புதிதாக வாங்கிய டிவி ஒரு வாரத்தில் பழுதானதால் மன உளைச்சலுக்கு ஆளானவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு தர உத்தரவு..!!

சென்னை: புதிதாக வாங்கிய டிவி ஒரு வாரத்தில் பழுதானதால் மன உளைச்சலுக்கு ஆளானவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு தர உத்தரவிடப்பட்டுள்ளது. மனுதாரருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க ரிலையன்ஸ் ரீட்டெய்ல், பிலிப்ஸ் டிவி நிறுவனங்களுக்கு நுகர்வோர் கோர்ட் ஆணையிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் செல்வக்குமாரசாமி, ரிலையன்ஸ் ஷோரூமில் 2017ல் புதிதாக டிவி வாங்கியுள்ளார். புதிதாக வாங்கிய டிவி ஒரு வாரத்தில் பழுதான நிலையில் அது சரி செய்யப்பட்டு மீண்டும் பழுதானதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

“The spirit of Ukraine" – 2022-ம் ஆண்டின் உலகின் சிறந்த நபர் ஜெலன்ஸ்கி; டைம் பத்திரிகை தேர்வு!

உக்ரைன் நேட்டோவில் சேர்வதற்கு கடுமையான எச்சரிப்புகளை விடுத்துவந்த ரஷ்யா, கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைனில் போர்தொடுத்தது. பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகள், ஐ.நா சபையில் ரஷ்யாவுக்கெதிராக தீர்மானம், ரஷ்யா மீது அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரத் தடை என பல நிகழ்ந்தும் ரஷ்யா-உக்ரைன் போர் இன்னும் முற்றுப்பெறவில்லை. உக்ரைன் – ரஷ்யா கடந்த வாரம்கூட, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் உயர்மட்ட ஆலோசகரான மைக்கைலோ போடோலியாக், “ரஷ்யா – உக்ரைன் மோதலின்போது உக்ரேனிய படைவீரர்கள் 10,000 முதல் … Read more

மகனின் புகைப்படத்தை பகிர்ந்து பிரித்தானிய பெற்றோரை எச்சரித்த தாயார்: அறிகுறிகளை கவனியுங்கள்!

தமது மகனின் நெஞ்சை உலுக்கும் புகைப்படத்தை பகிர்ந்த தாயார் ஒருவர், Strep A தொற்று பாதிப்பின் ஆபத்து குறித்து எச்சரித்துள்ளார். இதுவரை 9 சிறார்கள் கடந்த ஒரு வாரமாக பிரித்தானியாவில் Strep A தொற்று தீவிரமடைந்து வருகிறது. இதுவரை 9 சிறார்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். ஏழு வயது ஹன்னா ரோப் உட்பட மரணமடைந்த கிட்டத்தட்ட அனைத்து குழந்தைகளும் ஆரம்ப பள்ளி வயதுடையவர்கள் மட்டுமின்றி, credit: amylaura36 சிறுமி ஹன்னா ரோப் லேசான இருமலுடன் காணப்பட்டவர், 24 … Read more

ஆன்லைன் விளையாட்டு நிறுவன பிரதிநிதிகள் ஆளுநர் ரவியுடன் சந்திப்பு!

சென்னை: ஆன்லைன் விளையாட்டு நிறுவன நிர்வாகிகளுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு மேற்கொண்டார். ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் நிலையில் நடைபெற்ற சந்திப்பால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

கரும்பு தோட்டத்தில் மருத்துவ மாணவரை நிர்வாணப்படுத்தி, வீடியோ எடுத்து, மிரட்டி, பணம் பறித்த கும்பல்

