ராஜகுடும்பத்தில் இனி இந்த உணவு பரிமாறக் கூடாது: தடை செய்து உத்தரவிட்ட மன்னர் சார்லஸ்

பிரித்தானிய ராஜகுடும்பத்தில் எந்த இல்லத்திலும் இனி foie gras உணவு சமைக்க வேண்டாம் என மன்னர் சார்லஸ் தடை செய்து உத்தரவிட்டுள்ளார். கிளாரன்ஸ் மாளிகையில் குறித்த பிரஞ்சு உணவை பரிமாறுவது என்பது நெறிமுறையற்ற செயல் எனவும் மன்னர் சார்லஸ் குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, ராணியார் மறைவுக்கு முன்னர் வேல்ஸ் இளவரசராக பொறுப்பேற்றிருந்த காலகட்டத்திலும், தமது கிளாரன்ஸ் மாளிகையில் குறித்த உணவை சார்லஸ் தடை செய்திருந்தார். @PA wire foie gras உணவு என்பது வாத்துகளுக்கு அவைகளுக்கான உணவை வலுக்கட்டாயமாக … Read more

மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு தொடர்பாக உதகையை சேர்ந்த நபரிடம் காவல்துறையினர் விசாரனை

கோவை: மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு தொடர்பாக உதகையை சேர்ந்த நபரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆட்டோவில் குண்டுவெடித்தபோது காயமடைந்த ஒருவரின் செல்போன் சிம்கார்டு தொடர்பாக போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது. சிம்கார்டு வாங்க தந்த ஆதார் எண், உதகை அருகே குந்தசப்பை கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என தகவல் தெரிவித்துள்ளனர். குந்தசப்பையை சேர்ந்தவரை கோவைக்கு அழைத்து சென்று போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

‛‛குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றியை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்| Dinamalar

ஆமதாபாத்: குஜராத்தில் அனைத்து ஓட்டுப்பதிவு சாவடிகளிலும் பா.ஜ., வின் வெற்றியை நீங்கள் உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் பிரசாரத்தில் மோடி பேசினார். குஜராத் மாநிலத்தில் 182 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக வரும் டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் தேர்தல் நடக்கிறது. இதையடுத்து, வரும் டிசம்பர் 8ம் தேதி ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. குஜராத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக பாஜ., தலைவர்கள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு … Read more

PM-Kisan: `11-வது தவணையில் பலனடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை 67% குறைந்திருக்கிறது!' – ஆர்.டி.ஐ தகவல்

பிரதம மந்திரி கிசான் திட்டம் மூலம் தகுதியான விவசாயிகள், நான்கு மதங்களுக்கு ஒருமுறை இரண்டாயிரம் ரூபாய் என ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாயைப் பெற்றுப் பலனடைந்துவருகின்றனர். 2019-ல் தொடங்கப்பட்ட இந்த திட்டம் மூலம் இதுவரை 12 தவணைகள் விவசாயிகளுக்கு நிதியளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், கிசான் திட்ட நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட 11-வது தவணை பணத்தில் பலனடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை 67 சதவிகிதம் குறைந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி இது தொடர்பாக, ஆர்.டி.ஐ ஆர்வலர் கன்ஹையா … Read more

புதிய வீட்டில் காலை உணவு சாப்பிட்டு சென்ற பிரபல நட்சத்திர ஓட்டல் உரிமையாளர் திடீர் தற்கொலை

பிரபல நட்சத்திர ஓட்டலான ராடிசன் புளூவின் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Radisson Blu hotel உரிமையாளர் தற்கொலை இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில், காஜியாபாத்தின் கௌசாம்பியில் உள்ள ரேடிசன் ப்ளூ ஓட்டலின் (Radisson Blu hotel) உரிமையாளர் அமித் ஜெயின் (Amit Jain), காமன்வெல்த் விளையாட்டு (CWG) கிராமத்தில் உள்ள அவரது கிழக்கு டெல்லி இல்லத்தில் சனிக்கிழமை இறந்து கிடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அமித் ஜெயின், அவரது குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் … Read more

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த மண்டலம் காரணமாக இன்று மாலை முதல் வட தமிழ்நாட்டில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த மண்டலம் காரணமாக இன்று மாலை முதல் வட தமிழ்நாட்டில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாளை, நாளை மறுநாள் வாடா தமிழ்நாட்டில் பெருமபாலான இடங்களில் மிதமான மழை பெய்யும். நாளை சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் ஐசியு வார்டில் புகுந்த மாடு: நோயாளிகள் ‛அலறல்| Dinamalar

போபால்: மத்தியப் பிரதேசம் ராஜ்கர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் மாடு ஒன்று ஐசியு எனப்படும் அவசர சிகிச்சைப் பிரிவில் மாடு நடமாடியது நோயாளிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மத்திய பிரதேசத்தில் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றின், ஒரு பசு ஐசியு எனப்படும் அவசர சிகிச்சைப் பிரிவில் உட்புகுந்து நோயாளிகள் உட்கொள்ள வைத்திருந்த உணவு சாப்பிட்டது. இதனால் நோயாளிகள் அச்சமடைந்து, அலறல் சத்தம் போடுகின்றனர். மேலும் திடீரென உட்புகுந்து சுதந்திரமாக சுற்றித் திரிந்து நோயாளிகளுக்கு பீதியை ஏற்படுத்தியது. … Read more

கர்நாடகா: ஆட்டோ வெடித்து, தீ பிடித்ததில் இருவர் காயம் – `தீவிரவாத தாக்குதல்' என போலீஸ் தகவல்!

கர்நாடகாவில், ஓடிக்கொண்டிருந்த ஆட்டோ திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்ததில் டிரைவர் உட்பட இரண்டு பேர் காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இந்தச் சம்பவம் தீவிரவாத தாக்குதலாக இருக்கக்கூடும் என்று போலீஸாரால் சந்தேகிக்கப்படுகிறது. கர்நாடகாவில் திடீரென தீப்பிடித்த ஆட்டோ இன்று அதிகாலையில் நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தில், மங்களூரு ரயில் நிலையத்தில் ஒருவர் தன்னை நகரத்தில் இறக்கிடுமாறு ஆட்டோவில் ஏறியதாகக் கூறப்படுகிறது. பின்னர் ஆட்டோ சென்றுகொண்டிருக்கையில், நாகோரி பகுதி அருகே திடீரென ஆட்டோ வெடித்து தீப்பிடித்து … Read more

கடவுளே இனி முடியாது! மூச்சு முட்டுகிறது.. மொத்த குடும்பமும் தற்கொலை… சிக்கிய கடிதம்

இந்தியாவில் மொத்த குடும்பமும் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் மனதை உருகவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பறிபோன குடும்ப நிம்மதி உத்தரபிரதேச மாநிலத்தின் கோரக்பூரை சேர்ந்தவர் ஜிதேந்திரா ஸ்ரீவஸ்தவா (45). இவருக்கு மன்யா (16) மற்றும் மன்வி (14) என்ற இரு மகள்கள் இருந்தனர். ஜிதேந்திரா கடந்த 1999ல் நடந்த கார் விபத்தில் தனது ஒரு காலை இழந்தார். அவரின் மனைவி சிம்மி இரண்டாண்டுகளுக்கு முன்னர் புற்றுநோயால் உயிரிழந்தார். மனைவி இறப்பிற்கு பிறகு ஜிதேந்திரா வீட்டிலேயே டைலரிங் பணி … Read more

நவம்பர் 20: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 183-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 183-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 180 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.