நீக்கப்பட்ட 2,400 நர்சுகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி! அமைச்சர் மா.சுப்பிரமணியன் மகிழ்ச்சி செய்தி…

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போது, கொரோனா காலக்கட்டத்தில் பணியமர்த்தப்பட்ட 2400 தற்காலிக செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு   ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம்,  கொரோனா கால நெருக்கடியை சமாளிக்க தேசிய சுகாதார குழுமத்தின் வழி காட்டுதல்படி ஒப்பந்த அடிப்படையில் நர்சுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசு விதிமுறைகளை அ.தி.மு.க. அரசு முறையாக கடைபிடிக்காமல் … Read more

ஒன்றிய மண்வள ஆராய்ச்சி மையத்தில் அனுமதியின்றி 370 மரங்களை வெட்டியதாக வனச்சரகர் உட்பட 5 பேர் கைது

உதகை: ஒன்றிய மண்வள ஆராய்ச்சி மையத்தில் அனுமதியின்றி 370 மரங்களை வெட்டியதாக வனச்சரகர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீட்டுக்கல் பகுதியில் 234 ஏக்கரில் ஒன்றிய மண்வள ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. ஒன்றிய மண்வள ஆராய்ச்சி மையத்தில் அனுமதியின்றி ரூ.48 லட்சம் மதிப்புள்ள 370 மரங்கள் வெட்டி விற்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இந்நிலையில் உதகை தெற்கு வனச்சரகர் நவீன்குமார், வனக்காப்பாளர் பாபு, வனவர் சசிதரன், வேட்டை தடுப்பு காவலர் தேவேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ரேசன் கடையை சேதப்படுத்திய படையப்பா : வனத்துறை நடவடிக்கையால் ஏமாற்றம் அடைந்தது| elephant damage ration shop

மூணாறு: மூணாறு அருகே கே.டி.எச்.பி.கம்பெனிக்குச் சொந்தமான கூடாரவிளை எஸ்டேட் பாக்டரி டிவிஷனில் படையப்பா எனும் ஆண் காட்டு யானை ரேசன் கடையை சேதப்படுத்திய நிலையில் வனத்துறையினர் விரட்டியதால், தனது எண்ணம் நிறைவேறாமல் ஏமாற்றம் அடைந்தது. மூணாறு அருகே குட்டியாறுவாலி பகுதியில் இரு தினங்களுக்கு முன்பு டூவீலர், ஜீப் ஆகியவற்றை சேதப்படுத்திய படையப்பா நேற்று முன்தினம் இரவு கூடாரவிளை எஸ்டேட் பாக்டரி டிவிஷன் பகுதிக்குச் சென்றது. அங்கு நள்ளிரவு 2:15 மணிக்கு வேலுச்சாமி நடத்தி வரும் ரேசன் கடையின் … Read more

"ஷர்மிகா சரண் மீது நடவடிக்கை எடுக்கப்படும்!"- இந்திய மருத்துவ இணை இயக்குநர் பார்த்திபன் எச்சரிக்கை

பரபரப்பை உண்டாக்கிய பா.ஜ.க-வின் டெய்சி சரண் ஆடியோ பேச்சைவிட, தற்போது அவரது மகள் டாக்டர் ஷர்மிகா சரண் பேசும் வீடியோக்கள்தான் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி சர்ச்சையை உண்டாக்கிக்கொண்டிருக்கின்றன. ”கவுந்து படுத்தா மார்பக புற்றுநோய் வரும்.” ”தினமும் 4 ஸ்பூன் நெய் சாப்பிட்டால் முகம் பொலிவாகும்.” ”ஒரு க்ளோப் ஜாமுன் சாப்பிட்டா, ஒரேநாளில் மூணு கிலோ எடை கூடிவிடும்.” ”நம்மவிட பெரிய மிருகத்தை சாப்பிட்டா நம்மளால டைஜஸ்ட் (செரிமானம்) பண்ணமுடியாது. பீஃப் நம்மவிட பெரிய மிருகம்ங்குறதால அதைச் சாப்பிடக்கூடாது.” … Read more

ரொனால்டோ உடனான 173 மில்லியன் ஒப்பந்தம்: சவுதி அரேபியாவின் அல் நஸர் கிளப் வரலாறு என்ன?

