குடியரசு தினவிழாவையொட்டி தமிழ்நாட்டின் சிறந்த காவல் நிலையங்களுக்கு முதலமைச்சர் விருது அறிவிப்பு…

சென்னை:  நாட்டின் 74வது குடியரசு தினவிழாவையொட்டி தமிழ்நாட்டின் சிறந்த காவல் நிலையங்களுக்கு தமிழ்நாடு அரசு  விருது அறிவித்துள்ளது. நாட்டின் 74வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு முதன்முதலாக தேசிய கொடியை ஏற்றுகிறார். அதுபோல மாநிலங்களில் கவர்னர்கள் தேசிய கொடி ஏற்றி வருகின்றனர். இந்த நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு, சிறப்பாக செயல்பட்ட 3 காவல்நிலையங்களுக்கு தமிழகஅரசு சிறந்த காவல் நிலையத்துக்கான முதலமைச்சர் விருதை … Read more

கலைஞர் நினைவிடம் அருகே பேனா வடிவிலான நினைவுச்சின்னம் அமைப்பது தொடர்பான சுற்றுச்சூழல் மற்றும் செயல்திட்ட அறிக்கை பொதுமக்கள் பார்வைக்கு வைப்பு

சென்னை: சென்னை மெரினா கடற்கரை பகுதியில் நிறுவப்படவுள்ள கலைஞர் நினைவிட பேனா நினைவுச் சின்னம் குறித்த சுற்றுச்சூழல் அறிக்கை மற்றும் செயல்திட்ட அறிக்கையானது ரிப்பன் மாளிகை மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், பொதுமக்கள் விவரங்களை தெரிந்துக்கொள்ள இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பல வண்ண ராஜஸ்தானி தலைப்பாகையுடன் பிரதமர் மோடி| PM Modi wears multi-coloured Rajasthani turban

புதுடில்லி: குடியரசு தின விழாவில் பிரதமர் மோடி, பல வண்ணங்களில் ஆன ராஜஸ்தானி தலைப்பாகையை அணிந்திருந்தார். பிரதமர் மோடி முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் போது, விதவிதமான தலைப்பாகை அணிவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்தாண்டு குடியரசு தின விழா கொண்டாட்டத்தில், கருப்பு, வெள்ளை உடை அணிந்த மோடி, பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில், பல்வேறு வண்ணங்கள் அடங்கிய ராஜஸ்தான் தலைப்பாதை அணிந்து பங்கேற்றார். துண்டு ஒன்றையும் அணிந்திருந்தார். குடியரசு தின விழா நிறைவடைந்த பிறகு, கார் கதவை திறந்து … Read more

மாணவியை சிறப்பு விருந்தினராக அழைத்து தேசியக்கொடி ஏற்றவைத்த பள்ளி நிர்வாகம்; பாராட்டுக்குரிய காரணம்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், பந்தல் மண்டபம் அருகில் இயங்கி வருகிறது சரவணய்யர் நடுநிலைப்பள்ளி. கடந்த 1895-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளிதான் திருச்செந்தூரில் தொடங்கப்பட்ட முதல் பள்ளி. இப்பள்ளியில் மொத்தம் 180 மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள். 11 ஆசிரிய, ஆசிரியைகள் பணிபுரிகிறார்கள். தேசியக்கொடி ஏற்றிய மாணவி பள்ளியில் தேசியக்கொடி ஏற்றிய `108 ஆம்புலன்ஸ்’ பெண் ஊழியர்; நெகிழ்ச்சியான பின்னணி! பொதுவாக பள்ளிகளில் சுதந்திர தினவிழா, குடியரசு தினவிழா என்றால் அந்தந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர், தாளாளர், … Read more

இன்னும் ஒரு வாரம் தான்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர எச்சரிக்கை

பிரித்தானியர்களுக்கு பாஸ்போர்ட் தொடர்பில் ஒரு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் புதுப்பித்தல் கட்டணம் உயர்வு அடுத்த வியாழக்கிழமை, அதாவது, பிப்ரவரி 2ஆம் திகதி, பாஸ்போர்ட் புதுப்பித்தல் கட்டணங்கள் உயர இருக்கின்றன. ஒன்லைனில் பாஸ்போர்ட் புதுப்பிப்பதற்கான கட்டணம் 75.50 பவுண்டுகளிலிருந்து 82.50 பவுண்டுகளாக உயர இருக்கிறது. சிறுவர்களுக்கான பாஸ்போர்ட் கட்டணமும் 49 பவுண்டுகளிலிருந்து 53.50 பவுண்டுகளாக உயர இருக்கிறது. தபால் நிலையம் மூலமாக புதிய பாஸ்போர்ட் பெற விண்ணப்பக்கட்டணம், பெரியவர்களுக்கு 85 பவுண்டுகளிலிருந்து 93 பவுண்டுகளாகவும், சிறுவர்களுக்கு 58.50 … Read more

