மதுரை: தவறான சிசிச்சையால் இறந்தாரா குழந்தை பெற்றெடுத்த பெண்? – உறவினர்கள் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னையைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா தவறான சிகிச்சையால் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அரசு உடனே தலையிட்டு சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர்களை சஸ்பெண்ட் செய்தது மட்டுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறது. அந்தக் குடும்பத்திற்கு இழப்பீடும் வழங்கியுள்ளது. மரணமடைந்த கனிமொழியின் தாய், கணவர் இதேபோல் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் சில மாதங்களுக்கு முன்பு தேனி மாவட்டத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண், மரணமடைந்த சம்பவத்தில் அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஆதங்கப்படுகிறார்கள் 3 குழந்தைகளுடன் … Read more

கேட் மிடில்டனை முந்தி காட்டுகிறேன்! மேகன் மெர்க்கல் வகுத்துள்ள பலே திட்டம்

மேகன் மெர்க்கல், அமெரிக்கர்களின் மனதை வெல்வதற்கும் கேட் மிடில்டனை விட அந்நாட்டு மக்களிடையே பிரபலமாக மாறுவதற்கும் பெரிய திட்டத்தை வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவிலும் நேசிக்கப்படும் கேட் மிடில்டன் பிரித்தானியாவில் அதிகம் நேசிக்கப்படும் கேட் மிடில்டன், அமெரிக்காவிலும் மேகன் மெர்க்கலை விட இரண்டு மடங்கு பிரபலமாக உள்ளார் என Express UK தெரிவித்திருக்கிறது. சமீபத்திய ஆய்வில், மேகன் மெர்க்கலை விட கேட் மிடில்டன் மிகவும் பிரபலமானவர் என்றும் தெரியவந்துள்ளது. இதையடுத்து மேகன் மெர்க்கல் அமெரிக்கர்களை கவர்ந்து அவர்களின் மனதை … Read more

மகாராஷ்டிராவின் பெண்ட்வால் மாவட்டத்தில் இருந்து இன்று துவங்கியது பாரத் ஜோடோ யாத்திரை

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவின் பெண்ட்வால் மாவட்டத்தில் இருந்து இன்று பாரத் ஜோடோ யாத்திரை துவங்கியது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான நடைபயணம்” என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். மொத்தம் 150 நாட்கள் நடைபெற உள்ள இந்த யாத்திரை தற்போது வரை 30 நாட்களை கடந்துள்ளதுடன், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானாவை கடந்து தற்போது மகராஷ்டிராவில் நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிராவின் பெண்ட்வால் மாவட்டத்தில் இருந்து இன்று பாரத் ஜோடோ யாத்திரை துவங்கியது.

குடிபோதையில் 2 பேரை அரிவாளால் வெட்டிய 4 பேர் கைது: போலீஸ் விசாரணை

சென்னை: சென்னை, பேரவள்ளூர் பகுதியில் நேற்று இரவு குடிபோதையில் 2 பேரை அரிவாளால் வெட்டிய 4 பேர் கைது செய்துள்ளனர். குடிபோதையில் மதுபான கூடம் அருகே பொதுமக்கள் இருவரை அரிவாளால் வெட்டி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். கிஷோர், அருண் மற்றும் 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

உங்களை விட எங்களுக்கு வேதனை அதிகம்! உலகக்கோப்பை தோல்வி குறித்து அஸ்வின் கருத்து

உலகக்கோப்பை தோல்வி குறித்த விமர்சனங்களுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் பதிலளித்துள்ளார். 300 மடங்கு வேதனை டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி அரையிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. அதன் விளைவாக இந்திய அணி மீது ரசிகர்கள் இடையே கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் தமிழக வீரர் அஸ்வின் சமீபத்திய வீடியோ ஒன்றில் தோல்வி குறித்து கருத்து தெரிவித்தார். @Getty Images அவர் கூறுகையில், ‘இந்திய அணி கோப்பையை வெல்லவில்லை என்பதால் ரசிகர்கள் சோகத்தில் … Read more

11 மாதங்களில் 255 திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

வேலூர்: 11 மாதங்களில் 255 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக சமூகநலத் துறை, குழந்தைகள் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சமூகநலத் துறை, குழந்தைகள் பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில், கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை வேலூரில், 83, திருப்பத்தூரில் 37, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 107, திருவண்ணாமலையில், 28 என மொத்தமாக 4 மாவட்டங்களில் 255 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்பின் ட்வீட்டர் கணக்கு செயல்பட தொடங்கியது

அமெரிக்கா: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்பின் ட்வீட்டர் கணக்கு முடக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் செயல்பட தொடங்கியது.  டிரம்பின் டிவிட்டர் கணக்குக்கு விதித்த தடையை நீக்குவதாக எலான் மஸ்க் அறிவித்ததை அடுத்து மீண்டும் செயல்பட தொடங்கியது. வன்முறையை தூண்டுவதாகக் கூறி டொனல்டு டிரம்பின் டிவிட்டர் கணக்கு 22 மாதங்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்தது.  

கள்ளக்காதலியின் மகள் கொலை; மும்பையில் குற்றவாளி கைது: கிரைம் ரவுண்ட் அப்| Dinamalar

கள்ளக்காதலியின் மகள் கொலை; மும்பையில் குற்றவாளி கைது பூந்தமல்லி: சென்னை புறநகரான, பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பத்தைச் சேர்ந்தவர் அம்சவள்ளி, 35. கணவரை பிரிந்து, தன் மகள் சங்கீதா, 18, உடன் தனியாக வசித்து வந்தார். இவருக்கு, ராஜு, 38, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. சங்கீதாவுக்கு, அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த வாரம், வீட்டில் தனியாக இருந்த சங்கீதாவை, கழுத்தை நெரித்து ராஜு கொலை செய்து மாயமானார். பிரேத பரிசோதனையில், சங்கீதா … Read more

கனமழை எச்சரிக்கை வாபஸ்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: இன்று விடப்பட்டிருந்த மிக கனமழை எச்சரிக்கை திரும்பப் பெறப்படுவதாக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்கிய மிக கனமழை எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டுவிட்டது. ‌ இந்நிலையில் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் வழங்கப்பட்ட மிக கனமழை எச்சரிக்கைக்கான அறிவுரைகள் திரும்ப பெறப்படுகின்றன.