ஆளுநர் மாளிகை விளக்கம் என வெளியாகும் தகவல் பொய்! தமிழ்நாடு அரசு விளக்கம்

சென்னை: ஆளுநரை உரை தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் என வெளியாகும் தகவல் பொய் என தமிழ்நாடு அரசு விளக்கம் தெமரிவித்து உள்ளது.  “சில பத்திகளை தவிர்த்து வாசியுங்கள் என ஆளுநருக்கு அரசு கூறியதாக பரவும் தகவல்கள் பொய்யானது என கூறியுள்ளது. 2023ம் ஆண்டின்  முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 9ந்தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. பேரவை நிகழ்வுகள் தொடங்கியதும்,  ஆளுநர் தனது உரையை வாசிக்கத் தொடங்கினார். அப்போது, திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டு, … Read more

கன்னியாகுமரியில் சாலை விபத்தில் 2 பெண்கள் உயிரிழப்பு

கன்னியாகுமரி: பூதப்பாண்டியில் இருந்து தாழாக்குடிக்கு வேனில் சென்ற போது விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் உயிரிழந்தனர். வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பூதப்பாண்டியை சேர்ந்த உலகம்மாள் (65), உமா (50) ஆகியோர் உயிரிழந்தனர்.

உங்க கட்சியினரை கைது செய்ய போலீசார் ரொம்ப சிரமப்பட வேண்டாம்… ரெண்டு ஆட்டோ பிடிச்சா போதும்!| speech, interview, statement

மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன் பேட்டி: தமிழகத்தில், கவர்னர் ரவி பொறுப்பேற்றதில் இருந்து, கூட்டாட்சி தத்துவத்திற்கு, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவும், நாட்டின் பாரம்பரியத்திற்கு விரோதமாகவும் நடந்து வருகிறார். இதன் உச்ச நிலையாக, சட்டசபையில் மரபுகளை மீறி பேசி, வெளிநடப்பு செய்துள்ளார். கவர்னர் ரவி, தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும். மத்திய அரசு, அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் வரும், 20ம் தேதி கவர்னர் மாளிகை முன் முற்றுகைப் … Read more

`சீட்டாட்டத்தில் பணம் சம்பாதிக்கலாம்': பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள்

மும்பையின் மேற்கு பகுதியில் வசிக்கும் நிஷா மேத்தா(41) என்ற பெண் இரண்டு இடங்களில் பியூட்டி பார்லர் நடத்தி வந்தார். கொரோனாவால் இரண்டையும் மூடிவிட்டார். தனக்கு தெரிந்த லால்சந்த் குப்தா என்பவர் தானே மற்றும் நவிமும்பையில் நடத்தும் சீட்டாட்ட கிளப்பிலும் பார்ட்னராக சேர்ந்தார். நிஷா சீட்டாட்டத்தில் பைத்தியமாக இருந்தார். சீட்டாட்டத்தின் மூலம் அதிக பணம் சம்பாதிக்க முடியும் என்று கருதினார். பாலியல் வன்கொடுமை ஆனால் அவர் முதலீடு செய்த சீட்டாட்ட கிளப்பில் முறைகேடு நடப்பதாக உணர்ந்து இரண்டு கிளப்பிலும், … Read more

ஆளுநர் உரை தொடர்பான சலசலப்பு: எம்.எல்.ஏக்களுக்கு சட்டப்பேரவை செயலர் கடிதம் ..!

சென்னை: ஆளுநர் உரையின்போது ஏற்பட்ட சலசலப்பு தொடர்பாக, ஆளுநர் உரைக்கு வருத்தமும், நன்றியும் என சட்டப்பேரவை செயலர்  அனைத்து எம்.எல்.ஏக்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். இந்த ஆண்டில் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ஆளுநர் உரை, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் கோஷம், கோஷமிட்டவர்களை தடுக்கா அவைத்தலைவரின் நடவடிக்கை, ஆளுநரின் மரபுமீறிய பேச்சு, அதுகுறித்து மரபு மீறிய தீர்மானம், ஆளுநரின் வெளிநடப்பு என பல மரபுமீறிய செயல்களால், தமிழக சட்டப்பேரவைக்கு களங்கம் ஏற்பட்டது. இந்த நிலையில்,  … Read more

சுபஸ்ரீ மரணம் குறித்து அவதூறு பரப்பப்படுவதாக ஈஷா யோகா மையம் கண்டனம்

கோவை: சுபஸ்ரீ மரணம் குறித்து அவதூறு பரப்பப்படுவதாக ஈஷா யோகா மையம் கண்டனம் தெரிவித்துள்ளது. சுபஸ்ரீயின் மரணம் துரதிர்ஷ்டவசமானது என்றும், இத்துயர சம்பவம் அதிர்ச்சி, வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்றும் ஈஷா யோகா மையம் தரப்பு கூறியுள்ளது.

உத்தரகாண்ட்டை தொடர்ந்து உத்திரப்பிரதேசத்திலும் வீடுகளில் விரிசல் – அச்சத்தில் மக்கள்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஜோஷிமத் நகரம் ‘பூகோள சொர்க்கம்’ என்று குறிப்பிடப்படுகிறது. உத்தராகண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில் இருக்கும் இந்தக் நகரம், தற்போது நிலச்சரிவு அழிவு மண்டலமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜோஷிமத் நகரம் பூமிக்குள் புதைந்துவருவதால் வீடுகள் உள்பட ஏராளமான கட்டடங்கள் விரிசலடைந்திருக்கின்றன. தற்போது, 603 கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். வசிக்க முடியாத அளவுக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் கட்டடங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். அவர்களை தற்காலிக முகாம்களில் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டிருக்கிறது. … Read more

திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு.. அப்போலோவில் அனுமதி..!

சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். 80வயதான திமுக பொதுச்செயலாளரும்,  தமிழக நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துரைமுருகனுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்படும் துரைமுருகன் மருத்துவமனைக்கு சென்று உடல்பரிசோதனை மேற்கொண்டு வந்தார்.  தற்போது நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்றார். இந்த நிலையில், . அவருக்கு திடீரென நேற்று காய்ச்சல் … Read more

ஆளுநர் உரையின்போது நடந்த சம்பவம் வருத்தம் அளிப்பதாக குறிப்பிட்டு தீர்மானம் முன்மொழிய முடிவு..!!

சென்னை: ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் சட்டப்பேரவை தனது வருத்தத்தை பதிவு செய்ய முடிவு செய்துள்ளது. அச்சிடப்பட்ட உரையில் சில பகுதிகளை இணைத்தும் விடுத்தும் ஆளுநர் உரையாற்றியதற்கு வருத்தத்தை பதிவு செய்யவும் முடிவு. ஆளுநர் உரையின்போது நடந்த சம்பவங்கள் வருத்தத்தை அளிப்பதாக குறிப்பிட்டு தீர்மானம் முன்மொழியப்படுகிறது.