74வது குடியரசு தின விழா: முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தேசிய கொடி ஏற்றினார் கவர்னர் ஆர்.என்.ரவி…

சென்னை: 74வது குடியரசு தின விழாவையொட்டி, சென்னை கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்தில்,  முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில்  கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றினார். அதைத்தொடர்ந்து அணிவகுப்பு மரியாதை நடைபெற்று வருகிறது. நடப்பாண்டு குடியரசு தின விழா சென்னை மெரினா கடற்கரையில், உழைப்பாளர் சிலை அருகே நடைபெற்று வருகிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள மேடையில் அமைச்சர்கள், அதிகாரிகள், நீதிபதிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் அணிவகுப்பு மரியாதையை கண்டுகளித்து வருகின்றனார். முன்னதாக, குடியரசு தின கொண்டாட்டம்  நடைபெறும் கடற்கரைக்கு … Read more

ஜன.28, 29, 30ல் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் நாளை தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் முதல் ஜன.30 வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று முதல் ஜன.28 வரை நிலநடுக்கோட்டை ஒட்டிய இந்திய பெருங்கடல் – தென்கிழக்கு வங்கக்கடலில் பலத்த சூறாவளி வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஜன.29, 30 தேதிகளில் இலங்கையை … Read more

குடியரசு தின தேநீர் விருந்து; ஆளுநர் அழைப்பை நிராகரித்த கூட்டணிக் கட்சிகள் – திமுக நிலைப்பாடு என்ன?

ஒவ்வோர் ஆண்டும், குடியரசு தினத்தன்று மாலை கிண்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெறும். தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் தேநீர் விருந்தில் கலந்துகொள்ள அழைப்பிதழ் வழங்குவார். அதை ஏற்றுக் கட்சித் தலைவர்கள் தேநீர் விருந்தில் கலந்துகொள்வார்கள். இந்த நிலையில், சமீபகாலமாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையிலான முட்டல் மோதல் அதிகரித்து வருகிறது. ஸ்டாலின், ஆளுநர் ரவி தமிழ்நாடு அரசு அனுப்பிய மசோதாக்களைக் கிடப்பில் போட்டு வைத்திருப்பது, தமிழ்நாட்டைத் தமிழகம் என்று கூறியது, … Read more

வெளிநாட்டில் மோசமான செயலில் ஈடுபட்ட பிரித்தானிய கர்ப்பிணிப்பெண்…

பிரித்தானியப் பெண் ஒருவரும், அவரது சகோதரரும் ஸ்பெயின் நாட்டில் ஒரு வித்தியாசமான மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சுற்றுலாப்பயணிகளை வைத்து ஒரு மோசடி எசெக்சில் பிறந்தவரான லாரா (Laura Joyce) என்னும் பெண்ணும், அவரது சகோதரரான மார்க்கும் (Marc Cameron Grimstead), ஸ்பெயின் நாட்டுக்குச் சொந்தமான Majorca தீவிலுள்ள ஹொட்டல்களுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளை வைத்து இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளனர். அதாவது, Majorca தீவிலுள்ள ஹொட்டல்களில் தங்கும் சுற்றுலாப்பயணிகளிடம், அவர்கள் அந்த ஹொட்டல்களில் தங்கியிருக்கும்போது food poisoning என்னும் பிரச்சினையால் … Read more

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழியை வைத்து பிற மொழிகளை அழிக்கப் பார்க்கிறது மத்திய பாஜக அரசு! ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை; ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழியை வைத்து பிற மொழிகளை பாஜக அழிக்க பார்ப்பதாகவும், இந்தி பேசாத மக்கள் மீது இந்தி மொழி திணிக்கப்படக் கூடாது என்று மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மொழிப்போர் தியாகிகள் நினைவை போற்றும் வகையில் திமுக சார்பில், திருவள்ளூரில் வீர வணக்கநாள் கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.  நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், இன்று தமிழ்நாடு … Read more