ஜெயலலிதா பயன்படுத்திய பொருள்களை ஏலம்விட உத்தரவிட்ட நீதிமன்றம்; என்னென்ன பொருள்கள்… லிஸ்ட்!

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் மறைவையடுத்து, சசிகலா உட்பட 3 பேரும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து, வெளியே வந்தனர். இந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடமிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆர்.டி.ஐ ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர், ஜெயலலிதாவிடமிருந்து பறிமுதல் செய்த பொருள்களை ஏலம் விடக்கோரி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு … Read more

ஐபிஎல் அணியை மிகப்பெரிய தொகைக்கு வாங்கிய அதானி குழுமம்!

மகளிர் ஐபிஎல் அணியை அதானி குழுமம் 1289 கோடிக்கு வாங்கியுள்ளது. மகளிர் ஐபிஎல் தொடர் ஆடவர் கிரிக்கெட் போல் மகளிர் ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் முதல் மும்பையில் நடத்தப்படுகிறது. இதில் மொத்தம் ஐந்து அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகளுக்கான ஏலம் நேற்று நடந்தது. அதிக தொகையை குறிப்பிட்டு விதிமுறைக்கு உட்பட்டு விண்ணப்பித்த நிறுவனங்களுக்கு அவர்கள் கேட்ட அணிகள் ஒதுக்கப்பட்டன. அதானி குழுமம் அதன்படி அதிகபட்சமாக ஆமதாபாத் அணியை அதானி குழுமம் 1,289 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது. … Read more

74வது குடியரசு தின விழா: வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கங்களை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நாட்டின் 74குடியரசு தினத்தையொட்டி சென்னை கடற்கரையில் நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்ச்சியில்  வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முன்னதாக காலை 7.52 மணிக்கு விழா பகுதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். அவரின் காரின் முன்னும் பின்னும் போலீசாரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வரப்பட்டார். காலை 7.54 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வருகை தந்தார். அதைத்தொடர்ந்து 7.58 மணிக்கு அணி வணக்கம் ஏற்கும் மேடைக்கு அருகே வந்த கவர்னர் ஆர்.என்.ரவியை … Read more

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்-ன் முகநூல் பக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்-ன் முகநூல் பக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.  டிரம்ப்-ன் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மெட்டா நிறுவனம் நீக்குகிறது.

இந்தியாவில் தயாரான உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து இன்று அறிமுகம்

புதுடெல்லி, இந்தியாவில் 3 ஆண்டுகளுக்கும் கூடுதலாக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசியானது முதல் மற்றும் 2-வது தவணைகளாக செலுத்தப்படுவதுடன், பூஸ்டர் தடுப்பூசியாகவும் போட வலியுறுத்தப்படுகிறது. இதனால், நோய் எதிர்ப்பு ஆற்றல் மக்களுக்கு அதிகரிக்கும். ஒருவரிடம் இருந்து மற்றொரு நபருக்கு தொற்று பரவுவது தடுக்கப்படும். இந்நிலையில், நாசி வழியே கொரோனா தடுப்பு மருந்து செலுத்துவதற்கான முயற்சியில் பாரத் பயோடெக் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. இதன்படி, … Read more

பிரித்தானிய மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு எதிர்ப்பு! குடியரசு குழுவின் செயல்..பரபரப்பு குற்றச்சாட்டு

பிரித்தானியாவில் குடியரசு பிரச்சாரக் குழு, மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குடியரசு என்ற பிரச்சாரக் குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. முடிசூட்டு விழா மே மாதம் 6ஆம் திகதி மன்னர் சார்லஸிற்கு முடிசூட்டு விழா நடைபெற உள்ளது. இதற்கான வேலைகள் பிரித்தானியாவில் நடந்து வருகிறது. இந்த நிலையில் குடியரசு என்ற பிரச்சாரக் குழு ஒன்று, மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. தங்கள் எதிர்ப்பினை தெரிவிக்கும் விதமாக அந்த குழுவைச் … Read more

தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் உள்பட 26 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு… முழு பட்டியல்!

டெல்லி: மத்தியஅரசு 2023ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை அறிவித்து உள்ளது. அதன்படி,  தமிழ்நாட்டைச் சேர்ந்த  இருவர் உள்பட 26  பல்துறை சார்ந்தவர்களுக்கு  பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள்  அறிவிக்கப்படும். அதன்படி இந்த ஆண்டு  26 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் பத்ம ஸ்ரீ விருதை பெறுகின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் சமூகப்பணிக்காக (விலங்குகள் நலன்) பத்ம ஸ்ரீ … Read more

சிறப்பு காவல் நிலையத்துக்கான முதலமைச்சர் விருது: முதல் பரிசு பெறுகிறது திருப்பூர் வடக்கு காவல் நிலையம்

சென்னை: சிறப்பு காவல் நிலையத்துக்கான முதலமைச்சர் விருது – முதல் பரிசு திருப்பூர் வடக்கு காவல் நிலையத்துக்கு வழங்கப்படுகிறது. சிறந்த காவல் நிலையத்துக்கான 2-வது பரிசு திருச்சி கோட்டை காவல் நிலையம் பெறுகிறது. 3-வது பரிசு திண்டுக்கல் தாலுகா காவல் நிலையம் பெறுகிறது.