சென்னை பல்கலைக்கழகம்: பிபிசி ஆவணப்படத்தை திரையிட்ட மாணவ அமைப்பினர்!

சமீபத்தில் சர்வதேச ஊடகமான பிபிசி வெளியிட்ட `India: The Modi Question’ ஆவணப்படம் இந்தியா மட்டுமின்றி, சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாக மாறி, விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. இரண்டு பாகங்களாக வெளியான இந்த ஆவணப்படம், 2002-ம் ஆண்டில் மோடி முதலமைச்சராக இருந்தபோது, குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தின் பின்னணியை விவரிக்கும்விதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த ஆவணப்படத்தில் அப்போது முதலமைச்சராக இருந்த மோடி, கலவரத்தைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. இந்த ஆவணப்படத்துக்கு மத்திய அரசு தடைவிதித்து, நடவடிக்கை … Read more

முதல் டி20 போட்டி: நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ராஞ்சி: முதல் டி20 தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்து 176 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழந்து 155 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

குடியரசு தின விழா புறக்கணிப்பு; “தன்னிச்சையாகச் செயல்படுகிறார் ஆணையர்!" – சாடும் நகராட்சித் தலைவர்

ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி நகராட்சித் தலைவராக ஜனார்த்தனனும், துணைத் தலைவராக பி.ஏ.சிதம்பரமும் பதவி வகித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்றைய தினம் புளியம்பட்டி நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்காமல் நகராட்சித் தலைவர் ஜனார்தனன், துணைத் தலைவர் சிதம்பரம் உள்ளிட்ட தி.மு.க., காங்கிரஸ் கவுன்சிலர்கள் புறக்கணித்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பேசுபொருளானது. இந்தப் புறக்கணிப்பின் பின்னணி குறித்து நகராட்சித் தலைவர் ஜனார்த்தனனிடம் விசாரித்தோம். நம்மிடம் பேசிய அவர், “குடியரசு தின … Read more

தன் பிறந்த நாளிலேயே தற்கொலை செய்துகொண்ட தமிழ் டிக்டாக் பிரபலம்!

டிக்டாக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமான டான்சர் ரமேஷ் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டான்சர் ரமேஷ் சமீபத்தில் நடிகர் அஜித்தின் துணிவு படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தவர் டான்சர் ரமேஷ். சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த இவர், சிறு வயதில் இருந்தே நடனத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டிருந்தார். அதன் வெளிப்பாடாக விழா மேடைகளில் சினிமா பாடல்களுக்கு நடனமாடினார். அதனைத் தொடர்ந்து டிக்டாக்கில் தனது நடன வீடியோக்களை பதிவிட்டு பிரபலமடைந்தார். பின்னர் இன்ஸ்ட்ராகிராம் ரீல்ஸிலும் … Read more

குட்கா, பான் மசாலா தடை நீக்கம் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: குட்கா, பான் மசாலாவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவுப் பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். ஆண்டுதோறும் இது தொடர்பான அறிவிப்பாணைகளும் பிறப்பிக்கப்பட்டு வந்தன. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தமிழகஅரசின் தடையாணையை உயர்நீதிமன்றம் ரத்து … Read more

முட்டை பண்ணை கொள்முதல் விலை ஒரே நாளில் 25 காசுகள் சரிந்து ரூ.4.90-ஆக நிர்ணயம்

நாமக்கல்: முட்டை பண்ணை கொள்முதல் விலை ஒரே நாளில் 25 காசுகள் சரிந்து ரூ.4.90-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை நுகர்வு மற்றும் விற்பனை சரியத் தொடங்கியதால் விலை குறைந்ததாக பண்ணை உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த 7 நாட்களில் மட்டும் முட்டை விலை 75 காசுகள் வரை குறைந்துள்ளது.

நடப்புக் கணக்கு பற்றாக்குறை சமாளிக்கும் வகையில் உள்ளது| Current account deficit is manageable

மும்பை நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை, சமாளிக்கக்கூடிய வகையில் இருப்பதாக, ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: இந்தியாவின் சேவைகள் ஏற்றுமதி மிகவும் வலுவாக உள்ளது. அத்துடன், தாயகத்துக்கு பணம் அனுப்புவது உள்ளிட்டவையும் நன்றாகவே உள்ளது. உலக வணிகத்தேவைகள் குறைவால், பாதிப்புக்குள்ளாகும் பற்றாக்குறையை சமாளிக்க, இவை நமக்கு நன்கு உதவும்.அண்மையில் உலகளவில் ஏற்பட்டுள்ள வினியோக தட்டுப்பாடுகளினால், உலகமயமாதல் மற்றும் பாதுகாப்புவாதம் அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழலில், நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு … Read more

`கொலீஜியம் முறையில் நீதிபதிகள் நியமிக்கப்படுவதில் மத்திய அரசின் பங்கு' – கருத்துக்கணிப்பு முடிவுகள்!

இந்தியாவில் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளைத் தன்னிச்சையாக நியமனம் செய்யும் கொலீஜியம் அமைப்புக்கும், ஆளும் பா.ஜ.க அரசுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக நிலவிவந்த முரண்பாடுகள், கடந்த சில மாதங்களாக நேரடியாகவே பொதுவெளியில் வெளிவரத்தொடங்கிவிட்டன. உச்ச நீதிமன்றம் 2015-ல் உச்ச நீதிமன்றத்தால் ரத்துசெய்யப்பட்ட மத்திய அரசின் தேசிய நீதிபதிகள் ஆணையத்தை மீண்டும் கொண்டுவருவதற்கு அவசரம் காட்டுவதாகவே மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரின் சமீபகால பேச்சுகள் இருக்கின்றன. இப்படியான … Read more

வேலூர் உள்பட 4 மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் 2 நாள் ஆலோசனை…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்களுடன் 2 நாள் ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் நடத்துகிறார். அதன்படி,   பிப்ரவரி 1, 2ந்தேதிகளில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. குறிப்பிட்ட 4 மாவட்டங்களில்,  அரசின் திட்டங்கள் மற்றும்  சட்டம் ஒழுங்கு, … Read more

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய குடியரசு தின விழாவில் தமிழருக்கு ‌இந்திய தூதரக விருது

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய குடியரசு தின விழா இன்று தூதரகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் சிறந்த சமூக சேவை பணிகளில் ஈடுபட்டவர்களுக்குக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிர்தௌஸ் பாஷாவுக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதை ஐக்கிய அரபு அமீரக இந்திய தூதர் சஞ்சய் சுதிர் வழங்கினார்.