உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உட்பட பல தேசிய மொழிகளில் வெளியிடப்படுவது மிகுந்த வரவேற்புக்குரியது: சிபிஎம்

சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உட்பட பல தேசிய மொழிகளில் வெளியிடப்படுவது மிகுந்த வரவேற்புக்குரியது என சிபிஎம் தெரிவித்துள்ளது. ‘பல மொழிகளில் வெளியாகும் தீர்ப்புகளை சாதாரண மக்களும் படிக்கவும் பொது விவாதத்தில் பங்கெடுக்கவும் வழிவகுக்கும். நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் தேசிய மொழிகளில் நடப்பதை சாத்தியமாக்கிட நீதித்துறை முன்வர வேண்டும். அனைத்து மொழிகளுக்கும் சமத்துவம், தாய்மொழியில் நிர்வாகம் என்பதை சிபிஎம் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. ஒற்றை மொழி ஆதிக்கத்தை முன்னெடுத்து அதிகார சக்திகள் பேசி வரும் சூழலில் … Read more

Siraj: தன்னைத்தானே செதுக்கியவன்; மீண்டெழுந்த ஃபீனிக்ஸ் பறவை; சிராஜ் நம்பர் 1 ஆன கதை!

விமர்சித்தவர்கள் காணாமல் போகுமளவு ஒருநாள் போட்டிகளின் உலக நாயகனாக ஐ.சி.சி தரவரிசையில் நம்பர் 1 இடத்திற்கு அதுவும் கம்பேக் கொடுத்த ஓராண்டு இடைவெளிக்குள்ளேயே முன்னேறியுள்ளார் முகமது சிராஜ். Siraj சிராஜின் ரஞ்சித்தொடர் நாட்களிலிருந்தே அவர்மீது வெளிச்சவட்டம் விழுந்து கொண்டுதான் இருந்தது. ரெட்பால் கிரிக்கெட்டைக் கட்டி ஆள்வார் என ஆருடங்கள் அனுமானித்தன. 2016/17 சீசனில் ஹைதராபாத்தின் சார்பாக அதிக விக்கெட்டுகளை சாய்த்தது என உள்ளூரளவில் மட்டுமல்ல சர்வதேசப் போட்டிகளிலும் சிறப்பாகவே செயல்பட்டார். 2020/21 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் முக்கிய … Read more

சட்டவிரோதமாக நுழைய முயன்ற 38 இலங்கையர்களை திருப்பி அனுப்பிய பிரான்ஸ்

கடல் வழியாக பிரான்சின் ரீயூனியன் தீவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 38 இலங்கையர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். பிரான்சின் ரீயூனியன் தீவின் அதிகாரிகள் 38 இலங்கை பிரஜைகளை நேற்று (புதன்கிழமை) மாலை விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பியதாக இலங்கை கடற்படை தெரிவித்தார். 64 இலங்கையர்கள் ஏற்றிச்செல்லப்பட்டனர் இலங்கை கடற்படையினர் வெளியிட்ட தகவலின்படி, நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த வருடம் டிசம்பர் 1-ஆம் திகதி ஐந்து பணியாளர்களுடன் புறப்பட்டு, IMUL-A-0532 CHW என்ற இலக்கம் கொண்ட … Read more

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் மேலும் 5 பேரிடம் சிபிசிஐடி விசாரணை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் மேலும் 5 பேரிடம் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டுள்ளது. கடந்த 10 நாட்களில் 70 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ள நிலையில் மேலும் 5 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டை காப்பாற்றிய பஸ் டிரைவர், கண்டக்டருக்கு விருது| Award to bus driver, conductor who saved cricketer Rishabh Pant

டேராடூன்: விபத்தில் சிக்கிய போது, கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டை காப்பாற்றிய பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் உட்பட 4 பேருக்கு உத்தரகாண்ட் முதல்வர் இன்று(ஜன.,26) விருது வழங்கி கவுரவித்தார். இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், உத்தரகண்டில் இருந்து டில்லிக்கு காரில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது ரூர்க்கி அருகே அவரது கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது மோதியதில் கார் தீப்பிடித்தது. இந்த விபத்தில் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்தார். அப்போது அவருக்கு, அங்கு இருந்த … Read more

“முறைகேடுகளுக்கு மாநில அந்தஸ்து தேவைப்படவில்லையா?” – என்.ஆர்.காங்கிரஸ், பாஜக-வைச் சாடும் திமுக

