கூட்டத்தில் கடும் நெரிசல் – 7 பேர் பலியான சோகம்

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கந்துகூரில் நேற்று மாலை தெலுங்குதேசம் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு தனது பிரசாரத்தின் ஒரு பகுதியாக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் பொதுக் கூட்டத்தில் தெலுங்கு தேசக் கட்சியின் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அந்த கூடியிருந்தனர். இந்த கூட்டத்தில் அந்தக் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கலந்துக் கொண்டு உரையாற்ற இருந்தார். அவரின் வருகையின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக தெரிகிறது. … Read more

ரூ.410கோடி மதிப்பிலான 2கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை மத்திய அரசுக்கு இலவசமாக வழங்குகிறது சீரம் நிறுவனம்!

புனே: பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட், மத்திய அரசுக்கு 2 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை இலவசமாக வழங்குவதாக அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று பரவல் தீவிரமாக இருந்த காலக்கட்டத்தில், சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி மக்களுக்கு அபாந்தவனாக இருந்து  பல கோடி மக்களின் உயிர்களை  காப்பாற்றியது. பின்னர் தொற்று பரவல் குறைந்ததும், அந்நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசிகளை பொதுமக்கள் போடுவதற்கு முன்வராததால், அந்நிறுவனம் தயாரித்த சுமார் 10கோடி டோஸ் தடுப்பூசிகள் காலாவதியாகி வீணானது. … Read more