இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய கோரி சட்டக்கல்லூரி மாணவி மனு தாக்கல்: அபராதம் விதிக்க நேரிடும் என நீதிபதி எச்சரிக்கை

புதுடெல்லி, இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் சட்டக்கல்லூரி மாணவி வழக்கு தொடர்ந்து இருந்தார். நாட்டில் சாதி வாரியாக இடஒதுக்கீடு என்பது அமலில் இருந்து வருகிறது. இதனை ரத்து செய்யக்கோரி இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஷிவானி பன்வர் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இடஒதுக்கீடு முறை என்பது சாதிய பாகுபாடுகளை வளர்க்கிறது என்பது போலவும் அதில் குறிப்பிட்டு இருந்த்தார். இந்த மனு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சந்திரசூட் தலைமையில் விசாரணைக்கு … Read more

சிவகாசி: பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்… கிராம நிர்வாக அதிகாரி, தலையாரி கைது!

சிவகாசி அருகே கீழத்திருத்தங்கல் சிவகாந்தி நகரைச் சேர்ந்தவர் பிரிதிவிராஜ் (வயது 30). இவர் தனக்குச் சொந்தமான நிலத்தின் பட்டா மாறுதலுக்காக சிவகாசி தாலுகா அலுவலகத்தில் கடந்த டிசம்பர் 1-ம் தேதி மனு அளித்திருக்கிறார். இந்தமனு, கள விசாரணைக்காக சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் உமாவதிக்கு (48) அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அதன்பேரில் கிராம நிர்வாக அதிகாரி உமாவதி, தலையாரி பொன்ராஜுடன் சேர்ந்து பட்டா மாறுதலுக்காக விண்ணப்பித்திருந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்திருக்கிறார். இதன்பின்னர், பிரிதிவிராஜை அழைத்துப் பேசிய … Read more

சட்டவிரோத பண பரிமாற்றம் வழக்கு: அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு…

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த 2011-15ம் ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, ஓட்டுனர் மற்றும் நடத்துனர் வேலை வாங்கி தருவதாக கூறி சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 வழக்குகளை பதிவு செய்தனர். இந்த வழக்குகள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் … Read more

தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கு 281 சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும்: ஒன்றிய அரசு அறிவிப்பு!

டெல்லி: தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கு 281 சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் புதுச்சேரியில் மின்சார வாகனங்களுக்கு 10 சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் ஒன்றிய அரசு கூறியுள்ளது.

இடஒதுக்கீடு முறைய ரத்து செய்ய கோரி மாணவி மனு தாக்கல் – விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

புதுடெல்லி, நாட்டின் இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய உத்தரவிட கோரி இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், இந்த மனுவை இன்று பரிசீலனை செய்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், விளம்பர நோக்கில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன், மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்து, திரும்ப பெற அனுமதியளித்து, மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் பொதுநல மனுவை திரும்ப பெறாவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் எனவும் மனுதாரருக்கு … Read more

“ `வாரிசு’ படத்தை வெளியிடாமல் செய்த `வாரிசு'க்குத்தான் பட்டாபிஷேகம் செய்கிறார்கள்!"- கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சியில் நகர அ.தி.மு.க சார்பில் தமிழகத்தில் மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, உள்ளிட்டவற்றை உயர்த்திய தி.மு.க அரசைக் கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை திரும்பப் பெற வலியுறுத்தியம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பேசிய கடம்பூர் ராஜூ இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் வரும் 2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும்  நாடாளுமன்றத் … Read more

தவறவிட்ட கேட்சை புரண்டு பிடித்த வீரர்! வைரலாகும் வீடியோ

பிக்பாஷ் லீக் தொடரில் ப்ரோடி கோச் என்ற வீரர் பிடித்த கேட்ச் ரசிகர்களை மிரள வைத்தது. பிக்பாஷ் லீக் அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய டி20 லீக் தொடரான பிக்பாஷ் இன்று தொடங்கியுள்ளது. கான்பெர்ராவில் நடந்த முதல் போட்டியில் சிட்னி தண்டர் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய மெல்போர்ன் அணி 122 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய சிட்னி அணி 9 விக்கெட் இழப்புக்கு 123 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. மிரட்டல் கேட்ச் இந்தப் … Read more

உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானால் தமிழ்நாட்டில் தேனாறும், பாலாறும் ஓடுமா? எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: உதயநிதி அமைச்சரானால் தமிழ்நாட்டில் தேனாறும், பாலாறும் ஓடப்போகிறதா? ஊழலுக்கு எல்லாம் தலைவராகத்தான்அவர் செயல்படுவார்என சேலத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான  எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார். சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு என மக்களை வாட்டி வதைக்கும் திமுக அரசைக் கண்டித்து தமிழகத்தில் உள்ள பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மழை பாதிப்பு உள்ள 15 இடங்களைத் தவிர்த்து … Read more

அரசு நிருபர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: அரசு நிருபர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை தலைமைச்செயலகத்தில் தமிழ், ஆங்கில நிருபர் பதவிக்கான கணினி வழித் தேர்வுக்கான http://tnpsc.gov.in, http://tnpscexams.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணை முட்டும் கேஸ் விலை, கவரும் நவீன விறகு அடுப்பு; வடிவமைத்து அசத்தும் நாமக்கல் விவசாயி!

காலம்காலமாக சமையல் செய்ய விறகு அடுப்புகளை பயன்படுத்தி வந்தாலும், கடந்த பத்து வருடங்களாக எல்லோரும் கேஸ் அடுப்புக்கு பழகிவிட்டோம். கேஸ் விலை ஏறியதால் இப்போது பலரும் தவிக்க, அவர்களுக்குக் கைகொடுக்கும் விதமாக கேஸ் அடுப்பைவிட விரைவாக அனலை தந்து உணவை வேகமாக வேகவைக்க, நவீன விறகு அடுப்பை வடிவமைத்து அசத்தியிருக்கிறார், நாமக்கல்லைச் சேர்ந்த விவசாயி ஒருவர். நவீன விறகு அடுப்பு தாயை இழந்த ஆட்டுக்குட்டிகள், பரிவோடு பாலூட்டும் பசு; ராசிபுரம் நெகிழ்ச்சி! நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த … Read more