நேபாள நாடாளுமன்றத்துக்கு முன்பு தீக்குளித்த தொழிலதிபர் சாவு! – என்ன காரணம்?

நேபாளத்தின் இல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரேம் பிரசாத் ஆச்சார்யா (37). தொழிலதிபரான இவர், நேற்று பிற்பகல் நேபாளத்தின் புதிய பிரதமர் புஷ்ப கமல் தஹால் தன்னுடைய குதிரைப்படையுடன் நாடாளுமன்றத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தபோது, திடீரென தன்னுடைய உடலில் டீசல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடனே அங்கிருந்தவர்கள் அவருடைய உடலில் பரவிய தீயை அணைத்தனர். அதைத் தொடர்ந்து, 80 சதவிகித தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், அருகிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். காவல்த்துறையினர் இந்தச் சம்பவம் தொடர்பாக … Read more

38 வயதில் பிரபல தமிழ் திரைப்பட நடிகருக்கு திருமணம்! மணப்பெண் இவர் தான்

பிரபல திரைப்பட நடிகர் ஷர்வானந்துக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ஷர்வானந்த் தமிழில் காதல்ன்னா சும்மா இல்லை, எங்கேயும் எப்போதும், ஜே.கே என்னும் நண்பனின் வாழ்க்கை, கணம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளவர் ஷர்வானந்த் (38). இவர் ஏராளமான தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் ஷர்வானந்துக்கு விரைவில் ரக்‌ஷிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மணப்பெண் யார்? ரக்‌ஷிதா உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மதுசூதனின் மகள் ஆவார். இதோடு அவரின் தாத்தா அரசியல்வாதி … Read more

உண்மை எப்போதும் வெளிவந்தே தீரும்: பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படம் குறித்து ராகுல் காந்தி கருத்து..

காஷ்மீர்: பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படம் தடை செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள  ராகுல்காந்தி , உண்மை எப்போதும் வெளிவந்தே தீரும் என தெரிவித்துள்ளார். கடந்த  2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் குறித்து பிபிசி வெளியிட்ட ஆவணப்படம், இந்திய பிரதமர் மோடியை குற்றம் சாட்டும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அந்த ஆவணப் படத்தை முடக்க  மத்திய அரசு உத்தரவிட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக தற்போது காஷ்மீரில் … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங். வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவு அளித்த கமலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி..!!

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவு அளித்த கமலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு தமது ஆதரவை வழங்கியுள்ள மக்கள் நீதி மய்யம்  கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியுடன் எகிப்து அதிபர் ஆலோசனை: முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்| Egypt Presidents meeting with PM Modi: Information that important decision has been taken

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: டில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் எகிப்து அதிபர் அப்தெல் பதா அல் சிசி சந்திப்பு நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவு, வர்த்தகம், பாதுகாப்பு, உலகளாவிய பிரச்னைகள் குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது இரு நாடுகளுக்கு இடையே முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஜனவரி 26ல் கொண்டாடப்படும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும்படி எகிப்து அதிபர் அப்தெல் … Read more

`ஆசிரியர் கவுண்டமணியின் முன்னாள் மாணவனாக சிவகார்த்திகேயன்?!' – கவுண்டமணி கம்பேக் ஸ்பெஷல்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் கதாநாயகனாகக் களமிறங்குகிறார் காமெடி கிங் கவுண்டமணி. ‘பேய காணோம்’ படத்தின் இயக்குநரான செல்வ அன்பரசன் இயக்குகிறார். கவுண்டமணியின் 31 ஆண்டுகால நெருங்கிய நண்பரான மதுரை செல்வம் இப்படத்தை தயாரித்து வருகிறார். படத்தில் நடிப்பவர்கள் யார் யார்? எப்போது படப்பிடிப்பு என்பது குறித்து தயாரிப்பாளர், இயக்குநரிடம் விசாரித்தேன். மணவை புவன், செல்வ அன்பரசன், கவுண்டமணி, மதுரை செல்வம் “கவுண்டமணி சாரோட 31 வருஷமா நட்புல இருக்கேன். சினிமாவில் அவர் நாற்பது வருஷம் நிறைவானதையொட்டி … Read more

வசதிபடைத்த சுவிட்சர்லாந்தில் தற்கொலை எண்ணத்தால் வாடும் பிள்ளைகள்: அதிர்ச்சியளிக்கும் ஒரு தகவல்

சுவிட்சர்லாந்தில் இளைஞர்களிடையே தற்கொலை எண்ணம் அதிகரித்து வருவதாக அதிர்ச்சியளிக்கும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 300 சதவிகிதம் அதிகரிப்பு சுவிட்சர்லாந்தில் தற்கொலை எண்ணங்கள் வாட்டுவதாகக் கூறி உதவி நாடும் சிறுவர் சிறுமியர் மற்றும் இளைஞர்களின் எண்ணிக்கை, 2019ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 300 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக சிறுவர் மற்றும் இளைஞர் ஆதரவு தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. சிறுவர் மற்றும் இளைஞர் ஆதரவு தொண்டு நிறுவனமான Pro Juventute என்னும் அமைப்பு, கடந்த ஆண்டில் வாரம் ஒன்றிற்கு மூன்று பேர் … Read more

தமிழ் உள்பட 4 மொழிகளில் மொழிபெயர்ப்பு: உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழிபெயர்க்க குழு அமைத்தார் தலைமை நீதிபதி சந்திரசூட்…

டெல்லி: உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்தற்கு பிரதமர் உள்பட அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்த நிலையில், தற்போது மொழிபெயர்ப்பது தொடர்பாக குழு அமைப்பு தலைமை நீதிபதி சந்திரசூடு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழிபெயர்க்க ஒய்வு பெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஓகா தலைமையில் குழு அமைத்து தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த முயற்சியில் தொடர்பாக முதல்கட்டமாக, இந்தி, தமிழ், குஜராத்தி மற்றும் ஒடியா ஆகிய நான்கு … Read more

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ3.924 கோடி மதிப்புடைய கோயில் நிலங்கள் இதுவரை மீட்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

திருவள்ளூர்: இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ3.924 கோடி மதிப்புடைய கோயில் நிலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். அறநிலையத்துறைக்கு சொந்தமான 1 லட்சம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு பெரியபாளையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ரேப் செய்த சிறுமியை திருமணம் செய்தவர் கைது| The man who married the girl who raped was arrested

திருவனந்தபுரம், கேரளாவில், பலாத்கார குற்றவாளி, பாதிக்கப்பட்ட 16 வயது மைனர் சிறுமியை ரகசிய திருமணம் செய்த வழக்கில் மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தின் நெடுமங்காடு பனவூரைச் சேர்ந்த 16 வயது சிறுமியை, 23 வயது இளைஞர் அமீர் 2021ல் பலாத்காரம் செய்தார். சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரைத் தொடர்ந்து அமீர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின் ஜாமினில் வந்த அமீர், தான் பலாத்காரம் செய்த சிறுமியை திருமணம் செய்து … Read more