புதுச்சேரி தி.மு.க சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க மாநில அமைப்பாளருமான எம்.எல்.ஏ சிவா, “காங்கிரஸ் கட்சியில் இருந்த ரங்கசாமி, அதிலிருந்து வௌியேறி மதச்சார்பற்ற தலைவராக தனித்தன்மையுடன் ஆட்சி புரிந்தார். ஆனால் கடந்த தேர்தலில் மதம் சார்ந்த கட்சியுடன் கூட்டணி வைத்தார். கேட்டதற்கு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற காரணத்தை முன்வைத்தார். மாநில அந்தஸ்து கிடைத்தால் பழைய கடன்கள் தள்ளுபடி … Read more

குடியரசு தினவிழாவையொட்டி தமிழ்நாட்டின் சிறந்த காவல் நிலையங்களுக்கு முதலமைச்சர் விருது அறிவிப்பு…

சென்னை:  நாட்டின் 74வது குடியரசு தினவிழாவையொட்டி தமிழ்நாட்டின் சிறந்த காவல் நிலையங்களுக்கு தமிழ்நாடு அரசு  விருது அறிவித்துள்ளது. நாட்டின் 74வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு முதன்முதலாக தேசிய கொடியை ஏற்றுகிறார். அதுபோல மாநிலங்களில் கவர்னர்கள் தேசிய கொடி ஏற்றி வருகின்றனர். இந்த நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு, சிறப்பாக செயல்பட்ட 3 காவல்நிலையங்களுக்கு தமிழகஅரசு சிறந்த காவல் நிலையத்துக்கான முதலமைச்சர் விருதை … Read more

கலைஞர் நினைவிடம் அருகே பேனா வடிவிலான நினைவுச்சின்னம் அமைப்பது தொடர்பான சுற்றுச்சூழல் மற்றும் செயல்திட்ட அறிக்கை பொதுமக்கள் பார்வைக்கு வைப்பு

சென்னை: சென்னை மெரினா கடற்கரை பகுதியில் நிறுவப்படவுள்ள கலைஞர் நினைவிட பேனா நினைவுச் சின்னம் குறித்த சுற்றுச்சூழல் அறிக்கை மற்றும் செயல்திட்ட அறிக்கையானது ரிப்பன் மாளிகை மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், பொதுமக்கள் விவரங்களை தெரிந்துக்கொள்ள இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பல வண்ண ராஜஸ்தானி தலைப்பாகையுடன் பிரதமர் மோடி| PM Modi wears multi-coloured Rajasthani turban

புதுடில்லி: குடியரசு தின விழாவில் பிரதமர் மோடி, பல வண்ணங்களில் ஆன ராஜஸ்தானி தலைப்பாகையை அணிந்திருந்தார். பிரதமர் மோடி முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் போது, விதவிதமான தலைப்பாகை அணிவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்தாண்டு குடியரசு தின விழா கொண்டாட்டத்தில், கருப்பு, வெள்ளை உடை அணிந்த மோடி, பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில், பல்வேறு வண்ணங்கள் அடங்கிய ராஜஸ்தான் தலைப்பாதை அணிந்து பங்கேற்றார். துண்டு ஒன்றையும் அணிந்திருந்தார். குடியரசு தின விழா நிறைவடைந்த பிறகு, கார் கதவை திறந்து … Read more

மாணவியை சிறப்பு விருந்தினராக அழைத்து தேசியக்கொடி ஏற்றவைத்த பள்ளி நிர்வாகம்; பாராட்டுக்குரிய காரணம்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், பந்தல் மண்டபம் அருகில் இயங்கி வருகிறது சரவணய்யர் நடுநிலைப்பள்ளி. கடந்த 1895-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளிதான் திருச்செந்தூரில் தொடங்கப்பட்ட முதல் பள்ளி. இப்பள்ளியில் மொத்தம் 180 மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள். 11 ஆசிரிய, ஆசிரியைகள் பணிபுரிகிறார்கள். தேசியக்கொடி ஏற்றிய மாணவி பள்ளியில் தேசியக்கொடி ஏற்றிய `108 ஆம்புலன்ஸ்’ பெண் ஊழியர்; நெகிழ்ச்சியான பின்னணி! பொதுவாக பள்ளிகளில் சுதந்திர தினவிழா, குடியரசு தினவிழா என்றால் அந்தந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர், தாளாளர், … Read more