74வது குடியரசு தின விழா: மாவட்ட தலைநகரங்களில் கொடியேற்றினர் மாவட்ட ஆட்சியர்கள்…

சென்னை; நாடு முழுவதும் இன்று 74வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில், மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட ஆட்சியர்கள் தேசிய கொடியை ஏற்றினர். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இந்திய நாட்டிற்கென தனி அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு அது நடைமுறைக்கு வந்த நாள் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 தேதி தான். அந்த நாளே குடியரசு தினமாக … Read more

தமிழ்நாடு முழுவதும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாவட்ட ஆட்சியர்கள் மரியாதை

சென்னை: தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். காஞ்சிபுரத்தில் 112 பயனாளிகளுக்கு ரூ.2.03 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார். மதுரையில் 37 பயனாளிகளுக்கு ரூ.28.21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் அனீஷ் சேகர் வழங்கினார். திருவாரூரில் 705 பயனாளிகளுக்கு ரூ.2.06 கோடி மதிப்பிலான திட்டங்களை ஆட்சியர் காயத்ரி வழங்கினார்.

74-வது குடியரசு தின விழா: சென்னையில் தேசியக்கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

நாட்டின் 74-வது குடியரசு தினவிழா இந்தியா முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் குடியரசு தின விழா ஒவ்வோர் ஆண்டும், சென்னை மெரினா கடற்கரை சாலையிலுள்ள காந்தி சிலை அருகில் நடைபெறுவது வழக்கம். தற்போது அந்தப் பகுதியில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், குடியரசு தின விழா மெரினா கடற்கரை சாலையிலுள்ள உழைப்பாளர் சிலை அருகில் நடைபெற்றுவருகிறது. இந்த விழாவில் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். விழாவில் கலந்துகொள்ள … Read more

74வது குடியரசு தினம்: சென்னை மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே நடைபெற்று வரும் கண்கவர் கலைநிகழ்ச்சிகள்…

சென்னை: நாட்டின் 74வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றினார். இதையடுத்து, அங்கு கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற வருகிறது. சென்னை மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றினார். முன்னதாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு … Read more

இன்று 74-வது குடியரசு தின விழா: டெல்லியில் ஜனாதிபதி தேசிய கொடி ஏற்றுகிறார்

புதுடெல்லி, நாட்டின் 74-வது குடியரசு தின விழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்திய அரசு சார்பில் குடியரசு தின விழா ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள ராஜபாதையில் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு சென்டிரஸ் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட கடமையின் பாதையில் (முன்பு ராஜபாதை) குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விழா காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதனை முன்னிட்டு முக்கிய பிரமுகர்கள் முன்கூட்டியே அங்கு … Read more

ஜெயலலிதா பயன்படுத்திய பொருள்களை ஏலம்விட உத்தரவிட்ட நீதிமன்றம்; என்னென்ன பொருள்கள்… லிஸ்ட்!

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் மறைவையடுத்து, சசிகலா உட்பட 3 பேரும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து, வெளியே வந்தனர். இந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடமிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆர்.டி.ஐ ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர், ஜெயலலிதாவிடமிருந்து பறிமுதல் செய்த பொருள்களை ஏலம் விடக்கோரி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு … Read more

ஐபிஎல் அணியை மிகப்பெரிய தொகைக்கு வாங்கிய அதானி குழுமம்!

மகளிர் ஐபிஎல் அணியை அதானி குழுமம் 1289 கோடிக்கு வாங்கியுள்ளது. மகளிர் ஐபிஎல் தொடர் ஆடவர் கிரிக்கெட் போல் மகளிர் ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் முதல் மும்பையில் நடத்தப்படுகிறது. இதில் மொத்தம் ஐந்து அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகளுக்கான ஏலம் நேற்று நடந்தது. அதிக தொகையை குறிப்பிட்டு விதிமுறைக்கு உட்பட்டு விண்ணப்பித்த நிறுவனங்களுக்கு அவர்கள் கேட்ட அணிகள் ஒதுக்கப்பட்டன. அதானி குழுமம் அதன்படி அதிகபட்சமாக ஆமதாபாத் அணியை அதானி குழுமம் 1,289 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது. … Read more

74வது குடியரசு தின விழா: வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கங்களை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நாட்டின் 74குடியரசு தினத்தையொட்டி சென்னை கடற்கரையில் நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்ச்சியில்  வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முன்னதாக காலை 7.52 மணிக்கு விழா பகுதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். அவரின் காரின் முன்னும் பின்னும் போலீசாரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வரப்பட்டார். காலை 7.54 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வருகை தந்தார். அதைத்தொடர்ந்து 7.58 மணிக்கு அணி வணக்கம் ஏற்கும் மேடைக்கு அருகே வந்த கவர்னர் ஆர்.என்.ரவியை … Read more

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்-ன் முகநூல் பக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்-ன் முகநூல் பக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.  டிரம்ப்-ன் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மெட்டா நிறுவனம் நீக்குகிறது.

இந்தியாவில் தயாரான உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து இன்று அறிமுகம்

புதுடெல்லி, இந்தியாவில் 3 ஆண்டுகளுக்கும் கூடுதலாக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசியானது முதல் மற்றும் 2-வது தவணைகளாக செலுத்தப்படுவதுடன், பூஸ்டர் தடுப்பூசியாகவும் போட வலியுறுத்தப்படுகிறது. இதனால், நோய் எதிர்ப்பு ஆற்றல் மக்களுக்கு அதிகரிக்கும். ஒருவரிடம் இருந்து மற்றொரு நபருக்கு தொற்று பரவுவது தடுக்கப்படும். இந்நிலையில், நாசி வழியே கொரோனா தடுப்பு மருந்து செலுத்துவதற்கான முயற்சியில் பாரத் பயோடெக் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. இதன்படி, … Read more