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ அல் நஸர் கிளப்புடனான தனது புதிய ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், சவுதி அரேபியாவின் அல் நர் கிளப்பை பற்றிய தகவல் இந்த செய்தியில் வழங்கப்பட்டுள்ளது. அல் நஸர் அணியுடன் கைகோர்த்த ரொனால்டோ கத்தார் உலக கோப்பை போட்டிகள் பிறகு மான்செஸ்டர் அணியுடனான ஒப்பந்தத்தில் இருந்து விலகி கொண்ட போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தற்போது சவுதி அரேபியாவின் கால்பந்து கிளப் அணியான அல் நஸருடன் 173 மில்லியன் மதிப்புள்ள புதிய ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளார். … Read more

ரிஷப் பண்ட்-டை காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுனரை கௌரவித்த ஹரியானா அரசு… வீடியோ…

உத்தரகண்ட் மாநிலம் ரூர்கி அருகே நேற்று அதிகாலை நடந்த சாலைவிபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் பலத்த காயமடைந்தார். டெல்லியில் இருந்து ரூர்கி வழியாக தனது சொந்த ஊரான டேராடூனுக்கு சொகுசு காரை ஒட்டிச் சென்றார் ரிஷப் பண்ட். அதிகாலை 5:30 மணியளவில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது எதிரே ஹ்ரிதுவாரில் இருந்து ஹரியானா மாநிலம் பானிபட் சென்று கொண்டிருந்த ஹரியானா அரசு பேருந்தின் ஓட்டுநர் … Read more

தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது: கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று ராதாகிருஷ்ணன் தகவல் அளித்துள்ளார். ரேஷன் அரிசி கடத்தலை முற்றிலுமாக நிறுத்த முக்கிய புள்ளிகளை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

“6,000 செவிலியர்களுக்கு நிரந்தர பணி ஆணை வழங்கப்பட வேண்டும்" – திமுக அரசை வலியுறுத்தும் அண்ணாமலை

தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, செவிலியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க நிறைவேற்றத் தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் அண்ணாமலை, “கொரோனா பெருந்தொற்று நம்மை ஆட்டிப்படைத்த காலத்தில் தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் தொய்வின்றி உழைத்து, நோய்த்தொற்று உள்ளவர்கள் குணமடைய அயராது பாடுபட்டவர்களில் செவிலியர்களின் பங்களிப்பு அளப்பரியது. அண்ணாமலை கொரோனா பெருந்தொற்று பரவல் உச்சத்தில் இருந்தபோது, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிசெய்ய செவிலியர்களுக்கு தற்காலிக பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. இவ்வாறு தமிழகத்தில் 14,000 ரூபாய் மாத … Read more

லண்டனில் ரயில்வே ஊழியரிடம் அத்துமீறி தவறாக நடந்த பெண்! புகைப்படம் வெளியிட்ட பொலிசார்

லண்டன் ரயிலில் ஊழியரிடம் பெண்ணொருவர் அத்துமீறி தவறாக நடந்து கொண்ட சம்பவம் தொடர்பான தகவலை பிரித்தானிய போக்குவரத்து பொலிஸ் வெளியிட்டுள்ளது. ரயில்வே ஊழியர் அதன்படி கடந்த ஜூலை மாதம் 30ஆம் திகதி இரவு 8 மணியளவில் பணியில் இருந்த ரயில்வே ஊழியர் மீது பெண்ணொருவர் பாலியல் தாக்குதல் நடத்தியிருக்கிறார். இந்த நிலையில் இதில் தொடர்புடைய பெண்ணின் புகைப்படத்தை பிரித்தானிய போக்குவரத்து பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளனர். BTP/newcivilengineer விசாரணைக்கு உதவி அந்த அறிக்கையில், இந்த பெண்ணை உங்களுக்கு அடையாளம் … Read more

சமூக வலைத்தளங்களுக்கு ஆதார் எண் கொடுக்க வேண்டாம்! பயனர்களுக்கு மத்தியஅரசு எச்சரிக்கை…

சென்னை: சமூக வலைத்தளங்களில் ஆதார் எண் கேட்கப்பட்டால், அதை கொடுக்க வேண்டாம் என மத்திய மின்னணு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே ஆதார் நிறுவனமான உதய் (UDAI) ,இது தொடர்பாக எச்சரித்திருந்த நிலையில், தற்போது மத்தியஅரசும், ஆதார் எண்ணை கொடுக்க வேண்டாம் என எச்சரித்துள்ளது. சமீபகாலமாப பேஃபுக் உள்பட பல சமூக வலைதளங்களில் பாதுகாப்பு என கருத்தி, பயனர்களின் ஆதார் எண்களை பதிவு செய்ய வலியுறுத்தி வருகின்றன. இதனால், நமது பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்பதால், சமூக வளைதளங்களுக்கு … Read more