கடுமையான மாரடைப்பு! 500 படங்களில் நடித்துள்ள முன்னணி நடிகர் உயிரிழப்பு

பிரபல நடிகர் மந்தீப்ராய் மாரடைப்பால் தனது 72வது வயதில் காலமானார். 500 படங்களில் நடித்த நடிகர் கன்னட சினிமாவில் 500க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளவர் மந்தீப்ராய். இவருக்கு கடந்த மாதம் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று மந்தீப்ராய்க்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு அவரின் உயிர் பிரிந்தது. Sandalwood actor #MandeepRoy is no more. He passed away due to a massive heart attack in the … Read more

விமானத்தின் அவசரகால கதவை திறந்த விவகாரம்… வழக்குப் பதிவு செய்தது இண்டிகோ நிறுவனம்…

நாக்பூரில் இருந்து மும்பை சென்ற இண்டிகோ 6E 5274 விமானத்தில் பயணம் செய்த ஒருவர் விமானத்தின் அவசரகால கதவை திறந்ததாகக் கூறப்படுகிறது. ஜனவரி 24 ம் தேதி நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த விவராத்தில் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகக் கூறி அந்த பயணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விமானம் தரையிறங்க தயாரான நிலையில் அவசர கால வழியை பயணி ஒருவர் திறக்க முயற்சித்த நிலையில் அதனைப் பார்த்த விமானச் சிப்பந்தி உடனடியாக விமானியை தொடர்பு கொண்டு … Read more

குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப்படத்துக்கு இந்தியாவில் தடை விதித்தது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப திமுக முடிவு

சென்னை: குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப்படத்துக்கு இந்தியாவில் தடை விதித்தது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப திமுக முடிவு செய்துள்ளது. பங்குசந்தையில் அதானி குழுமத்தால் ஏற்பட்ட இழப்பு குறித்து வெளியான ஆய்வறிக்கை தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப முடிவு செய்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் திமுக எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

ஜனாதிபதி மாளிகையிலுள்ள முகலாய தோட்டம், `அம்ரித் உத்யான' எனப் பெயர்மாற்றம்!

டெல்லியில் அமைந்திருக்கும், ராஷ்டிரபதி பவன் என்றழைக்கப்படும் ஜனாதிபதி மாளிகையில் வரலாற்றை நினைவுகூரும் விதமாக அங்குள்ள தோட்டங்களுக்குப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒன்றுதான், பல ஆண்டுகளாக முகல் தோட்டம் என்று அழைக்கப்பட்டுவந்த `முகலாயர் தோட்டம்’. ஜனாதிபதி மாளிகை இந்த நிலையில், இந்தியாவின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டமான `ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ எனப்படும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி மாளிகையில் இருக்கும் முகலாயர் தோட்டம் உட்பட பல்வேறு தோட்டங்களுக்கு `அம்ரித் உத்யன்’ எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இது … Read more

இந்திய இளைஞரை கரம் பிடித்த ஸ்வீடன் பெண்! பேஸ்புக் நண்பர்களுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பேஸ்புக் நண்பரை திருமணம் செய்து கொள்வதற்காக ஸ்வீடன் நாட்டு பெண் ஒருவர் இந்தியாவிற்கு பறந்து வந்து இருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. பேஸ்புக்கில் மலர்ந்த காதல் கிறிஸ்டன் லிபர்ட்(Christen Liebert) என்ற ஸ்வீடன் நாட்டு பெண் கடந்த 2012ம் ஆண்டு பேஸ்புக்கில் இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பவன் குமார் என்ற நபரை சந்தித்துள்ளார். இருவரும் நீண்ட நாட்களாக நல்ல நண்பர்களாக இருந்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. … Read more

ஒடிசா அமைச்சர் மீது திடீர் துப்பாக்கிச் சூடு

ஒடிசா: ஒடிசா மாநில அமைச்சர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் பிஜூ ஜனதா தளம் கட்சியின் நவீன் பட்நாயக் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு சுகாதாரத் துறை அமைச்சராகவும் பிஜு ஜனதாதளத்தின் மூத்த தலைவராகவும் இருப்பவர் நபா தாஸ். இன்று ஜார்சுகுடா மாவட்டம் பிரஜராஜ்நகர் பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றார். வாகனத்தில் இருந்து இறங்கும்போது நபா தாஸ் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். … Read more

தமிழகத்தில் பிப்.1,2-ல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கையில் பிப்.1-ல் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பிப்.1-ல் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் பிப்ரவரி 2-ல் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்: உதயநிதி கலந்துகொண்ட அரசு விழாவில் மின் திருட்டா?- என்ன சொல்கிறார்கள் விழா ஏற்பாட்டாளர்கள்?

நாமக்கல் மாவட்டத்திலுள்ள பொம்மைக்குட்டைமேட்டில் நடைபெற்ற அரசு விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டதோடு, ரூ.23.71 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார். மேலும், ரூ.351.12 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,03,321 பயனாளிகளுக்கு ரூ. 303.37 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியை, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், தி.மு.க கிழக்கு மாவட்டச் செயலாளரும், ராஜ்ய சபா எம்.பி-யுமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் … Read more

காலை உணவை சாப்பிடாமல் நேரடியாக மதியம் சாப்பிடுவதால் உடலில் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா?

உலக அளவில், காலை உணவைத் தவிர்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. ‘உடல் எடையைக் குறைக்கிறேன்’ என்று பலர் காலை உணவைத் தவிர்க்கிறார்கள். ‘நேரமில்லை’ என்கிறார்கள் சிலர். காலை உணவை தவிர்ப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்? காலை உணவைத் தவிர்ப்பதால், குளுக்கோஸ் வளர்சிதை சுழற்சியில் பாதிப்பு ஏற்பட்டு சர்க்கரை நோய் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அதன் பிறகு மதிய உணவின் மூலம் கிடைத்த அதிக குளுக்கோஸை ஈடுகட்ட, அதிகமாக இன்சுலின் சுரந்து, தொடர்ந்து … Read more