மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு: ஷரீக் தங்கியிருந்த கோவை லாட்ஜில் தனிப்படை ரெய்டு… பரபரப்பு தகவல்கள்…

கோவை: மங்களூர் குண்டு வெடிப்பு குற்றவாளி ஷாரிக் கோவையில் தங்கிய லாட்ஜில் தனிப்படை போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினர்.  கோவை கார் வெடிப்பிலும், மங்களூர் ஆட்டோ குக்கர் குண்டுவெடிப்புக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் வெடிகுண்டு வெடித்து, அதில் பயணம் செய்த முகமது ஷாரிக் (24) மற்றும் டிரைவர் படுகாயமடைந்தனர். படுகாயம் அடைந்த முகமது ஷாரிக் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது வீட்டில் நடத்திய சோதனையில், அவர்  பயன்படுத்திய … Read more

கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் கட்டண விலக்கு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்: அமைச்சர் மூர்த்தி விளக்கம்

சென்னை: கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் கட்டண விலக்கு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் அமைச்சர் மூர்த்தி விளக்கம் அளித்தார். கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி மதுரை திருமங்கலம் நகரப்பகுதியில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

நாடு முழுதும் தாக்குதல் நடத்துவதற்கான சதி. அம்பலம்!| Dinamalar

மங்களூரு கர்நாடக மாநிலம், மங்களூரில் நடந்த குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதி ஷாரிக், கோவை குண்டு வெடிப்பில் இறந்த ஜமேஷா முபினுக்கு உதவியதும், நாடு முழுதும் தாக்குதல் நடத்துவதற்கானசதி திட்டத்தில் ஈடுபட்டதும் அம்பலம் ஆகியுள்ளது. தமிழகத்தில், இவர்களுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும்நபர்களிடமும், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவங்களில் மூளையாகசெயல்பட்டு, தலைமறைவானவர் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு, 2 லட்சம் ரூபாய் ரொக்க பரிசுவழங்குவதாக என்.ஐ.ஏ., அறிவித்துள்ளது. கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான … Read more

கிசான் திட்டம்: 67% சரிந்த விவசாய பயனாளிகளின் எண்ணிக்கை… திட்டமிட்டு குறைக்கிறதா பாஜக அரசு?!

சிறு குறு விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் மோடியால் கொண்டுவரப்பட்ட `பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி’ (Pradhan Mantri Kisan Samman Nidhi) திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை 67% சரிந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திட்டம் அமலான கடந்த மூன்று ஆண்டுகளில் பெரும் பங்கு குறைந்திருப்பது பல்வேறு சந்தேகங்களையும் கிளப்பியிருக்கிறது. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி தேர்தல் நேர வாக்குறுதி: கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவந்த நிலையில், பிரதமர் மோடியால் பிப்ரவரி மாதம் … Read more

2வது ரோஜ்கர் மேளா: 71ஆயிரம் பேருக்கு பணியானைகளை இன்று வழங்குகிறார் பிரதமர் மோடி…

டெல்லி: இன்று நடைபெறும் 2வது ரோஜ்கர் மேளா (வேலைவாய்ப்பு கண்காட்சி) வில் பிரதமர் மோடி 71ஆயிரம் பேருக்கு பணியானைகளை வழங்குகிகறார். பிரதமர் மோடி, கடந்த மாதம் (அக்டோபர்) 22ந்தேதி அன்று 1 மில்லியன் மக்களை ஆட்சேர்ப்பு செய்ய “ரோஜ்கர் மேளா”என்னும் வேலைவாய்ப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதன்படி அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் பணி வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய  உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளின் அடியை மென்மையாக்க தனது அரசாங்கத்தின் முயற்சிகளை அடிக்கோடிட்டுக் காட்டினார். அன்றைய … Read more

தமிழறிஞர் அவ்வை நடராசன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!!

சென்னை: தமிழறிஞர் அவ்வை நடராசன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அவ்வை நடராசனின் தமிழ் பணிகளை கவுரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது.

தொழிற்சாலைகளுக்கு சலுகைகள் வழங்க புதுச்சேரி அரசு முடிவு!| Dinamalar

புதுச்சேரி: புதுச்சேரியில் தொழிற்சாலைகளுக்கு மூன்று முக்கிய சலுகைகள் அளிப்பது தொடர்பாக அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. புதுச்சேரியில் தொழில் தொடங்க, வரிச் சலுகை, மின் கட்டண சலுகை, மானியத்துடன் கடன் வசதி உள்ளிட்ட ஏராளமான சலுகைகள், கடந்த காலங்களில் வழங்கப்பட்டது. அதனால், தொழிலதிபர்கள் போட்டி போட்டுக் கொண்டு தொழில் தொடங்கினர். அமைதியான சூழல், தடையில்லா மின்சாரம், தண்ணீர் வசதி போன்றவைகளும் தொழில் முனைவோரை கவர்ந்திழுத்தன. தட்டாஞ்சாவடி, திருபு வனை, மேட்டுப்பாளை யம், சேதராப்பட்டு, மணப்பட்டு, கிருமாம்பாக்கம் … Read more

காங்கிரஸ்: “தலைவர் பதவி அளித்தால், சிறப்பாக செயல்பட தயாராக இருக்கிறேன்" – கார்த்தி சிதம்பரம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில், கடந்த 15-ம் தேதி நடைபெற்றது. கே.எஸ்.அழகிரி இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள் அனைவரும் திடீரென கே.எஸ்.அழகிரியால் நியமிக்கப்பட்ட. திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமாரையும், அவரால் நியமிக்கப்பட்ட மூன்று வட்டாரத் தலைவர்களையும் உடனடியாக மாற்ற வேண்டும் என்று … Read more

சாலமன் தீவுகளில் 7.0 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை 

சாலமன் தீவுகளில் 7.0 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்த அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகி உள்ளது. இதனால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சாலமன் தீவுகளில் உள்ள தெற்கு மலாங்கோ பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா ‘நெருப்பு வளையம்’ என்று அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளது. இதனால் அங்கு நிலநடுக்கம் என்பது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. … Read more

தமிழ்நாடு முழுவதும் சிவில் சப்ளை சிஐடி போலீசார் நடத்திய சோதனையில் 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 23 பேர் கைது

சென்னை: தமிழ்நாடு முழுவதும் சிவில் சப்ளை சிஐடி போலீசார் நடத்திய சோதனையில் 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ரேஷன் அரிசியை கடத்திய 23 பேர் கைது செய்யப்பட்டு 3 லோடு வேன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. வீட்டு உபயோக சிலிண்டர்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றது தொடர்பாகவும் 2 பேரை  கைது  செய்துள்ளனர்.