சிவகாசி: பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்… கிராம நிர்வாக அதிகாரி, தலையாரி கைது!
சிவகாசி அருகே கீழத்திருத்தங்கல் சிவகாந்தி நகரைச் சேர்ந்தவர் பிரிதிவிராஜ் (வயது 30). இவர் தனக்குச் சொந்தமான நிலத்தின் பட்டா மாறுதலுக்காக சிவகாசி தாலுகா அலுவலகத்தில் கடந்த டிசம்பர் 1-ம் தேதி மனு அளித்திருக்கிறார். இந்தமனு, கள விசாரணைக்காக சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் உமாவதிக்கு (48) அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அதன்பேரில் கிராம நிர்வாக அதிகாரி உமாவதி, தலையாரி பொன்ராஜுடன் சேர்ந்து பட்டா மாறுதலுக்காக விண்ணப்பித்திருந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்திருக்கிறார். இதன்பின்னர், பிரிதிவிராஜை அழைத்துப் பேசிய … Read more