புனே, மராட்டியத்தின் புனே மாவட்டத்தில் பாராமதி நகரில் விடுதியில் தங்கி மாணவர் ஒருவர் மருத்துவம் படித்து வருகிறார். அவர், விடுதியில் இருந்து மார்க்கெட்டுக்கு சென்று கொண்டிருந்து உள்ளார். அவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த நபர் ஒருவர், மாணவரை துன்புறுத்தி அவரிடம் இருந்த ரூ.15 ஆயிரம் தொகையை பறித்து கொண்டார். இதனை தடுக்க முயன்ற மாணவரை அந்த நபர் அடித்துள்ளார். இதனை கவனித்த 2 பேர் மோட்டார் சைக்கிளில் அந்த பகுதிக்கு வந்துள்ளனர். இதன்பின்பு, 3 பேரும் சேர்ந்து … Read more

`ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் தினமும் ரூ.2,500 பெறலாம்!' – சத்தியமங்கலத்தில் பலே மோசடி

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில், ‘குவாலிட்டி டிரேடர்ஸ், ரிலீஃப் ஹெர்பல் ப்ராடக்ட்’ என்ற பெயரில் மூலிகை மருந்து தயாரிக்கும் ஆலை கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டது. இந்நிறுவனத்தை கெம்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த தங்கராஜ் தலைமையில் துரைசாமி, புளியங்கோம்பை பிரகாஷ், கோனார்நாயக்கன்பாளையம் ஆனந்தகுமார், பவானி ஆண்டிபாளையம் பிரபாகரன், சத்தி வடக்குப்பேட்டை பொன்னுசாமி ஆகியோர் இந்த ஆலையின் பங்குதாரர்களாக இருந்தனர். ஆஸ்துமா, கை கால் குடைச்சல், மூலம் போன்றவற்றுக்கு இந்நிறுவனம் தயாரிக்கும் மூலிகை மருந்தை பயன்படுத்தினால் உடனடி நிவாரணம் அளிக்கும் எனக் … Read more

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைனின் மரணத்தை வாங்குகிறது இந்தியா! உக்ரைன் அமைச்சர் விமர்சனம்..

இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைனின் மரணத்தை வாங்குவதாக, உக்ரைன் வெளியுறவு துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா விமர்சித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் 8 மாதங்களை கடந்தும் தொடர்ந்து வரும் நிலையில், இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதை உக்ரைன் விமர்சித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதியன்று போர் தொடுத்தது. இந்த போர் 8 மாதங்களை கடந்தும் தொடர்கிறது. உக்ரைனுக்கு கடுமையான  சேதங்களை ஏற்படுத்தி வந்தாலும், உக்ரைன் … Read more

5093 நிவாரண முகாம்கள், 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் உள்ளன: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

சென்னை: 5093 நிவாரண முகாம்கள், 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் உள்ளன. தங்கு தடையின்றி குடிநீர் வழங்குவதற்கு தேவையான ஜெனரேட்டர்கள் வைத்திருக்க வேண்டும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியுள்ளார். பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுவனை மீட்க முயற்சி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பேதுல் :மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுவனை மீட்க, தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பேதுல் மாவட்டத்தின் மாண்டவிகிராமத்தில் 400 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் 8 வயது சிறுவன் தவறி விழுந்தான். இவனை மீட்க இரண்டு நாட்களாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சிறுவன் ஆழ்துளை கிணற்றில் 40 அடி ஆழத்தில் சிக்கியிருப்பதாகவும், … Read more

இந்தியாவில் 93% கிராமங்களில் மொபைல் போன் வழி இணையதள வசதி: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி, நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, வருகிற டிசம்பர் 29-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில், நாட்டில் அதிகரித்து வரும் வேலை வாய்ப்பின்மை விவகாரம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்நிலையில், நாடாளுமன்றத்தின் மக்களவையில் பா.ஜ.க. உறுப்பினர்கள் உபேந்திரா சிங் ராவத் மற்றும் போலாநாத் ஆகியோர் உத்தர பிரதேசத்தில் பல கிராமங்களில் மொபைல் போன் வழியேயான இணையதள தொடர்பு வசதி இல்லாதது பற்றி எழுப்பிய கேள்விக்கு மத்திய தகவல் … Read more